Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடை­யி­லான கொத்­மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்­தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்­றி­ய­ரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …

  2. புடினின் படத்துடனான ரி-சர்ட்டால் வெடித்தது சர்ச்சை February 19, 2016 துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கெதிரான போட்டியின்போது, ரஷ்ய கால்பந்து அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியின் பின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் ரி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படத்துடன் தான் அணிந்திருந்த ரி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் பனிப்போர் நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்துடன் கூடிய ரி-சர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஜ.எஸ் தீவிரவாதிகளுக…

  3. ’’ஓய்வு குறித்து டோனியே முடிவெடுக்க வேண்டும்’’ ரவி சாஸ்திரி February 19, 2016 இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி, 6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்த…

  4. மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…

  5. அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…

  6. சின்னச் சின்னதாய் செய்திகள்: ‘2024 ஒலிம்பிக்’ 4 நகரம் விருப்பம் பாரிஸ், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், புதாபெஸ்ட் என நான்கு நகரங்கள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பெருநாட்டின் லிமா நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விஜேந்தர் போட்டி உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் ஆசிய பட்டத்துக்கான போட்டி இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் கலந்துகொள்கிறார். …

  7. நீச்சல் வீராங்கனைக்கு புற்றுநோய் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை இக்னே டெக்கர். 30 வயதான இக்னே டெக்கர் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் உள்பட மூன்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், திடீரென கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ‘இந்த தகவலை அறிந்ததும் அதிர்ந்து போனேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் மட்டுமே எனது சிந்தனை இருந்தது. ஒலிம்பிக்கில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று டெக்கர் கூறியுள்ளார். http://tamil.adaderana.l…

  8. இலங்கை அணியின் T 20 பாடல் February 18, 2016 இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள பாடலில் சந்திமால், கபுகெடரா, சிறிவர்த்தனே, துஷ்மந்த சமீரா, சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=9475

  9. ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …

  10. மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் : நேரத்தின் அருமையை பற்றி இந்த சிறுமியிடம் கேளுங்கள்! ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது. ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி. இங்கிலாந்தின் ஸ்…

  11. உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெ­ரிக்கப் பாட­சாலை ஒன்றில் கடந்த வருடம் நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டியில் அப்­போது 16 வய­தாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்­டியை 10.98 செக்­கன்­களில் ஓடி கனிஷ்ட மட்ட சாத­னையை நிலை­நாட்­டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 11 செக்­கன்­க­ளுக்குள் ஓடி முடிப்­ப­தென்­பது பெரிய விட­ய­மாகும். அத்­துடன் உலகின் அப்­போ­தைய அதி­வேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்­தி­யோ­க­பூர்வ பெரு­மை­யையும் கண்டேஸ் பெற்­றுக்­கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்­வல்­லுநர் என்ற அந்­தஸ்­துக்கு உயர்ந்­துள…

    • 1 reply
    • 448 views
  12. பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …

  13. 19 வயதின்கீழ் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளவாளை ஹென்றியரசர், கொழும்பு ஸாஹிரா (நெவில் அன்தனி) பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் வ…

  14. சிவப்பு அட்டை காட்டிய நடுவர் சுட்டுக்கொலை அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீரர், தனது காரில் இருந்த பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்த நடுவரை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் நடுவரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும்…

  15. ’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…

  16. வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…

  17. ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…

  18. தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள் குஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு போட்­டிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறை­வ­டைந்­துள்­ளன. அத்­தோடு13ஆவது தெற்­கா­சியப் போட்­டி­களை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்­கேற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்­ப­மாகி 12 நாட்­க­ளாக நடை­பெற்­றி­ருந்­தது. இதில் எட்டு நாடு­க­ளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டனர். 23 போட்டி வகை­களைக் கொண்ட இவ்­வி­ளை­யாட்டு விழா…

  19. இலங்கை- இந்தியா 20-20 தொடர் மீள் பார்வை -ச.விமல் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங…

  20. கோலூன்றிப் பாய்தலில் சந்தருவன் புதிய தெற்காசிய சாதனை தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஆறாம் நாளான செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கைக்கு நான்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன. ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டங்­க­ளிலும் ஆண்­களுக்­கான கோலூன்றிப் பாய்தல், பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டம் ஆகி­ய­வற்றிலும் இலங்­கைக்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன. ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் இஷார சந்­த­ருவன் 4.90 மீற்றர் உயரம் தாவி, தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்டி சாத­னையைப் புதுப்­பித்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். ஆண்­க­…

  21. தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…

  22. கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட…

  23. சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…

  24. பாகிஸ்தான் சூப்பர் லீக் T 20 மைதானத்தில் மோதிய வீரர் February 15, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத…

  25. முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.