Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு…

    • 0 replies
    • 471 views
  2.  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…

  3. இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் அனுராக் தாக்கூருடன், சந்தீப் பாட்டீல் (வலது). | கோப்புப் படம்: பிடிஐ. மேலேறி வந்து டிரைவ் ஆடும் சந்தீப் பாட்டீல். | படம்: இந்து ஆர்கைவ்ஸ். முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார். 199…

  4. இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வ…

  5. முன்னை நாள் இங்கிலாந்து கிறிக்கட் தலைவன் ரொனி கிறக் சுவாசப்பையில் ஏற்பட்ட கான்சர் நோயால் காலமானார். http://www.youtube.com/watch?v=BKwZi_xS_7U

  6. 200 மீ ஓட்டம் இறுதியில் உசைன் போல்ட்: அமெரிக்க வீரர் காட்லின் அதிர்ச்சி வெளியேற்றம் வெற்றியைக் கொண்டாடும் உசைன் போல்ட் | படம்: ஏஎஃப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தோற்று வெளியேறினார். 3 அரையிறுதிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிக்குத் தகுதி பெறுவார்கள். உசைன் போல்ட் அனாயசமாக முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார், அதாவது 19.78 விநாடிகளில் 200 மீ இலக்கை கடந்தார் உசைன் போல்ட், இவருக்கு அடுத்தபடியாக நெருக்கமாக வந்த கனடாவின் டி கிராஸ் 19.80 விநா…

  7. லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி கிரிக்கெட் வீரா் லசித் மாலிங்க, சுகயீனம் காரணமாக நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் லசித் மாலிங்க டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் அதற்கமைய சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21167#sthash.Ed01UOxw.dpuf

  8. 10 சாமர்த்திய கோல்கள்

  9. பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…

  10. ஐபிஎல் சுற்றுப்போட்டிகள் 2017- ஏப்ரல்5 இல் ஆரம்பம் பத்தாவது தடவையாக இடம்பெறும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சுற்றுப் போட்டிகள் ஏப்ரல் 5 ஆரம்பமாகு மென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளும் குழு நிர்வாகிகளும் சந்திப்பு ஒன்றை நேற்று நிகழ்த்திய பின்னர் இந்தத் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .. வெளிநாட்டு வீரர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களை கழகங்கள் ஏலத்தில் எடுப்பது இந்தமாதம் இடம்பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்தநிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கோ சோதனைமேல் சோதனை ! இங்கிலாந்து அணியின் வீரர்கள் இந்தியாவில் விளையாடினால் விளையாடும் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் தாயக ஊதியத்திலிருந்து…

  11. நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் டுவிட் அளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன விராட் கோலி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் (நியூசிலாந்து- 3, இங்கிலாந்து -5, வங்காள தேசம்-1) 9 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று இரட்டை சதங்கள் உள்பட 1457 ரன்கள் குவித்துள்ளார். அதேவேளை…

  12. டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கும் தடை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைப்பாளர்கள் தடை செய்துள்ளனர். அரசியல் அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, வியாழக்கிழமை தலைநகருக்கு நான்காவது அவசரகால நிலையை அறிவித்த பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, டோக்கியோ ஒலிம்பிக்கை பார்வையிடுவதற்கான ரசிகர்களின் இறுதி நம்பிக்கையை இல்லாது செய்தது. ஜப்பானிய சுகாதார அமைச்சர் நோரிஹிசா தமுரா, விளையாட்டு வீரர்களுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்ததுடன், எனினும் இந்த முடிவு சரியானது என்றும் கூறி…

  13. முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…

  14. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் 3 ரன்களில் வெற்றி: பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா தென் ஆப்பிரிக்கா வெற்றி. | படம்.| ஏ.எஃப்.பி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 …

  15. வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி லிவர்பூல் அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லீவர்பூல் அணி வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது. இரு அணிகளதும் முக்கிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்பூல் கால்பந்து கழகத்தின் அரங்கமான அன்பீய்ல்ட் (Anfield) அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் கழகங்களிற்கிடையிலான போட்டியானது இரு அணியினதும் பாரிய போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மென்சஸ்டர் யுனைடட் அணியின் மருவானே பெய்லானீ (Maruane Felliani) பெவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் லிவர்பூல் அணியின் ஸடீயோ மனேய் (Sadio Mane) ஆகியோர் …

  16. ஹர்பஜன் சிங் அளவுக்கு அஸ்வின் தாக்குதலாக வீசுவதில்லை: ஹெய்டன் கருத்து அஸ்வின், ஹர்பஜன் சிங். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். ஹர்பஜன் சிங் அளவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் தாக்குதல் தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். “புள்ளி விவரங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தை அளிக்கும். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆடினாலும் இவர் காலத்தின் கிரேட் வீரர்களில் ஒருவராக அஸ்வின் நினைவுகூரப்படுவார். ஹர்பஜன் போலவே அஸ்வினின் பந்து வீச்சுத் திறமை அபாரமானதுதான், ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல…

  17. துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு தவானின் மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன் மறுத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் துபாயில் தவிப்பதால் தவான் குற்றம்சாட்டியுள்ளார். #INDvSA #EmiratesAirline இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.…

  18. வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு ‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது. கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.…

  19. அதிவேக 100 விக்கெட்: ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் உலக சாதனை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ராஷித் கான் - படம் : கெட்டி இமேஜஸ் மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் ந…

  20. புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம் By SETHU 27 DEC, 2022 | 11:50 AM நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார். கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2…

  21. நம்புங்க… இனிமே நான் விளையாட வரமாட்டேன்: விடைபெற்றார் ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவையடுத்து ஷாகித் அப்ரிடிக்கு மரியாதை செலுத்திய ஐசிசி வேர்ல்டு லெவன் அணி வீரர்கள் - படம்உதவி: ஐசிசி ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்த…

  22. கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…

  23. வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை Weiterempfehl(நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம…

  24. பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…

  25. யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம் திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது. கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.