Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ''சான்டியாகோ பெர்னாபூவில் இருந்து கெசிலாசை தூக்கி எறிந்து விட்டனர்!''-பெற்றோர் குமுறல் கடந்த 25 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த இகெர் கெசிலாசுக்கு ஒரு பிரிவுபச்சார விழா கூட நடத்தாமல் அவமானப்படுத்தி அணியை விட்டு வெளியேற்றியுள்ளதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் இகெர் கெசிலாஸ் 10 வயதில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் சப்ஜுனியர் அணியில் இருந்து 25 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் அவர் விளையாடியதில்லை. 1990 முதல் தற்போது வரை 16 சீசன்களில் ரியல்மாட்ரிட் அணிக்காக 725 போட்டிகளில் கெசிலாஸ் விளையாடியுள்ளார். இந்நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் தலைவர் ஃபுளோரென்டினா பரேசுக்கும் …

  2. ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…

  3. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் ஏ.பி.டி முதலிடம்! டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐ.சி.சி. வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டியில் 908 புள்ளிகளையும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 902 புள்ளிகளையும் பெற்று ஒரே சமயத்தில் டி வில்லியர்ஸ் இந்த சாதனையை புரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 755 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். இதிலும் விராட் கோலி 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் இந்திய அணியின் கேப்டன் த…

  4. ரியல் மாட்ரிட்டில் இருந்து கெசிலாஸ் விலகல்: மான்செஸ்டர் யுனைடெட்டில் ஜெர்மனி கேப்டன்! ரியல்மாட்ரிட் அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான இகெர் கெசிலாஸ் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மனி அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வான்ஸ்டைகர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ளார். ஐரோப்பிய டிரான்ஸ்பர் விண்டோ தற்போது நடந்து வருகிறது. பல முன்ணணி வீரர்கள் அணிகள் மாறி வருகின்றனர். அந்த வகையில் ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் இகெர் கெசிலாஸ் ரியல்மாட்ரிட்டில் இருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் ரியல்மாட்ரிட் சப்ஜுனியர் அணியில் இணைந்து விளையாடத் தொடங்கிய இகெர் கெசிலாஸ் அந்த அணிக்காக 16 சீசன்களில் 725 போட்டிகளில் விளையாடியுள்ளா…

  5. அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்குடன் 6 விக்கெட் வீழ்த்திய கல்லூரி மாணவர்! வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர் காஜிசோ ரபேடா ஹாட்ரிக் சாதனையுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்பூரில் நடந்த இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபேடா, 8 ஓவர்களில் 3 மெய்டனுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிம் இக்பால்,லிட்டான் தாஸ், மக்முதுல்லா ஆகியோரை டக்அவுட் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை வேறு படைத்தார். இதன்…

  6. விம்பிள் டன் போட்­டியை கண்­டு­க­ளித்த சங்கா லண்­டனில் நடைபெற்­று­வரும் விம்பிள்டன் போட்­டியை கண்­டு­க­ளிப்­ப­தற்கு குமார் சங்­கக்­கார சென்­றுள்ளார். ரோஜர் பெ­டரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்­டி­யி­லேயே சங்­கக்­கார கலந்துகொண்­டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகு­தியில் அமர்ந்து தனது மனை­வி­யோடு போட்­டியை கண்­டு­க­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்­டியை-கண்­டு­க­ளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்­பிள்டன் அகில இங்­கி­லாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்­டு­க­ளிக்க சென்ற இலங்­கையின் நட்­சத்­திர கிரிக…

  7. கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி கரீபியன் பிரிமியர் லீகில் தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.…

  8. சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் (Sunil Manohar Gavaskar) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1949) பிறந்தவர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மாமா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அவர்தான் இவரது முதல் பயிற்சியாளரும்கூட. l மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்’ என்று பெயர் எடுத்தவர். l முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1966-67ல் விளையாடத் தொடங்க…

