விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 284 views
-
-
அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…
-
- 0 replies
- 284 views
-
-
ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கோ சிக்சருக்கோ விரட்ட விரும்பினேன்: பிரெண்டன் மெக்கல்லம் உலகசாதனை அதிரடி சதம். பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி. விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார். ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது. “சாதனை பற்றி …
-
- 0 replies
- 284 views
-
-
ஐஸ் ஹொக்கியில் கலக்கிய புட்டின் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐஸ் ஹொக்கியில் தனது திறமைகளை வெளிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மைதானமொன்றில் இடம்பெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றிலேயே, அவர் இவ்வாறு சிறப்பான திறமையை வெளிக்காட்டினார். அதிகாரிகள், வணிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளடங்கிய அணியை வழிநடத்திய புட்டின், தொழில்முறையல்லாத வீரர்கள் அடங்கிய அணிக்கெதிராக இப்போட்டியில் விளையாடியிருந்தார். இப்போட்டியில், புட்டினின் அணி, 9-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. சிவப்பு நிற ஜேர்சியை அணிந்திருந்த புட்டின், கோல் பெறுவதற்கான இரண்டு உதவிகளை வழங்கியிருந்தார். அவரது ஜேர்சியின் பின்புறத்த…
-
- 0 replies
- 284 views
-
-
அப்ரிடியை மிரட்டினாரா தாவூத் இப்ராஹிம் சம்பந்திக்காக தலையிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடியை தாவூத் இப்ராஹிம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கடந்த உலகக் கிண்ணத்துடன் முழுக்கு போட்ட அப்ரிடி, இ–20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்தார் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை அணியின் முன்னாள் வீரர் களுவிதாரண, இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் மற்றும் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவர் சஹ…
-
- 0 replies
- 284 views
-
-
சிகிச்சையின் பின்னர் 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் ஓடிய போல்ட் செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார். தொடை தசையில் ஏற்பட்ட உபாதைக்கு ஜேர்மனியில் சிகிச்சை பெற்ற பின்னர் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றார். இவ் வருடம் அவர் பதிவு செய்த அதி சிறந்த நேரப் பெறுதி இதுவாகும். ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற கேமன் அழைப்பு மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 29 வயதான போல்ட் 10.05 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்…
-
- 0 replies
- 284 views
-
-
பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார். லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடி…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்கையில் சர்வதேச அணிகளுக்கிடையிலான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்குபற்ற வேண்டும் என்றும் ஏற்பாட்டுக்குழு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்வதேச தரத்திற்கு அமைய நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத் துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டீ – கப் சைக்கிள் சவாரியில் 100 பேர் பங்கு…
-
- 0 replies
- 283 views
-
-
200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…
-
- 0 replies
- 283 views
-
-
சயீத் அஜ்மல் ‘அவுட்’ கராச்சி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 17ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஜூன் 25–29), பல்லேகெலே (ஜூலை 3–7) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பவுலிங் சர்ச்சை தொடர்பாக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர், வங்கதேசத்துக்கு எதிரான பய…
-
- 0 replies
- 283 views
-
-
வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பயிற்சியாளர் பதவியைத் துறந்தேன்: ஜாவேத் மியாண்டட் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜாவேத் மியாண்டட். | கோப்புப் படம். 1999-ம் ஆண்டு தான் பயிற்சியாளர் பொறுப்பை உதறியதற்குக் காரணம் சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டு வேண்டுமென்றே சரியாக ஆடாததே என்று ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார். "நான் இது பற்றி அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கலீத் மெஹ்மூதிடம் தெரிவித்தேன், உடனே நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்து விடும் என்றேன். பயிற்சியாளராகத் தொடர எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை, இதனால் பதவியை உதறினேன். 1999-ம் ஆண்டில் சூதாட்ட அச்சு…
-
- 0 replies
- 283 views
-
-
பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…
-
- 0 replies
- 283 views
-
-
கோலி 105 இன்னிங்ஸ்களில் 5,000 டெஸ்ட் ரன்கள்: இன்னமும் சுனில் கவாஸ்கர்தான் முதலிடம் விராட் கோலி. - படம். | சந்தீப் சக்சேனா. இந்திய கேப்டன் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டில் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். விராட் கோலி இதனை 105 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார், இதன் மூலம் விரைவில் 5,000 ரன்கள் எடுத்த 4-வது வீரரானார் விராட் கோலி. அதே போல் 3 வடிவங்களிலும் 16,000 ரன்களைக் கடந்தார் விராட் கோலி. சுரங்க லக்மல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்த மைல்கல்லை எட்டினார் கோலி. அதே போல் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 11-வது இந்திய வீரரும் ஆனார். …
-
- 1 reply
- 283 views
-
-
மும்முனை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள்; ஒரு நாள் கிரிக்கெட் குழாமில் நரேன், பொலார்ட் 2016-05-20 11:42:47 அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் சுனில் நரேனும் கீரொன் பொலார்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேனும் சகலதுறை வீரர் கீரொன் பொலார்டும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. நடைபெறப்போகும் மும்முனைத் தொடருக்கான முதல் நான்கு போட்டிக…
-
- 0 replies
- 283 views
-
-
ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் நட்சத்திர வீராங்கனை..! ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் மகளிர் டென்னிஸ் போட்டி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் உலக அளவில் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள நோவக் ஜோகோவிக் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஜோகோவிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை இதுவரை அவர் தெரிவிக்கவே இல்லை. அடுத்த மாதம…
-
- 0 replies
- 283 views
-
-
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்... இந்த யுகத்தின் சிறந்த வீரர் யார்? சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, மார்க் வாக், கேரி கேர்ஸ்டன், சயீத் அன்வர் என்று முன்பு பரபரத்துக்கிடந்த கிரிக்கெட் உலகம் இன்று விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என செம ஹைப்பர் ரேஸில் சீறிக்கொண்டிருக்கிறது. முன்னவர்கள் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டுகளில் மட்டுமே விளையாட இளையவர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் அதிரவைக்கிறார்கள். இந்திய ரசிகர்கள் விராட் கோலிதான் இந்த மில்லினியத்தின் சிறந்த வீரர் என்றால், ஆஸ்திரேலியர்கள் ஸ்டீவ் ஸ்மித்துடன் வந்து நிற்கிறார்கள். கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளர்களான இங்க…
-
- 0 replies
- 283 views
-
-
2012ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம் 2012ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் …
-
- 0 replies
- 283 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்! இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவ…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கை வந்தது மேற்கிந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் மேற்கிந்திய அணி மோதவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (படம்:ஏ.எவ்.பி) - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12437#sthash.CeKM5ZhZ.dpuf
-
- 1 reply
- 282 views
-
-
சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…
-
- 0 replies
- 282 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் …
-
- 0 replies
- 282 views
-
-
Published By: VISHNU 06 JUN, 2023 | 03:15 PM (நெவில் அன்தனி) லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடந்து முடிந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புகழ்பெற்ற சகலதுறை ஆட்டக்காரராக இருந்தும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்ற போதிலும், துடுப்பாட்டம், பந்துவீச்சில் ஈடுபடாமலும் விக்கெட் காப்பாளராக செயற்படாமலும் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த முதலாவத…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்த…
-
- 0 replies
- 282 views
-
-
பந்த், கோலி முயற்சி வீண் - தென்னாப்பிரிக்காவிடம் தொடரை பறிகொடுத்தது இந்தியா 14 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின. தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் …
-
- 1 reply
- 282 views
- 1 follower
-