Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…

  2. ஏ.வி.பெருமாள் First Published : 03 Mar 2012 12:00:00 AM IST இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றி பெறாவிட்டாலும், சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று கூறி மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்தது, சேவாக்-தோனி மோதல், வீரர்கள் தேர்வில் தோனி பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டு, ஆசிய கோப்பையில் சேவாக் ஓய்வு என ஓயாமல் சர்ச்சைகள் தொடர்கிறது. 2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணியின் இரும்பு கேப்டனாக உயர்ந்தார் தோனி. அதன்பிறகு ஐபிஎல் உள்ளிட்ட உள்ளிட்ட சில வெற்றிகளால் பி.சி.சி.ஐ.யின் நம்பிக்கைக்குரியவரானார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று ப…

  3. திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். ‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத…

  4. தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…

  5. தோனியிலிருந்து வேறுபட்டவர் என்பதை காண்பிக்க கோலிக்கு வாய்ப்பு: திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படவுள்ள விராட் கோலிக்கு, தோனியை விட தான் வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் திராவிட் கூறும்போது, “தோனி இல்லாததால் விராட் கோலி தன் கேப்டன்சி தோனியின் பாணியிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி நிச்சயம் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றே நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை சற்ற…

  6. தோனியுடன் ஒப்பிடலாமா: மனம் திறக்கிறார் கோஹ்லி புதுடில்லி: ‘‘என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். எனது குணம் மாறுபட்டது. கேப்டனாக தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுவேன்,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, 26. இதுவரை 33 டெஸ்ட் (2547 ரன்கள்), 158 ஒரு நாள் (6537), 28 ‘டுவென்டி–20’ (972) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி டெஸ்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் தோனியை போல கேப்டன் பதவியில் ‘கூலாக’ செயல்படுவாரா என தெரியவில்லை. இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அதிகம் செ…

  7. தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…

  8. தோனியும் ‘மேன்லி பியூட்டி பார்லர்’ சிகையலங்கார நிலையமும் தோனி தனது சிகையலங்காரத்தை அடிக்கடி விதம் விதமாக மாற்றுபவர் என்பது நாம் அறிந்ததே. அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்வில் இருந்த சமயம், ‘மேன்லி பியூட்டி பார்லர்’ என்ற ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அடிக்கடி செல்வார் என்பது உள்ளிட்ட சுவையான தகவல் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்ரிகையாளர் பிஸ்வதீப் கோஷ் எழுதியுள்ளார். "எம்.எஸ்.டி, தி மேன், தி லீடர்" என்ற வாழக்கை வரலாற்று நூலில் தோனியைப் பற்றி இதுவரை கேள்விப்படாத தரவுகள், நிகழ்வுகள் மற்றும் அவரைப்பற்றி பிறர் கூறுவது என்று 245 பக்கங்க்ளுக்கு அந்த நூலை எழுதியுள்ளார் பிஸ்வதீப். தன் கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலங்களில் ராஞ்சியில் உள்ள சாதாரணமான சலூன்களில…

  9. தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…

  10. தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…

  11. தோனியை நிம்மதி பெருமூச்சு விட வைத்த உச்ச நீதிமன்றம்! இந்து கடவுள் மகாவிஷ்ணு போல அட்டைப்படம் வெளியிட்டது தொடர்பாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஆந்திர நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கில் நடவடிக்கைக்கு எட்டு வாரங்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பிசினஸ் டுடே இதழில் தோனி இந்து கடவுள் மகாவிஷ்ணு போன்று அட்டைப்படத்தில் போஸ் வெளியிடப்பட்டது. இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தியதற்காக கேப்டன் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து ஆந்திர நீதிமன்றம் உ…

  12. தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி கோப்புப் படம் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிலடி தந்துள்ளார். தான் உட்பட மற்ற பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாமல் போனால் கூட எல்லாரும் வசதியாக ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 2வது டி20 போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு காரணம் எனப் பலர் விமர்சித்த…

  13. தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…

  14. தோனியை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு? ஐ.பி.எல். போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இனி எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் முன் எழுந்து நிற்கிறது. லோதா கமிட்டியின் தண்டனை விபரம் வெளியிட்ட பின்னர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி ஒரு மிகப் பெரிய பிராண்ட் வேல்யூ உள்ள அணியோ அது போல் தோனியும் பிராண்ட் வேல்யூ மிக்க ஒரு வீரர். எனவே அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு சென்னை அணி நிர்வாகத்தினர் வந்திருப்பதாக கூறப்ப…

