விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பின் தள்ளப்பட்டார் ஜஸ்பிரிட் பும்ரா..!! சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் கிரிக்கட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரப்பட்டியல் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் குறித்த தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். …
-
- 0 replies
- 473 views
-
-
'பெண்கள் ஐ.பி.எல் அற்புதமாக இருக்கும்' பெண்களுக்கான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரொன்று ஏற்பாடு செய்யப்படுதல் அற்புதமாக அமையுமென, அவுஸ்திரேலிய பெண்கள் அணித்தலைவி மெக் லனிங் தெரிவித்துள்ளார். இது, பாரிய மாற்றமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடர் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தொடரில், மெல்பேண் ஸ்டார்ஸ் அணித்தலைவியாகச் செயற்பட்ட மெக் லனிங், அத்தொடரின் வெற்றி, கிரிக்கெட்டுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். அதேபோல், பெண்கள் சுப்பர் லீக் என்ற பெயரில், தனியான தொடரொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவுள்ளது. …
-
- 0 replies
- 495 views
-
-
வெற்றியுடன் நிறைவுசெய்த பயேர்ண் மியூனிச் ஜேர்மனி கால்பந்தாட்டத் தொடரான புண்டெஸ்லீகாவின் இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற அந்த லீக்கின் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், அவ்வணியின் பயிற்றுநரான பெப் கார்டியோலாவின் இறுதிப் போட்டியை, வெற்றியுடன் முடித்தது. இப்போட்டிக்கு முன்னதாக சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஒரு கோலையும் கோட்ஸே 2 கோல்களையும் பெற்றுக் கொடுக்க, எதிரணியான ஹன்னோவெர் அணி தடுமாறியது. அவ்வணியால், ஒரேயொரு கோலையே பெற இயலுமாக அமைய, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது. இதன்படி, போட்டிக்கான புள்ளி அட்டவணையில், இரண்டாமி…
-
- 0 replies
- 428 views
-
-
கேள்விக்குறியில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம், மீண்டும் சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தோடு இத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2019ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி லீக் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரோடு, சம்பியன்ஸ் கிண்ணம் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டோடு சம்பியன்ஸ் கிண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தபோதும், அத்தொடருக்கு கிடைத்த பாரிய வர்த்தக வெற்றி காரணமாக சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்ந்திருந்தது. …
-
- 0 replies
- 400 views
-
-
சச்சினின் 100 வது சதத்தைத் தடுத்ததால் கொலை மிரட்டல் வந்தது 100 வது சதத்தைத் தடுத்து, சச்சினை ஆட்டமிழக்கச் செய்ததால் எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன என இங்கிலாந்து முன்னாள் வீரர் டிம் பிரெஸ்னன் கூறியுள்ளார். 2011 இல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின் டெண்டுல்கர். பிரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்ததாக கள நடுவர் ராட் டக்கர் அறிவித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்பை உரசிச் செல்வதைத் தொலைக்காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அந்த ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது சச்சினின் 100 வது சதமாக இருந்திருக்கும். எனினும் 2012 மார்ச் மாதத்தில் பங்களாதேஷூக்கு…
-
- 0 replies
- 602 views
-
-
அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கையர் நியமனம்..! இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தசநாயக்க, அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளராக செயற்பட எனக்கு வாய்ப்பளித்தமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க இதுவொரு அற்புதமான தருணமாகும். இங்கு திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். கடின உழைப்பின் மூலம் இந்நாட்டில் கிரிக்கெட்டை உயர் தரத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். அடுத்த மாதம் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் தி…
-
- 0 replies
- 463 views
-
-
பிலிப் ஹியூஸின் மரணம்: வேண்டுமென்றே பவுண்சர்கள் வீசப்பட்டனவா? தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பான, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகள் இன்று ஆரம்பித்தன. 2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி தலையில் பந்தால் தாக்கப்பட்ட ஹியூஸ், 27ஆம் திகதி உயிரிழந்திருந்தார். முதல் நாள் விசாரணைகளில், நியூ சௌத் வேல்ஸ் அணியின் அப்போதைய தலைவர் பிரட் ஹடின், துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், வேகப்பந்து வீச்சாளர் டக் பொலிஞ்சர், ஹியூஸின் குடும்பத்தினர் ஆகியோர் வாக்குமூலமளித்தனர். ஹியூஸ்…
-
- 0 replies
- 355 views
-
-
மைலோ கிண்ணக் கால்பந்தாட்டம்: சம்பியனானது குருநகர் பாடுமீன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெர…
-
- 0 replies
- 357 views
-
-
வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. அவரை கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை, விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர் நெஹ்ரா…
-
- 0 replies
- 658 views
-
-
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டி : இலங்கை அணியிலா, மும்மை அணியிலா விளையாடுவேன் : மாலிங்க அதிரடி தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரும் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் மும்மை அணி சுப்பர்ஜிகான்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது. …
