Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட வவுனியா இளைஞனும் தெரிவு ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் வவுனியா இளைஞனும் தெரிவாகியுள்ளார். ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்கள…

  2. தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்! 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பி…

  3. விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் ; பேசிய விடயங்கள் இதோ ? இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர். குறித்த சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க, 'குறிப்பாக கிரிக்கெட் சபையில் இருந்த முன்னாள் அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்தோம். எமக்கு கடமையொன்று உள்ளது கிரிக்கெட் தொடர்பில் கவனம் செலுத்த. ஆகவே தற்போதைய விளையாட…

  4. 8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி அறிவிப்பு (நெவில் அன்தனி) வெளிநாட்டு கால்பதாட்ட அணி ஒன்றின் விளையாட்டுத்திறனைக் காணும் வாய்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை இரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக லிதுவேனிய அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. லிதுவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியில் சிரேஷ்ட அனுபவம்வாய்ந்த ஏழு வீரர்களே இடம்பெறுகின்றனர். முன்னாள் தலைவர்களான சுஜான் ப…

  5. காத்திருந்து சாதனை படைத்த கோலி: தோனி புதிய மைல்கல்; இன்னும் சுவாரஸ்ய தகவல்கள் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம் ஓல்டுடிராபோர்டு நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது, டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதில் கேப்டன் விராட் கோலியும், தோனியும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சே…

  6. முதல் டெஸ்ட் - வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries ஆண்டிகுவா: வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெ…

  7. தமிழில் ட்வீட் செய்து ஹர்பஜன் சிங்கை கிண்டல் செய்த சச்சின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின், ஹர்பஜனுக்கு சற்று வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய ஹர்பஜன் அதன் பின்னர் தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழில் பதிவிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஹர்பஜனை தமிழ்ப் புலவர் என்று அழைத்து வ…

  8. விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள் பகிர்க 2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம். மார்டினா நவ்ராட்டிலோவா படத்தின் காப்புரிமைGETTY IMAGES செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவா…

  9. இனி எளிதாகத் தப்பிக்க முடியாது: பந்தைச் சேதப்படுத்தினால் கடும் தண்டனை: ஐசிசி புதிய விதிமுறைகள் கோப்புப்படம் பந்தைச் சேதப்படுத்தும் வீரர்கள் ஒரு போட்டியுடன் தடை போன்ற எளிமையான தண்டனையில் இருந்து இனி தப்பிவிட முடியாது. கடுமையான தண்டனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுண்சில்(ஐசிசி) வகுத்துள்ளது. பந்தைச் சேதப்படுத்துதல், எதிரணி வீரர்களைத் திட்டுதல், நடுவர்கள் முடிவுக்குக் கட்டுப்பட மறுத்தல் உள்ளிட்டவை 3-வது வகையான கடும் குற்றமாகக் கருதப்படும். இதையடுத்து, இனி பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. …

  10. டி20 போட்டியில் 172 ரன்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் உலக சாதனை ஜிம்பாப்வேயிற்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார். #AaronFinch #ZIMvAUS ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டி'ஆர்கி ஷார்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெ…

  11. ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்குக்கு இடம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் : கோப்புப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும். இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் ச…

  12. ரஷ்யாவிடம் தோல்வி எதிரொலி: ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா இனியஸ்டா - AFP உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. பெனால்டி ஷூட்டில் ஸ்பெயின் அணி வீரர்களான ஜார்ஜ் கோகே, இயாகோ அஸ்பஸ் ஆகியோர் கோட்டை விட்டனர். இதன் மூலம்…

  13. இலங்கை அணிக்கு எதிரான உளவியல் யுத்தத்தை ஆரம்பித்தார் டுபிளசீஸ் பந்தைசேதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு எதிராக ஐசிசி கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் பவ் டுபிளசீஸ் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக உளவியல் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். பந்தை சேதப்படுத்துவதற்கான அல்லது பந்தின் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன இதன் காரணமாக ஐசிசி மிகவிரைவில் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசிசி இது தொடர்பாக ஆராய்ந்துள்ள போதிலும் அவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள டுப்பிளசிஸ் ஐசிசி இன்னமும் பழைய விதிமுறைகளை …

  14. இங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை?- ராகுல், தினேஷ் யாருக்கு இடம்? இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கோப்பையுடன் இன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி - படம்: ஏபி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் இடம் பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு 3 மாதங்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக அயர்லாந்துடன் நடந்த டி20 தொடரை 2-0 …

  15. கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.) கிரிக்கெட் விளையாட்டின் நேர்மை தன்மையை பேணுவதற்கும், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை காப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஐ.சி.சி. ஆனது கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்க கோவைகள் மற்றும் ஊக்கமருந்து பாவனை தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய செயலி (App) ஒன்றினை வெளியிட்டுள்ளது. “ICC Integrity” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளிலும், டப்களிலும் (Tab) பயன்படுத்த முடியுமாக இருக்கின்ற இதே தருணத்தில் கிரிக்கெட் விளைய…

