Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: வெற்றியை நோக்கி இந்தியா இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற வேண்டுமாயின் 170 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. ஆட்டநேர முடிவில் பெட் கம்மின்ஸ் 40 ஓட்டங்களுடனும், நதன் லியோன் 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்…

  2. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு கடைசி கட்டத்தில், டோனி தனது பணியை செவ்வனே செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். …

    • 0 replies
    • 793 views
  3. டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கினார் நடிகர் ஷாருக்கான்! பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்கள் மார்க் வால்பெக், ஜெரார்ட் பட்லர் ஆகியோருடன் இணைந்து கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினாட் டொபாக்கோ அணியை வாங்கினார். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானது. பிரபல நடிகை ஜுகி சாவ்லா அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் கொல்கத்தா அணியில் பங்குதாரர்களாக உள்ளனர். 86 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி ) மதிப்புடன் உள்ள கொல்கத்தா அணிதான் அதிக விலை மதிப்பு வாய்ந்த ஐ.பி.எல். அணி ஆகும்.இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கவும் ஷாருக்கான் ம…

  4. சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரெய்னா இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் நேற்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். 2005-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரெய்னா அறிமுகமானார். அதன்பிறகு வேகமாக வளர்ச்சி கண்ட ரெய்னா, ஒருநாள் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக உருவெடுத்ததோடு, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாகியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்துப் பேசிய ரெய்னா, “சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இந்த 10 ஆண்டு பயணம் மிக மிக மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்தை வியக்கத்…

  5. இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள்: ரஹானே சாதனை; மேலும் சுவையான தகவல்கள் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்து ரஹானே சாதனை. | படம்: ஏ.எப்.பி. இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களைப் பிடித்த முதல் இந்திய பீல்டர் ஆனார் அஜிங்கிய ரஹானே. ஆனால் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு தொடரில் 10 கேட்ச்களை அசாருதீனும் எடுத்துள்ளார், ஆனால் அது இந்தியாவில் 1993-94-ல் நடைபெற்ற தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது. அமித் மிஸ்ரா 3-வது முறையாக ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா, வங்கதேசத்துக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிஸ்ரா. இன்று அவ…

  6. கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி சாதிக்க காரணம் என்ன? - கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி வீர, வீராங்கனைகள் வரலாறு படைத்திருந்தனர். இந்த வெற்றிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த கல்லூரியின் கோலூன்றி பாய்தல் பயிற்றுவிப்பாளர் கோ. கணாதீபன். http://www.thepapare.com/video-all-island-school-games-2019-kanatheepan-kopalan-exclusive-interview-tamil/

    • 0 replies
    • 439 views
  7. 26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர். இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார…

  8. இலங்கையின் ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் இன்று (19) இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியினர் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, இலங்கை அணி கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது …

  9. இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி முடிவதையொட்டி, அடுத்த பயிற்சியாளராகப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலாளர் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறினாலும் டிராவிட், வார்னே, ஸ்டீவ் வாக் என்ற சில பெயர்களும் அடிபடுகின்றன. கிரிக்கெட் உலகின் கௌரவமிக்க பதவியான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது? யார் நியமிக்கப்பட்டால் அணி மேம்…

  10. 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட் ஷினேடின் ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட். பார்சிலோனா அணிக்கு இணையாக தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பதவி ஏற்றபின் ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கரேத் பேலே மற்றும் கேப்டன் ரமோஸ் ஆகியோர் அந்த அணிக்கு வெற்றிமேல் வெற்றியை தேடிக்கொடுத்து வருகிறார…

  11. (எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…

  12. பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர் (காணொளி இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமியல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். நான் சாகும்வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுப…

  13. ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …

  14. கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம் கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார். ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்ட…

  15. 16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …

  16. சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…

  17. அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை- முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இ…

  18. களத்தில் நிலைத்து நிற்கும் இலங்கை: விக்கெட்டுகளை தகர்த்தெறிவதில் நியூசிலாந்து தடுமாற்றம் இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் சுரங்க லக்மால் 16 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ்ட்சேர்ச்சில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வே…

  19. சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டெனிஸ் அணியில் ஷரபோவா இல்லை? [25 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் டெனிஸ் அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று மரியா ஷரபோவா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், ரஷ்ய டெனிஸ் அணித் தலைவர் ஷமீல் தர்பிஷசேவ் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பார்க்கும்போது அது சாத்தியம் இல்லையென்ற சந்தேகம் ஏற்படுகிறது. இத்தாலியை எதிர்த்து செப்டெம்பர் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பெடரேஷன் கிண்ண டெனிஸ் அணியில் மரியா ஷரபோவா இடம்பெறுவது சந்தேகமே என்று கூறிவிட்டார் அணித் தலைவர் தர்பிஷசேவ். கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிராக அரையிறுதி டெனிஸ் போட்டி தொடங்குவதற்கு ம…

    • 0 replies
    • 851 views
  20. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…

  21. பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…

  22. வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…

  23. பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…

  24. பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…

  25. தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்! கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது. பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.