Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.சி.சி., தலைவர் முஸ்தபா ராஜினாமா புதுடில்லி: ஐ.சி.சி., தலைவர் பதவியை வங்கதேசத்தின் முஸ்தபா கமால் திடீரென ராஜினாமா செய்தார். சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.,) கவுன்சில் தலைவர் முஸ்தபா கமால். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்திய, உலக கோப்பை தொடரின் காலிறுதியில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அப்போது, இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ‘நோ–பால்’ வழங்கிய விவகாரத்தில் அம்பயர்கள் சதி இருப்பதாக, முஸ்தபா சர்ச்சை கிளப்பினார். இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தலைவர் என்று முறையில் நான்தான் கோப்பை வழங்க வேண்டும். ஐ.சி.சி., சேர்மன் சீனிவாசன் வழங்கியது விதிமுறை மீறல் எனவும் புகார் தெரிவித்திருந்தார். இப்படி பல பிரச்னைகளால், கோபமடைந்த முஸ்தபா, ஐ.சி.சி.,யில் …

    • 2 replies
    • 389 views
  2. சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது. இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு ச…

    • 5 replies
    • 631 views
  3. சங்கா மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/01/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9…

  4. ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 10-ல் கோலி, தவன், தோனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் முறையே 4 மற்றும் 6-வது இடங்களைப் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்னாலும் அவர் 4-வது இடத்தில்தான் இருந்தார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவன், 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, உலகக் கோப்பைய…

  5. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அ…

  6. பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் அசார் அலி மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பேட்ஸ்மென் அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி துணைக் கேப்டனாக செயல்படுவார், சர்பராஸ் அகமட் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அப்ரீடி டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரூண் ரஷீத் தேர்வுக்குழு தலைவரானார். அசார் அலியை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 4…

  7. பிலெண்டர் தெரிவில் சர்ச்சை; மறுக்கிறது தென்னாபிரிக்கா உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் பதினொருவரில் இன அடிப்படையிலான தெரிவாகவே வெரோன் பிலெண்டர் உள்ளடக்கப்பட்டதாக பரவிவரும் கருத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிறிஸ் நென்ஸானி மறுத்துள்ளார். அவரது கருத்தையே அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவும், அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்சும் வழிமொழிந்துள்ளனர். இனவெறிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விளையாட்டுக்களிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, பல வருடங்களுக்குப் பின்னரே மறுபடியும் சர்வதேச விளையாட்டுத் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரான தென்னாபிரிக்க அரசின் அவதானமான நடவடிக்கைகள் விளையாட்டுத…

  8. அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி! வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார். வெட்டோரி 295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 305 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 362 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4531 ரன்களையும் விளாசியுள்ளார். கபில் வரிசையில் கபில்தேவ…

  9. இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லக் கூடியவர்கள் என்று எதிர்வுகூறப்பட்ட இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டதால் போட்டி தொடங்குமுன்னரே எந்த சஸ்பென்சுகளும் இல்லாமலேயே எனது இறுதிப் போட்டி தொடங்கியது. இல்லாத ஒரு எதிர்பார்ப்பை இருப்பதாக நினைத்து நானே சில விடயங்களைப் பலவந்தமாக எதிர்பார்த்திருந்தேன். அதாவது மக்கலம் அடித்து நொறுக்குவார், போல்ட்டும் சவுத்தியும் புடுங்கி எறிவார்கள்...அதேபோல பதிலுக்கு வோர்னரும் பிஞ்சும் பிரித்து மேய மக்ஸ்வெலும், வாட்சனும் இறுதியில் வந்து கமறுவார்கள்...இப்படிப் பலவந்தமாக என்னால் எனக்குள் திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு நண்பர் ஒருவரும், "மச்சான், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வேலை ஒண்டும…

  10. ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்காவும் இடம்பிடிப்பு 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்குலம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 44 நாட்களாக இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை மூலைக்கல்லாக நின்று வழிநடத்திய மெக்குலம் 4 அரைச்சதங்களை பெற்றதுடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார். ஐ.சி.சி. யின் கனவு அணியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஐவரும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மூவரும் தென்னாபிரிக்க வீரர்கள் இருவரும் இலங்கை வீரர் ஒருவ…