  9. இந்தியா–இலங்கை தொடர் எப்போது மும்பை: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜூலை 19ல் தொடர் முடிந்தவுடன் மறுநாள் இந்திய வீரர்கள் திரும்புகின்றனர். அடுத்து இந்திய அணி இலங்கை சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இதன் படி ஆக., 12–16ல் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கும். அடுத்து ஆக., 20–24ல் இரண்டாவது டெஸ்ட் கொழும்புவிலும், ஆக., 28–செப்.,1ல் மூன்றாவது டெஸ்ட் பல்லேகெலேயிலும் நடக்கும். இப்போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. முன்னதாக துவக்கம்: இரு …

  10. உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் பணப்பரிசுத் தொகையில் ஏன் இந்த பாகுபாடு? ஆட­வ­ருக்கு 576 மில்­லியன் டொலர்கள், மக­ளி­ருக்கு 11.1 மில்­லியன் டொலர்கள் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் மக­ளி­ருக்­கான போட்­டியில் வழங்­கப்­படும் பரிசுத் தொகையை விட 400 மடங்கு அதி­க­மான பரிசுத் தொகை ஆட­வ­ருக்­கான போட்­டிக்கு வழங்­கப்­ப­டு­வ­தாக குறை­கூ­றப்­ப­டு­கின்­றது. நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்­டி­களில் வழங்­கப்­பட்ட பரி­சுத்­தொ­கை­யை­விட இம் முறை கன­டாவில் நடை­பெற்ற போட்­டி­க­ளுக்கு பணப்­ப­ரிசு 50 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டது. எனினும் , ஆடவர் உலக சம்­பி­ய­னான ஜேர்­ம­னிக்கு கடந்த வருடம் 35 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்…

  11. 2016 ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது: 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் 2016- ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. | கோப்புப் படம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் அந்த அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் 3 டி20 சர்வதேச போட்டிகளும் அடங்கும். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏமாற்றத் தோல்வியைத் தழுவியதையடுத்து ஆஸ்திரேலியாவை மீண்டும் ஜனவரியில் அவர்கள் சொந்த மண்ணில் சந்திக்கிறது இந்திய அணி. நியூஸிலாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா அதற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக…

  12. ஜிம்பாப்வே வந்து சேர்ந்த ரஹானே தலைமை இந்திய அணி: வெள்ளிக்கிழமை முதல் போட்டி இந்திய அணி. | படம்: விவேக் பெந்த்ரே. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தனர். இந்த அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட் செய்துள்ளார், “ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே வந்தடைந்தோம். உள்ளூர் டிரம் இசைக் கலைஞர்கள் எங்களை வரவேற்றனர், மீண்டும் இவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி ஹராரேயில் நாளை இந்திய நேரம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது. ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படவிருக்கிறார். எனவே இது அவருக்…

  13. ஓய்வு நேரத்தில் ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற 'லெப்டினன்ட்' தோனி முடிவு! ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதனால் ஒருநாள் அணியின் கேப்டன் தோனிக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. தற்போது ராஞ்சியில் குடும்பத்தினரு…

  14. பெங்கால் டைகர் கங்குலிக்கு பிறந்தநாள்! ''உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' இதனை கூறியது தத்துவமேதையோ, அறிஞர்களோ அல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான். கால்பந்திலிருந்து கிரிக்கெட்! மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந…

  15. பங்களாதேஷ் தொடரிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் : அணித் தலைவராகிறார் ஹசீம் அம்லா தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட்அணி பங்­க­ளா­தேஷில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யாடி வரு­கி­றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் எதிர்­வரும் 10ஆம் திகதி நடக்­கி­றது. இந்த ஒருநாள் தொடரில் தென்­னா­பி­ரிக்க தலைவர் டிவில்­லியர்ஸ் விளை­யாட வில்லை. அவரை அணியில் இருந்து நிர்­வாகம் விடு­வித்­தது. உலக கிண்ண அரை­ இ­று­தியில் மெது­வாகப் பந்து வீசி­ய­தற்­காக அவ­ருக்கு ஒரு போட்­டியில் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக முதல் ஆட்­டத்தில் அவர் விளை­யாட இய­லாது. இதன் கார­ண­மாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து முழு­மை­யாக விலகி உள்ளார். இதனால் ஹசிம் அம்லா தலைவராக பணியாற்றுகிறார். …

