விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
'கலந்துரையாடலுக்குத் தயார்' Comments உலக இருபதுக்கு-20 தொடரின் சம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது வெளிப்படுத்திய விமர்சனங்களைத் தொடர்நது, அவ்விடயம் தொடர்பான கலந்துரையாடலுக்குத் தயாராக இருப்பதாக, கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கமரோன் தெரிவித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் தொடர் முடிவடைந்த பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த மீளாய்வு, ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, பொதுவான ஒரு நிலைப்பாட்டைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெறுமென அவர் அறிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்க…
-
- 0 replies
- 597 views
-
-
பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக் மர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன் ஸல்டான் இப்ராஹிமோவிக் விடைபெற்றார். மேற்படி கிண்ணத்தினை வென்றமையையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக உள்ளூர் கிண்ணங்கள் அனைத்தையும் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வென்றுள்ளது. மேற்படி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக இப்ராஹிமோவிக் 2 கோல்களையும் எடின்சன் கவானி, பிளை…
-
- 0 replies
- 280 views
-
-
ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக் ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும், அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணி தோல்வி…
-
- 0 replies
- 406 views
-
-
LPL T20 2021 - ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது. ஜெப்னா கிங்ஸ் அணி சார்பாக திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஷோயப் மலிக் 47 ஓட்டங்களையும் பெற்றனர். கொழும்பு கிங்ஸ் சார்பில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கொழும்பு கிங்ஸ் அணியில்…
-
- 0 replies
- 429 views
-
-
அதிர்ச்சியில் விராட் கோலி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாக்கும் காதல் என்று நீண்ட நாட்களாக செய்தி வந்துக்கொண்டே இருந்தது. அதேபோல் தான் விளையாட போகும் அனைத்து நாட்டிற்கும், இவரையும் தன்னுடன் அழைத்து சென்றார் கோலி. தற்போது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஓர் அறிக்கை வந்துள்ளது. அனுஷ்காவின் உதவியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைனில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன. நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 670 views
-
-
இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், இனிவரும் காலங்களில் பந்துவீச மாட்டார் எனவும், சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கிரஹம் லெப்ரோய் வழங்கிய விசேட செவ்வியில், அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேநேரம், மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிலும் க…
-
- 0 replies
- 538 views
-
-
மும்பையில் நடந்த கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் அதிரடி முடிவு ; வீரர்களின் ஒப்பந்த முறை ரத்தOdiv> மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளைச் சீரமைக்க இந்ததிய கிரிக்கெட் வாரியம் பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரின் தகுதியும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் முன்பும் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு வீரரும் 3 பொருட்களுக்கு மட்டுமே விளம்பரதாரராக இருக்கவேண்டும். முன்னாள் கேப்டன்களான பட்டாவடி, போர்டே, வெங்கட்ராகவன், கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட வீரரகளின் அணியின் சுற்றுப்பயண எண்ணிக்க…
-
- 0 replies
- 923 views
-
-
அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…
-
- 0 replies
- 334 views
-
-
இந்திய ‘ஸ்டைல்’ மாறுமா * ரவி சாஸ்திரி விளக்கம் கொழும்பு: ‘‘முதல் டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி தொடர்ந்து துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்காது,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது நாளில் பரிதாபமாக தோற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி கூறியது: மின்னல் இருமுறை தாக்காது என்று வேடிக்கையாக சொல்வர். இது போல இந்திய அணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி இருக்காது என்று நம்புவோம். எங்களது துணிச்சலான ஆட்டம் தொடரும். இதில் மாற்றம் இருக்காது. வீரர்களின் மனநிலை எப்போதும் போலத்தான் உள்ளது. முதல் டெஸ்டில் வெற்றியை நெருங்கிய நேரத்தில் சில த…
-
- 0 replies
- 446 views
-
-
இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி ஹர்ப்ரீத் கவுர் லம்பாவிளையாட்டு செய்தியாளர், பிபிசிக்காக 5 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHOCKEY INDIA "பயப்பட வேண்டாம். பேசுங்கள்" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
