விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங…
-
- 0 replies
- 517 views
-
-
பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்தவர் வக்கார் யூனிஸ்: அப்துல் ரசாக் கடும் சாடல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். | படம்: ஏ.எஃப்.பி. அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். வக்கார் யூனிஸ் பிற வீரர்கள், நிர்வாகிகளைக் குறைகூறுவதை விடுத்து தன் பக்கம் உள்ள கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். “இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, நானே பார்த்திருக்கிறேன், மூத்த வீரர்களுக்கு வக்கார் மதிப்பளிக்க மாட்டார், வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த மாட்டார். அவர்கள் சிறப்பாக ஆட அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங…
-
- 0 replies
- 296 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன கூட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பை நீடித்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவிருந்த 'Tour de France' சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் திங்களன்று பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளானது 2020 ஜூலை மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என்று அறிவித்தார். குறித்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது ஜூன் 27 ஆரம்பமாகி ஜூலை 19 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது. டூர் டி பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் வருடாந்திர ஆண்களின் பல நிலை சைக்கிள் பந்தயமாகும். தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ஒரு பிரெஞ்சு சைக்கிள் பந்தயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் சுமார…
-
- 0 replies
- 441 views
-
-
பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு பிஸ்மாஹ் மாறூவ், சானா மிர் தலைவிகளாக நியமனம் மகளிருக்கான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக் கெட் போட்டிகளுக்கான அணித் தலைமை களைப் பிரித்து வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பாகிஸ்தான் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவியாக தொடர்ந்தும் சானா மிர் செயற்படவுள்ளார். மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மிர்ருக்குப் பதிலாக புதிய அணித் தலைவியாக பிஸ்மாஹ் மாறூவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இவ் வருடம் நடைபெற்ற மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் நிறைவில் இருபது 2…
-
- 0 replies
- 405 views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு மத்தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வரும் நிலையில் பாகிஸ்தானும் மேற்கிந்தியத் தீவுகளும் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட கொள்கை அளவில் இணங்கியுள்ளன. நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை இளஞ்சிவப்பு பந்தைக் கொண்டு நடத்த இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த யோசனைக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…
-
- 0 replies
- 356 views
-
-
நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். கங்குலி தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் அணி என்றால் அதில் வீரர்கள்தான் முக்கியம் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி நேர்காணலின் போது இல்லை, இதனையடுத்து ரவி சாஸ்திரி கடும் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அனில் கும்ப்ளே கூறியதாவது: ரவி சாஸ்திரியை முதலில் அழைத்து தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். அவர் இந்திய அணியுடன் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஆகவே நான் அல்…
-
- 0 replies
- 352 views
-
-
உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன் - பி.வி.சிந்து உறுதி ஐதராபாத்: சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண…
-
- 0 replies
- 525 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்! இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன. நியூசிலாந்து தொடர் இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்…
-
- 0 replies
- 456 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மல்யுத்தப் போட்டி கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு நடத்தும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுக்கான மல்யுத்தப் போட்டியில் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. மல்யுத்தப் போட்டிகள் டொரிங்டன் உள்ளக அரங்கில் கடந்த 2, 3, 4 ஆம் திகதி களில் நடைபெற்றன. இறுதிப் போட்டி களில் நேற்றைய தினம் நடைபெற்றன. மல்யுத்தப் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ். ரூபிகரனுக்கு தங்கப் பதக்கமும் என். பிரகாஷ…
-
- 0 replies
- 428 views
-
-
சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன் மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார், பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார். பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19…
-
- 0 replies
- 290 views
-
-
அன்று அழுதனர்... இன்று சிரிக்கின்றனர்... அர்ஜென்டினாவை இப்படித்தான் வென்றது பிரேசில்! கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால்பந்துக்கு அர்ஜென்டினா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதும் சுவாரஸ்யம். பக்கத்து பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மாரடோனா காலத்தில் இருந்தே. 2014 ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை ஃபைனலில், அர்ஜென்டினா - ஜெர்மனி மோதின. அர்ஜென்டினாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜெர்மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசிகர்கள். அப்படி இருக்க பிரேசில் - அர்ஜென்டினா மோதுகிறது, அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும்போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்? எப்போது பிரேசில் - அர…
