Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…

  2. ஒருநாள் போட்டிகளிலிருந்து மிஸ்பா ஓய்வு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு 20 போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு டெஸ்டில் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 40 வயதான மிஸ்பா கடந்த 2002 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4669 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/12/%E0%…

  3. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லா…

  4. இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், …

  5. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் 04 டிசம்பர் 2014 தொடக்கம் 07 ஜனவரி 2015 வரை பிரிஸ்பேன், அடிலேட்,மெல்பெர்ன்,சிட்னி நகரங்களில் நடைபெறும்.

  6. ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய வீரர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ…

  7. அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…

  8. திங்கள்கிழமை உலக ஜூனியர் சம்பியன் போட்டியில் தோல்வியடைந்து தங்க பதக்கததை இழந்தத பின்னர் ரஷ்ய அணியை சேர்ந்த சியாற் பெய்ஜின் ஆபத்தான வழியில் தன் பொறுமையை இழந்தார். கனடிய அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் 19-வயதுடைய குறிப்பிட்ட ரஷ்ய வீரர் தனது குச்சியை ஒரு ரசிகரை தாக்கும் வண்ணம் அரங்கத்தில் எறிந்துள்ளார். இந்த தங்கப்பதக்க போட்டியில் கனடா 5-4 ஆக ரஷ்ய அணியை வென்றது. கனடியர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் போது கனடிய வீரர் ஒருவரும் தனது குச்சியை மேல் நோக்கி வீசியுள்ளார். பெய்ஜின் நீல கோட்டிற்கு சறுக்கிச் சென்று தனது குச்சியை கண்ணாடி மீது வீசினார். ஜூனியர்சின் அணியை நிரவகிக்கும் சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்காக பெய்ஜின் தண்டனையை எதிர்நோக்க…

    • 0 replies
    • 236 views
  9. கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…

  10. பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…

  11. ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…

  12. கடந்த வருட கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டில் மொத்தம் 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அவுஸ்ரேலியா, நியூஸ்சிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நிறைய தோல்விகளை சந்தித்த அணி என்றால் இந்தியா தான். 10 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஆறில் தோல்வியும், மூன்றில் வெற்றி தோல்வி இன்றி முடித்துள்ளது. அந்த ஒரு வெற்றி, லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்தவை ஆகும். டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இலங்கை அணியினைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் வீரரான சங்கக்கார பங்களாதேஷ்சிற்கு எதிராக 319 ஓட்டங்களையும், நியூசிலாந்து அண…

  13. கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்ககரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37-வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! இந்த நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட…

  14. உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும். உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரிய…

  15. இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…

  16. இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…

  17. விராட் கோலி அதிகம் உணர்ச்சிவயப்படுகிறார்: ஷாகித் அப்ரீடி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார். “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்…

  18. மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை? இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள…

  19. டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் மூன்று இடங்களுக்குள் சங்கா, ஹேரத் சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் டெஸ்ட் துடுப்­பாட்ட மற்றும் பந்­து­வீச்சு வீரர்­க­ளுக்­கான புதிய தர­வ­ரி­சைப்­பட்­டியல் வெளியி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை அணி வீரர் குமார் சங்கக்­கார இரண்டாம் இடத்தை பெற்­றுள்ளார். இப்­பட்­டி­யலில் தென் ஆபி­ரிக்க அணி வீரர் ஏ.பி.டி.வில்­லி­யர்ஸ் முத­லி­டத்தில் உள் ளார். மூன்றாம் இடத்தில் தென் ஆபி­ரிக்க டெஸ்ட் அணித்­த­லைவர் ஹசிம் அம்லா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். அவுஸ்தி­ரே­லிய அணியின் தற்­கா­லிக தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இந்த பட்­டி­யலில் 5 ஆவது இடத்தில் காணப்­ப­டு­கின்றார். இந்த பட்­டி­யலில் இந்­திய டெஸ்ட் அணி யின் புதிய தலைவர் விராட் கோலி 15 ஆவது இடத்தை பெற்…

  20. இந்திய-அஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸி. பிரதமர் டோனி அபாட் புத்தாண்டு தேநீர் விருந்து ஆஸி.பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள். | படம்: சிறப்பு ஏற்பாடு. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார். இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அணி வீரர்களுடன் புகைப்படம் எடு…

  21. நான் இங்கு கோலியைப் பற்றி பேச வரவில்லை: ஹேடின் தோனியின் ஓய்வு பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் கூறிய ஆஸி.விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கோலி பற்றிய கேள்விக்கு தவிர்ப்பு மனோபாவத்தில் பதில் அளித்தார். பிராட் ஹேடின் கூறியதாவது: “தோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜெண்டில்மேன். தோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர். இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் கேப்டனாக் நீடிக்க முடிந்துள்ளது. அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைக…

  22. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…

  23.  2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…

  24. யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழில் உள்ள அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=124023754426102012#sthash.H2o8hcRw.dpuf

  25. தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.