விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
இந்திய அணிக்கு இனித்தான் உண்மையான சவால் காத்திருக்கிறதென்கிறார் லாரா [14 - March - 2008] அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணிக்கு உண்மையான சவால் இனித்தான் தொடங்குகிறது என்று லாரா கூறியுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் பிரைன் லாரா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது; இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்குத் தனித்தனியாக புதிய கப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்திய அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், தோல்வி கண்ட அவுஸ்திரேலியா வலுவான அணியாக வீறு கொண்டு எழுந்து இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும். எனவே, இந்தியாவுக்கு …
-
- 0 replies
- 809 views
-
-
`ஒரேயொரு தொடரில் வெற்றிபெற்றதை வைத்து இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகரெனக் கூறமுடியாது' [12 - March - 2008] ஒரேயொரு தொடரில் வெற்றி பெற்றதை வைத்து உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு நிகரான அணியென இந்தியாவை சொல்ல முடியாதென்று முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்னன் கூறியுள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கனன், அவுஸ்திரேலிய அணிக்கு நிகராக இந்தியாவை கூற முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
-
- 7 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியா இந்தியா மோதும் 2வது இறுதியாட்டத்தில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் கூடுதலாக 91 ஓட்ங்களை பெற்றுள்ளார்.இவர் இத்தடன் 17வது தடவையாக 90 ஓட்டங்களில் அவுட்டாகியுள்ளார். 259 என்று வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா இன்னும் சில நிமடங்களில் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் இந்தியா வென்றால் இந்தியா கோப்பையை கைப்பற்றும். அவுஸ்திரேலியா வாழ்வா சாவா என முழு மூச்சுடன் இதை வெல்ல முயலும் அவுஸ்திரேலியா வென்றால் இன்னுமொரு போட்டி இடம் பெறும்.
-
- 9 replies
- 2.2k views
-
-
இந்திய வெற்றி! இளமையின் வெற்றி! புதன், 5 மார்ச் 2008( 12:36 IST ) பல்வேறு கீழ்த்தரமான சர்ச்சைகள் உருவான, இந்திய -ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர்களுக்கு பெரும் தலைவலிகளை கொடுத்த, ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் பல்வேறு கசப்பான அனுபவங்களுக்கிடையே, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவிற்கு வெற்றி என்ற இனிப்பான தருணத்துடன் நேற்று நிறைவடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாகவே ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ஒவ்வொரு அணியும் ஒரு தயக்கத்துடனும், அந்த அணிக்கு நாம் இணையில்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடனும்தான் ஆடித் தோற்றுள்ளன. இதற்கு இந்திய அணியும் விதி விலக்காக இருந்ததில்லை. ஆனால் இருபதிற்கு 20 போட்டித் தொடரில் இருந்தே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களிடம் இந்த மனப்பான்மை…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஹாக்கி: ஒலிம்பிக் கனவு தகர்ந்தது Monday, 10 March, 2008 09:59 AM . சான்டியாகோ, மார்ச். 10: சான்டியாகோவில் நடை பெற்ற உலக ஹாக்கி தகுதி சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. . இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியின் கனவு தகர்ந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 1928 ஆம் ஆண்டு முதல் ஹாக்கியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்க பதக்கம் வென்று உலகின் வலுவான ஹாக்கி அணியாக முன்னிலை பெற்று விளங்கி வந்துள்ளது. இந்தநிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி…
-
- 0 replies
- 925 views
-
-
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம் [08 - March - 2008] மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டனாக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிறிஸ்கெயில் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணியின் தொடக்க வீரராக உள்ள கிறிஸ்கெய்ல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த ஒரே வீரர் என்று பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நியமனத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அனுமதியளித்துள்ளது. 70 டெஸ்ட் போட்டிகள் (4658 ஓட்டங்கள்), 50 விக்கெட்டுகள், 176 ஒரு நாள் போட்டிகள் (6244 ஓட்டங்கள்), 142 விக்கெட்டுகள் வீழ்த்தியதென சகலதுறை வீரராக இருந்துவருகிறார் கெய்ல…
-
- 0 replies
- 910 views
-
-
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி [03 - March - 2008] அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. 240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து முதல் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றது. மூன்று இறுதியாட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க…
-
- 0 replies
- 877 views
-
-
இந்தியா வெற்றி பெற 240 ரன் இலக்கு . Sunday, 02 March, 2008 10:47 AM . சிட்னி, மார்ச்.2: சிட்னியில் நடைபெறும் முத்தரப்பு போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. . ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. 3 ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் முதல் ஆட்டம் இன்று சிட்னியில் நடைபெறுகிறது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தொடங்கியது. அந்த அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. துவக்க வீரர் கில்கிறிஸ்ட் 7 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கேப்டன் ரிக்கி …
