விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…
-
- 0 replies
- 407 views
-
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 407 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 440 views
-
-
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…
-
- 0 replies
- 307 views
-
-
பாராலிம்பிக்ஸில் இலங்கை வீரா் உலகசாதனை August 30, 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் தினேஷ் பிரியந்த ஹேரத் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளாா். இதன்மூலம் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2021/165226
-
- 5 replies
- 575 views
-
-
பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் Published By: VISHNU 26 AUG, 2024 | 08:17 PM (நெவில் அன்தனி) டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர். ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர்…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நகரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்டரங்கை சூழவுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையிட்டு பெரும் அதிர்ச்சி அடைவதாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்மனி அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல்கள்…
-
- 0 replies
- 264 views
-
-
பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித…
-
- 0 replies
- 361 views
-
-
பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின. இரண்…
-
- 0 replies
- 327 views
-
-
பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10 கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அது…
-
- 5 replies
- 919 views
-
-
பார்சிலோனா 3வது முறையாகவும் சம்பியன் December 21, 2015 ஜப்பானில் நடைப்பெற்ற 12வது உலக கழக அணிகளுக்கான கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், அர்ஜென்டினாவின் ரிவர்ட் பிளாட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலத்திய பார்சிலோனா அணி, லயோனல் மெஸ்சியின் ஒரு கோலுடனும், லூயிஸ் சுவாரஸின் 2 கோல்களுடனும் 3-0 என்ற கோல் கணக்கில் ரிவர்ட் பிளாட்டை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது பார்சிலோனா அணி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடதக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6343
-
- 0 replies
- 898 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 399 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘லா லிகா’ கால்பந்தில் அசத்தல் மாட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில் மெஸ்சி, நெய்மர் உள்ளிட்டோர் அடங்கிய பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி 1–0 என அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடந்தது. மாட்ரிட் நகரில் நடந்த கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பார்சிலோனா அணிக்கு 65வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியினரால் ஒரு கோல் க…
-
- 0 replies
- 479 views
-
-
பார்சிலோனா அணி வெற்றி அக்டோபர் 22, 2014. பார்சிலோனா: அஜாக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி, நெய்மர் தலா ஒரு கோல் அடிக்க பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் அஜாக்ஸ், பார்சிலோனா அணிகள் மோதின. போட்டியின் 7வது நிமிடத்தில் பார்சிலோனா இளம் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார். நட்சத்திர வீரர் மெஸ்சி 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் (88வது நிமிடம்) அஜாக்ஸ் அணி சார்பில் எல் காஜி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணியின் சாண்ட்ரோ (90+4) ‘ஸ்டாப்பேஜ் நேரத்தில்’ கோல் அடித்து பதிலடி தந்தார். முடி…
-
- 0 replies
- 458 views
-
-
பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார். 31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக இந்த கோலை…
-
- 0 replies
- 232 views
-
-
பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமனம் பார்சிலோனா கால்பந்து கிளப் அணயின் புதிய பயிற்சியாளராக அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளரான எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமிக்கப்பட்டுள்ளார். பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர் லூயிஸ் என்ரிக். இவர் பார்சிலோனா அணியின் மானேஜராக கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார். தற்போது வரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் இந்த சீசனோடு பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பார்சிலோனா ஆணி கோப…
-
- 0 replies
- 350 views
-
-
பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்! பார்சிலோனா அணியின் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா. இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் க…
-
- 0 replies
- 463 views
-
-
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் மெஸ்சி கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காகத்தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட…
-
- 0 replies
- 317 views
-
-
பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ படம்: ஏ.எஃப்.பி. ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் பயிற்சிப் பள்ளி பிரதானமாக திறக்கப்படுகிறது, இதில் முதல் பெயராக லயோனல் மெஸ்ஸி மகன் பெயர் தியாக…
-
- 0 replies
- 434 views
-
-
பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…
-
- 0 replies
- 211 views
-
-
பார்சிலோனா, ஆர்சனலுக்கு விருது ஐரோப்பிய கழகச் சங்கத்தினால் வழங்கப்படும் வருடாந்த விருதுகளில், பார்சிலோனா, ஆர்சனல் ஆகிய கழகங்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இவை தவிர, உக்ரேனியக் கழகமான நிப்ரோ நிப்ரோபெட்ரோவ்ஸ்க், எஸ்தோனியக் கழகமான லெவாடியா தல்லின் கால்பந்தாட்டக் கழகம் ஆகியனவும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. ஐரோப்பாவின் சிறந்த கழகத்துக்கான விருதுதை, பார்சிலோனா கழகம் வென்றது. 2014-15 பருவகாலத்தில், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த சமுதாய, சமூகப் பொறுப்புக்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கான விருதை, ஆர்சனல் வெற்றிகொண்டது. இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்காக, அக்கழகம் மேற்கொள்ளும் ஆர்சனல் வேலைத்திறன் நி…
-
- 0 replies
- 264 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி By Mohamed Shibly ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் …
-
- 0 replies
- 471 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு கடும் போட்டி By Mohamed Shibly - குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பாகி இருக்கும் ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய இரு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (05) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் எஸ்பான்யோல் சீன முன்கள வீரர் வூ லீ கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் ஸ்பெயின் லா லிகாவில் கடைசி இடத்தில் இருக்கும் எஸ்பான்யோல் அணி முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுக்கு இடையிலான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் லோபா…
-
- 0 replies
- 582 views
-
-
பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்? ஏதாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி. இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான். மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர…
-
- 0 replies
- 522 views
-