விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பெண் அளித்த புகாரில் கைதான அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ராவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியி…
-
- 0 replies
- 199 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம். அப்படி…
-
- 0 replies
- 164 views
-
-
ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் வலுத்து வருகிறது Getty ஜியானி இண்ஃபாண்டினோ மற்றும் மிஷேல் பிளாட்டினி PA பதவி விலகும் பிளாட்டரும், அப்பதவிக்கு போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அல் ஹிசைனும் Getty தலைவர் பதவிக்கான போட்டியிலுள்ள டோக்யோ செக்ஸ்வாலே சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தலைவர் பதவிக்கான போட்டி வலுத்து வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலரும் போட்டியிடுகிறார் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். செப் பிளாட்டர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஃபிஃபாவின் அடுத்த தலைவருக்கான போட்டி சூடுபிடித…
-
- 0 replies
- 278 views
-
-
டெஸ்ட் தொடரே எமது முதல் இலக்கு: மெத்தியூஸ் நாங்கள் இருபது-20 போட்டி குறித்து முதலில் கவனம் செலுத்த மாட்டோம். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரே ஆரம்பமாகின்றது. எனவே இப்போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே எங்களது முக்கியமாக கவனமாக இருக்கும். இதனையடுத்தே இருபது-20 போட்டி மீதான கவனம் செலுத்தப்படும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே மெ…
-
- 37 replies
- 2k views
-
-
வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி: பேட்டிங்கில் 4-ம் நிலையில் இறங்குகிறார்? பெங்களூரு பயிற்சி முகாமில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி. | படம்: பிடிஐ. ஆக்ரோஷமான ஷாட்டை ஆடும் தோனி. | படம்: பிடிஐ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலான நீண்ட தொடரை அடுத்து பெங்களூருவில் தயாரிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஷிகர் தவண், தோனி, மொகமது ஷமி ஆகியோர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டு கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். புதன் கிழமையன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ஒருநாள் அணி கேப்டன் அடுத்தடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். ரவிசாஸ்திரி அவரது ஆட்டத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட நேரம் தோனியுடன் ரவிசாஸ்திரி உரையாடினார். இத்தனையாண்டுகளாக ஒ…
-
- 70 replies
- 7.6k views
-
-
அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார் புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார். ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். அப்போது வேகப்பந்துவ…
-
- 1 reply
- 571 views
-
-
கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.பி.எல். தொடரில் சென்னை இருக்காது தோனி இருப்பார்! சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை அணிக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. வரும் 2016, 17ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இடம் பெறாது. அதே போல் ராஜஸ்தான் அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த அணியில் இரு ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் தலை காட்ட முடியாது. இந்த இரு அணிகளுக்கும் பதிலாக மாற்று இரு அணிகளை உருவாக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் , சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியும…
-
- 1 reply
- 391 views
-
-
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்! மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற…
-
- 2 replies
- 285 views
-
-
ஸ்ரீனிவாசனுடன் தோனி, சு.சுவாமி அடுத்தடுத்து சந்திப்பு: காரணம் என்ன? சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உச்ச நீதிமன்றம் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசனை, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற சூதாட்ட புகாரை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் விலகினார். இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை…
-
- 1 reply
- 562 views
-
-
டெஸ்ட்டில் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல: விருத்திமான் சஹா தோனி, விருத்திமான் சஹா. | கோப்புப் படங்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா. டெல்லி-வங்காள ரஞ்சி போட்டியை அடுத்து பிடிஐ-யிடம் சஹா தெரிவிக்கும் போது, “தோனியின் சாதனைகளை பரிசீலிக்கும் போது, தோனியின் நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை, இன்னும் நிறைய ஆடினால்தான் எனக்கான ஒரு இடத்தை நான் தருவித்துக் கொள்ள முடியும். என்னைக் கேட்டால் தோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன். ஏன் இந்த வரையறை என்றால் தோனியின் சாதனைகள் அப்படிப்பட்டவை. …
-
- 0 replies
- 185 views
-
-
2016 ரியோ டி ஜெனெய்ரோ ஒலிம்பிக் விளையாட்டு விழா; 8 மணி நேரத்தில் 2 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெறவுள்ள 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 இலட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட்களைக் கொள்வனவு செய்வதில் இரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்…
-
- 0 replies
- 263 views
-
-
இந்திய அணியின் பிரச்சினை என்ன? சென்னையில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி | படம்: வி.கணேசன். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்கூலி ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள். அப்படியும் போட்டியில் இந்தியா தோற்றுப்போகும். காரணம், அந்தத் தொடக்கத்தை வெற்றியாக மாற்றத்தக்க வலிமை கீழ்நிலை மட்டை வரிசையில் இருக்காது. மைக்கேல் பெவன் போன்ற மட்டையாளர்களோ ஷான் பொல்லாக், லான்ஸ் குளூஸ்னர் போன்ற ஆல்ரவுண்டர்களோ இல்லாததால் நல்ல தொடக்கங்கள் பல விழலுக்கு இறைத்த நீராக ஆகியிருக்கின்றன. யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்றோர் வருகையால் இந்த நிலை மாறியது. பல தொடக்கங்கள் வெற்றியாக மாறத் தொடங்கின. தொடக்க நிலையில் இருப்பவர்களின் மீதான பளு குறைந்தது. 2002 முத…
