விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…
-
- 0 replies
- 206 views
-
-
என்னிடம் வெள்ளைச் சீருடை கைவசம் உள்ளது: கிறிஸ் கெயில் சூசகம் 2015 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் பந்தை அடித்து நொறுக்கும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்ல…
-
- 0 replies
- 421 views
-
-
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…
-
- 0 replies
- 448 views
-
-
செம சேஸ்...கோலியின் ரேஸ்! டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில், உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்து…
-
- 0 replies
- 767 views
-
-
தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…
-
- 0 replies
- 565 views
-
-
மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்ட…
-
- 0 replies
- 455 views
-
-
வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…
-
- 0 replies
- 432 views
-
-
ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…
-
- 0 replies
- 385 views
-
-
-
- 0 replies
- 698 views
- 1 follower
-
-
டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது ஆண்டு 24.08.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நோர்வேயில் இருந்து 2 அணிகளும் பிரித்தானியாவில் இருந்து 1 அணியும் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர்: 1ம் இடம்: Vejle 2ம் இடம்: Grindsted 3ம் இடம்: Middel…
-
- 0 replies
- 514 views
-
-
காதலியின் முத்தத்தால் ஊக்கமருந்து தடைக்குள்ளான வீரர் காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சம்பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் ஓட்டப் பந்தய வீரரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளாரா என்பதை பரிசோதனை செய்வதற்காக அவரிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்-ஐ பயன்படுத்தியமை தெரியவந்தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திகதியிலிருந்…
-
- 0 replies
- 551 views
-
-
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா? இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்து வாழும் பலர் அந்நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேள்வியுற்றுள்ளோம். கல்வி, வியாபாரம் போன்ற துறைகளில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த பலர் முன்னேற்றம் கண்டு உலகின் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அதேபோல அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தை ஜொலிக்கச் செய்து வருகின்றமையையும் காணமுடிகின்றது. விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, …
-
- 0 replies
- 822 views
-
-
ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது. மும்பை: உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2018-ம் ஆண்டுக்கான 11-வது…
-
- 0 replies
- 318 views
-
-
ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார். இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு: டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே? இ…
-
- 0 replies
- 683 views
-
-
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #ICC #pakistanfanvideo கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு …
-
- 0 replies
- 538 views
-
-
டோனி நேரம் முடிந்தது-இயான் சாப்பல் சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தோற்றது. இருப்பினும், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராத் ஹோக்லி, இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்து, அசத்தினார். இந்நிலையி்ல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் ஒரு பேட்டியில் கூறுகையில், '.டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராத் ஹோக்லி தலைமையேற்று நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்,' என்று கூறி ள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1137886
-
- 0 replies
- 474 views
-
-
உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் …
-
- 0 replies
- 335 views
-
-
தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…
-
- 0 replies
- 403 views
-
-
இந்தியாவில் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம்: டிராவிட் வருத்தம் இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவ…
-
- 0 replies
- 314 views
-
-
ரிஷப் பந்த்-ன் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம்: ஆஸி.க்கு மேக்ஸ்வெல் எச்சரிக்கை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார். 7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரி…
-
- 0 replies
- 419 views
-
-
ஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு ஒரேயாண்டில் மூன்று விருதுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் விராட் கோலி கடந்த 2018 ஆம் ஆண்டு 14 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸுக்களில் களமிறங்கி 1202 ஓட்டங்களை …
-
- 0 replies
- 756 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட உதை பந்தாட்டப் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. https://newuthayan.com/story/09/எழாலை-ஸ்ரீ-முருகன்-வித்த.html
-
- 0 replies
- 634 views
-
-
இந்திய அணிக்கு பாண்டிங் பாராட்டு . Monday, 28 January, 2008 02:33 PM . அடிலெய்டு, ஜன. 28: இந்திய கிரிக்கெட் அணி உலகின் இரண்டாவது சிறந்த அணியாக விளங்குகிறது என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். . அடிலெய்டு டெஸ்ட் டிராவில் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் கடுமையான மோதலாக அமைந்தது. இந்த தொடரை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இந்திய அணி மிகவும் சிறந்த முறையில் விளையாடி உலகின் இரண்டாவது சிறந்த அணி என்னும் அந்தஸ்தை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல ஆஸ்திரேலிய துணை கேப்டன் கில்கிறிஸ்ட் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இ…
-
- 0 replies
- 908 views
-
-
அப்ரிடியின் அதிக சிக்சர் சாதனைக்கு தடை போடுகிறாரா கப்டன் மாலிக் [02 - February - 2008] [Font Size - A - A - A] சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரென்ற சாதனையைப் படைக்கவிருந்த பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ள சிம்பாப்வே அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பைசலாபாத்தில் நடந்த நான்காவது போட்டியில் வென்று பாகிஸ்தான் தொடரில் 4-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 245 சிக்சர்களுடன் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ப…
-
- 0 replies
- 916 views
-
-
அமெரிக்காவின் அடிமை வாணிகத்தை தடை செய்த மாபெரும் தலைவர் யார்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். சார், அடிமை வாணிகம்னா என்ன சார்? என்று கேட்டான். உட்காரு, அதாவது மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக சந்தையில் நிறுத்தி அவர்களை காய்கறிகளைப் போல ஆடுமாடுகளைப் போல விலைக்கு விற்பார்கள். காசு வைத்திருப்போர் ஏலத்தில் இவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கிய மனிதர்கள் எஜமானர்கள் என்றும், வாங்கப்பட்ட மனிதர்கள் அடிமைகள் என்றும் அழைக்கப்பட்டனர். இப்படி விற்கப்படும் மனிதர்களில் நல்ல திடகாத்திரமும் நன்கு உழைக்கும் திறனும் பெற்ற அடிமைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படி வளர்க்கப்பட்ட அடிமைகள் தங்கள் ஆயுள் முடியும் வரைக்கும் எஜமானனுக்கு உழைக்க வேண்டும். அடி…
-
- 0 replies
- 1.2k views
-