Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவரும் சிறந்த பந்து வீச்சாளரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட் தனது 84 ஆவது வயதில் சிட்னியில் காலமானார். சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனாட், 2013-ம் ஆண்டு கார் விபத்துக்குள்ளனார். இதில் அவருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறந்த பந்து வீச்சாளரும்; அதிரடி துடுப்பாட்ட வீரருமான பெனட், டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அணித் தலைவராக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. அவர் மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1964-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கெர்ரி பேக்கர் தொடரை கொண்டு வந்ததில் பெனடின் பங்கு அதிகம். கிரிக்கெட்…

  2. முன்னணி வீரராக சங்கா இந்த ஆண்டின் சிறந்த முன்­னணி வீர­ராக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்­கக்­கார பெய­ரி­டப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை ஆண்­டுதோறும் வெளி­யிடும் சிறந்த வீரர்­க­ளுக்­கான பட்­டி­ய­லி­லேயே குமார் சங்­கக்­கார முன்­னணி வீர­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ளார். அதே­வேளை அந்தச் சஞ்­சி­கை­யினால் சிறந்த கிரிக்கெட் வீரர்­களில் ஒரு­வ­ராக இலங்கை அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்­தி யூஸ்ஸும் பெய­ரி­டப்­பட்­டுள்ளார். உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்­களை விஸ்டன் சஞ்­சிகை பெய­ரிட்­டுள்­ளது. அதில் அஞ்­சலோ மெத்­தியூஸ்இ நியூ­சி­லாந்தின் ஜீடன் பட்டேல்இ இங்­கி­லாந்தின் மொயீன் அலிஇ கெரி பலான்சே, அடம்லயித் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இதேபோல் இவ்வ…

  3. பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …

  4. விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு விஸ்டன் - 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன் அலி, கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் விஸ்டனின் இவ்வருட பதிப்பின் முன்னட்டையில் இடம்பெற்றிருந்த நான்கு சிறந்த வீரர்களாவர். - See more at: http://www.tamilmirror.lk/143697#sthash.yI4dTGIX.dpuf

  5. தனிமைப்படுத்தப்படுகிறாரா டோணி? அனுஷ்கா-கோஹ்லிக்காக கொந்தளித்தவர்கள் போனது எங்கே? சென்னை: அனுஷ்கா ஷர்மாவால் உலக கோப்பை அரையிறுதியில் விராட் கோஹ்லி சொதப்பல் ஆட்டம் வெளிப்படுத்தினார் என்ற விமர்சனங்களுக்கு உடனடியாக பாய்ந்து வந்து பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி கேப்டன் டோணியை, தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்யும் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ்சிங்கை கண்டிக்காதது ஏன் என்பது டோணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. யுவராஜ் ஒதுக்கப்பட்டது ஏன்? கடந்த டி20 உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ்சிங் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் இந்தியா தோற்றபிறகுதான், யுவராஜ்சிங் அணி தேர்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டார். டோணி மீது வ…

  6. இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார். இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்…

  7. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . ராஞ்சி: உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். 60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு டிவிட்டருக்கு தற்காலிக பிரேக் விட்டார் கேப்டன் கூல், டோணி. இந்நிலையில், இன்றுதான் மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் டோணி. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . அதுவும், ஒரு புதிரோடுதான் ரீ-என்ட்ரி கொடுத்தார். பல மாத வெயிட்டிங்கிற்கு இப்போதுதான் முடிவு கிடைத்துள்ளது. இருந்தாலும், இன்ன…

  8. கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். கப்பில விஜேகுணவர்த்தன இலங்கை அணி சார்பாக 2 டெஸ்ட் போட்டிகளிலும்,26 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE…

  9. சிக்கன பந்துவீச்சில் வெலகெதர புதிய சாதனை முதல்­தர இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 4 ஓவர்­களைப் பூர்த்தி செய்த பந்­து­வீச்­சா­ளர்­களில் அதி சிறந்த (0.50) சிக்­கன பந்­து­வீச்சுப் பெறு­திக்­கான (அதா­வது ஓவ­ருக்கு 0.5 ஒட்ட வீதம்) புதிய சாத­னையை இலங்­கையின் சானக்க வெல­கெ­தர நிலை­நாட்­டி­யுள்ளார். எஸ். எஸ். சி. அணிக்கு எதி­ராக கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதா­னத்தில் ஞாயி­றன்று நடை­பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்­த­லட்டிக் கழகம் சார்­பாக பந்து வீசிய சானக்க வெல­கெ­தர 2 கன்னி ஓவர்கள் அடங்­க­லாக 4 ஓவர்கள் பந்­து­வீசி 2 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். இதன் பல­னாக தமிழ் யூனியன் க…

