விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எல் கிளாசிகோ நேரம் மாற்றம் ஸ்பெய்னின் முக்கிய கால்பந்தாட்டக் கழகங்களான ரியல் மட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் எல் கிளாசிகோ ஆட்டம் நடைபெறும் நேரம் ஆசிய ரசிகர்களையும் கவரும்படியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பரம வைரிகளான இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தைக் காண்பதற்கு உலகமே ஆவலுடன் காத்திருக்கும். வழக்கமாக இந்த ஆட்டங்கள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கே ஆரம்பமாகும். ஆனால் மாலை 5.30 மணிக்கு இனி ஆட்டங்கள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50614.html 2017-18 சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டி எப்போது …
-
- 1 reply
- 383 views
-
-
இராகுலன், உத்தமனால் சம்பியனாகிய கே.சி.சி.சி -குணசேகரன் சுரேன் கருணாமூர்த்தி இராகுலன் மற்றும் சிவகுருநாதன் உத்தமன் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நடத்திய முக்கோண வெற்றிக்கிண்ணத்தை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணி கைப்பற்றியது. சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் 50 ஓவர்கள் கொண்ட இந்த முக்கோண வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்குபற்றும். அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஜொலிஸ்ரார்ஸ் அணி ஆகியன அ…
-
- 0 replies
- 383 views
-
-
பாகிஸ்தான் - வேர்ல்ட் வெலன் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் அறிவிப்பு! #PAKvsWXI 2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, 'இனியாவது எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளை…
-
- 0 replies
- 383 views
-
-
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. மகிழ்ச்சியும் வருத்தமும் டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளன்று மட்டை பிடித்து நிற்பது சவாலான விஷயம். பந்து வீசப்படும் களத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடிய கால் தடங்கள் பிட்சின் மீது ஏற்படுத்திய சிறு பள்ளங்கள் பந்து தாறுமாறாக எகிறவும் கூடுதலாகத் திரும்பவும் உதவும். ஒரு பந்து எதிர்பார்ப்புக்கு மேல் எழும். இன்னொறு நினைத்ததைவிட அதிகம் தாழும். வழக்கமான உத்திகளை வைத்துக்கொண்டு கரைசேர்ந்துவிட முடியாது. இத்தகைய ஐந்தாவது நாளில் ஆடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் மூன்று முறை கிடைத்தது. மூன்றிலுமே இந்தியா மெச்சத்தக்க விதத்தில் ஆடியது. ஒன்றில் தோல்வி என்றாலும் தீரமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த …
-
- 0 replies
- 383 views
-
-
பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை பாகிஸ்தான் சென்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இ…
-
- 1 reply
- 383 views
-
-
“டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் பேட்டிங் செய்வார்களா?” ஷிகர் தவணை திட்டித் தீர்த்த சுனில் கவாஸ்கர் ஷிகர் தவண் தன்னுடைய பேட்டிங்கை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை, டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் அவர் பேட்டிங் செய்யவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்து…
-
- 0 replies
- 383 views
-
-
இன்றைய மோதல்கள் 2015.10.17 October 17, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரி-20 துடுப்பாட்டத் தொடரின் அரையிறுதியாட்டங்கள் இன்று சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளன. காலை 8.30மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யாழ். இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. வவுனியா உதைபந்தாட்டத் தொடர் வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்…
-
- 0 replies
- 383 views
-
-
நடுவர்களால் அல்ல; சிறந்த ஆட்டத்தால் முதல் இடத்தில் உள்ளோம்- ஷினேடின் ஷிடேன் சிறந்த ஆட்டத்தால் லா லிகா தொடரில் முதல் இடத்தில் உள்ளதாகவும் நடுவர்களால் அல்ல என்றும் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடரில் முக்கியமான லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அட…
-
- 0 replies
- 383 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான இரண்டு நார்ம்கள் பெற்ற வைஷாலி, மூன்றாவது நார்ம் விரைவில் பெறும் நம்பிக்கையில் உள்ளார் வைஷாலி. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். ஸ்பெயினில் நடைபெற்றுவரும் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
உண்மைதான்..! உலகக்கோப்பையில் ஸ்டம்பை பறிகொடுத்த பலரும் இதில் வெளுத்து வாங்குகிறார்கள்..!!
-
- 0 replies
- 383 views
-
-
29 பட்டங்கள் வென்று ஜோகோவிச் சாதனை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார்…
-
- 0 replies
- 383 views
-
-
20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்…
-
- 0 replies
- 383 views
-
-
சென்னை சுப்பர் கிங்ஸின் 3 வீரர்கள் விவரம் ‘ரிலீஸ்’ ஐ.பி.எல். தொடரில் முக்கிய அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ், அடுத்த வருடம் தக்கவைக்கவுள்ள மூன்று வீரர்களின் விவரம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது முறை கேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இந்த வருடத்துடன் முடிவடைந்துள்ளது. அடுத்த வருடம் இந்த இரண்டு அணிகளும் மீண்டும் களமிறங்குகின்றன. இதையடுத்து ஒவ்வொரு அ…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ்ப்பாணத்தில் 300 இற்கும் அதிகமான அணிகள் மோதும் கால்பந்து திருவிழா ஐந்தாவது வருடமாக யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் யாழ். கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மைலோ நிறுவனம் நடத்தும் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடனேயே இக்கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவ் ஆண்டுக்கான மைலோ கிண்ணத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இம்முறை 100 பாடசாலை அணிகளுடன் 210 கால்பந்து கழக அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட…
-
- 0 replies
- 383 views
-
-
ஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா? மவுனம் கலைத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்: “ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே. நிறைய இடத்தி…
-
- 0 replies
- 383 views
-
-
'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்! முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பி…
-
- 0 replies
- 382 views
-
-
மாலிங்கவுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை சனிக்கிழமை, 20 செப்டெம்பர் 2014 இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தனது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக அவர், அவுஸ்திரேலியாவுக்கு இன்று பயணமாகிறார். இந்தநிலையில் அவரால் 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன. எனவே உலக கிண்ணப்போட்டிகளில் மாலிங்கவின் பங்களிப்பு குறித்து சந்தேகம் வெளி…
-
- 0 replies
- 382 views
-
-
யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
ஸ்மித், வார்னர் இல்லாததால் நல்ல வாய்ப்பு; ஆஸி.யை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தும்: இயன் சாப்பல் உறுதி மும்பை நிகழ்ச்சியில் இயன் சாப்பல். - படம். | பிடிஐ மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. …
-
- 0 replies
- 382 views
-
-
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம். டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண…
-
- 0 replies
- 382 views
-
-
உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்.| ஏ.பி. டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். …
-
- 1 reply
- 382 views
-
-
37 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அஸ்வினின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் இந்திய அணியில் விளையாடும் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஆவார். http://stats.espncricinfo.com/ci/content/records/283534.html
-
- 0 replies
- 382 views
-
-
வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்? 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவி…
-
- 0 replies
- 382 views
-
-
இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி! இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கி…
-
- 0 replies
- 382 views
-
-
இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலில் உலககோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இதற்காக அந்நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ஸ்டேடியங்கள் மற்றும் வீரர்கள், ரசிகர்கள் தங்குவதற்கான உள்கட்டமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சாவோ பாலோ நகரில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனங்களை அடித்து துவம்சம் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாயை உலககோப்பைக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு அந்த பணத்தை சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து, வீட்டு வசதிக்கு செலவு செய்ய …
-
- 0 replies
- 382 views
-