விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
மூத்த இந்திய வீரர்கள் 'மாபியா கும்பல்' - பயிற்சியாளர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என பயிற்சியாளர் சேப்பல் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறிவிட்ட நிலையில் அணியின் மோசமான தோல்வி குறித்து வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 6ம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம் புதுடில்லி: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்: * பீல்டிங் கட்டுப்பாடு கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் கட்டுப்பாடு வந்தது. 3 ஆக இருந்த ‘பவர் பிளே’, 2 ஆக மாற்றப்பட்டது. இதில், முதல் 10 ஓவர்களில் 2 பேர், ‘பேட்டிங் பவர் பிளேயில்’ (40 ஓவருக்குள்…
-
- 0 replies
- 453 views
-
-
திஸரவின் அதிரடிப் போராட்டம் வீணானது ; இங்கிலாந்து 30 ஓட்டத்தால் வெற்றி இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட இருபதுக்கு 20 தொடரினை இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தி வெற்றி கொண்டு, கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்து அணியை பணித்தது. அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கிலாந்து அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கள…
-
- 0 replies
- 323 views
-
-
தோனி முறியடித்த கபில் சாதனை: எண்கள் கூறும் சிறப்புகள் ஹாமில்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா 10 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதுமட்டுமின்றி உலகக் கோப்பை யில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா இதுபோன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கங்குலி தலைமையிலான அணி 2003 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமை இன்றளவும் ஆஸ்திரேலியா வசமேயுள்ளது. அந்த அணி…
-
- 0 replies
- 497 views
-
-
தங்கள் அணிப் பயிற்சியாளர்களை இந்திய -பாகிஸ்தான் வீரர்கள் மதிப்பதில்லையென்று தென்னாபிரிக்க முன்னாள் வீரர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். அலன் டொனால்ட் தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சப்பலுக்கும் வீரர்களுக்கும் இடையே பல விடயங்களில் சுமுகநிலை இருந்தது. சில விடயங்களில் பிரிவு ஏற்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்க வேண்டும். இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கருத்தை மதிப்பதில்லை. இதனாலேயே சப்பல் விலகினார். மூத்த வீரர்கள் ப…
-
- 0 replies
- 837 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சி.எஸ்.கே.வின் பெரிய 'தல' சென்னை: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தமிழக மக்களுக்கு ட்விட்டர் மூலம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 8வது சீசன் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை அணி வென்றது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி பெற்றுள்ளதால் அணி வீரர்கள் மட்டும் அல்ல பயிற்சிய…
-
- 0 replies
- 536 views
-
-
வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …
-
- 0 replies
- 271 views
-
-
விளையாட்டுச் செய்தித் துளிகள் - 02/08/2015 # நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. # 700 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் 28-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 40 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. # வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து ச…
-
- 0 replies
- 950 views
-
-
'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்! டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் எப்படி விளையாடுவது என தயாராகி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலிய அணி ஒரு படி மேலே சென்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிப்பார். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஸ்ரீதரனிடம் பேசினேன்... ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர் பதவி எப்படி கிடைத்தது? …
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் தங்கராஜாவுக்கு முதலாவது சம்பியன் பட்டம் (நெவில் அன்தனி) றோயல் கலம்போ கோல்வ் கழகத்தினால் நடத்தப்பட்ட பெலிஸ் இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் நடராஜா தங்கராஜா மூன்று நகர்வுகள் வித்தியாசத்தில் சம்பியனானார். 43 கோல்வ் வீரர்கள் பங்குபற்றிய இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகள் கடந்த வாரம் றோயல் கோல்வ் கழக புல் தரையில் நடைபெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் முதல் இரண்டு தினங்களும் குறைந்த நகர்வுகளுடன் தங்கராஜா முன்னிலையில் இருந்தார். ஆனால், மூன்றாம் நாளன்று 2015 சம்பியன் கந்தசாமி பிரபாகரன் முன்னிலை அடை…
-
- 0 replies
- 655 views
-
-
’’சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஒய்வு தோல்விக்கு காரணம் அல்ல’’ டில்ஷான் March 11, 2016 சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது. அனுபவ வீரர்களான சனத்…
-
- 0 replies
- 379 views
-
-
கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது! இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/
-
- 0 replies
- 539 views
-
-
நியூஸிலாந்து - மும்பை மோதும் 3 நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் நியூஸிலாந்து மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஆர்.வி.மூர்த்தி நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மை…
-
- 0 replies
- 372 views
-
-
பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோப்புப்படம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார். இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது. கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தர…
-
- 0 replies
- 378 views
-
-
பொழுதுபோக்கு பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த…
-
- 0 replies
- 317 views
-
-
வாரம் 96 லட்சம் - மைக்கேல் ஷூமேக்கர் மெடிக்கல் பில் இதுவரை ரூ.116 கோடி! ‘ஒரு தலைவலி, காய்ச்சல் என்றாலே 500 ரூவா காலியாகிடுதுப்பா” - இப்படிப் புலம்பாதவர்களே இருக்க முடியாது. மருத்துவச் செலவுகள் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மெடிக்கல் பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவாக இதுவரை ரூ. 116 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொ…
-
- 0 replies
- 413 views
-
-
Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்கும் இலங்கை Merissa Aguilleira's late cameo gave West Indies a late lift, West Indies v Sri Lanka, Women's World Cup, July 9, 2017 ©Getty Images இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியொன்றில், இலங்கை மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வீழ்த்தி இத்தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெர்பி நகர கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸ்டெபானி டெ…
-
- 0 replies
- 325 views
-
-
ஐசிசி மகளிர் உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா 27 மார்ச் 2022, 03:22 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் இறுதிக்கட்ட பேட்டிங்கின்போது, 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க, ஓவரின் ஒவ்வொரு பந்…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
ஸ்வீடனிடம் தோல்வி எதிரொலி: உலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி இத்தாலியை வீழ்த்திய ஸ்வீடன் அணி கொண்டாடும் காட்சி. - படம். | கெட்டி இமேஜஸ். உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை. இதனையடுத்து சான்சிரோவில் அடு…
-
- 0 replies
- 316 views
-
-
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் மெஸ்சி கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காகத்தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட…
-
- 0 replies
- 306 views
-
-
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது. …
-
- 0 replies
- 485 views
-
-
ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…
-
- 0 replies
- 437 views
-
-
கிரிக்கெட்...கால்பந்து...ஹாக்கி! * ‘சகலகலா’ தோனி சாகசம் அக்டோபர் 25, 2014. ராஞ்சி: கிரிக்கெட்டில் சிகரங்களை தொட்ட தோனி, ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார். தற்போது ஹாக்கி அணியை வாங்கி தனது எல்லையில்லா விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர்களில் கோப்பை வென்றார். பைக் பிரியர்: கிரிக்கெட் போட்டி தவிர, பைக்குகள் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். 2013ல் ‘மகி ரேசிங் டீமை’ நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து வாங்கினார். ‘சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப்’ பந்தயங்களில் இந்த அணி …
-
- 0 replies
- 572 views
-
-
எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-