Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாக்.கிற்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 15 பேர்கொண்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையல் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் 2 ஆவது போட்டி 27 ஆம் திகதி கொழும்பில் பகலிரவு போட்டியாகவும் 3 ஆவது போட்டி 30 திகதி தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைவராக செயற்படுகின்றார். உபதலைவராக லகிரு திரிமன்னே கடமையாற்றுகின்றார். திலகரட்ண டில்சான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஸ் சண்டிமல், அசான் பி…

  2. பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும் தான் இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்ற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. இவ்வாற…

  3. எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா 1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூ…

  4. 22 NOV, 2023 | 08:14 PM (ஜே.ஜி.ஸ்டீபன்) பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது. இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. …

  5. டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட்: சந்தர்பாலின் சாதனை சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால். சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம். உதாரணத்துக்கு ஒரு …

  6. உலக செஸ் சம்பியன் ஆனந்தின் செவ்வி விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆன்ந்த் வென்றுள்ளார். மெஸ்சிகோ நாட்டின் தலைநகரில் நடைபெற்ற போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியுறாமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு இரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உலகப் போட்டியினையும் அவர் வென்றிருந்தார். தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில், தமது இந்த வெற்றி குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனந்த் செவ்வி http://www.bbc.co.uk/mediaselector/check/t...am=1&nbwm=1 ஆனந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே விளையாடுவதை மிக அருகில் இருந்து பார்த்தவரும், அவருக்கு வழி…

    • 0 replies
    • 1.1k views
  7. 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்…

  8. ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…

  9. நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம் By Akeel Shihab - இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் மு…

  10. கிரிக்கெட் அணிகளும் பயிற்றுநரின் தேசிய அடையாளமும் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இன்று பயிற்­று­நர்­களின் தேசிய அடை­யா­ளங்கள் குறித்து எந்த அணி­களும் அக்­கறை கொண்­ட­தா­கவோ அதனால் கவலை கொண்­ட­தா­கவோ தெரி­ய­வில்லை. ஆனால் இலங்கை இந் நிலைமை தலை­கீ­ழாக இருக்­கின்­றது. லோர்ட்ஸ் டெஸ்டில் இங்­கி­லாந்து வெல்ல மென்ச்­செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் அதே அணி பாகிஸ்­தா­னினால் பதம் பார்க்­கப்­பட்­டது. ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இங்­கி­லாந்து பயிற்­றுநர் சக்லெய்ன் முஷ்­தாக்கும் ஆர்வ மிகு­தி­யுடன் உரை­யா­டி­ய­வண்ணம் இருந்­தனர். …

  11. தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது 2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது. இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின…

  12. ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவ…

  13. புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க Tamil புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணியானது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி…

  14. 100 மீற்றரில் தங்கம் வென்ற மங்கை உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டியில் 100 மீற்றர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க வீராங்­கனை டோரி போவி 10.85 வினா­டிகளில் பந்­தய தூரத்தை கடந்து தங்­கப்­ப­தக்­கத்தை தன­தாக்­கினார். உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்டி லண்­டனில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதில் நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க வீராங்­கனை டோரி போவி 10.85 வினா­டிகளில் பந்­தய தூரத்தை கடந்து தங்­கப்­ப­தக்­கத்தை தன­தாக்­கினார். அவர் இறுதித் தூரத்தை தாவி இலக்கை கடந்தார். ஐவ­ரிகோஸ்ட் வீராங்­கனை மேரி ஜோசி தாலு 10.86 வினா­டிகளில் கடந்து வெள்­ளிப்­ப­தக்­கத்தையும், நெதர்­லாந்து வீராங்­கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினா­டிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக…

  15. அஷ்வின், ஜடேஜாவிடம் கற்றுக்கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள்! ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி அதுவாகும். மிர்பூரில் நடந்த அந்தப் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி என அறியப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் ஜோஷி, …

  16. தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …

  17. 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கு அல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி20 போட்டிகளுக்கும், அதனையடுத்து பகலிரவு டெஸ்ட், தற்போது டி10 போட்டிகள் என மாற்றம் பெற்ற கிரிக்கெட், தற்போது நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அற…

  18. முத்தரப்பு டி 20 தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூஸிலாந்து முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், டேவிட் மலான் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போ…

  19. பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…

  20. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து …

  21. இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரண்டு போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொட­ருக்­கான இலங்கை கிரிக்கட் குழாமில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான கௌஷால் சில்வா, திமுத் கரு­ணா­ரட்ன, சக­ல­துறை ஆட்­டக்­காரர் டில்­ருவன் பெரேரா, விக்கட் காப்­பாளர் ப்ரசன்ன ஜய­வர்­தன ஆகியோர் மீண்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். நியூ­ஸி­லாந்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் இம் மாதம் 26ஆம் திகதி க்றைஸ் ட்சேர்ச் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தத் தொடரை முன்­னிட்டு 16 வீரர்கள் அடங்­கிய டெஸ்ட் கிரிக்கட் குழாமை இலங்கை கிரிக்கட் தெரி­வா­ளர்கள் பெய­ரிட்­டுள்­ளனர். அந்தக் குழாமில் அஞ்­சலோ மெத்…

  22. பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல் பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸில், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது போட்டியாளரான மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனைத் தாண்டி வென்ற பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ஹமில்டனின் முன்னிலையை 17 புள்ளிகளாகக் குறைத்துக் கொண்டார். நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை ஹமில்டனே முதல்நிலையிலிருந்து ஆரம்பித்திருந்தபோதும் இரண்டாவதாக பந்தயத்தை ஆரம்பித்திருந்த வெட்டல் முதலாவது சுற்றிலேயே ஹமில்டனை முந்தியதுடன், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றார். …

  23. மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…

  24. Published By: RAJEEBAN 13 SEP, 2023 | 12:03 PM பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இலங்கையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வீரர் ஒருவர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி டுனித் வெல்லாலகே என்ற இளம் வீரரைகண்டுபிடித்துள்ளதுபோல சாருஜன் சண்முகநாதனும் இலங்கையின் எதிர்கால வீரர் என வக்கார் யூனுஸ்தெரிவித்துள்ளார். வெல்லாலகே எவ்வளவு திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட வீரர் எதிர்காலத்திற்கான ஒருவர் என தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் இலங்கையில் திறமைக்கு என்றும் குறைவில்லை. இந்த சிறிய ச…

  25. சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.