  10. பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சென்.ஜோன்ஸ் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 19 வயது பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பாதுக்க ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியும் மோதவுள்ளன. இந்த இறுதிப்போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (08) இடம்பெறவுள்ளது. பிரிவு – 3 அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்;டிகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிகளைக் குவித்தது. இதனடிப்படையில், பிரிவு – 3 இறுதிப்போட்டியில் விளையாடும் யாழ்ப்பாணத்தின் முதல் அணியாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணி காணப்படுகிறது. பிரிவு – 3 போட்டிகளில் இறுதிப்போட்டி வரையில் நுழைந்தமையால் சென். ஜோன…

  11. ரொனால்டோவின் ஹெட்ரிக்குடன் ரியல் மெட்ரிட் வெற்றி நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிவேக ஹெட்ரிக் சாதனையால் கிரனேடா அணியை வீழ்த்தி ரியல் மெட்ரிட் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல்பாதியில், 8 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தினார். அதிவேக ஹொட்ரிக் கோல் சாதனையுடன் மேலும் 2 கோல்களை தலையால் முட்டி முதன் முறையாக 5 கோல்களை பெற்றார். இதனையடுத்து, லா லிகா பட்டியலில் இறுதியில் உள்ள அணியான கிரனேடாவை 9:1 என்ற கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பார்சிலோனா அணி, மத்தியுவின் ஒரே ஒரு கோலுடன் போராடி செல்டோவிகோ அணியை, 1:0 என்ற கணக்கில் வென்று லா லிகா தரவரிசைப்பட்டியலில் 71 புள்ளிகளுடன் முன்ன…

  12. இங்கிலாந்தின் வூஸ்டர்ஷயர் அணியில் சச்சித்ர சேனநாயக்க இலங்­கையின் சுழல் பந்­து­வீச்­சாளர் சச்­சித்ர சேன­நா­யக்­கவை இங்­கி­லாந்தின் வூஸ்­டர்­ஷயர் பிராந்­திய அணி ஒப்­பந்தம் செய்­துள்­ளது. பாகிஸ்தான் சுழல்­பந்து வீச்­சாளர் சயீத் அஜ்­ம­லுக்குப் பதி­லா­கவே வூர்ஸ்­டர்­ஷயர் பிராந்­திய அணிக்­காக சச்­சித்ர சேனா­நா­யக்க விளை­யா­ட­வுள்ளார். நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் சச்­சித்ர சேனா­நா­யக்­கவை இலங்கை அணி நிரு­வாகம் பெரிய அளவில் கருத்தில் கொள்­ளாத போதிலும் சச்­சித்­ரவின் திற­மையில் நம்­பிக்கை கொண்­டுள்ள வூஸ்­டர்­ஷயர் பிராந்­திய அணி அவரை துணிந்து ஒப்­பந்தம் செய்­துள்­ளது. பதி­னொ­ரா­வது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யாயத் தில் கால் இறுதி உட்­பட இலங்கை…

  13. இரட்டை சதம் எதிரொலி: நியூஸி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் கப்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்டில் இடம்பிடித் துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்பட 547 ரன்கள் குவித்ததன் மூலம் மார்ட்டின் கப்டில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய கப்டில், இப்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். மார்ட்டின் கப்டில் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடை…

  14. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்ற இலங்கையின் நடுவர் குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டி ஒன்றில் நடுவராக கடமையாற்றும் முதலாமவர் குமார் தர்மசேன என்பது குறிப்பிடத்தக்கது. 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சம்பியன் ஆகிய வேளை, இலங்கை அணியில் குமார் தர்மசேன விளையாடி இருந்தார். 43 வயதான குமார் தர்மசேன, 19 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டி ஒன்றில் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார். 2011ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதைப் பெற்ற இவர், கடந்த இ…