  16. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #wimbledon2018 லண்டன்: ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் …

  17. ‘என்னுடைய அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன்’: ஸ்டீவ் ஸ்மித் உருக்கம் ஸ்டீவ் ஸ்மித் : கோப்புப்படம் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5-0 என்று ஒருநாள் தொடரை இழந்தபோது, எனது அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கினார். இதனால், ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஸ…

  18. ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோ…

  19. ஆட்டநாயகனாக தோனி: ‘வாட்டர் பாயாக’ மாறி சகவீரர்களுக்கு தண்ணீர், கிட்களை சுமந்து நெகிழ்ச்சி அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது, வாட்டர் பாயாக வந்த தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தண்ணீர், குளிர்பானம் கொடுத்தார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஓய்வில் இருந்த தோனி வாட்டர் பாயாக மாறி, சகவீரர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தும், அவர்களின் கிட் பேக்கை சுமந்து சென்று ரசிகர்கள் முன் நாயகனாக வலம் வந்தார். மூத்த வீரர் என்ற எந்த விதமான கவுரமும் பார்க்காமல், இந்தப் பணியை தோனி இறங்கிச் செய்தது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அ…

  20. தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் ஆடியபோது அந்த அணியின் கோல்காப்பாளர் அலிரேசா ஹகிகி தனது அழகான தோற்றத்தால் அனைவரது பார்வையையும் வென்றது நினைவிருக்கும். ஆனால், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் கோல்காப்பாளர் அலிரேசா பெய்ரண்ட்வாண்ட் அத்தனை அழகான தோற்றம் கொண்டவரல்ல. ஆனால், அவரது பின்புலத்தை தெரிந்தவர்கள் அவர் மீது அலாதிப் பிரியம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். லோரஸ்தான் மாகாணத்தின் சரபியாஸ் என்ற கிராமத்தில் ஒரு நாடோடி குடும்பத்திலேயே பெய்ரண்ட்வாண்ட் பிறந்தார். தமது ஆடுகள…

  21. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் தேர்வு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ். | கெட்டி இமேஜஸ் ஜூலை 12ம் தேதி டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ல் டிரெண்ட் பிரிட்ஜிலும் ஜூலை 14-ல் லார்ட்சிலும் ஜூலை 17-ல் லீட்ஸிலும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அதிரடி இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணி வருமாறு: இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜோஸ் பட்லர், டாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ்,…

  22. ‘திரும்பி வந்துடேன்னு சொல்லு’: கனடா டி20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி அரைசதம் கனடா டி 20 போட்டியில் டொராண்டோ அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த காட்சி - படம்: ஏஎப்ஃபி பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கனடா டி20 போட்டியில் பங்கேற்று அதிரடியாக அரைசதம் அடித்தார். கனடா குளோபல் டி20 போட்டியில் டொரான்டோ நேஷனல் அணிக்காக விளையாடிய ஸ்மித் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் மீண்டும் அதே ஃபார்மில் இருப்பதை வெளிப்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஆஸ்திரேலிய அணி கேப…

  23. தமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர். எப்படி சாத்தியமானது இந்த பயணம் என்பதை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். Image captionஷெபானி பாஸ்கர் 2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அம…

  24. ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து கழகமான ஏ.சி. மிலானுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் இருந்து ஓர் ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி கால்பந்து லீக்கான சீரி A தொடரில் ஆறாவது இடத்தை பிடித்த மிலான், இந்த பருவத்தில் ஐரோப்பிய லீக் குழுநிலை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த கழகம் கடந்த பருவத்தில் வீரர்கள் பரிமாற்றத்திற்கு 200 மில்லியன் பௌண்ட்களை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA), இது கழகங்களுக்கான சமநிலை விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு எதிராக தாம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில்…

  25. கீழே விழுந்த ஒரு மனிதனை எட்டி உதைத்துக் கொண்டேயிருப்பது நியாயமா?: டேரன் சமி விளாசல் கோப்புப் படம். | பிடிஐ கீழே விழுந்த மனிதனை எட்டி உதைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல, எனவே ஊடகங்களே தயவு செய்து வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று டேரன் சமி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோர் நியூலேண்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி சின்னாப்பின்னமானதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் இவர்களை விட்டுவைக்காமல், சற்றும் இடைவிடாது இவர்களைத் தாக்கி எழுதி வந்தன. ஊடகங்களின் நெருக்கடி ரசிகர்களிடையே ஒரு கருத்தொருமித்தலை உருவாக்க வார்னர், ஸ்மித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.