Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ…

  2. டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி. இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழ…

  3. இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…

  4. காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழம…

  5. இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…

  6. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…

  7. ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய, தனித்துவ டெஸ்ட் சாதனை விக்கெட் கீப்பராக டிவில்லியர்ஸின் அரிய சாதனை. - படம். | வீடியோவிலிருந்து பிடித்தது. ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய டெஸ்ட் சாதனை சாதனைகள் ஒருவரின் திறமையை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்று கூறப்படுவதுண்டு, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று சாதனைகளை நிகழ்த்தாவிட்டாலும் அவரது பன்முகத்திறமைக்கு இன்று நிகரான வீரர்கள் ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். ஓய்வு பெறும் வரையும் கூட திகைக்க வைக்கும் கேட்ச்கள், பீல்டிங்குகளைச் செய்துள்ளார், தன் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் …

  8. காத்திருக்கும் சாதனைகள்: விராட் கோலிக்கு 17 ரன்; தோனிக்கு 33 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி :கோப்புப்படம் இங்கிலாந்துத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஆகியோர் பல்வேறு சாதனைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு இந்தப் போட்டி 100-வது டி20 போட்டியாகும். பல்வேறு மைல்கல்லை இந்த 100 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் கடந்து வந்துள்ளது. இதில் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி என்பது முத்தாய்ப்பாகும். இங்கிலாந்து சென…

  9. ‘பல்டி’ அடிக்க தடையா நவம்பர் 30, 2014. மும்பை: கால்பந்து போட்டிகள் கோல் அடித்தால் வீரர்கள் தலைகீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடும் ‘சோமர்சால்ட்’ முறைக்கு, தடை விதிப்பது குறித்து ‘பிபா’ யோசித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (16) இருப்பவர் ஜெர்மனி வீரர் குளோஸ், 36. இவர் கோல் அடித்தவுடன் அப்படியே தலை கீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடுவார். இதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தற்போது நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. இதில், தொடரின் முதல் கோல் அடித்தார் கோல்கட்டா வீரர் பிக்ரு. இதை விட, பிக்ரு ‘சோமர்சால்ட்’ முறையில், ‘டைவ்’ அடித்தது தான் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த …

  10. Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…

  11. காசாவிற்கு ஆதரவான செய்தி - ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் - உஸ்மான் கவாஜா காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்…

  12. கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இலங்கை அணி மூன்றாம் இடத்தையும்,நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51418

  13. Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…

  14. ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறிய ஓப்போ நிறுவனம்..: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் வருகிறது மாற்றம்! மும்பை: ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 க…

    • 0 replies
    • 825 views
  15. கரம் போட்டியில் பசறை தமிழ்த் தேசிய கல்லூரி முதலிடம் Published on 2019-11-28 13:06:12 2019 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் இருபது வயதுக்கு கீழ்பட்டோருக்கான 'கரம் ' போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். குறித்த போட்டியில் வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (27/11/2019) பசறை தமிழ் தேசிய கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்காகிய கே.பிர…

  16. செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’ டி20 தொடர்: பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம். ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் த…

  17. மீண்டுமொரு சாதனை : ரங்கன ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்; 2016இல் 50 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கட்டுகளை வீழ்த்திய சாதனையின் பின்னர், இச் சாதனையை ரங்கன ஹேரத்; எட்டியுள்ளார் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை மீண்டும் இவர் வீழ்த்தியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளார். வெற்றியின் விளிம்பிலிருக்கும் இலங்கை அணி இறுதி நாளான இன்று வெற்றியடைய அதிக வாய்ப்பிருக்கின்றது. 7 விக…

  18. இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை http://www.thinaboomi.com/sites/default/files/storage/field/image/2020/11/05/thumb-890-395/Shevak-2020_11_05.jpg?itok=1vkPey3C ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந…

    • 0 replies
    • 700 views
  19. இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்! உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெட…

  20. அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட் Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia — Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016 இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யி…

  21. வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது. பார்சிலோனா: உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப…

  22. "ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது" ஆதங்­கத்­துடன் லசித் மலிங்க ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது என்று லசித் மலிங்க ஆதங்­கத்­துடன் தெரி­வித்­துள்ளார். அதேபோல் மக்­களின் விருப்­பத்­திற்கு புதிய இளம் வீரர்­களை அணியில் சேர்த்து, சேர்­த்த­வர்கள் நல்ல பெயரைப் பெற்­றுக்­கொண்­டார்கள். அணி வீழ்ச்­சியைக் கண்­டு­விட்­டது என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக கண்­டு­வரும் தொடர் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. அதேபோல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கிறார் …

  23. மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்…

  24. விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம் நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி பெண்கள் பிரிவிலும், யாழ். மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. “சிவன் ஃபவுன்டேசன்” அனுசரணையில் யாழ்ப்பாணம் ம…

  25. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி! Chennai: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.