  15.  சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…

  16. கிரிக்கெட் துறையில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதுவே தருணம் முரளிதரன், மஹேலவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுத்தலைவர் சிதத் வெத்தமுனி கூறுகிறார் ''கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து ஓய்­வு­ பெற்று பல்­லாண்­டு­க­ளாக மகிழ்ச்­சி­யுடன் பொழுதைக் கழித்­து­வரும் என்­னிடம் இடைக்­கால நிர்­வாக சபைத் தலைமைப் பொறுப்பை ஏற்­கு­மாறு அமைச்சர் கேட்­ட­போது நான் சற்று தயங்­கினேன். ஆனால் கிரிக்கெட் விளை­யாட்­டின்­மீது அவர் கொண்­டுள்ள அக்­க­றை­யா­னது என்னை மிகவும் கவர்ந்­தது. அவ­ரது தந்­தையைப் போன்றே (முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி திசா­நா­யக்க) அவ­ரிடம் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையின் மீது காணப்­படும் அக்­கறை என்னை மிகவும் கவர்ந்­தது. கிரிக்…

  17. வருகிறது மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் புதுடில்லி: மழையால் போட்டிகள் தடைபடாமல் இருக்க, மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் உருவாகிறது. வரும் 2019 உலக கோப்பை தொடரில் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. கிரிக்கெட் நடக்கும் போது மழை வந்தால் போட்டியை முழுமையாக நடத்த முடியாது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு குறித்து நிர்ணயம் செய்ய ‘டக்–வொர்த் லீவிஸ்’ விதி பின்பற்றப்படுகிறது. இதனால், பல போட்டிகளின் முடிவுகள் அப்படியே தலைகீழாகி விடும். 1992 உலக கோப்பை தொடரில் சிட்னி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இலக்கு மாற்றப்பட, தென் ஆப்ரிக்க அணி (1 பந்து, 22 ரன்) பரிதாபமாக வீழ்ந்தது. சமீபத்திய உலக கோப்பை தொடரிலும், மழை வந்து தென் ஆப்…

  18. நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் ஓய்வு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்துப் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளை யாடியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். இனிமேல் விளையாட முடியாது என்பது மிகப் பெரிய இழப்புதான். அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நான் நேசித்த கிரிக்கெட்டை நான் விளையாடுவதற்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார். 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மில்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவ…

  19. மோசமான உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்து நியூஸி. இணையதளம் வேடிக்கை உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவிக்க நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அணிக்குத் தலைவர் இயன் மோர்கன் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'Not First XI' என்ற பெயரில் நியூசி. இணையதளம் ஒன்று இந்த அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனை கேப்டனாக அறிவித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சரியாக செயல்படாத வீரர்கள் கொண்ட அணியை வேடிக்கையாக அறிவித்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம்…

  20. ஐ.சி.சி., தலைவர் முஸ்தபா ராஜினாமா புதுடில்லி: ஐ.சி.சி., தலைவர் பதவியை வங்கதேசத்தின் முஸ்தபா கமால் திடீரென ராஜினாமா செய்தார். சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.,) கவுன்சில் தலைவர் முஸ்தபா கமால். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்திய, உலக கோப்பை தொடரின் காலிறுதியில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அப்போது, இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ‘நோ–பால்’ வழங்கிய விவகாரத்தில் அம்பயர்கள் சதி இருப்பதாக, முஸ்தபா சர்ச்சை கிளப்பினார். இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தலைவர் என்று முறையில் நான்தான் கோப்பை வழங்க வேண்டும். ஐ.சி.சி., சேர்மன் சீனிவாசன் வழங்கியது விதிமுறை மீறல் எனவும் புகார் தெரிவித்திருந்தார். இப்படி பல பிரச்னைகளால், கோபமடைந்த முஸ்தபா, ஐ.சி.சி.,யில் …

    • 2 replies
    • 394 views
  21. சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது. இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு ச…

    • 5 replies
    • 636 views
  22. சங்கா மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/01/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9…

  23. ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 10-ல் கோலி, தவன், தோனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் முறையே 4 மற்றும் 6-வது இடங்களைப் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்னாலும் அவர் 4-வது இடத்தில்தான் இருந்தார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவன், 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, உலகக் கோப்பைய…

  24. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அ…

  25. பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் அசார் அலி மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பேட்ஸ்மென் அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி துணைக் கேப்டனாக செயல்படுவார், சர்பராஸ் அகமட் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அப்ரீடி டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரூண் ரஷீத் தேர்வுக்குழு தலைவரானார். அசார் அலியை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 4…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.