விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது…
-
- 2 replies
- 423 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடைரை தனதாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் …
-
- 0 replies
- 389 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் By Mohamed Shibly - ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை அணி அதிக போட்டிகள் கொண்ட ஆண்டாக 2020 ஆம் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கை அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (27) அறிவித்தது. புத்தாண்டை ஆரம்பித்து இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த…
-
- 1 reply
- 574 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான ரி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பவுலிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இலங்கை இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று ரி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முழுவதும், ஒர…
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
2020 இலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம் By Mohammed Rishad - நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது. 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (24) விளைய…
-
- 0 replies
- 418 views
-
-
நியுசிலாந்திற்கு எதிராக மெல்பேர்னில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் தலைவர்ஸ்டீவ்ஸமித் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதல் டெஸ்டின் 26 வது ஓவரில் நெய்ல் வாக்னரின் சோர்ட் பிச் பந்தினை விளையாட முயலாத ஸ்மித் ஆனால் லெக்பையினை பெறுவதற்காக ஓட முயன்றார். எனினும் அந்த பந்தை டெட்போல் என அறிவித்த நடுவர் நைஜல் லோங் ஸ்மித்தினை அங்கேயே நிற்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் மதியநேர இடைவேளைக்காக அணியினர் ஓய்வறைகளிற்கு திரும்பிக்கொண்டிந்தவேளை ஸ்மித் நடுவருடன் கடும்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். ஸ்டீவ் ஸமித்தின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்த…
-
- 0 replies
- 505 views
-
-
(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி) தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வ…
-
- 0 replies
- 471 views
-
-
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் அடித்தனர். இதில் ரோகித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இத…
-
- 1 reply
- 401 views
-
-
தமிழீழம் உதைபந்தாட்ட அணி வெற்றி சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது வழக்கம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களைக் கொண்ட அணி இன்றைய தினம் நெதர்லாந்தில் மேற்கு பப்புவா அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் மேற்கு பப்புவா அணியை 10 இற்கு 2 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி இலகுவாக வெற்றியீட்டியது. http://www.battinaatham.net/description.php?a…
-
- 5 replies
- 837 views
-
-
டெஸ்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்து சாதனை (பாகிஸ்தானிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் சதங்கள் குவித்து பாகிஸ்தானுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிலைநாட்டினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானின் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் 2007 இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு வீரர்களான தினேஷ் கார்த்திக் (129), வசிம் …
-
- 0 replies
- 605 views
-
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரூ.15.5 கோடிக்கு ஏலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதினைந்தரை கோடி ரூபாய்க்கும், இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்சை ஏலம் எடுப்பது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ் இடையே நீண்ட நேரம் போட்டி நிலவியது. முடிவில்…
-
- 6 replies
- 1.6k views
-
-
சென் தோமஸ் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் By Jegan - சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை ரீதியான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுரி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பிரிவு 2 இல் சி குழுவுக்காக இடம்பெற்ற இந்த போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தீர்மானித்த சென் ஜோன்ஸ் அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிரண…
-
- 0 replies
- 878 views
-
-
இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி By Mohamed Azarudeen - மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று (19) இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணியினர் 44 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கே இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றது. இந்த முத்தரப்பு தொடரில் தாம் விளையாடிய கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கையின் இளம் வீரர்கள் மீண்டும் அவர…
-
- 0 replies
- 915 views
-
-
அடுத்த SAGஇல் இந்தியாவை வீழ்த்துவோம் – கபடி வீரர் SINOTHARAN By Admin - நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா (SAG) ஆண்களுக்கான கபடியில் முதல்தடவையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த இலங்கை கபடி அணியின் நட்சத்திர வீரர் கணேசராஜா சினோரதனுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன், தனது வெற்றி குறித்து The Papare.com இற்கு தெரிவித்த கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். http://www.thepapare.com/video-eastern-kabaddi-star-sinotharans-arrival-the-sag-2019-tamil/
-
- 1 reply
- 551 views
-
-
ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை! By A.Pradhap - கராச்சியில் ஆரம்பமாகியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் ஆரம்பமாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இன்றைய போட்டிக்கான அணியின் மாற்றங்களை பொருத்தவரை, இலங்கை அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. கசுன் ராஜிதவு…
-
- 0 replies
- 687 views
-
-
இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. சென்னை நடந்த முதல் போட்டியில் கீரோன் பொல்லார்ட் தலைமையிலான அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-odi-visakhapatnam-inwi12182019190938?pfrom=insidearticle
-
- 3 replies
- 860 views
-
-
சங்கக்கார தலைமையில் பாகிஸ்தான் செல்லும் எம்.சி.சி. Published by J Anojan on 2019-12-18 16:35:53 மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திரு…
-
- 0 replies
- 530 views
-
-
சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நித…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி, கிழக்கு துர்கிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிவாகை பெறும் நம்பிக்கையோடு தமிழர்கள் காத்திருக்கின்றனர். சனிக்கிழமை (14 – 12 – 2019) பிரான்சில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதோடு, வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதியாட்டம் மசிடோனியா நாட்டில் இடம்பெற இருக்கின்றது. தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி, தேர்வுச்சுற்றுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், உதைபந்தாட்ட இரசிகர்கள், சமூக-அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் அணிக்கு தோழமையினை தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ…
-
- 0 replies
- 445 views
-
-
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 416/10 (துடுப்பாட்டம்: மர்னுஷ் லபுஷைன் 143, ட்ரெவிஸ் ஹெட் 39, டேவிட் வோணர் 43, ஸ்டீவ் ஸ்மித் 43, டிம் பெய்ன் 39, மிற்செல் ஸ்டார்க் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/92, டிம் செளதி 4/93, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/37, ஜீட் றாவல் 1/33) நியூசிலாந்து: 166/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 80, கேன் வில்லியம்சன் 34, கொலின் டி கிரான்ட்ஹொம் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/52, நேதன் லையன் 2/48, பற் க…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது. இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணியி…
-
- 2 replies
- 609 views
-
-
சச்சின் டெண்டுல்கர் முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட…
-
- 0 replies
- 625 views
-
-
மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை …
-
- 0 replies
- 1k views
-
-
ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ். அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையா…
-
- 0 replies
- 836 views
-
-
India vs West Indies : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை வான்கிடே மைதானத்தில் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெற்றி பெறும் அணியை தொடரைக் கைப்பற்றும். © AFP இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி, 20 ஓவர் போட்டிகளில் அந்த இடத்திற்கு செல்ல தவறி விட்டது. இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் 5-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 6 20 ஓவர் போட்டிகளில் இந்தியா 2-ல் ம…
-
- 1 reply
- 918 views
-