-
- 0 replies
- 830 views
-
-
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை [01 - March - 2008] இந்தாண்டு பிரேஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்வேன் என `நம்பர் 1` வீரரான சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் டெனிஸ் உலகின் `நம்பர்-1' வீரராக திகழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்று சாதித்த போதிலும் பிரெஞ் ஓப்பனை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார். இம்முறையும் பிரெஞ் ஒப்பன் தொடரில் நடாலிடம் பெடரர் தாக்குப்பிடிக்க இயலாது என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக பெடரர் அளித்த பேட்ட…
-
- 0 replies
- 763 views
-
-
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை [01 - March - 2008] அவுஸ்திரேலிய தொடரில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கப்டன் தோனி மற்றும் கில்கிறிஸ்ரின் `கிளவுஸ்' தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. முக்கோணத் தொடரின் 10 ஆவது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக `டைவ்' அடித்து `கட்ச்' பிடித்தார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, தோனியின் `கிளவுஸ்' பெரிதாக உள்ளதாக புகார் கூறினார். பொதுவாக விக்கெட் கீப்பரின் `கிளவுஸில்' கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் `கிளவுஸில்' இடைவெளி இல்லாமல…
-
- 0 replies
- 885 views
-
-
சிட்டகாங் டெஸ்ட்: ஸ்மித் இரட்டை சதம் சிட்டகாங் நகரில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில், தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 405 ரன் குவித்துள்ளது. கிரேம் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித், நீல் மெக்கன்ஸி களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் சிறப்பாக விளையாடியதால், பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 127 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ம…
-
- 0 replies
- 951 views
-
-
ஹர்பஜனை குறிவைத்து மீண்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் தாக்குதல் [28 - February - 2008] இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை குறி வைத்து அவுஸ்திரேலியர்கள் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடையே களத்தில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் சைமண்ட்ஸை திட்டியதாக கூறப்பட்ட புகார் பெரும் விஸ்வரூபம் எடுத்து அடங்கியது. அதன் பின் ஐ.சி.சி.தலையீட்டின் பேரில் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் 9 போட்டிகளும் அமைதியாக நடந்து முடிந்தன. ஆனால், சிட்னியில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையே நடந்த 10 ஆவது போட்டியின் போது மீண்டும் புகைச்சல் கிளம்பியது. இஷாந்த் ஷர்மா பந்து …
-
- 1 reply
- 1k views
-
-
தண்டனையிலிருந்து தப்பினார் ஹைடன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் [29 - February - 2008] ஹர்பஜன் சிங்கை விமர்சித்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராதம் மற்றும் தண்டனையிலிருந்து ஹைடன் தப்பிவிட்டார். இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களிடையே வாக்குவாதம் தொடர்கிறது. சிட்னி டெஸ்டின் போது அவுஸ்திரேலியாவின் சைமண்ட்சை நோக்கி ஹர்பஜன் `குரங்கு' என திட்டியதாக பிரச்சினை வெடித்தது. பின்னர் சிட்னியில் நடந்த முக்கோண ஒரு நாள் போட்டியின் போது இஷாந்த் - சைமன்ட்ஸ் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதேபோட்டியில் ஹர்பஜனைப் பார்த்து `முட்டாள் பையன்' என்று அடிக்கடி திட்டியதாக ஹைடன் மீது இந்திய அணியினர…
-
- 0 replies
- 904 views
-
-
இறுதி சுற்றில் இந்தியா . Tuesday, 26 February, 2008 11:13 AM . ஹோபர்ட், பிப்.26: ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. . இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸதிரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதிய கடைசி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 47.1 ஓவரில் இலங்கை அணி 179 ர…
-
- 0 replies
- 882 views
-
-
டோனி பாய்ச்சல் . Monday, 25 February, 2008 10:59 AM . சிட்னி, பிப்.25: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு முன்னணி ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாததே காரணம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். . சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அந்த அணி முதலில் ஆடி 317 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காம்பீர் அதிரடியாக ஆடி 113 ரன்களை குவித்தார். உத்தப்பா அரை சதம் அடித்தார். இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் எனும் நிலையில் தடுமாறிய நிலையில் இந்த வீரர்கள் அபாரமாக ஆடி வெற்றிக்காக போராடினர். …
-
- 0 replies
- 887 views
-
-
இந்தியா போராடித் தோல்வி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008 சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. தொட…
-
- 0 replies
- 966 views
-
-
நியூஸி. வெற்றி!ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது! சனி, 23 பிப்ரவரி 2008( 14:44 IST ) கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசீலாந்து அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. பூவா தலையா வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பந்துகள் மெதுவாக பேட்டிற்கு வரும் ஆட்டக் களத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். பின் கள வீரர்களான லூக் ரைட் மற்றும் மஸ்கேரந்காஸ் கடைசியில் அடித்து ஆடியதால் மரியாதைக்குறிய 242 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை இங்கிலாந்து எட்டியது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்…
