விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
நான்காவது நாளாகிய இன்று ஆட்டத்தை தொடர்ந்த சேவாக் 319 ஓட்டங்களில் அவுட்டாகினார். ஆதைத்தொடர்ந்து வந்த சச்சின் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்பாதைய நிலவரம் இந்தியா 114 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 483 ஓட்டங்களை பெற்றுள்ளது. தற்போது டிராவிட் 72 ஓட்டங்களுடனும் கங்குலி 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்
-
- 8 replies
- 2.1k views
-
-
நியூஸிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பெயர் : ஸ்காட் ஃப்னார்ட் ஸ்டைரிஸ் பிறந்த தேதி : 1975 ஜூலை 10 பிறந்த இடம் : பிரிஸ்பேன், குயின்ஸ்லாண்ட், ஆஸ்ட்ரேலியா. வயது : 32 வலது கை ஆட்டக்காரர் வலது கை மிதமான பந்து வீச்சாளர் விளையாடிய முக்கிய அணிகள் : நியூஸிலாந்து, ஆக்லேண்ட், டர்கம், மிட்டல்க்ஸ், நார்தன் டிஸ்டிக். பேட்டிங் டெஸ்ட் போட்டி அறிமுகம் : 2002 ஜூன் 28 - மேற்கிந்தி தீவுகள், சென்ட் ஜார்ஜர்ஸ் போட்டி : 29 இன்னிங்ஸ் : 48 ரன் : 1,586 சதம் : 5 அரை சதம் : 6 அதிக எண்ணிக்கை : 170 சராசரி : 36.04 ஒரு நாள் போட்டி அறிமுகம்…
-
- 0 replies
- 900 views
-
-
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தென்னாபிக்க இந்திய அணிகள் டெஸ்ட் போட்டியில் முன்றாம் நாளான இன்று சேவாக் 300 ஓட்டங்களை கடந்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 540 ஓட்டங்களை பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் சளைக்காமல் ஆடித்தாட ஆரம்பித்து 102 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 455 ஓட்டங்களை தற்சமயம் பெற்றுள்ளது. சேவாக் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்.
-
- 3 replies
- 1.4k views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டும் சென்னை மைதானமும் [27 - March - 2008] டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சென்னைக்கு தனி இடமுண்டு. இந்திய அணி டெஸ்டில் அறிமுகமாகி முதல் வெற்றிக்காக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் தான் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் கப்டன் கவாஸ்கர் தனது 30 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தது இங்கு தான். 1986 ஆம் ஆண்டு இந்திய அவுஸ்திரேலிய அணிகளிடையே நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்தது. 348 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய இந்தியா 347 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி `ரை' ஆனது. டெஸ்ட…
-
- 0 replies
- 918 views
-
-
அமெரிக்காவின் அடிமை வாணிகத்தை தடை செய்த மாபெரும் தலைவர் யார்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். சார், அடிமை வாணிகம்னா என்ன சார்? என்று கேட்டான். உட்காரு, அதாவது மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக சந்தையில் நிறுத்தி அவர்களை காய்கறிகளைப் போல ஆடுமாடுகளைப் போல விலைக்கு விற்பார்கள். காசு வைத்திருப்போர் ஏலத்தில் இவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கிய மனிதர்கள் எஜமானர்கள் என்றும், வாங்கப்பட்ட மனிதர்கள் அடிமைகள் என்றும் அழைக்கப்பட்டனர். இப்படி விற்கப்படும் மனிதர்களில் நல்ல திடகாத்திரமும் நன்கு உழைக்கும் திறனும் பெற்ற அடிமைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படி வளர்க்கப்பட்ட அடிமைகள் தங்கள் ஆயுள் முடியும் வரைக்கும் எஜமானனுக்கு உழைக்க வேண்டும். அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் தென்ஆபிரிக்காவின் பவுச்சர் கூறுகிறார் [26 - March - 2008] வார்த்தைப் போருக்கும் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவோம். ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் என தென் ஆபிரிக்க விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்குகிறது. முன்னதாக நடந்த அவுஸ்திரேலிய தொடரில் வீரர்களிடையே நடந்த வார்த்தை போர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது போன்ற வார்த்தைப் போர் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கப்டனின் பொறுப்பென அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் சமீபத்தில் ஐ.சி.சி. கடிதம் அனுப்பியது. இதனால் தென்ஆபிரிக்க…
-
- 0 replies
- 825 views
-
-
மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம் இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி,…
-
- 0 replies
- 1k views
-
-
அவுசுத்திரெலியாத் தொடரில் இந்தியா வென்றதினால் கொல்லப்பட்ட ஆடு. அவுசுத்திரெலியாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா அணி 2 -0 அடிப்படையில் அவுசுத்திரெலியா அணியைத் தோற்கடித்தது. இதனால் இந்தியா அணித்தலைவர் டொனி, ஆடு ஒன்றினை கடவுளுக்கு நேர்த்திக்காக பலி கொடுத்தார். தொடர்புடைய செய்தி http://www.dnaindia.com/report.asp?newsid=1155885