-
- 0 replies
- 171 views
-
-
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்க…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர். சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவ…
-
- 0 replies
- 556 views
-
-
மைக்கல் கிளார்க் ஓய்வுபெறவேண்டும் : அலன் போடர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் 33 வயதான மைக்கல் கிளார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மைக்கல் கிளார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 2015 ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட வேண்டு…
-
- 0 replies
- 686 views
-
-
பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …
-
- 0 replies
- 321 views
-
-
உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா) சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும். 46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்…
-
- 0 replies
- 606 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஷேன் வாட்சன் டெஸ் கிரிக்கெட்டுக்கு குட்-பை கூறிய ஷேன் வாட்சன். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டரில் நேற்று இரவு பதிவிட்டிருந்தது. ஷேன் வாட்சன், பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. 75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.…
-
- 0 replies
- 303 views
-
-
ஸ்டீவ் வாக் மகனுக்கு ரோல் மாடல் விராட் கோலி! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போல விளையாட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது, விராட் கோலியின் ஆட்டம் மட்டுமே ஸ்டீவ் வாக்கை கவர்ந்துள்ளது. விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், '' ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானத் தொடரில் விராட் கோலியின் சரசாரி ஒவ்வொரு இன்னிங்சிலும் 86 ரன்கள். களத்தில் விராட் கோலியின் ஆவேசமான செயல்பாடு எனக்கு பிடிக்கும்.தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான். சில சமயங்களில் ஆவேசப் போக்கிலும் கட்டுப்பாடு அவசியம். எனக்கு தற்போது 16 வயது மகன் இருக்கிறார். விராட் கோ…
-
- 0 replies
- 319 views
-
-
சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்…
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் 296 ஓட்ட வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்டில் 247 ஓட்ட வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பேர்ன்ஸ் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். …
-
- 0 replies
- 619 views
-
-
யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College – Highlights சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்திய இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், கடந்த பெப்ரவரி மாதம் 6&7 ஆம் திகதிகளில் மத்தேகொட சப்பர் மைதானத்தில் வைத்து யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியும், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. http://www.thepapare.com/videos-singer-divison-ii-piliyandala-central-vs-st-johns-college-match-highlights/
-
- 0 replies
- 395 views
-
-
இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் ஆட்ட முறைபற்றி மீளாய்வு செய்வது அவசியம் - அணித்தலைவர் எம்.எஸ். தோனி 2016-04-04 10:19:39 தளர்ந்து போயுள்ள தனது இருபது 20 கிரிக்கெட் விளையாட்டை துடிதுடிப்பு மிக்கதாக்குவதற்கு ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கின்றது. இண்டியன் ப்ரீமியர் லீக் மூலம் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விறுவிறுப்பையும் பரபரப்பையும் உச்ச நிலைக்கு இட்டுச் சென்றுள்ள இந்தியாவால் சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் விளையாட முடியாமல் போனதை நேற்றுடன் நிறைவு பெற்ற ஆறாவது உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் எடுத்துக்காட்டியது. மேற்கிந்தியத் தீவுகளு…
-
- 0 replies
- 336 views
-
-
தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம் By Mohammed Rishad விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடுசெய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதல் தடவையாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகவர்ல ஓட்டப் போட்டிகள் இன்று (15) காலை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. எனினும், கடந்த மாதம் …
-
- 0 replies
- 552 views
-
-
தோனி அணி சொதப்ப யார் காரணம்? இந்திய அணியின் கேப்டன், தென்னாபிரிக்க அணியின் கேப்டன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என நட்சத்திர அந்தஸ்துடன், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என எல்லோராலும் கருதப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் வரிசையாக பல வீரர்கள், காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 2008 முதல் 2015 வரை எட்டு சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அரையிறுதிக்கு வழிநடத்திய தோனிதான் புனே அணிக்கும் கேப்டன் என அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.…
-
- 0 replies
- 539 views
-
-
தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் - கும்ப்ளே அதிரடி! அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு…
-
- 0 replies
- 299 views
-
-
சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட…
-
- 0 replies
- 437 views
-