-
- 0 replies
- 497 views
-
-
இந்திய மகளிர் அணியுடனான இருபது20 தொடரில் மேற்கிந்திய மகளிர் அணி வெற்றி 2016-11-21 11:28:56 இந்திய மகளிர் அணியுடனான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய மகளிர் அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரில் நேற்று இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. அதையடுத்து மேற்கிந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டது. அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹெய்லி மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும் அணித்…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கையில் ஐ.சி.சி சம்பியன் கிண்ணம் : ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி . சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் 8 நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ கிண்ணம் எடுத்துச்செல்லப்படுகின்றது. அந்தவகையில் நேற்று உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சம்பியன் கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் …
-
- 0 replies
- 259 views
-
-
நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை நெய்மர் பி.எஸ்.ஜி. அணியில் இணைவார் என்று முன்னாள் பார்சிலோனா வீரரும், தற்போதைய பிஎஸ்ஜி வீரரும் ஆன டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர். இவர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. பார்சிலோனா அணி தற்போது ப்ரீசீசனில் விளையாடுவதற்காக சீனா சென்றுள்ளது. பார்சிலோனா அணியுடன் நெய்மர் செல்லவில்லை. இது பிஎஸ்ஜி அணியில் இணைவார் என்ற செய்திக்…
-
- 0 replies
- 559 views
-
-
கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்! தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்…
-
- 0 replies
- 327 views
-
-
ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி Image courtesy - Kholi's twitter உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்…
-
- 0 replies
- 460 views
-
-
பிரமோதய விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அணி வீரர்கள் கடிதம் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர். இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார். போட்டிக்கு முன்ன…
-
- 0 replies
- 307 views
-
-
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்! 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. மேலும், இந்தப் போட்டிகள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது. இத்தகுதிகாண் போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நேரடியாகத் தகுதிபெற்றதால், அதற்கு அடுத்தபடியாக இருந்த ஸிம்பாப்வேயில் தகுதிகாண் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மைதானங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச கிரிக்க…
-
- 0 replies
- 348 views
-
-
இன்று பும்ரா தலைமையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்! மின்னம்பலம்2022-07-01 கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1 - இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போ…
-
- 0 replies
- 390 views
-
-
கால்பந்து உலகக்கோப்பை: இந்தியாவுக்கான 'மெஸ்ஸி' எப்போது கிடைப்பார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 7.6 பில்லியன் - இது உலகின் தோராயமான மக்கள் தொகை. 736 - இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை. 0 - இதுநடப்பு உலகக்கோப்பையில் இடம்பெற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீண்டகாலமாக உலகக்க…
-
- 0 replies
- 539 views
-
-
கீழே விழுந்த ஒரு மனிதனை எட்டி உதைத்துக் கொண்டேயிருப்பது நியாயமா?: டேரன் சமி விளாசல் கோப்புப் படம். | பிடிஐ கீழே விழுந்த மனிதனை எட்டி உதைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல, எனவே ஊடகங்களே தயவு செய்து வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று டேரன் சமி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோர் நியூலேண்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி சின்னாப்பின்னமானதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் இவர்களை விட்டுவைக்காமல், சற்றும் இடைவிடாது இவர்களைத் தாக்கி எழுதி வந்தன. ஊடகங்களின் நெருக்கடி ரசிகர்களிடையே ஒரு கருத்தொருமித்தலை உருவாக்க வார்னர், ஸ்மித்…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் - 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்த…
-
- 0 replies
- 445 views
-
-
விறுவிறுப்பான போட்டியில் ஆஸி. திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் திரில் வெற்றியீட்டியுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7.00 மணியளவில் விசாகப்பட்டனத்தில் ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, இந்தியா முதலாவதாக ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 127 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆவுஸ்த…
-
- 0 replies
- 446 views
-
-
சுதந்திர தினத்தன்று கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் குழந்தைகளுக்கான கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ நகரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியுடன் இதற்காக தோனியின் ஆர்கா அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கிரிக்கெட் அகாடமி, வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் செயல்படவுள்ள இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த அகாடமி, கேப்டன் தோனியின் முழு கண்காணிப்பில் இயங்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளி…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் திங்கட்கிழமை(07) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்காகவே ஜெரோம் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/153612/இலங-க-அண-க-க-இட-க-க-ல-பய-ற-ற-வ-ப-ப-ளர-ந-யமனம-#sthash.eONVxbBP.dpuf
-
- 0 replies
- 246 views
-