விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள் Source - Getty Images ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித் தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது. நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை. இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓர…
-
- 0 replies
- 341 views
-
-
இந்திய வீரர்களின் சம்பளம் 100% உயர்கிறது: கேப்டன் விராட் கோலி ரூ.10 கோடி பெற வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்…
-
- 0 replies
- 341 views
-
-
'உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை' பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார். 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், "240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங…
-
- 0 replies
- 341 views
-
-
ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரரின் கதை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS டோக்யோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் ரவிகுமார் தஹியா. அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். ஆரம்பத்தில் பின்னடைந்திருந்த இவர், தனது அற்புதமான விளையாட்டால் தனது எதிராளியையைத் தோற்கடித்தார். ஒரு கட்டத்தில் ரவிக்கு இரண்டு புள்ளிகளும்…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
தென் ஆஃப்ரிக்கா: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து 4 வீரர்களுக்கு தடை தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரூன் லோர்கட் தென் ஆஃப்ரிக்காவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நான்கு வீரர்களுக்கு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களில் முன்னாள் சர்வதேச விக்கெட் கீப்பரான தாமி சோலெகிலேயும் அடங்குவார். அவர் ஏற்கனவே தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதற்காகவும், சாட்சியங்களை கலைத்ததற்காகவும் 12 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். மற்ற வீரர்கள் 7 மற்றும் 10 ஆண்டுகள் …
-
- 0 replies
- 340 views
-
-
நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் ஓய்வு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்துப் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளை யாடியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். இனிமேல் விளையாட முடியாது என்பது மிகப் பெரிய இழப்புதான். அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நான் நேசித்த கிரிக்கெட்டை நான் விளையாடுவதற்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார். 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மில்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவ…
-
- 0 replies
- 340 views
-
-
பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் சமோவாவின் ஏப்பியா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐந்தாவது பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆண்களுக்கான உயரம் பாய்தலில் போட்டியிட்ட இலங்கையின் ரொஷான் தம்மிக்க ரணதுங்க 2.11 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இப் போட்டியில் 2.14 உயரம் தாவிய இந்தியாவின் தேஜாஸ்வின் ஷங்கர் தங்கப் பதக்கத்திற்கு சொந்தக்காரரானார். ஜெமெய்க்காவின் லாஷேன் வில்சன் 2.11 மீற்றர் தாவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான பளுதூக்கலில் …
-
- 0 replies
- 340 views
-
-
பராலிம்பிக்கில் 25 இற்கும் அதிகமான புதிய சாதனைகள்; சக்கர இருக்கை டென்னிஸ் 2 ஆம் சுற்றில் ராஜகருண 2016-09-12 09:48:49 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் 15ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் உலக சாதனைகளும் பராலிம்பிக் சாதனைகளும் தாராளமாக புதுப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவ் விளையாட்டு விழாவில் முதல் மூன்று நாள் போட்டி நிகழ்ச்சிகளில் 25க்கும் மேற்பட்ட உலக சாதனைகளும் 40க்கும் மேற்பட்ட பராலிம்பிக் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சீன பராலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாம் சுற்றில் உபாலி ராஜ…
-
- 0 replies
- 340 views
-
-
எங்கே செல்கிறது கிரிக்கெட் சபை? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அண்மைய சில நாட்களாக, இலங்கை கிரிக்கெட் சபை பற்றி வெளியாகிவரும் செய்திகள், பெருமளவில் நன்மைதரக் கூடியனவாக இருக்கவில்லை. கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மஹேல ஜெயவர்தனவின் அறக்கட்டளைக்கான நடைபயணத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, சர்ச்சைக்குரிய விதத்தில், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையால் வெளியிடப்பட்ட பிரத்தியேகமான செய்தியின்படி, இலங்கை கிரிக்கெட் சபையில் பணிபுரிந்த பெண் ஊழியரொ…
-
- 0 replies
- 340 views
-
-
மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறுதியில் நடைபெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்பேர்குக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்திலேயே ஹமில்டன் காரை செலுத்திக்கொண்டிருந்தார். ஆனால் காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரொஸ்பேர்க் போட்டியிலிருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இலகுவாக வெற்றிபெற்றார். இப் போட்டியை ஒரு மணித்தியாலம் 37 நிமிடங்கள் 11.024 செக்கன்களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்…
-
- 0 replies
- 340 views
-
-
சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …
-
- 0 replies
- 340 views
-
-
ரியோ 2016 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்; மீட்பர் கிறிஸ்து அடிவாரத்தில் பிரமாண்டமான சமாதானக் கொடி 2016-09-07 09:50:25 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31ஆவது அத்தியாயத்தை கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ, மாற்றுத் திறனாளிகளுக்கான 15 ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவை இன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவுடன் ஆரம்பிக்கின்றது. பிரேஸில் தேசத்தின் பண்பாடுகள் உலகம் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் கொண்டாட்டங்களுடன் மிகச் சிறப்பான பராலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ரியோ 2016 ஏற்பாட்டுக் குழுவினர் உறுதிபூண்டுள்ளனர். …