  11. விளையாட்டாக அரங்கேறும் விபரீதங்கள் ஆசை இருக்கு தாசில் பண்ண என்பார்கள். எங்கள் வீட்டு ஒரியா சமையல்கார வாலிபர் கமலிலிருந்து தெரு ஓர சாயாக்கடை பீமப்பா, இஸ்திரி போடும் ராமு, எங்கள் கட்டிடத்தில் உள்ள செக்யூரிட்டி என எல்லோரும் ஆசைப்பட்டார்கள். கனவு கண்டார்கள். அதை உறுதியுடன் நம்பினார்கள். நான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது கமலிடம் சொன்னேன் - இந்தியா ஜெயிக்காது என்று. அவனுடைய முகம் தொங்கிப்போயிற்று. ‘பார்ப்போம்’ என்று கிளம்பிப் போனான். இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதி ஆட்டத்தை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண பெங்களூரில் அநேக அலுவலங்கள் விடுமுறை விட்டன. பல முக்கியமான போர்டு மீட்டிங்குகள் மாலை ஐந்து மணிக்கு மேல் என்று தள்ளிவைக்கப்பட்டன. இந்தியா ஜெயிக்…

  12. சங்காவின் மறுமுகம் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் சிறந்த வயலின் கலைஞர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். குமார் சங்கக்கார வயலின் வாசிக்கும் தனது திறமையை அண்மையில் இந்திய தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/jKp4frmbYhs http://www.virakesari.lk/articles/2015/03/06/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    • 13 replies
    • 1.3k views
  13. 9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி! மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது. 1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீ…

  14. பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்ட…

  15. தேங்க் யூ டோணி....! சென்னை: மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. ! சர்வதேச தரத்திலான பந்து வீச்சாளர்களைக் கொண்டிராத அணி என்ற அவப் பெயருடன் இருந்தது நமது இந்திய அணி. அந்த அணியை உங்களது பக்குவப்பட்ட கேப்டன்ஷிப்பினால், அழகான சக்தியாக உருவாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு டோணி…

  16. இங்கிலாந்தின் கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும் - ரவி பொப்பாரா சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இங்­கி­லாந்து மிளி­ர­வேண்­டு­மானால் இங்­கி­லாந்தின் கிரிக்கெட் கலா­சா­ரத்தில் மாற்றம் அவ­சியம் என ரவி பொப்­பாரா கூறி­யுள்ளார். தமது அணி அச்­சத்­துடன் விளை­யா­டி­ய­தா­கவும் கிரிக்­கெட்டில் முன்­னே­ற­ வேண்­டு­மானால் ஆங்­கி­லேய கிரிக்கெட் முறை­மையைக் கைவி­ட­வேண்டும் எனவும் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் குழு­நிலைப் போட்­டி­க­ளுடன் வெளி­யே­றிய இங்­கி­லாந்து அணியில் இடம்­பெற்ற ரவி பொப்­பாரா கூறினார். தற்­கால மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­க­ளுக்கு ஏற்ப இங்­கி­லாந்து வீரர்கள் சுதந்­தி­ர­மாக விளை­யாட முடி­யாமல் தடு­மா­றி­ய­தா­கவும் ஐ பி எல் போன்ற இரு­ப­துக்…

  17. யாரைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?? அட நம்ம டோனி கும்பலைத்தான். "Flat Track Bullies"என்று அடிக்கடி ஒரு வார்த்தை சர்வதேச கிரிக்கெட் சமூகத்தில் பாவிக்கப்பட்டு வருகிறது. அது யாரை என்று பார்த்தால் இந்தியாவின் கிரிக்கெட் அணி பற்றித்தான் என்று அறிந்துகொண்டேன். சில காலங்களுக்கு முன்னர் அவுஸ்த்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது, அந்தப் போட்டிகளில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி அவுஸ்த்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது. குறிப்பாக திராவிட், லக்‌ஷ்மண் போன்ற வீரர்கள் சாதனை இணைப்பாட்டம் ஒன்றின்மூலம் முண்ணனியிலிருந்த அவுஸ்த்திரேலிய அணியை தோற்கடித்திருந்தனர். இந்தப் போட்டிகள் பற்றி பலவிடங்களிலும் பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. அதேவேளை இந்தப் போட்ட…