செய்தித் துளிகள்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் தீபிகா | கோப்புப் படம் கிரானைட் ஓபன் ஸ்குவாஸ் போட்டி டொரான்டோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் சல்மா ஹனி இப்ராஹிமை எதிர்த்து விளையாடினார். இதில் 27வது இடத்தில் உள்ள சல்மாவை 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா. ------------------------------------------------------------- இந்தியா-இலங்கை டி 20-ல் மோதல் ஆசிய கோப்ப…
-
- 0 replies
- 437 views
-
-
இளம் வீரரால் பார்சிலோனா வெற்றி: தொடரும் ரொனால்டோவின் அசத்தல் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் லெவன்டே பதின்ம வயது வீரர் அன்சு பட்டியின் இரட்டை கோல் மூலம் லெவன்டே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான புள்ளி இடைவெளியை மூன்றாக குறைத்துக் கொண்டது. 17 வயதான பட்டி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து …
-
- 0 replies
- 374 views
-
-
‘பல சமயங்களில் அஷ்வின் என்னை மீட்டெடுத்துள்ளார்’ உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தான் இறுதியாக விளையாடிய மூன்று இருபதுக்கு-20 போட்டிகளில் ஐந்து ஓவர்களை மட்டுமே வீசியுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, இன்னமும் இரவிச்சந்திரன் அஷ்வினை தனது துருப்புச்சீட்டாக கருதுகிறாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதும் இரவிச்சந்திரன் அஷ்வினே தனது துருப்புச்சீட்டு எனத் தெரிவித்துள்ள மகேந்திரச சிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின் எந்த நேரத்திலும் சிறப்பாக செயற்பாடுவார் எனத் தெரிவித்துள்ளார். தான் கூறியது போன்று, முதல் ஆறு ஓவர்களிலோ அல்லது அதிக ஓட்டங்கள் பெறப்படும் இறு…
-
- 0 replies
- 539 views
-
-
கால்பந்தாட்டம், கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பாகிஸ்தான் யுவதி டயனா பெய்க் விளையாட்டுத்துறையில் பெண்கள் சளைத்தவர்களல்லர் என்பதை அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளில் பலர் நிரூபித்து வருகின்றனர். எனினும் அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய அணிகளில் இடம்பெறுவதைக் கண்டுள்ளோம். பாகிஸ்தானைச் சேர்ந்த டயனா பெய்க் எனும் யுவதி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியிலும் தேசிய கால்பந்தாட்ட அணியிலும் இடம்பெற்றுள்ளார். அண்மையில் கழக மட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தனது அணியை சம்பியனாக வழிநடத்திய டயனா பெய்க், பரிச…
-
- 0 replies
- 330 views
-
-
20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்…
-
- 0 replies
- 383 views
-
-
சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்கள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அனைத்துவகை ஆட்டங்களிலும் சேர்த்து (டெஸ்ட்+ ஒருநாள்+T20) 9000 ஓட்டங்கள் கடந்தார்.ஒரு பங்களாதேஷ் வீரர் ஒருவர் அனைத்துவகை போட்டிகள் உள்ளடங்கலாக பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனை தமிம் இக்பால் வசமானது. பதிலுக்க…
-
- 0 replies
- 391 views
-
-
யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ள சங்கா, மஹெல! எல்.பி.எல் ரீ20 போட்டிகள் நாளை முதல்(26) ஆரம்பமாகவுள்ளன. ஐந்து அணிகள் இம்முறை எல்.பி.எல் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ்(Jaffna stallions) எனும் அணியும் விளையாடவுள்ளது. இதனையடுத்து, நாளை ஆரம்பிக்கவுள்ள எல்.பி.எல் போட்டிகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு தமது சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளனர். குமார் சங்கக்கார இதுபற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு இந்தப் போட்டிகள் சி…
-
- 0 replies
- 655 views
-
-
66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !! இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து…
-
- 0 replies
- 883 views
-
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 359 views
-
-
2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள் கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆ…
-
- 0 replies
- 253 views
-
-
பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…
-
- 0 replies
- 613 views
-
-
ஹொங்கொங் T-20 யில் சங்காவின் அதிரடி ஆட்டம் வீணானது ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர். அவர்களில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சோபித்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 380 views
-
-
இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…
-
- 0 replies
- 177 views
-
-
தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங் தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: "எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வ…
-
- 0 replies
- 314 views
-
-
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …
-
- 0 replies
- 485 views
-