-
- 0 replies
- 340 views
-
-
சச்சின் - திராவிட் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் உலக சாதனை ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த வகையில் உலக சாதனையை வைத்திருந்த சச்சின் - திராவிட் சாதனையை தென் ஆப்பிரிக்க ஜோடி உடைத்துள்ளனர். நேற்று புளூம்ஃபாண்டீன் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் (லிஸ்ட் ஏ) டால்பின் அணியின் தொடக்க வீரர்களான மோர்னி வான் விக் மற்றும் கேமருன் டெல்போர்ட் ஜோடி 50 ஓவர்கள் முழுதையும் ஆட்டமிழக்காமல் விளையாடி 367 ரன்களைக் குவித்தனர். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், திராவிட் ஜோடி இணைந்து 1999ஆம் ஆண்டு நியுசீலாந்துக்கு எதிராக ஐதரா…
-
- 0 replies
- 340 views
-
-
2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு: டு பிளிசிஸ் சூசக தகவல் இங்கிலாந்தில் 2019-ம் நடைபெறும் 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக டு பிளிசிஸ் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டு பிளிசிஸ். முன்னணி பேட்ஸ்மேன் பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 340 views
-
-
11 நாடுகளில் சதம் யூனுஸ்கான் புதிய சாதனை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ் தான் அணி யூனுஸ்கானின் சதத்தால் 3ஆ-வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய மண்ணில் யூனுஸ்கான் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் யூனுஸ்கான் படைத்தார். இத்துடன் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற 11 நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் யூனுஸ்கான். சங்கக்கார, மஹேல, ராகுல் டிராவிட், முகமது யூசுப் ஆகியோர் 10 நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சத…
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333
-
- 0 replies
- 340 views
-
-
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியமையால் அடுத்த தோல்வி இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணாயனது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 03 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடத்த முதலாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஒருநள் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 4:30 க்கு செஞ்சூரியனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு …
-
- 0 replies
- 340 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். ஐதராபாத்: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128…
-
- 0 replies
- 340 views
-
-
2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 1929 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் கழகங்களுக்கிடையிலான முதற்தர காற்பந்து தொடராக ஆரம்பிக்கப்பட்ட லா லிகா போட்டிகள் உலகின் தலை சிறந்த காற்பந்து கழக அணிகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என உலகப் புகழ் பெற்ற அணிகளின் தாயகமாக லா லிகா தொடர் விளங்குகின்றது. 1929 பார்சிலோனா அணி ‘லா லிகா’ தொடரின் முதலாவது சாம்பியன் பட்டம் வென்றது. ரியல் மாட்ரிட் தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1932 ஆம் ஆண்டு பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் அத்லெடிகோ பில்பாவோ தொடர் வெற்றிகளை பெற்று கிண்ணங்களை பெற்றிருந்தாலும் பிற கா…
-
- 0 replies
- 340 views
-
-
கெய்ல் அதிரடியை பின்னுக்குத் தள்ளிய மெக்கல்லம்-பிராவோ காட்டடி: கரிபியன் கிரிக்கெட்டில் ருசிகரம் ஷாட் ஆடும் மெக்கல்லம். - படம். | கெட்டி இமேஜஸ். பாசட்டெரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் செயிண்ட் கிட்ஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அதிரடியை எதிரணியான டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் மெக்கல்லம், டேரன் பிராவோ ஆகியோர் முறியடிக்கும் விதத்தில் காட்டடி தர்பாரில் ஈடுபட்டனர். முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர…
-
- 0 replies
- 340 views
-
-
20 இன் கீழ் பீபா மகளிர் கால்பந்தாட்டம்; வட கொரியா உலக சம்பியன் 2016-12-05 09:51:44 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பீபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வட கொரிய மகளிர் அணி சம்பியனானது. பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பெற்றன. பப்புவா நியூ கினியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்த்தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. 20 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 10 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக வட கொரியா சம்பியனா…
-
- 0 replies
- 339 views
-
-
சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை! 120 பந்துகளில் 244 ரன்கள். இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதை மட்டும் நிகழ்த்திக்காட்டினால் உலக சாதனை செய்யலாம். இதற்கு முன்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் எடுத்தபோது அந்தக் கடினமான இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர…
-
- 1 reply
- 339 views
-
-
காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 மார்ச் 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'. கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணி…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் ஏ.பி.டி முதலிடம்! டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐ.சி.சி. வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டியில் 908 புள்ளிகளையும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 902 புள்ளிகளையும் பெற்று ஒரே சமயத்தில் டி வில்லியர்ஸ் இந்த சாதனையை புரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 755 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். இதிலும் விராட் கோலி 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் இந்திய அணியின் கேப்டன் த…
-
- 0 replies
- 339 views
-
-
வேகப்பந்து வீச்சாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், தற்போதைய போட்டி நடுவராகவும் உள்ள பிரதீப் ஜயப்பிரகாஷுடனான சிறப்பு நேர்காணல்.
-
- 0 replies
- 339 views
-