விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
தடைக்காலம் முடிந்தது: ஸ்மித், வார்னர் உள்ளூர், சர்வதேசப் போட்டிகளில் இனி விளையாடலாம்: ஆஸி. வீரர்கள் எதிர்ப்பு Published : 29 Mar 2019 11:46 IST Updated : 29 Mar 2019 11:46 IST பி.டி.ஐ டேவிட்வார்னர், ஸ்டீவ் ஸ்மித் : கோப்புப்படம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருந்த ஒரு ஆண்டு தடை நேற்றுடன் காலாவதியானது. இனிமேல் இருவரும் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் எந்தவிதமான தடையுமின்றி விளையாடலாம். உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இருவரும் இடம் பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வார்னர், ஸ்மித், கேமரூன் ஆகிய…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர். காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம். போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி இன்று …
-
- 0 replies
- 781 views
-
-
மத்திய கல்லூரி அபார வெற்றி! September 30, 2015 யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே நடத்தி வரும் ரி-20 தொடரில் கடந்த சனிக்கிழமை சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 170 ஒட்டங் களைப் பெற்றனர். அதிகபட்சமாக டினோசன் 58 ஓட்டங்களையும், பிரியலக்சன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி சார்பில் சண்முகன், அஜந்தன், பிரசாந், மிதுசன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர். 171 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்கு துடுப…
-
- 0 replies
- 332 views
-
-
ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் செட்டிநாடு சிமெண்ட்! சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிகள் 2 சீசன்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கு மேலும் 2 ஐ.பி.எல். அணிகளை உருவாக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த அணிகள் எந்த நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டுமென்பதில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே புதிய அணிகளை வாங்குவதற்கு 21 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த செட்டிநாடு சிமெண்ட் நிறுவனமும் ஒன்று. 50 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம், அனேகமாக சென்னையை வைத்து அணி உருவாக்கப்பட்டால், புதிய அணியை வாங்கி விடவேண்டுமென்பதில் உறுதியாக…
-
- 0 replies
- 670 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா 58 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திர…
-
- 0 replies
- 390 views
-
-
பார்சிலோனா 3வது முறையாகவும் சம்பியன் December 21, 2015 ஜப்பானில் நடைப்பெற்ற 12வது உலக கழக அணிகளுக்கான கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், அர்ஜென்டினாவின் ரிவர்ட் பிளாட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலத்திய பார்சிலோனா அணி, லயோனல் மெஸ்சியின் ஒரு கோலுடனும், லூயிஸ் சுவாரஸின் 2 கோல்களுடனும் 3-0 என்ற கோல் கணக்கில் ரிவர்ட் பிளாட்டை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது பார்சிலோனா அணி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடதக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6343
-
- 0 replies
- 895 views
-
-
அதிர்ச்சியில் சிடேன்: புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய ரியல்மாட்ரிட்டுக்கு தடை! உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணி, இன்னும் ஓராண்டு காலத்திற்கு எந்தப் புதிய வீரர்களையும் வாங்கக் கூடாது என்று சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தடை விதித்துள்ளது. மைனர் வீரர்களை ஒப்பந்தம் செய்ததில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி ரியல் மாட்ரிட் அணிக்கும், மாட்ரிட்டை மையமாகக் கொண்ட லா லிகாவின் மற்றுமொரு பெரிய அணியான அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பார்சிலோனா அணிக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு அது சமீபத்தில் தான் நிறைவடைந்தது. விதிமுறைகள் மீறப்பட்டதா? கால்பந்தைப் பொருத்தவரையில் வீரர்கள் அணிகள் மாறுவது என்பது நமக்கு ச…
-
- 0 replies
- 353 views
-
-
SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா! By A.Pradhap - நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளின் தங்கப் பதக்கங்களை இந்தியா சுவீகரித்துக்கொண்டது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற…
-
- 0 replies
- 330 views
-
-
’’புகைப்படம் எடுக்கும் போது வோட்சனின் வயிற்றில் ஓங்கி குத்த நினைத்தேன்’’ கெய்ல் February 12, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்லும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும் ஐபிஎல் பற்றி டுவிட்டரில் ஜாலியாக பேசிக் கொண்டனர். கடந்த 2009ம் ஆண்டு பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெய்லின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஷேன் வார்டன் ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார். இது கிறிஸ் கெய்லுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் மோசமான நடத்தைக்காக வாட்சனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் வாட்சன், கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ள பெங்க…
-
- 0 replies
- 478 views
-
-
எட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. டி.ஆர்.எஸ். எனப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் இந்த முறைமைக்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த டி.ஆர்.எஸ். முறைமையை எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒத்திகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்திய அணி கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்தியதனை தொடர்ந்து, எதிர்வரும் இங்கிலாந்து தொடரில்…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் சேர்ப்பு இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளைாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான வே…
-
- 0 replies
- 263 views
-
-
டுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியாடியது யார் ? இலங்கை கிரிக்கெட் விளக்கம் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது. டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 363 views
-
-
ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார். நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பிறகு, தொகுப்பாளரிடம் பேசுகையில் , "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என்று அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல். கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை சென்னை, பஞ்சாப் அணிகள் சந்தித்த இரு போட்டிகளிலுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டுள்ளது. இதில் முக்கியமாக…
-
- 0 replies
- 763 views
-
-
உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் தனது சந்தர்ப்பம் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது இன்னல்களின்போது எப்படி முகம் கொடுப்பது என்று சகலதுறை வீரர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பது போல இருந்தது. 2001 ஆம் ஆண்டு குளிர்கால சுற்றுப் பயணத்தின்போது கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) 137 ஓட்டங்களை விளாசிய பிளின்டொப், தான் இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை வீரரான செர் இயன் பொத்தமுடன் ஒப்பிட்டு பேசப்படுவதை கண்டார். அப்போது, ‘எடை அதிகரித்திருப்பதை மோசமாக கருதவில்லை’ என்று அவர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு பதிலடியாக குறிப…
-
- 0 replies
- 343 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. …
-
- 0 replies
- 500 views
-
-
ரொம் மூடி பாகிஸ்தான், வட்மோர் இந்தியா பயிற்சியாளர்களாக செல்லத் திட்டம் தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் பல நாடுகளின் மூத்த முன்னணி வீரர்கள் சிலர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதேநேரம், ஒரு சில கிரிக்கெட் பயிற்சியாளர்களும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் கூடு விட்டு கூடு பாயப்போவதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரொம் மோடியின் ஒப்பந்தம் மே மாதத்துடன் முடிவடைகின்றது. இவரது ஒப்பந்தத்தை தொடர்ந்து நீடிப்பதற்கே இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விரும்புவதாகத் தெரிய வருகின்றது. ஆனால், பயிற்சியாளரான ரொம்மோடி தொடர்ந்தும் இலங்கை …
-
- 0 replies
- 767 views
-
-
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் அசார் அலி மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பேட்ஸ்மென் அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி துணைக் கேப்டனாக செயல்படுவார், சர்பராஸ் அகமட் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அப்ரீடி டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரூண் ரஷீத் தேர்வுக்குழு தலைவரானார். அசார் அலியை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 4…
-
- 0 replies
- 468 views
-
-
Published By: VISHNU 02 APR, 2024 | 10:06 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிர்பூர், ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை பரிஹா ட்ரிஸ்னா, ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். அதன் மூலம் மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்-ட்ரிக்குகளைப் பதிவுசெய்த முதலாவது வேகப்பந்துவீச்ச வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பரிஹா படைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்படலாம் என எம்.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் நிறுவன தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும் எனவும் அவர் கூறியுள்ளார். மகளிர் கிரிக்கெட் அண்மையில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறுப்பிடத்தக்கது. https://w…
-
- 0 replies
- 672 views
-
-
பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஆஸி நிருபரை கலாய்த்த தோனி (வீடியோ) இரண்டாவது போட்டியில் தோற்ற பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோனி. தோல்விக்கான காரணங்களை கூறினார். இடையில் ஒரு ஆஸி நிருபர் 'ரோஹித் ஷர்மா எட்ஜ் ஆனதற்கு அவுட் வழங்கப்படவில்லையே என கேட்க தோனி கூலாக '' நீங்கள் சொன்ன ஸ்லாங் எனக்கு புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என கேட்டார். நிருபரும் திரும்ப அதே கேள்வியை கேட்க ''ஓ! எட்ஜ் குறித்து கேட்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் சென்ற முறை ஜார்ஜ் பெய்லி குறித்து என்னிடம் நீங்கள் இதே கேள்வியை என்னிடம் கேட்கவில்லை' என நக்கலாக சென்ற போட்டியில் பெய்லிக்கு அவுட் வழங்கப்படாததை சுட்டி காட்டி கலாய்த்தார். அந்த ஆஸி நிருபரும…
-
- 0 replies
- 607 views
-
-
புனித ஜோசப் - புனித பீட்டர் அணிகள் மோதும் 82ஆவது புனிதர்களின் சமர் இன்று ஆரம்பம் (நெவில் அன்தனி) மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரிக்கும் இடையிலான 82ஆவது வருடாந்த ‘புனிதர்களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. புனித ஜோசப் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்துவலமாக ப்ரசான்த ரணவீர (பொறுப்பாசிரியர்), ஆசிரி பேரேரா (உடற்தகுதி பயிற்றுநர்), மைக்கல் அடம்ஸ் (இரண்டாம் நிலை அணி பயிற்றுநர்), மல்ஷான் ரொட்றிகோ, அருட்தந்தை மிலான் பேர்னார்ட் (விளையாட்டுத…
-
- 0 replies
- 731 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான் ; 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது. 1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக…
-
- 0 replies
- 371 views
-
-
உலகி்ன் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதுகள்: பத்து ஆண்கள், பத்து பெண்கள் முன்மொழிவு 2016-10-21 14:36:59 சர்வதேச மெய்வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வருடத்தின் அதி சிறந்த ஆண் மெய்வல்லுநர், பெண் மெய்வல்லுநர் விருதுகளுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த இரண்டு விருதுகளுக்கும் முறையே பத்து ஆண் மெய்வல்லுநர்களினதும் பத்து பெண் மெய்வல்லுநர்களினதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனப் பேரவை உறுப்பினர்கள், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அமைப்களின் உறுப்பினர்கள், சமூக ஊடக வாயிலாக இரசிகர்கள…
-
- 0 replies
- 384 views
-
-
ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…
-
- 0 replies
- 463 views
-
-
இறுதி பத்து ஓவரில் போட்டியின் திசையை மாற்றிய மே.தீவுகள் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் ஹபீஸ் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் 309 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 49 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்களுக்கு 138 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. …
-
- 0 replies
- 247 views
-