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிர் அமைப்பில் கபில்தேவ், சந்தீப் பட்டேல் இருப்பதால் பெரும் குழப்பத்தில் உலகக் கிண்ண வெள்ளி விழா! [20 - March - 2008] இந்திய முன்னாள் அணி உலகக் கிண்ண வெள்ளி விழாவை கொண்டாடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.கபில்தேவ், சந்தீப் பட்டேல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் எதிர் அமைப்பான ஐ.சி.எல். பக்கம் உள்ளனர். இதையடுத்து இவர்களை கௌரவிப்பதா.... வேண்டாமா என்ற குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் உள்ளது. 1983 இல் இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டி நடந்தது. இதில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. `கபில் டெவில்ஸ்' என வர்ணிக்கப்படும் அளவுக்கு எதிரணிகளை போட்டுத் தாக்கியது. உதாரணமாக லீக் சுற்றில் சிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் நியூஸிலாந்து [17 - March - 2008] இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே வெலிங்டனில் நடைபெறும் 2 ஆவது டெஸ்டில், நியூஸிலாந்து அணி தோல்வியுறும் நிலையிலுள்ளது. நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 342, நியூஸிலாந்து 198 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐசிசி தரவரிசை: ஸ்மித் முதலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை முந்தி, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, 792 புள்ளிகளைப் பெற்று ஸ்மித் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 777 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (770) 3வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனி (728) 10வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி 790 புள…
-
- 0 replies
- 999 views
-
-
கிரிக்கெட் துளிகள் [15 - March - 2008] * தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சகீர்கான் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கணுக்கால் காயத்தால் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சகீர்கான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், முழுமையாக குணமடையவில்லை. `சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் இன்னும் தயாராகவில்லை' என்று சகீர்கான் கூறியிருக்கிறார். * பாதுகாப்பு காரணமாக இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை அவுஸ்திரேலியா தள்ளி வைத்துவிட்டது. இந்தத் தொடர் நடந்திருந்தால் அவுஸ்திரேலிய வீரர்கள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கும் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போயிருக்கும். ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அணிக்கு இனித்தான் உண்மையான சவால் காத்திருக்கிறதென்கிறார் லாரா [14 - March - 2008] அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணிக்கு உண்மையான சவால் இனித்தான் தொடங்குகிறது என்று லாரா கூறியுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் பிரைன் லாரா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது; இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்குத் தனித்தனியாக புதிய கப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்திய அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், தோல்வி கண்ட அவுஸ்திரேலியா வலுவான அணியாக வீறு கொண்டு எழுந்து இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும். எனவே, இந்தியாவுக்கு …
-
- 0 replies
- 805 views
-
-
`ஒரேயொரு தொடரில் வெற்றிபெற்றதை வைத்து இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகரெனக் கூறமுடியாது' [12 - March - 2008] ஒரேயொரு தொடரில் வெற்றி பெற்றதை வைத்து உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு நிகரான அணியென இந்தியாவை சொல்ல முடியாதென்று முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்னன் கூறியுள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கனன், அவுஸ்திரேலிய அணிக்கு நிகராக இந்தியாவை கூற முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
-
- 7 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியா இந்தியா மோதும் 2வது இறுதியாட்டத்தில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் கூடுதலாக 91 ஓட்ங்களை பெற்றுள்ளார்.இவர் இத்தடன் 17வது தடவையாக 90 ஓட்டங்களில் அவுட்டாகியுள்ளார். 259 என்று வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா இன்னும் சில நிமடங்களில் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் இந்தியா வென்றால் இந்தியா கோப்பையை கைப்பற்றும். அவுஸ்திரேலியா வாழ்வா சாவா என முழு மூச்சுடன் இதை வெல்ல முயலும் அவுஸ்திரேலியா வென்றால் இன்னுமொரு போட்டி இடம் பெறும்.
