விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
உதவி,சுழற்பந்து பயிற்சியாளர்கள் இராஜினாமா இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப்பயிற்சியாளர் ருவான் கல்பகே மற்றும் சுழற்பந்து பயிற்சியாளர் பியால் விஜேயதுங்க ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கான பயிற்சியாளராக பணிபுரியும் ஹத்துருசிங்கவின் உதவிப்பயிற்சியாளர்களாக இணைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததை தொடர்ந்தே இருவரும் இவ்வாறான முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமது சுய விருப்பத்தின் பேரிலேயே இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர் எனவும் அவர்களது விருப்பத்தின் படி இலங்கையிலோ பங்களாதேஷிலோ தமது சேவையினை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது htt…
-
- 0 replies
- 420 views
-
-
முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த நாட்டினது கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே, கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரெட்மன் அளவுக்கு ஒப்பிட்டு புகழப்பட்ட அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் என இரு முன்னணி வீரர்களை இழக்கும் அளவுக்கு இந்த விடயம் சென்றது. 1970களில் கெர்ரி பாக்கர் காலத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மோசமான காலத்திற்கு முகம்கொடுத்துள்ளது. கெர்ரி பாக்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தையே மீறி உலகக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் பங்கேற்ற தனத…
-
- 0 replies
- 412 views
-
-
ஆஸ்திரேலிய தோல்விகளை ஆய்வு செய்யும் சென்னை நிறுவனம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 2-0 என்று படுதோல்வி தழுவியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது. சென்னையில் உள்ள கிரிக்கெட் 21 என்ற ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் தொடரை முழுமையாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முன்னாள் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் 21 நிறுவனம். துணைக்கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள் என்ன என்பதை முழுதும் ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல் திறன் கமிட்டியின் தலை…
-
- 0 replies
- 415 views
-
-
40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்! போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள். டாஸ் வென்ற ஜமைக்கா டல்லவாஸ், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியைப் பேட்டிங் செய்யச் சொன்னது. அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்களைக் குவித்தது. மன்ரோ 61, மெக்கல்லம் 56 ரன்கள் எடுத்தார்கள். மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல், ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, ஒருகட்டத்தில் 6.1 ஓவர்களில் 41 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்தக் கணத்தில் ஆட…
-
- 0 replies
- 413 views
-
-
போட்டிகளின் முடிவுகளை புரட்டி போடும் 'அம்பயர் கால்'! உலக கோப்பை கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை!! மெல்போர்ன்: டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. டிஆர்எஸ் நடைமுறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான் என்ற பேச்சு பரவலாக எழுவதற்கு, இந்த சர்ச்சைகளே காரணமாக அமைந்துள்ளன. கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், பேட்ஸ்மேன் அவுட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்பது நடைமுறை. மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் அந்த காட்சியை போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். சிவப்பு விளக்கை ஆன் செய்தால், பேட்ஸ்மேன் அவுட் என்றும், பச்சை விளக்…
-
- 0 replies
- 671 views
-
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்; இந்தியா முதலிடத்தில் December 31, 2018 ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்ட வென்று டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத…
-
- 0 replies
- 780 views
-
-
அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதிப்படுத்தியது பாகிஸ்தான்! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 228 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்று 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் …
-
- 0 replies
- 466 views
-
-
ஓய்வின் பின்னரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக மசகட்சா By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter சர்வதேச கிரிக்கெட்டிற்கு அண்மையில் பிரியாவிடை கொடுத்திருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹமில்டன் மசகட்சாவிற்கு புதிய பதவி ஒன்று கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், ஹமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தற்போது 36 வயதாகும் ஹமில்டன் மசகட்சா, தனக்கு கிடைத்திருக்கும் புதிய பதவியினை நவம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து பொறுப்பேற்கவுள்ளார். …
-
- 0 replies
- 430 views
-
-
நடுவருக்கு சிவப்பு அட்டை காட்டிய வீரர் February 24, 2016 துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் நடுவருக்கே ’சிவப்பு அட்டை’ காட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார். துருக்கியில் நடக்கும் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இஸ்தான்புல்லை சேர்ந்த கலாட்டாசாரே- டிரப்ஜான் அணிகள் மோதின. இதில் வீரர்களின் மோசமான நடத்தை காரணமாக டிரப்ஜான் அணியின் ஹர்மாச்சி, டெமிர் ஆகிய இருவரும் இரண்டு முறை ’மஞ்சள் அட்டை’ பெற மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் 86வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த கவாண்டாவும் வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த வீரர்கள் நடுவர் டெனிஸ் பிட்னெலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் தர்சுன் என்ற வீரர் நடுவரிடம் இரு…
-
- 0 replies
- 490 views
-
-
அணியைவிட்டு விலக விரும்பும் நட்சத்திரங்களுக்கு பயிற்றுநர் எச்சரிக்கை இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாகத் தெரிவான லெய்செஸ்டர் சிற்றி அணியின் நட்சத்திரங்கள், அவ்வணியிலிருந்து விலகுவது குறித்து, அவ்வணியின் பயிற்றுநர் கிளாடியோ றைனேரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது, இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புகளில் 5,000-1 என்ற மிகக்குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்த லெய்செஸ்டர் அணி, அனைவரும் எதிர்பாராத விதமாகச் சிறப்பாக விளையாடி, கழகத்தின் 132 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதன்முறையாக, சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தது. சம்பியன்களாக அவ்வணியை உருவாக்கியமையில், இத்தாலியைச் சேர்ந்த அவ்வ…
-
- 0 replies
- 298 views
-
-
விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்: ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை பாராட்டும் ஸ்மித். | படம்: ஏ.பி. சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய கோலியின் அருமையான 82 ரன் இன்னிங்ஸ் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அன்று விராட் கோலி 39 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார், அதன் பிறகு 12 பந்துகளில் மேலும் 32 ரன்களை விளாசி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார், ஆஸ்திரேலியா வெளியேறியது. இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களையே கோலி அடித்தார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு ஸ்மித் கூறியதாவது: அன்று கோலி ஆடிய இன்னிங்…
-
- 0 replies
- 323 views
-
-
[size=4]டெல்லியில் இடம்பெறவுள்ள Formula 1 மோட்டார்க்கார் ஓட்டப் பந்தத் தடத்திற்கு, கட்டாக்காலி நாய்களும், ஏனைய கால்நடைகளும் செல்வதைத் தடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். நாய்கள் அந்த தடத்தினுள் செல்வதற்கு இருந்த வழிகளை அடைத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். கடந்த ஆண்டு போட்டிகளின் முதற் பயிற்சியின்போது, போட்டித் தடத்தினுள் நாய்கள் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு அடுக்குகளாக வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக நாய்களைப் பிடிக்கும் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி குறொன் பிறீ போட்டி இடம்பெறவுள்ளது.[/size] http://thamilfm.com/thamilfm/NewClients/NewsD…
-
- 0 replies
- 612 views
-
-
ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார். ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் 21 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் மகத்தான சாதனையொன்றை இன்று படைத்துள்ளார். பாகிஸ்தான் அணி சார்பில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பெறப்பட்ட அதிகப்படியான ஓட்டங்கள் எனும் சாதனையை 19 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மியண்டாட் தன்வசம் வைத்திருந்தார். 1987 ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில், மியண்டாட் 262 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டமையே இதுவரையான பாகிஸ்தான் …
-
- 0 replies
- 352 views
-
-
ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர் இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 11…
-
- 0 replies
- 313 views
-
-
பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பந்தயப் போட்டிகளில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்கே குதிரைப் பந்தயத்தின் தலைமையகம் என்று கருதப்படும் நாட்டின் கிழக்கேயுள்ள நியூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் கோடோல்ஃபின் குதிரை லாயத்திலுள்ள 11 குதிரைகளுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 45 குதிரைகளில் பதினொன்றுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், கோடோல்ஃபின் குதிரை லாயத்தின் பயிற்சியளர் மஹ்மூத் அல் ஜரூனி, பிரிட்டிஷ் குதிரைப் பந்தய விசாரணை ஆணையத்தின் முன்னர் ஆஜராகவுள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை குதிரைகளுக்கு அளித்ததையும் அது மிகப் பெரும் தவறு என்பதையும் அல் ஜரூனி ஒப்புக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 715 views
-
-
1996 உலக சம்பியன் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சம்பியனான அணி வீரர்கள் இணைந்து முன்னாள் வீரர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான அறக்கட்டளை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்தனர். இதன் மூலம் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நிதி உதவிகளையும் அன்றைய தினம் வழங்கிவைத்தனர். அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இலங்கையை உலக அளவில் பிரகாசிக்க வைத்தது. அந்த அணி வீரர்கள் அனைவரும் இணைந்து 3.6 மில்லியன் ரூபா நிதியுடன் புதிய அறக்கட்டளை ஒன்றை நேற்றுமுன்தினம் அங்குரார்ப்பணம் செய்…
-
- 0 replies
- 422 views
-
-
தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்! சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும். பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கி…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன் 2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும…
-
- 0 replies
- 888 views
-
-
கெயில் உலக சாதனை கரிபீயன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்காத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற கடைசி 90 போட்டிகளில் கெயில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்கவில்லை. மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தான் அணி யின் வீரர் மாலிக் (89தடவை) இங்கிலாந்தின் ஸ்ரீவன் (82தடவை) டோனி(80தடவை) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/08/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
-
- 0 replies
- 501 views
-
-
'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ் லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார். பிறகு கொஞ்சம் நகைச…
-
- 0 replies
- 763 views
-
-
மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி! எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி …
-
- 0 replies
- 881 views
-
-
மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…
-
- 0 replies
- 606 views
-
-
வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய தோனியிடம் பரிந்துரை! இந்திய அணிக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மானை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய அந்த அணியின் கேப்டன் மோர்டசா, தோனியிடம் பரிந்துரை செய்துள்ளார். மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இரு போட்டியிலும், மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, முஸ்தாபீசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியின்போது தோனி ரன் எடுக்க சென்ற போது, பிட்சின்…
-
- 0 replies
- 300 views
-
-
1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது. * இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - வில்ஸ் உலகக் கிணண்ம் ( Wills world cup) * 26 மைதானங்களில் மொத்தமாக 37 போட்டிகளில் * 12 அணிகள் கலந்துகொண்டன (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து, சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரகம்,…
-
- 0 replies
- 1.1k views
-
-
33 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஒரு ஓவர் வீசி திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்! இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் உள்ள கார்டீப் நகரில் நடைபெற்றது. இந்த ஒரே ஒரு போட்டிக்கான டி20 ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளர் கேமரான் பாயிஸ் இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் இருந்து கார்டீப் நகருக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்து கேமரான் பாயிஸ் போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றிருக்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான அணியிலும் கேமரான் பாயிஸ் இடம் பெறவில்லை.எனவே இந்த டி 20 போட்டி முடிந்தவுடன் அவர் உடனடியாக தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். …
-
- 0 replies
- 977 views
-