விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஸ்டோக்ஸ், ரூட், பட்லர் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து லார்ட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆடம் லித், உட் (இங்கிலாந்து), மாட் ஹென்றி (நியூசிலாந்து) அறிமுக வாய்ப்பு பெற்றனர். குக் ஏமாற்றம்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், ஆடம் லித் துவக்கம் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தீ, பவுல்ட், ஹென்றி இணைந்த…
-
- 24 replies
- 971 views
-
-
சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…
-
- 0 replies
- 360 views
-
-
நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளா…
-
- 0 replies
- 600 views
-
-
இங்கிலாந்து மண்ணை கௌவ்வும் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-–0 என வெள்ளையடிப்பு செய்யப்படும் என ஆஸியின் முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5–-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவிடம் தொடரை பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தொடரிலும் இங்கிலாந்து அதே மாதிரி தோல்வியைத் தழுவும் என மெக்ராத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா -– இங்கிலாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் கூறுகையில்இ அவுஸ்திரேலியாவுடன் மோத விரும…
-
- 0 replies
- 446 views
-
-
இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது! டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன. ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. Read more at: http://tamil.one…
-
- 0 replies
- 464 views
-
-
இன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்! களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட் துபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று ஆரம்பமாக உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நிறுவனமான ஜிஎம் ஸ்போர்ட்ஸ், இந்த விளையாட்டு தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் ஆடுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சச்சின், பாண்டிங், டிராவிட் போன்ற மாஜி ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்தான் செயல்படுகின்றனர். ஆனால், அந்த பிரபலங்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வழி செய்து கொடுக்கிறது மாஸ்டர…
-
- 0 replies
- 480 views
-
-
பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…
-
- 0 replies
- 543 views
-
-
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…
-
- 4 replies
- 473 views
-
-
என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …
-
- 0 replies
- 287 views
-
-
ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…
-
- 0 replies
- 267 views
-
-
குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும். நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் …
-
- 0 replies
- 319 views
-
-
இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…
-
- 0 replies
- 345 views
-
-
அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…
-
- 0 replies
- 335 views
-
-
10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…
-
- 0 replies
- 463 views
-
-
கட்டுக்கடங்காத கிறிஸ் கெயில்: 62 பந்துகளில் 151 ரன்கள் டாண்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெண்ட் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் விளாசித் தள்ளினார். இதில் வேடிக்கை என்னவெனில் கெண்ட் அணியின் 227 ரன்கள் இலக்கை துரத்திய போது சோமர்செட் அணிக்காக கெயில் இந்த இன்னிங்சை ஆடி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி தோல்வி தழுவியது. கெயில் 10 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசினார். இப்படி அடித்தும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கெயிலிடம் ஸ்ட்ரைக் வரவில்லை. 2 பந்துகள் கழித்தே கெயிலுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. முன்பாக சொஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். கெயில் ஸ்ட்ரைக்கு வ…
-
- 1 reply
- 410 views
-
-
யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.
-
- 4 replies
- 558 views
-
-
6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. பாதுகாப்பு கருதி அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வந்த நிலையில், 2009-ல் அங்கு சுற்றுப் பயணம்…
-
- 4 replies
- 407 views
-
-
சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 9 replies
- 641 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 398 views
-
-
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…
-
- 0 replies
- 267 views
-
-
அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக். நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்…
-
- 0 replies
- 326 views
-
-
வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமினிக்காவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்ல அவர், அங்குள்ள டக்ளஸ் விமானநிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை சோதனையிட்ட அதிகாரிகள் ஃபிளெட்சரின் பைகளில் வெடிமருந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஃபிளெட்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 2 replies
- 548 views
-
-
8ஆவது ஐ.பி.எல். ஏப்ரல் 8 இல் ஆரம்பம் 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இப் போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான …
-
- 449 replies
- 23.9k views
-
-
பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெற்றிருக்கவில் லை. தற்போது சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0…
-
- 0 replies
- 299 views
-
-
சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி? அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை…
-
- 6 replies
- 534 views
-