  15. தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட் திராவிட், தோனி. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. பெங்களூரு இலக்கிய விழா ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தோனியை விமர்சிக்காதீர்கள் என்றார் ராகுல் திராவிட். அதாவது, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவரே முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரமிக்க வீரராகி விட்டாரா தோனி என்ற கேள்வி திராவிடிடம் முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கூறும்போது, “தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தனது கடைசி போட்டி எது என்பதை முடிவு செய்கிறார…

  16. தோனியை விமர்சித்த பிரிட்டன் ஊடகங்கள்: இந்திய ரசிகர்கள் கூச்சல் எதிரொலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கில…

  17. தோனியை விலகச் சொல்ல மாட்டேன்: சீனிவாசன் திட்டவட்டம் தோனியை நான் ஏன் விலகச் சொல்ல வேண்டும் என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வகித்து வரும் தோனியை நான் ஏன் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபில் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் சீனிவாசன், தோனி ஆகியோரது ‘முரண்பட்ட இரட்டை நலன்கள்’ குறித்து கேள்வி எழுப்பியது. மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக முடிவுகளை எடுப்பவர் யார்? நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீனிவாசன் குடும்பத்தினருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்…

  18. தோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்! ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன் கேரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை. தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற…

    • 3 replies
    • 423 views
  19. தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த ‘லயன்’ மெஸ்ஸி தோல்வி அதிர்ச்சியில் பார்சிலோனாவின் ஜேவியர் மஸ்சரானோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர். | படம்: ஏ.எஃப்.பி. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்…

  20. தோல்வி எதிரொலி: இலங்கை வாரியம் மீது ரணதுங்கா சாடல் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரால் இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே பொறுப்பு என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் படுதோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி தொடர்பாக வீரர்கள் மீது குற்றம்சாட்ட மறுத்த ரணதுங்கா மேலும் கூறியதாவது: இலங்கை அணி இதுவரை மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகம், தேர்வுக் குழு தலைவர் ஜெயசூர்யா, பயிற்சியாளர் அட்டப்பட்டு, க…

  21. தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம் முஷ்பிகுர் ரஹிம் பேட்டிங். | படம்: ஏ.எஃப்.பி. இங்கிலாந்துக்கு எதிராக அரிய வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியது பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்று வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார். “சில வேளைகளில் தோல்வி ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தும். 15 மாதங்கள் டெஸ்ட் போட்டியே ஆடாமல் வங்கதேச அணி இப்படி ஆடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களால் ஓரளவுக்கு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இங்கிலாந்து போன்ற ஒரு அனுபவமிக்க அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை தெரிவிக்குமாறு ஆடினோம். தோல்வி வெறுப்பேற்றுகிறது என்ற வார்த்தையை நா…

  22. தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார் தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது, இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடருக்காக புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவரா…

  23. தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்: ஷிகர் தவான் சொல்கிறார் தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். தம்புல்லா: தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான்…

  24. தோல்விக்கு ஆடுகளம் மீது பழிபோடுவதா? - கவாஸ்கர் கேள்வி மும்பை ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததற்கு ஆடுகளம் மீது பழி போடுதல் கூடாது என்று ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் சூசக விமர்சனம் வைத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் மும்பை கிரிக்கெட் சங்க…

  25. தோல்விக்கு இந்தியா காரணம் * புலம்பும் இலங்கை கிரிக்கெட் போர்டு கொழும்பு: ‘‘இந்தியாவுக்கு எதிராக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் தொடர், எங்களது உலக கோப்பை பயிற்சியை பாதித்தது. இது தான் எங்கள் அணி தோல்விக்கு காரணம்,’’ என, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) நிர்வாகி ஷமி சில்வா தெரிவித்தார். பொதுவாக இலங்கை அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். 2003ல் அரையிறுதி (எதிர்–ஆஸி.,), 2007ல் பைனல் (எதிர்–ஆஸி.,), 2011ல் பைனல் (எதிர்–இந்தியா) என, முன்னேறிய இலங்கை அணி இம்முறை காலிறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. 1999க்குப் பின் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து எஸ்.எல்.சி., தலைவர் ஜயந்தா தர்மதாசவுக்கு எழுதிய கடிதத்தில், ஷமி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.