  16. பாகிஸ்தானுடனான தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என்கிறார் மெத்யூஸ் பாகிஸ்­தா­னு­ட­னான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் அடைந்த தோல்­வியை ஜீர­ணிக்க சில காலம் செல்லும் என இலங்கை அணித்தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்­துள்ளார். ‘‘பல்­லே­க­லையில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் 377 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்­ண­யித்­த­போது நாங்கள் சிறந்த நிலையில் இருந்­த­தாக நான் கரு­தினேன். எனினும் இறு­தியில் அடைந்த தோல்­வியை ஜீர­ணிப்­ப­தற்கு நிச்­ச­ய­மாக சில காலம் செல்லும். எமது அணி­யி­ன­ரி­ட­மி­ருந்து இத்­த­கைய ஆற்றல் வெளிப்­பா­டு­களை நாங்கள் முற்­றிலும் எதிர்­பார்க்­க­வில்லை. பாகிஸ்தான் அணி­யி­னரோ கடைசி இன்­னிங்ஸில் சிறப்­பாக விளை­யா­டினர்’…

  17. ''மதுவை தொட்டதுமில்லை... தொடுவதுமில்லை '' - இந்திய கேப்டன் தோனி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி நேற்று கேக் வெட்டுவதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பில் சில சுவரஷ்யங்களை பகிர்ந்து கொண்டார். நான் மதுவை தொட்டதே இல்லை. ஆனால் அது சுவையானது என்பதை மற்றவர்கள் கூறுவதை வைத்து புரிந்து கொண்டிருக்கிறேன்.அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிராவிட் இவர்கள் தான் என்னுடைய ஹீரோக்கள். பொறுமை என்றால் என்ன என்பதை ராகுல் டிராவிட்தான் கற்றுக் கொடுத்தவர். பைக்குகளின் மீதான தீராத காதல் பற்றி டோனி கூறுகையில்,புதியது- பழையது என்று எல்லாம் பார்க்க மாட்டேன். எல்லாமே எனக்கு பிடிக்கும்.என்னிடம் டுகாட்டி பண்டா, ஹார்லே பேட் பாய், அமெரிக்காவில் தயாரிக்கப்படு…

  18. தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…

  19. அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …

  20. டி20 போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் அடித்து கிறிஸ் கெயில் வரலாற்று சாதனை! இருபது ஓவர் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா டல்லாவஸ் அணியுடன் லூசியா சூக்ஸ் அணி மோதியது. முதலில் பேட் செய்த லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் 57 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஜமைக்கா அணி பேட் செய்தது. தொடக்க வீரர் வால்ட் 76 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். இத்துடன் கிறிஸ் கெயில் டி20 வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தார். அத…

  21. டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்! காலே: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் க…

  22. ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்! உலகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா? வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை ஆஷஸ் தொடரின் 69வது த…

  23. தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. டி வில்லியர்ஸ் 2 ரன்னிலும் குயின்டன் டி காக் 12 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து டுப்லெசிசும் டுமினியும் வங்க தேச பந்துவீச்சை எதிர்கொண்டனர். டுப்லெசிஸ் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். டுமினி 18 ரன்களில் வெளியேறினார். கடைசிக்கட்டத்தில் ரூசவ் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு எதிராக கலக்கிய முஸ்தாபீசூர் ரஹ்மா…

  24. இலங்கை வந்தது பாக் . அணி இலங்கை அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி விளையாடுவதற்காக பகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோர் வருகைதந்துள்ள…

  25. பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.