விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…
-
- 0 replies
- 399 views
-
-
உலக சாதனை மரதன் வீரர் கிப்டுன் உயிரிழப்பு damithFebruary 13, 2024 ஆடவர் மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் 24 வயது கெல்வின் கிப்டுன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் அவருடன் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டின் கர்வைஸ் ஹகிசமானாவும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணி மற்றும் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கிப்டுன் உலக சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மரதன் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.thinak…
-
- 0 replies
- 399 views
-
-
ஆசிய மெய்வல்லுனர் போட்டி,யாழ் உதவி கல்விப்பணிப்பாளர் தகுதி March 03, 2016 ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பதற்கு யாழ்ப்பாணம் உதவி கல்வி பணிப்பாளர் திரு.சண் தயாளன் தகுதி பெற்றுள்ளார். கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்றிருந்த சண் தயாளன் சிங்கப்பூரில் நடைபெற்றவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இதன் பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்து 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தயாளன் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஆசிய மெய்வல்…
-
- 0 replies
- 399 views
-
-
இந்தியாவுக்கு விருப்பம் இல்லை... எமிரேட்ஸில் 2016 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி? கராச்சி: 2016ம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. என்றாலும், எமிரேட்ஸில் இப்போட்டிகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வருடத்திற்கு ஒருமுறை ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை 2016ம் ஆண்டு நடத்த எந்த ஆசிய நாடும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்…
-
- 0 replies
- 399 views
-
-
ரியல் மாட்ரிட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார்? போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் க்ளப்பிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார். ரொனால்டோ 2009-ம் ஆண்டிலிருந்து ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் புகைப்பட உரிமம் மூலம் சம்பாதித்த பணத்தை, அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஸ்பெயினில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 14.7 மில்லியன் யூரோஸ் (106 கோடி ரூபாய்) வரை வரி ஏய்ப்பு செய்ததாக, ஸ்பெயின் அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. இந்தத் …
-
- 0 replies
- 399 views
-
-
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிக்கான இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் வீராங்கனைகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வலைப்பந்தாட்டத் தெரிவுக் குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12 வீராங்கனைகள் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். நான்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் மாத்திரமே இந்தக் குழாமில் இடம் பெறுகின்றனர். ஏனைய அனைவரும் அதிக அனுபவமற்றவர்களாவர். தெரிவாளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளைக் கொண்டு உலகக் கிண்ண வலைப…
-
- 0 replies
- 399 views
-
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…
-
- 3 replies
- 399 views
-
-
வேகப்பந்து வீச்சாளர் எரங்க இங்கிலாந்து வைத்தியசாலையில் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175040/வ-கப-பந-த-வ-ச-ச-ளர-எரங-க-இங-க-ல-ந-த-வ-த-த-யச-ல-ய-ல-#sthash.BH1F6LD8.dpuf
-
- 1 reply
- 399 views
-
-
”ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” டில்சான் ஓய்வு குறித்து தற்போதைக்கு சிந்திக்க மாட்டேன் என இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களை பெற்றிருந்த டில்சான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டில்சான், ‘ இவ்வாறு தொடர்ந்தும் விளையாடும் பட்சத்தில் தற்போதைக்கு ஓய்வு குறித்து சிந்திக்க மாட்டேன். கிரிக்கட்டை அனுபவித்து விளையாடுகின்றேன். ஓய்வு …
-
- 0 replies
- 399 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 399 views
-
-
ஆண்டின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ் அன்டிகுவாவில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ் பெயரிடப்பட்டார். 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாமுவேல்ஸ், மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 859 ஓட்டங்களைப் பெற்றதோடு, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றுவதற்கும் முக்கியமானவராக அமைந்திருந்தார். குறித்த இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 ஓட்டங்களை துரத்தியிருந்தபோது, இறுதி வரை …
-
- 0 replies
- 399 views
-
-
தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது செல்சி செல்சி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ஆன்டோனியோ கான்டேவை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முன்னணி அணியாகவுள்ள செல்சி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஆன்டோனியோ கான்டோ. இவரது தமைமையில் செல்சி 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது செல்சி அணி 38 போட்டிகளில் 30 போட்டிகளை வெற்றிகொண்டது. 13 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றமை குறிப்பிடத்தக்கது. கான்டேவிற்கும் அந்த அணியின் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கான்டேவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்…
-
- 0 replies
- 399 views
-
-