-
- 0 replies
- 653 views
-
-
ஏலம் போன வீரர்களுக்கான தொகையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளும் [22 - February - 2008] [Font Size - A - A - A] இந்திய பிரிமியர் லீக் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம். அதில் 4 பேர் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறமுடியும். அணியின் சொந்த இடங்களைச் சேர்ந்த 4 பேரும், 22 வயதுக்குட்பட்ட 4 பேரும் அணியில் இடம்பிடிப்பார்கள். பிரிமியர் லீக் போட்டிக்கான 75 வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். அவர்கள் மொத்தம் 144 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார்கள். அணி வீரர்கள் ஏலம் போன தொகையையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளின் விபரமும் வருமாறு: சென்னை அணி: …
-
- 0 replies
- 891 views
-
-
டோனிக்கு ரூ.6 கோடி Wednesday, 20 February, 2008 02:24 PM . மும்பை, பிப்.20: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் சென்னை அணியின் சார்பில் விளையாட மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரனும் சென்னை அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார். . கொல்கத்தா அணி சார்பில் ஷோயிப் அக்தர், ஜெய்ப்பூர் அணி சார்பில் ஷேன்வார்னே, மொகாலி அணி சார்பில் ஜெயவர்த்தனே ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள அணி களில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஏலத்திற்கு பிறகு இந்திய வீரர் மற்றும் ஒருநாள் அணியின…
-
- 3 replies
- 1.6k views
-
-
முப்பது முறை டக் அவுட்டாகி சனத் புதிய சாதனை படைத்தார் [21 - February - 2008] [Font Size - A - A - A] இலங்கை - இந்திய அணிகளிடையே அடிலெய்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் சில முக்கிய அம்சங்கள். நேற்று முன்தினம் தனது 200 ஆவது போட்டியில் விளையாடிய யுவராஜ் அதிரடியாக 76 ஓட்டங்களை எடுத்து, இழந்த போர்மை மீட்டார். ஒருநாள் போட்டிகளில் 35 ஆவது அரைச்சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இதுவரை 200 போட்டிகளில் பங்கேற்று 8 சதம், 35 அரைச்சதம் உட்பட 5686 ஓட்டங்களை எடுத்துள்ளார். சச்சின் வேதனை: இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த சச்சின் நேற்று முன்தினம் ஒருநாள் போட்டிகளில் 20 ஆவது முறையாக `டக்' அவுட்டானார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அத…
-
- 1 reply
- 1.4k views
-
-
கில்கிறிஸ்ட்டை வளைக்க கடும் போட்டி Tuesday, 19 February, 2008 12:12 PM . மெல்பர்ன், பிப்.19: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் கில்கிறிஸ்ட்டை அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு கொண்டு வர இந்திய பிரிமியர் லீக்கின் கொல்கத்தா மற்றும் மொகாலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. . இதனால் கில்கிறிஸ்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய பிரிமியர் லீக்கின் 8 அணிகளுக்கு வீரர்களை சேர்ப்பதற்கான போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்ட்டுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு தலை…
-
- 0 replies
- 998 views
-
-
இலங்கையை வீழ்த்தியது இந்தியா Tuesday, 19 February, 2008 09:36 AM . அடிலெய்டு, பிப்.19: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி வரிசையில் இந்தியாஇலங்கை மோதும் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். . இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா களமிறங்கினர். முதல் ஓவரியிலேயே தில்சன் முனாப் பட்டேல் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயசூர்யா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். அவர் ரன் அவுட் முறையில் …
-
- 0 replies
- 865 views
-
-
கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…
-
- 0 replies
- 853 views
-
-
இந்தியா மோசமான தோல்வி! ஞாயிறு, 17 பிப்ரவரி 2008( 17:13 IST ) இன்று நடந்த 7வது லீக் போட்டியில் இந்திய அணியை 50 ரன் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா வீழ்த்தியது. அடிலெட்டில் இன்று இந்தியா- ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையே 7வது லீக் போட்டி நடந்தது. பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்ட்ரேலியா. தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் (15), ஹைடென் (13) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பாண்டிங் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மைக்கேல் கிளார்க் மட்டும் நன்றாக விளையாடி 79 ரன் குவித்தார். இதேபோல் ஹாக் 32 ரன் எடுத்தார். ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
66 வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜப்பானிய வீரர் [15 - February - 2008] [Font Size - A - A - A] உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டி சீனத்தலைநகர் பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதில் குதிரையேற்ற போட்டியில் ஜப்பானின் ஹரோஷி ஹோகட்சு பங்கேற்கிறார். இதில் என்ன விசேடம் என்கிறீர்கள்? அவருக்கு இப்போது 66 வயதாகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜப்பானின் அதிக வயது வீரர் இவர் தான். ஒலிம்பிக் போட்டிக்காக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜப்பான் குதிரையேற்ற அணியில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது. சமீப காலமாக அவரது செயல்பாடு சிறப்பாக இருப்பதை தொடர்ந்து அவருக்க…
-
- 0 replies
- 926 views
-