விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பிபா தரவரிசை: முதல் இடத்துடன் 2016-ஐ நிறைவு செய்தது அர்ஜென்டினா பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 2016-ம் ஆண்டை முதல் இடத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது. அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பற…
-
- 0 replies
- 336 views
-
-
பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…
-
- 2 replies
- 336 views
-
-
எல்லை கடந்து இலங்கை ஆதரவு: காஷ்மீர் சிறுமிகளுக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கிறார் முன்னாள் அதிபர் மகன் சென்னையில் காஷ்மீர் சிறுமிகள் ரக்பி பயிற்சி எடுத்த காட்சி : கோப்புப் படம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவை…
-
- 1 reply
- 336 views
-
-
உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறுத்தையின் வேகத்தை குறைக்கவில்லை ! சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார். சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். கடந்த சில மாதங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்…
-
- 0 replies
- 336 views
-
-
இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் ஆட்ட முறைபற்றி மீளாய்வு செய்வது அவசியம் - அணித்தலைவர் எம்.எஸ். தோனி 2016-04-04 10:19:39 தளர்ந்து போயுள்ள தனது இருபது 20 கிரிக்கெட் விளையாட்டை துடிதுடிப்பு மிக்கதாக்குவதற்கு ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கின்றது. இண்டியன் ப்ரீமியர் லீக் மூலம் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விறுவிறுப்பையும் பரபரப்பையும் உச்ச நிலைக்கு இட்டுச் சென்றுள்ள இந்தியாவால் சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் விளையாட முடியாமல் போனதை நேற்றுடன் நிறைவு பெற்ற ஆறாவது உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் எடுத்துக்காட்டியது. மேற்கிந்தியத் தீவுகளு…
-
- 0 replies
- 336 views
-
-
ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…
-
- 0 replies
- 336 views
-
-
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணிய…
-
- 0 replies
- 336 views
-
-
2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்... அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் …
-
- 1 reply
- 336 views
-
-
மீண்டும் களமிறங்கிய சங்கா மற்றும் டில்ஷான் (நேரடி ஒளிபரப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் டில்ஷான் சிட்டி கைட்டாக் அணி சார்பாகவும் , சங்கக்காரகெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/17560
-
- 0 replies
- 336 views
-
-
சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல். ஏழு வருடங்களுக்கு முன்னர் இண்டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமானபோது இரசிகர்கள் மத்தியில் அதற்கு இருந்த மவுசே வேறு. விறுவிறுப்பையும் பரபரப்பையும் இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி ஆட்டம் கொண்டாட்டங்களில் மிதக்கவைத்த இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருடத்திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உலகையும் தன் பால் ஈர்த்து நின்றது. இதன் பலனாக அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி பிரபல்யம் அடைந்துள்…
-
- 0 replies
- 335 views
-
-
கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் …
-
- 0 replies
- 335 views
-
-
அவுஸ்திரேலியாவுதிரான முதலாவது டெஸ்ட் போட்டி – இலங்கை இன்னிங்ஸ் தோல்வி : January 26, 2019 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த 24ம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி பகலிரவு போட்டியாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 323 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது இ…
-
- 0 replies
- 335 views
-
-
சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்…
-
- 1 reply
- 335 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங் ஷார்ஜா போட்டியில் பின்னால் சென்று வெளுக்கும் சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். ஆஸி. வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்கு அடித்த சச்சின். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது, “நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் …
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கை மகளிர் அணியின் சிறிபாலி வீரகொடி விளம்ரத் தூதுவரானார் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ் கெய்ல், இயன் மோர்கன், மிச்சல் ஜோன்சன், மைக்கல் கிளார்க், அன்று ரசல், மகேந்திரசிங் டோனி மற்றும் நில் வோக்னர் ஆகியோர் வரிசையில் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி இணைந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சிறிப…
-
- 0 replies
- 335 views
-
-
காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார். 100 மீட்டரில் 9.58 வினாடியில் கடந்தும், 200 மீட்டரில் 19.19 வினாடியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நீண்ட காலத்துக்கு பிறகு களம் இறங்குகிறார். லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தில் தடகள போட்டி தொடங்குகிறது. இதில் உசேன் போல்ட் களம் இறங்குகிறார். அதிவேக 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிரவே…
-
- 1 reply
- 335 views
-
-
கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து மேஜிக் செய்த கால்பந்து வீரர் ( வீடியோ) கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து கால்பந்து வீரர் ஒருவர் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. வெனிசூலா பிரிமீயல் லீக்கில் கரகாஸ் அணிக்கு எதிராக கோல் அடித்த சமோரா அணி வீரர் சீசர் மார்ட்டினஸ் கோல் அடித்த உற்சாகத்தில் பந்தை சில வினாடிகள் அந்தரத்தில் மிதக்க வைத்தார். அப்போது அவரது அணியை சேர்ந்த சக வீரர்கள் அவரை சுற்றி நின்றனர். இந்த சமயத்தில் சீசர் மார்ட்டினஸ் ஏதோ ஒரு வித்தியாசமான டெக்னிக்கை கையாண்டு பந்தை அந்தரத்தில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது டெக்னிக் தென்படவில்லை. http://www.vikat…
-
- 0 replies
- 335 views
-
-
மங்கிய நட்சத்திரங்கள் தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது. தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக…
-
- 0 replies
- 335 views
-
-
Nike Vaporfly ஷூவில் என்ன பிரச்னை? விளையாட்டில் உலக சாதனைகளை உடைக்க இந்த ஷூ பயன்படுத்தப்பட்டதா? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKE.COM நைக் நிறுவனத்தின் வேபர்ஃப்லை (Nike Vaporfly) ஷூவைக் குறித்து பார்ப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களை அலசிவிடுவோம். 1896ஆம் ஆண்டில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்கில், 42.2 கிலோமீட்டர் மாரத்தன் பந்தயத்தை 2 மணி 58 நிமிடம் 50 நொடிகளில் ஓடி முடித்தது மனித இனம். அப்போது அதுவே மிக பிரும்மாண்டமான சாதனையாக கருதப்பட்டது. சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிக நாகரீகமடைந்த, தொழில்நுட்பங்களால் ச…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா? ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், ராபின் பீட்டர்சன், ஹஷிம் ஆம்லா. - படம். | ராய்ட்டர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்: தென் ஆப்பிரிக்காவின் கி…
-
- 0 replies
- 335 views
-
-
ஐ. சி. சி.யில் முழு அந்தஸ்து பெற ஆப்கானிஸ்தான் விருப்பம் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முழு அந்தஸ்து பெறுவதற்கான தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் இதற்கான விண்ணப்பத்தை ஆப்கானிஸ்தான் இன்னும் சம்பிரதாயபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் தனது விண்ணப்பத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் இந்த விண்ணப்பம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திருப்திக்குரிய தேவைகள் அடங்கிய விரிவான அறிக…
-
- 0 replies
- 335 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 335 views
-
-
அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…
-
- 0 replies
- 335 views
-
-
பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வ…
-
- 0 replies
- 335 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 335 views
-