சங்கக்காரவை உலகின் சமாதானத் தூதராக கௌரவித்த எஸ்.பி பாலசுப்ரமணியம் By Mohammed Rishad - இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாக விளங்குகின்ற கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் சுயநலமற்ற செயற்பாடுகளால் பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வழங்கப்படுகின்ற உயர் சான்றோர் விருதை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். கம்பன் கழக விருது வழங்கும் விழாவில் விளையாட்டு வீரரொருவரை கௌரவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கொழும்பு கம்பன் கழகத்தின் வெள்…
-
- 0 replies
- 399 views
-
-
BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எட…
-
- 0 replies
- 399 views
-
-
தென்ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நினைவில் தந்தை - மகனின் ஒற்றுமை தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஸ்டீபன் குக் அவரது தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தொடக்க பந்தை சந்தித்து வரலாற்று நினைவில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் முதல் பகல் - இரவு சர்வதேச போட்டி இதுவாகும். டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீபன் குக், எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி…
-
- 0 replies
- 399 views
-
-
அதிவேக 100 விக்.: உலக சாதனைக்கு வெகு அருகில் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் ரஷீத் கான். - படம். | கெட்டி இமேஜஸ் ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் 19வது வயதிலேயே உலகம் முழுதும் ஒருநாள் போட்டிகள், டி20 லீகுகளில் தனது புதிரான லெக்ஸ்பின்னில் கலக்கி வருகிறார். அயர்லாந்தை நேற்று வீழ்த்தி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. குறிப்பாக சூப்பர் சிக்ஸுக்கே தகுதி பெறுமா என்ற நிலையில் பிற அணிகளின் தோல்வியினால் சூப்பர் சிக்ஸுக்கு புள்ளிகள் இல்லாமலேயேதகுதி பெற்று மீண்டெழுந்து, அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 2019 இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்குத் தகுத…
-
- 0 replies
- 399 views
-
-
நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்ட இலங்கை வீரர் திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது: "ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நி…
-
- 0 replies
- 399 views
-
-
இந்தியாவிற்கு எதிரான வங்காள தேச கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்தியாவிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்காள தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான தங்கள் அணியை இன்று அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. முஸ்டாபிஜ…
-
- 0 replies
- 399 views
-
-
பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நி…
-
- 0 replies
- 399 views
-
-
இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று October 21, 2018 1 Min Read இந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கவுகாத்தியில் இன்று ஆரம்பமாகின்றது. http://globaltamilnews.net/2018/100071/
-
- 3 replies
- 399 views
-
-
ஆசியக்கோப்பை டி20: பிப்ரவரி 27-ல் இந்திய-பாக். போட்டி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய போட்டியில் ரசிகர்கள் உற்சாகம். | கெட்டி இமேஜஸ். வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 27-ம் தேதி மோதுகிறது. 11 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்த முறை டி20 போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் இந்தியா வங்கதேச அணியை பிப்ரவரி 24-ம் தேதியும், பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 27-ம் தேதியும் சந்திக்கிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி இலங்கைக்கு எதிராக இந்திய அணி களமிறங்க…
-
- 1 reply
- 399 views
-
-
இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடு…
-
- 0 replies
- 398 views
-
-
டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் மூன்று இடங்களுக்குள் சங்கா, ஹேரத் சர்வதேச கிரிக்கெட் சபையினால் டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு வீரர்களுக்கான புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இப்பட்டியலில் தென் ஆபிரிக்க அணி வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் முதலிடத்தில் உள் ளார். மூன்றாம் இடத்தில் தென் ஆபிரிக்க டெஸ்ட் அணித்தலைவர் ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி யின் புதிய தலைவர் விராட் கோலி 15 ஆவது இடத்தை பெற்…
-
- 0 replies
- 398 views
-
-
ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்! ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி, இந்த வாரம் வழக்கமான அதே விறுவிறுப்போடு நடந்து முடிந்தது. செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய அணிகள் இந்த வாரம் வாகை சூடின. முன்னணி அணிகளில் ஆர்சனல் மட்டும் தோல்வியைத் தழுவியது. விளையாட்டையும் தாண்டி நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறின. ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரோ! 2013-14ம் ஆண்டு சீஸனின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, கத்துக்குட்டி போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. கடந்த வாரம் எவர்டன் அணியோடு டிரா செய்ததால், இந்த வாரம் அதிக ஆக்ரோஷத்தோடு களம்கண்டது சிட்டி. ஆனா…
-
- 1 reply
- 398 views
-
-
Olga Fikotova: காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை - கெளரவித்து அழகு பார்த்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது. இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது. அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova). கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறித…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-