Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர…

  2. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு…

    • 0 replies
    • 470 views
  3. சன்ரைஸர்ஸ் அணியின் தலைவராக மீண்டும் டேவிட் வோர்னர் By Mohamed Azarudeen - Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI ஐ.பி.எல். (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது அத்தியாயம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடும் அணியான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது தலைவராக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரை மீண்டும் நியமனம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. …

  4. மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா? By Ravivarman - வடமாகாணத்தின் முக்கிய கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில்…

  5. இலங்கைக்காக 7 பதக்கங்களைப் பெற்ற வடக்கு வீரர்கள் க. அகரன் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வட மாகாண காலுதைச்சண்டை வீரர்கள் எழுவர் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வட மாகாண காலுதை…

  6. 5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அவர் தோள்பட்டை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார். திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், உடல் தகுதி தொடர்பான பிரச்சனைகள…

    • 0 replies
    • 721 views
  7. யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம் 3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா ஒவொவொரு விக்கற்றுகளையும் இழந்திருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி …

    • 0 replies
    • 1.2k views
  8. முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி! by : Benitlas இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் பங்கேற்கின்றது. …

    • 3 replies
    • 839 views
  9. வெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள் by : Varothayan நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணி அண்மைய வருடங்களில் பெற்ற மிக மோசமான தோல்வியாக இது பார்க்கப்படுகின்றது. மேலும் போட்டி நான்கு நாட்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இந்தியாவின் படுதோல்விக்கு அணி நிர்வாகமே காரணம் என முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”நியூசிலாந்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களை பாராட்ட வேண்டும். …

  10. 141ஆவது முறையாக நடைபெறவிருக்கும் நீல நிறங்களின் சமர் By A.Pradhap - இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் பெரும் போட்டியான (BIG MATCH) கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “நீல நிறங்களின் சமர் (Battle of Blues)”, இந்த ஆண்டு 141ஆவது முறையாக மார்ச் மாதம் 12ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இலங்கையின் கிரிக்கெட் பித்துக்காலத்தினை (March Madness), அலங்கரிக்கும் முக்கிய பெரும் போட்டி…

  11. சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார். போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந…

    • 0 replies
    • 1k views
  12. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் இனிங்ஸால் பங்களாதேஷ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: சிம்பாப்வே சிம்பாப்வே: 265/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 107, பிறின்ஸ் மஸ்வெளரே 64, றெஜிஸ் சகபவா 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 4/70, அபு ஜயெட் 4/71, தஜியுல் இஸ்லாம் 2/90) பங்களாதேஷ்: 560/6 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 203, மொமினுல் ஹக் 132, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 71, லிட்டன் தாஸ் 53, தமிம் இக்பால் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஐன்ஸ்லி என்டொல்வு 2/170, சார்ள்டன் ஷுமா 1/85, விக்டர் நயுச்சி 1/87, டொனால்ட் ட்ரிபானோ 1/96, சிகண்டர் ராசா 1/111) சிம்பா…

    • 0 replies
    • 355 views
  13. நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு! by : Anojkiyan ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்…

  14. திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்! by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  15. மன்னார் பிரிமீயர் லீக்: எஸ்.எல்.எப்- ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு! by : Anojkiyan மன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், எஸ்.எல்.எப் மற்றும் ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மன்னார் பிரிமீயர் லீக் தொடரின் எட்டாம் நாள் போட்டி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடின. எனினும் கடும் போராட்டத்திற்கு பின்ன…

  16. வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…

  17. இலங்கை அணியுடனான சர்வதேச மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் பேர்த்தில் இடம்பெற்ற 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சாமரி அத்தபத்து 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும், உமேஷா தமாஷினி 20 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 25 ஓட்டங்களை…

    • 0 replies
    • 485 views
  18. சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். தொடர்ந்து …

  19. டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா By Akeel Shihab ICC தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிக…

  20. ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட் ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் …

  21. விளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. …

  22. அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது. மேற்கி…

    • 0 replies
    • 377 views
  23. 2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் அமைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின…

  24. மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. " மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்…

    • 0 replies
    • 462 views
  25. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற குருப் ஏ பிரிவு அணிகள் இடையேயான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி (Alyssa Healy) 51 ரன்களும், ஆஸ்லிக் கார்ட்னர் (Ashleigh Gardner) 34 ரன்களும் சேர்த்தனர். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் சாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.