    • 7 replies
    • 1k views
  18. தோல்விக்கு இந்தியா காரணம் * புலம்பும் இலங்கை கிரிக்கெட் போர்டு கொழும்பு: ‘‘இந்தியாவுக்கு எதிராக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் தொடர், எங்களது உலக கோப்பை பயிற்சியை பாதித்தது. இது தான் எங்கள் அணி தோல்விக்கு காரணம்,’’ என, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) நிர்வாகி ஷமி சில்வா தெரிவித்தார். பொதுவாக இலங்கை அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். 2003ல் அரையிறுதி (எதிர்–ஆஸி.,), 2007ல் பைனல் (எதிர்–ஆஸி.,), 2011ல் பைனல் (எதிர்–இந்தியா) என, முன்னேறிய இலங்கை அணி இம்முறை காலிறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. 1999க்குப் பின் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து எஸ்.எல்.சி., தலைவர் ஜயந்தா தர்மதாசவுக்கு எழுதிய கடிதத்தில், ஷமி …

  19. சிட்னியை பொறுத்த வரை கடந்த கால அவுஸ்திரேலியாவின் விளையாட்டு திட்டத்தினைப்பார்த்தால் இது புரியும், முதல் 15 ஓவர்களுக்கு ஆறு தொடக்கம் 7 ரன் விகிதம் ஓட்டங்களை பெறுதல் முதல் 30 ஓவர்களுக்கு 180 ரன்னைப்பெறுவது கடைசி 5 ஓவர்களில் 10 தொடகம் 12 ரன் ச்ராசரியைப்ப்றுவது குறிப்பாக மத்திய ஓவர்களில் (15 - 35) 6 ரன் விகிதத்தைப்பேணுவது. இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை புற கள நிலையை தாமதப்படுத்தக்கூடும் மைதானமும் பந்து வேகப்பந்து வீச்சாளருக்கு சிறிதளவாவது உதவும் என நம்பலாம். இந்தியாவின் துருப்புச்சீட்டு அஸ்வினை வளமையாக பாவிக்கும் நடுப்பகுதியில் ப்யன்படுத்தினால் கிளார்க் சிமித் இருவரும் அஸ்வினை அடித்தாட காத்திருப்பார்கள், எனவே இந்தியா அஸ்வினை ஆரம்பத்திலிருந்து பாவிப்பதுடன் ஆட்ட இறுதிப்பகு…

    • 10 replies
    • 905 views
  20. இப்படியே இருந்தா, "செத்துப் போயிருவோம்".. "குண்டு" போடும் வக்கார் சிட்னி: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் இறந்து போய் விடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். இப்படியே இருந்தா, கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதில், 7 வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் எந்த அணியும…

  21. கண்களில் மழை. நடந்ததை நம்பமறுக்கும் இதயம். இருந்த இடத்திலிருந்து நகராமல் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். "அப்பா, அழுகிறீர்களா?" என்று மகள் வந்து கேட்கவும் "இல்லையே!" என்று சுதாரித்தாலும் அவள் கண்டுவிட்டாள்."பிறகு ஏன் உங்கள் கண்கள் ஈரமாக இருக்கின்றன?" என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலளிக்கப் பிடிக்கவில்லை. "போய்ப் படி" என்று அவளை ஒருவாறு அதட்டிவிட்டு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன். இனி என்ன செய்வது?? கம்பியூட்டரில் ஏதாச்சும் பார்க்கலாம், யாழுக்குள் யாராச்சும் வந்து ஒப்பாரி தொடங்கிவிட்டார்களா என்று பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். அதுசரி, "இதெல்லாம் எதற்காக?" என்று நீங்கள் யாராவது கேட்கலாம். சிலருக்கு, "இலங்கைதான் விளையாடவில்லையே?? பிறகு ஏ…

