Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ் மிட்செல் ஜான்சன். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார். அதில்தான் உலகின…

  2. இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சங்கக்காரா, இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சங்கக்காரா, நாட்வெஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சர்ரே- குளோசஸ்சியர் அணிகள் மோதிய போட்டியில் சர்ரே அணி 4 விக்கெட் விக்கெட்டுகளால் 'திரில்' வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய குளோசஸ்சியர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்…

  3. ஒரு கையில் ஐஸ்கிரீம், இன்னொரு கையில் கேட்ச்: கிளென் மேக்ஸ்வெல் அசத்தல் கிளென் மேக்ஸ்வெல். | ட்விட்டர் படம். இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்‌ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்…

  4. கைமாறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் கிங் பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வசம் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பேரால் விரும்பக்கூடிய விளை யாட்டாக உள்ளது. எனவே, ஐபிஎல் அணியை வாங்க முடிவெடுத் துள்ளோம். ஆனால், எந்த அணி என்பதைச் சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த அணி பெங்களூரு அணியா எனக் கேட்டதற்கு, அதை மறுக் கவோ, ஆமோதிக்கவோ இல்லை. “அது அவர்களைப் (ஆர்சிபி) பொறுத்தது” என்றார். http://tamil.thehindu.com/sports/கைமாறுகிறது-ராயல்-சேலஞ்சர்ஸ்/article7382133.ece

  5. சுனாமியால் அனாதையான சிறுவனை கால்பந்து வீரனாக்கிய ரொனால்டோ! கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தனர். சுனாமியில் சின்னாபின்னமான இந்தோனேஷியாவின் ஏக் கடற்கரை பகுதியில் 21 நாட்களுக்கு பிறகு மட்டுனிஸ் என்ற 3 வயது சிறுவன் அதிருஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான். மட்டுனிசின் பெற்றோரும் 2 சகோதரரிகளும் சுனாமியில் சிக்கி உயிரை இழந்திருந்தனர். சிறுவன் மட்டுனிஸ் மட்டும் எப்படியோ உயிர் பிழைத்திருந்தான். சிறுவனை மீட்க அவன் அணிந்திருந்த போர்ச்சுகல் அணியின் ஜெர்சிதான் காரணமாக இருந்தது. போர்ச்சுகல் அணி வீரர் மனுவேல் ரய் கோஸ்ட்டாவின் ஜெர்ச…

  6. ஒரு 'சேம்சைட்' கோலும் 6 தோட்டாக்களும்...! கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. கொலம்பியா அணிதான் கோப்பையை வெல்லும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கணித்திருந்தார். அதற்கேற்றார் போல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. கார்லெஸ் வால்டராமா,ஃபாஸ்டினோ அஸ்பெரிலா,லூயீஸ் ஹெரைரா என உலகின் நட்சத்திர வீரர்கள் கொலம்பிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை கொலம்பிய அணி கோப்பையை வெல்லவில்லையென்றால் இனிமேல் எப்போதும் வெல்லாது என்றும் பத்திரிகைகள் கூறின. கொலம்பிய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் போட்டியை நடத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ருமேனியா என அவ்வளவா…

  7. வங்கதேசத்தில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள்! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு மேலே 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, கேமரா மூலம், பயிற்சிமுறைகளை படம் பிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வங்க தேசத்தில் அனுமதியில்லாமல் இது போன்று ட்ரோன் பறக்க விட தடையிருக்கும் நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் போனது. உடனடியாக அவர்கள் ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ட்ரோன் இறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்ப…

  8. சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…

  9. 111 ஓவர்களில் 562 ரன்கள் விளாசித் தள்ளிய ஆஸ்திரேலியா எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக பந்தை வெளுத்து வாங்கும் மிட்செல் மார்ஷ். | படம்: ராய்ட்டர்ஸ். செம்ஸ்போர்டில் நடைபெறும் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓவர்களில் 562 ரன்களை விளாசி தள்ளியது. நேற்று தொடங்கிய இந்த 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற எஸ்ஸெக்ஸ் அணியின் கேப்டன் ரவி பொபாரா முதலில் ஆஸ்திரேலியாவை தெரியாமல் களமிறக்கி விட்டார். ஆனால் எஸ்ஸெக்ஸ் பந்து வீச்சு அவ்வளவு பலமானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், ஜே.ஏ.போர்ட்டரை விட்டால் அடுத்த முனையில் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் பந்து வீசினார். சாலிஸ்பரி, வெஸ்ட்லி, ரியான் டென் டஸ்சாதே, நிஜ்ஜர், பிரவுன் என்று 8 பவுலர்கள் …

  10. குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…

  11. முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…

  12. அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…

  13. கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…

  14. ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தோனி ஓய்வு: கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் …

  15. பாடும் மீன்களின் சமரில் புனித மிக்கேல் கல்லூரி சம்பியன் -எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு நகரில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் கல்லூரிக்கும் மற்றும் மெதடிஸ்த கல்லூரிக்குமடையிலான பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி இவ்வருடத்துக்கான சம்பியானகத் தெரிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி, 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மிக்கேல் கல்லூரி அணிக்கு வெற்றிக் கி…

  16. திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில் -குணசேகரன் சுரேன் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது. 50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரைய…

  17. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…

  18. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி. இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார். இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய …

  19. என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…

  20. அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …

  21. சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…

  22. பவுலர்களுக்கு சாதகமாக கிரிக்கெட்டில் பல விதிமுறைகள் மாற்றம்: பார்படோஸ்: பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் தற்போதுள்ள ஒருநாள், கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறைகள், ஜூலை மாதம் 5ம் தேதிமுதல் அமலுக்கு வரும். ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது. பரிதாப பவுலர்கள் பவுலர்கள் பரிதாபமான ஜீவன்கள் போல மைதானத்தில் காணப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, அனில்கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கடந்த மாதம், ஒரு பரிந்துரையை அளித்திருந்தது. ஃபீல்டர்கள் எண்…

  23. டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…

  24. மெக்கல்லம் விலகல் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் களில் இருந்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் களைப்படைந்துள்ள மெக்கல்லம் மேற்கண்ட தொடர் களில் இருந்து விலகியிருக்கிறார். மெக்கல்லம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கிளம்பின. ஆனால் இப்போது மெக்கல்லம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை நியூஸிலாந்துக்கு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். http://tamil.thehindu.com/sports/மெக்கல்லம்-விலகல்/article7360707.ece

  25. வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்தான் உலகிலேயே சிறந்த ஆல்ரவுண்டர்! வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர் தில்ஷன் திலகரத்னேவை பின்னுக்கு தள்ளி, 4 புள்ளிகள் அதிகம் பெற்று சாதித்தார் ஷாகிப் அல் ஹசன். இந்தியாவுக்கு எதிரான தொடரில், வங்கதேச அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ரன்களை (52,51,20) சாகிப் அல் ஹசன் அடித்தார். அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்டியிலும் 99 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.