-
- 0 replies
- 279 views
-
-
மலிங்கவை முந்த ஆசை: பிரசாத் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் தம்மிக்க பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாஸ், 355 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்தையும் லசித் மலிங்க 101, டில்ஹார பெர்ணான்டோ 100, பிரமோதய விக்கிரமசிங்க 85, றுமேஷ் ரத்நாயக்க 73 விக்கெட்டுகளுடன் ஏனையோர் அடுத்த இடங்களிலும் காணப்படுகின்றனர். ஆறாவது இடத்தில், 70 விக்கெட்டுகளுடன் தம்மிக்க பிரசாத் காணப்படுகின்றார். தம்மிக்க பிரசாத்தின் ஒட்டுமொத்த சராசரி 37.51ஆகக் காணப்படுகின்ற போதிலும், கட…
-
- 0 replies
- 321 views
-
-
அமித் மிஸ்ராவை கைது செய்ய போலீஸ் திட்டம் அமித் மிஸ்ரா மீது பாலியல் புகார். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தனது தோழியை தாக்கியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் 7 நாட்களுக்குள் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. இது தொடர்பாக பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் எம்.ஜி. சாலையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது பெண் தோழியை சந்தித்துள்ளார். அப்போது அமித் மிஸ்ரா பெண் தோழியை தகாத …
-
- 0 replies
- 188 views
-
-
சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் புதிய அணியில்? சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வருங்காலம் பற்றி முடிவெடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது. சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள இரண்டு அணியையும் வெட்டிவிட பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இரண்டு அணிகளும் அடுத்த இரண்டு சீசனில் இடம்பெறாது. அதற்குப் பதில் இரண்டு புதிய இரண்டு அணிகள் 2016, 2017-ல் கலந்து கொள்ளும் என்றும், 2018-ல் 8 அணியில் இருந்து 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும். அதில் இரண்டு அணிகளும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் நிலை என்ன என்ற கேள…
-
- 0 replies
- 298 views
-
-
டென்னிஸ் ஆடையிலிருந்து சொக்லேற் ஆடைக்கு..... பிரான்ஸை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான டாட்யானா கொலோவின், சொக்லேற்றுகள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற “சொக்லேற் ஆடை” கண்காட்சியில் டாட்யானாவும் கலந்து கொண்டார். 27 வயதான டாட்யானா, 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மொஸ்கோ நகரில் பிறந்தவர். ஆனால், 8 மாத குழந்தையாக டாட்யான இருந்தபோது அவரின் பெற்றோர் பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் பிரான் ஸின் சார்பில் அவர் போட்டி களில் பங்குபற்ற ஆரம்பி த்தார். 2014 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் கஸ்கட்டுடன் இணைந்து டாட்யானா சம்பியன…
-
- 1 reply
- 243 views
-
-
குஷல் ஜனித்துக்கு விருது இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73643
-
- 8 replies
- 846 views
-
-
ஃபீஃபா தேர்தல் பெப்ரவரி 26 இல் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தல் 2016 பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை சம்மேளனம் நேற்று உறுதி செய்தது. 1998முதல் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்துவந்து செப் ப்ளட்டர், மோசடி குற்றச்சாட்டில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டுள்ளதால் அப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு புதிய தலைவர் யார் என்பதை இத் தேர்தல் தீர்மானிக்கும். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12838#sthash.bsEbvurW.dpuf
-
- 0 replies
- 278 views
-
-
தங்கப்பந்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் இந்த ஆண்டுக்கான பல்லான் டி. ஆர் விருதுக்கு (தங்கப்பந்து) ரியல்மாட்ரிட் அணியின் ரொனால்டோ, பார்சிலோனா வீரர் மெஸ்ஸி உள்ளிட்ட 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கால்பந்து வீரருக்கு 'பல்லான் டி ஆர்' விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதை ரொனால்டோ பெற்றார். இந்த ஆண்டுக்கான விருதுக்கு 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட இந்த 23 வீரர்களில் இருந்து ரசிகர்கள் இ பிபா இணையத்தளத்தில் ஒன்லைன் மூலம் வாக்களிப்பார்கள். இதில் முதல் 3 இடங்களை பெறுபவர்களில் இரு…
-
- 0 replies
- 310 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கலாம் ! மும்பையில் நடைபெற இருந்த இந்திய –- பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சிவசேனா போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், சிவசேனா மிரட்டலால் ஐ.சி.சி. தங்களது நடுவரான அலீம் தாரை திரும்பப்பெற்றது. இந்த செயல்களால் பி.சி.சி.ஐ. தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட வரவிருக்கும் பாகிஸ்தான் வீரர் கள் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.சி.சி. தலைவர்களில் ஒருவரும்இ பாகிஸ்தான் முன்னாள் வீரருமான ஸாஹிர் அப்பாஸ் தெரிவித்த…
-
- 0 replies
- 191 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவருக்கு சிவசேனா மிரட்டல்! பாகிஸ்தானை சேர்ந்த, கிரிக்கெட் நடுவர் அலிம் தார் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பை பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சேஷாங் மனோகரை சந்தித்து பேச இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது இருவரும் பேச இருந்தனர். இவர்களது பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனாவினர் பி.சி.சி.ஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தற்போது நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கி…
-
- 1 reply
- 357 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள் போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்…
-
- 0 replies
- 237 views
-
-
இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் என்று போற்றப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தப்போட்டியை பார்வையிடுவதற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வருகைதருகிறார் என்று…
-
- 0 replies
- 359 views
-
-
2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜ…
-
- 1 reply
- 359 views
-