  22. யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிதாக மூன்று கழகங்கள் இணைப்பு யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்­கத்தில் மூன்று புதிய கழ­கங்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. முதற்­கட்­ட­மாக சங்­கத்தின் விதி­க­ளுக்கு அமை­வாக குறிப்­பிட்ட மூன்று கழ­கங்­களும் யாழ். மாவட்ட கிரிக்கெட் விளை­யாட்டுக் கழ­கங்கள் நடத்தும் போட்­டி­களில் விளை­யாட அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாணம் பாசையூர் விம்ஸ் விளை­யாட்டுக் கழகம், கந்­தர்­மடம் ரெயின்போ விளை­யாட்­டுக்­க­ழகம் மற்றும் சாவ­கச்­சேரி றிபேக் விளை­யாட்­டுக்­க­ழகம் என்­ப­னவே யாழ். மாவட்ட கழகப் போட்­டி­களில் விளை­யாட அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள புதிய மூன்று கழ­கங்கள் ஆகும். இந்த மூன்று கழகங்களை புதிதாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று யாழ். …

    • 5 replies
    • 514 views
  23. ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி வாய்ப்புப் பெற்ற நான்கு அணிகள்: உலகக்கிண்ணம் 2015 மூன்றே மூன்று போட்டிகள் மீதமாக இருக்க, 11ஆவது உலகக்கிண்ணத்தின் வெற்றியாளர் யார் என்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். பரபரப்பான முதற்சுற்று போட்டிகள் - 42. முதற்சுற்றுப் போட்டிகளில் இருந்த பரபரப்பு, போட்டித் தன்மை ஆகியன முற்றுமுழுதாக வடிந்தது போல, வென்ற அணிகள் மிக இலகுவாக வென்றதாக அமைந்து ரசிகர்களை ஓரளவு ஏமாற்றியிருந்தன நான்கு காலிறுதிப் போட்டிகளும். முன்னைய கட்டுரையில் நான் எதிர்வு கூறியதைப் போல, கிரிக்கெட் விற்பன்னர்கள் பலரும் எதிர்பார்த்ததைப் போல, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தலில் முதல் நான்கு இடத்திலும் உள்ள நான்கு அ…

  24. உலக கோப்பையில் மறக்க முடியாத போட்டி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் விளையாடிய காலிறிதி ஆட்டம். குறிப்பாக Wahab Riaz பந்து வீச்சு பற்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேச ஆரம்பித்துள்ளனர். "இதுதான் கிரிக்கெட் விளையாட்டு, Watson, ஆடமிளக்காமல் நின்றது அதிஸ்டமே. இவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அபாரமான பந்து வீச்சு". என்று கூறியுள்ளார் Ricky Ponting. மற்றும் Brian Lara, "இந்த பந்து வீச்சில் Watson கிரிக்கெட் பாடசாலை மட்டதிக்கு சென்று விட்டது, Wahab Riaz ஐ நேரில் காணும் போது இவரின் அபராத தொகையை நான் செலுத்துவேன்". http://www.cricket.com.au/news/ricky-ponting-praises-wahab-riaz-and-shane-watson-as-brian-lara-hits-out-at-icc/2015-03-23

    • 0 replies
    • 533 views
  25. Over = வீச்சலகு Pitch = வீசுகளம் Out = ஆட்டமிழப்பு Wicket = முக்குச்சி Middle Stump = நடுக்குச்சி Out Swinger = வெளிநாட்ட வீச்சு Inswinger = உள்நாட்ட வீச்சு Maiden Over = வெற்றலகு Wicket Maiden = வீழ்வெற்றலகு Leg Side = கால்புறம் Off Side = எதிர்ப்புறம் Wicket Keeper = முக்குச்சிக்காரன் Boundary = எல்லை One Step Forward = முன்கால்வைப்பு Square Cut = செந்திருப்பு Run = ஓட்டம் Bowler = பந்தாள் Batsman = மட்டையாள் All Rounder = முழுவல்லார் Fielder = களத்தர் Bouncer = எகிறன் Hook Shot = கொக்கியடி Sweep Shot = துடுப்பு வலிப்படி Pull Shot = இழுப்படி Straight Drive = நேர்செலுத்தடி Yorker = நேர்க்கூர் எறி Leg Spin = வெளிவிலகுச் சுழல் Off Spin = உள்விலகு…

    • 3 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.