-
- 9 replies
- 2.2k views
-
-
இந்திய வெற்றி! இளமையின் வெற்றி! புதன், 5 மார்ச் 2008( 12:36 IST ) பல்வேறு கீழ்த்தரமான சர்ச்சைகள் உருவான, இந்திய -ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர்களுக்கு பெரும் தலைவலிகளை கொடுத்த, ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் பல்வேறு கசப்பான அனுபவங்களுக்கிடையே, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவிற்கு வெற்றி என்ற இனிப்பான தருணத்துடன் நேற்று நிறைவடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாகவே ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ஒவ்வொரு அணியும் ஒரு தயக்கத்துடனும், அந்த அணிக்கு நாம் இணையில்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடனும்தான் ஆடித் தோற்றுள்ளன. இதற்கு இந்திய அணியும் விதி விலக்காக இருந்ததில்லை. ஆனால் இருபதிற்கு 20 போட்டித் தொடரில் இருந்தே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களிடம் இந்த மனப்பான்மை…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஹாக்கி: ஒலிம்பிக் கனவு தகர்ந்தது Monday, 10 March, 2008 09:59 AM . சான்டியாகோ, மார்ச். 10: சான்டியாகோவில் நடை பெற்ற உலக ஹாக்கி தகுதி சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. . இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியின் கனவு தகர்ந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 1928 ஆம் ஆண்டு முதல் ஹாக்கியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்க பதக்கம் வென்று உலகின் வலுவான ஹாக்கி அணியாக முன்னிலை பெற்று விளங்கி வந்துள்ளது. இந்தநிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி…
-
- 0 replies
- 922 views
-
-
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம் [08 - March - 2008] மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டனாக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிறிஸ்கெயில் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணியின் தொடக்க வீரராக உள்ள கிறிஸ்கெய்ல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த ஒரே வீரர் என்று பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நியமனத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அனுமதியளித்துள்ளது. 70 டெஸ்ட் போட்டிகள் (4658 ஓட்டங்கள்), 50 விக்கெட்டுகள், 176 ஒரு நாள் போட்டிகள் (6244 ஓட்டங்கள்), 142 விக்கெட்டுகள் வீழ்த்தியதென சகலதுறை வீரராக இருந்துவருகிறார் கெய்ல…
-
- 0 replies
- 908 views
-
-
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி [03 - March - 2008] அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. 240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து முதல் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றது. மூன்று இறுதியாட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க…
-
- 0 replies
- 875 views
-
-
இந்தியா வெற்றி பெற 240 ரன் இலக்கு . Sunday, 02 March, 2008 10:47 AM . சிட்னி, மார்ச்.2: சிட்னியில் நடைபெறும் முத்தரப்பு போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. . ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. 3 ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் முதல் ஆட்டம் இன்று சிட்னியில் நடைபெறுகிறது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தொடங்கியது. அந்த அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. துவக்க வீரர் கில்கிறிஸ்ட் 7 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கேப்டன் ரிக்கி …
-
- 0 replies
- 826 views
-
-
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை [01 - March - 2008] இந்தாண்டு பிரேஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்வேன் என `நம்பர் 1` வீரரான சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் டெனிஸ் உலகின் `நம்பர்-1' வீரராக திகழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்று சாதித்த போதிலும் பிரெஞ் ஓப்பனை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார். இம்முறையும் பிரெஞ் ஒப்பன் தொடரில் நடாலிடம் பெடரர் தாக்குப்பிடிக்க இயலாது என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக பெடரர் அளித்த பேட்ட…
-
- 0 replies
- 760 views
-
-
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை [01 - March - 2008] அவுஸ்திரேலிய தொடரில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கப்டன் தோனி மற்றும் கில்கிறிஸ்ரின் `கிளவுஸ்' தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. முக்கோணத் தொடரின் 10 ஆவது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக `டைவ்' அடித்து `கட்ச்' பிடித்தார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, தோனியின் `கிளவுஸ்' பெரிதாக உள்ளதாக புகார் கூறினார். பொதுவாக விக்கெட் கீப்பரின் `கிளவுஸில்' கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் `கிளவுஸில்' இடைவெளி இல்லாமல…
-
- 0 replies
- 882 views
-
-
சிட்டகாங் டெஸ்ட்: ஸ்மித் இரட்டை சதம் சிட்டகாங் நகரில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில், தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 405 ரன் குவித்துள்ளது. கிரேம் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித், நீல் மெக்கன்ஸி களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் சிறப்பாக விளையாடியதால், பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 127 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ம…
-
- 0 replies
- 949 views
-
-
ஹர்பஜனை குறிவைத்து மீண்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் தாக்குதல் [28 - February - 2008] இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை குறி வைத்து அவுஸ்திரேலியர்கள் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடையே களத்தில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் சைமண்ட்ஸை திட்டியதாக கூறப்பட்ட புகார் பெரும் விஸ்வரூபம் எடுத்து அடங்கியது. அதன் பின் ஐ.சி.சி.தலையீட்டின் பேரில் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் 9 போட்டிகளும் அமைதியாக நடந்து முடிந்தன. ஆனால், சிட்னியில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையே நடந்த 10 ஆவது போட்டியின் போது மீண்டும் புகைச்சல் கிளம்பியது. இஷாந்த் ஷர்மா பந்து …
-
- 1 reply
- 1k views
-
-
தண்டனையிலிருந்து தப்பினார் ஹைடன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் [29 - February - 2008] ஹர்பஜன் சிங்கை விமர்சித்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராதம் மற்றும் தண்டனையிலிருந்து ஹைடன் தப்பிவிட்டார். இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களிடையே வாக்குவாதம் தொடர்கிறது. சிட்னி டெஸ்டின் போது அவுஸ்திரேலியாவின் சைமண்ட்சை நோக்கி ஹர்பஜன் `குரங்கு' என திட்டியதாக பிரச்சினை வெடித்தது. பின்னர் சிட்னியில் நடந்த முக்கோண ஒரு நாள் போட்டியின் போது இஷாந்த் - சைமன்ட்ஸ் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதேபோட்டியில் ஹர்பஜனைப் பார்த்து `முட்டாள் பையன்' என்று அடிக்கடி திட்டியதாக ஹைடன் மீது இந்திய அணியினர…
-
- 0 replies
- 902 views
-