அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இன்றைய ஆளும் அதிகாரத்தரப்பில் பதவி வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்பதே தனது கணிப்பு என்று அண்மையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. "இல்லை பிரச்சினைகள் பலவுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய அவை தீர்க்கப்பட்டாலேயே நாட்டில் சமத்துவம் கட்டிக்காக்கப்படும். தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முடிவுகட்டப்பட வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டி, தமது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு உள்ளது. அது தமிழர் தரப்பால் உரியபடி ஆற்றப்படுவதாக இல்லை. இலங்கையின் அரசியலரங்கை ஆராயும்போது, பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் தமிழரல்லாத மற்றைய சிறுபான்மையினத்து அரசியல்வாதிகளுக்கும…
-
- 0 replies
- 475 views
-
-
புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு? புதிய அமைப்பானது ஒரு குழுவாக – ஓர் அமைப்பாக மட்டுமே செயற்படும் என்ற தீர்மானத்தில் ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதாகத் தெரிகின்றது. தலைவர் என்று ஒருவர் இருக்கமாட்டார் என்றும், குழுவாகவே அந்த அமைப்பு செயற்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான யாப்பு வரைபு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. தன்மை காணப்பட்டது. சம அந்தஸ்துடனேயே, விடுதலைப்புலிகளுக்கும் அரச தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் …
-
- 0 replies
- 404 views
-
-
இப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று, பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். பிரேஸில் உள்ளிட்ட ஐந்து நாடுகளில், தமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அதனை நிராகரித்த, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தால், இந்த விவகாரம் அப்படியே ஓய்ந்திருக்கும். ஆனால் அவர், போரை கொழும்பில் இருந்து வழிநடத்தியத…
-
- 0 replies
- 453 views
-
-
கண்கட்டி விளையாட்டு உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக் காண முடியாதுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பில், அடிக்கடி வெவ்வேறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எதை நம்புவது, எதை நிராகரிப்பது என்பதைப் பகுத்தறிவதற்கே, அநேகமானோருக்கு நேரம் போதாமலுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் ச…
-
- 0 replies
- 831 views
-
-
நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும் Ahilan Kadirgamar / இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன. 1980களில் தொடங்கிய நவதாராளவாத பூகோளமயமாதலானது, சுதந்திர வர்த்தகம், சுதந்திரமான மூலதனம் வாங்கல், அரச தலையீட்டை அகற்றுதல், தனியார்மயப்படுத்தல் என்பவற்றின் மீதான ஊக்கமளிப்பில் மையம் கொண்டிருந்தது. மீயுயர் பூகோளமயம…
-
- 0 replies
- 503 views
-
-
‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களின் மரண ஓலம் மியன்மாரில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனரீதியான ஒடுக்குமுறைகளும் இனச்சுத்திகரிப்பும் ‘ரோஹிஞ்சா’க்களைத் தினமும் பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன. கட்டமைக்கப்பட்ட இந்த வன்முறைகளால் அவர்கள் படும்பாட்டைக் கண்டு, உலகெங்கிலுமுள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபற்றிய புகைப்படங்கள், பத்திரிகைகளில் பிரசுரிக்கக் முடியாத விதத்தில், இதயம் பலவீனமானவர்களை, மோசமாகப் பாதிக்கக் கூடிய அளவுக்கு, மிகவும் கவலை தருவதாக இருக்கின்றன. ஆனால், மியன்மார் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பாங்கும், உலகின் அதிகார மையங்கள் கண்டுகொள்ளாதிருப்பதும், ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாய்ப்பேச்சால் பயனேதுமில்லை; நியாயமான செயற்பாடே தேவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாதையில் பயணிக்கும் இரு கட்சிகளே எனச் சிலர் கருதி வருகின்றனர். அதேபோன்று இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தாம் சார்ந்த கட்சிகளுக்கு உயிரைக் கொடுத்துழைக்கும் விசுவாசிகளாக இருக்கின் றனர் எனப் பலர் கருதி வருகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றை நோக்கும் போது இவை மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை என்பதை உணர இயலும். ஐ.தே.கட்சியிலிருந்து டி.ஏ.ராஜபக்ச வுடன் வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயகா சுதந்திரக் கட்சியை நிறுவினார். அதிலிருந்…
-
- 0 replies
- 394 views
-
-
சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா? இலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது. இதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் ம…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழர்களின் அரசியல் நிகழ்காலமும் எதிர்காலமும் “நல்லூர்த் திருவிழா, மடுப்பெருநாள், மட்டக்களப்பு மாமாங்கப் பெருவிழா, சந்நிதி கோவில் திருவிழா எல்லாம் அமர்க்களமாக நடந்து முடிஞ்சிருக்கு. ஆனால், தமிழர்களின் அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுத்தான், ‘தேஞ்ச தும்புத்தடி’ கணக்காக இருக்கு” என்று தேநீர்க் கடையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கையில் பத்திரிகை இருந்தது. அவர் எதிர்பார்த்த செய்தி அதில் இல்லை என்ற ஏமாற்றமே, இந்தக் கொதிப்புக்குக் காரணம். அண்மையில் (03), முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலதிபருமான அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்த தினத்தையொட்டிய நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது…
-
- 0 replies
- 451 views
-
-
‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும் ம. அருளினியன் எழுதிய, ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல், கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில், குறித்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக, கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று, நிகழ்வுக்கு முதல் நாள், அக- புற அழுத்தங்களினால், பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்ப…
-
- 2 replies
- 840 views
-
-
நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி? ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது. இலங்கையில், 2009 மே மாதத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட சமூகம் உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்த…
-
- 0 replies
- 428 views
-
-
வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா? வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சண்டைத் தொடரின் புதிய கட்டமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபை…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக ஆளுநர்களும் சர்ச்சைகளும் மாநில ஆளுநர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாவது, தமிழகத்துக்குப் புதிதல்ல. தி.மு.க அரசாங்கத்தை, 1975இல் “டிஸ்மிஸ்” செய்த ஆளுநர் கே.கே. ஷா மீது சர்ச்சை எழுந்தது. 1990களில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுத்த சர்ச்சை வெடித்தது. 2001இல், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவை, முதலமைச்சராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின. இப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ், “19க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதர…
-
- 0 replies
- 384 views
-
-
ஆப்கானிஸ்தான்: தென்னாசியாவின் புதிய மையப்புள்ளி புதிய நெருக்கடிகள், புதிய தேவைகளை உருவாக்குகின்றன; புதிய தேவைகள், புதிய பங்காளிகளை உருவாக்குகின்றன; புதிய பங்காளிகள், புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள்; புதிய திட்டங்கள், புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன; மொத்தத்தில், நெருக்கடிகள் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு, தோற்றுவிக்கப்படுபவைகளில் பெரும்பாலானவை, தேவையின் அடிப்படையில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கடிகள் சில தவிர்க்கவியலாத நடவடிக்கைகளுக்கு வித்திடுகின்றன. அவை வினையை அறுவடை செய்கின்றன. கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீண்ட காலமாக எத…
-
- 0 replies
- 467 views
-
-
மியான்மாரில் தொடரும் அவலம் - ஜனகன் முத்துக்குமார் மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், அண்மையில் ஏற்பட்ட வன்முறை, பல்லாயிரக்கணக்கான றோகிஞ்சா பொதுமக்கள், பங்களாதேஷுக்குள் அடைக்கலம் தேடுவதற்கு வழிவகுத்துள்ளது. குறித்த வன்முறையானது, கடந்த மாத இறுதிப்பகுதியில் றோகிஞ்சா போராளிகள், மியான்மாரின் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி, அதில் 12 படையினர் கொல்லப்பட்டமையை அடுத்து ஆரம்பித்ததோடு, அதனைத் தொடர்ந்து ரோஹிங்யா போராளிகள், பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து, மேலும் வலுப்பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கும் றோகிஞ்சா மக்களுக்குமிடையிலான முரண்பாடு, அரசாங்கமானது, …
-
- 0 replies
- 567 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆண்டுகள் 16 http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-8
-
- 0 replies
- 266 views
-
-
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-6
-
- 1 reply
- 406 views
-
-
யுத்தம் விட்டுப் போன வடு: காணாமல் போனோர் வெளிவருவார்களா? உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் வாழும் வாழ்க்கையில் இப்போது காணாமல் போனோர் விவகாரம் ஒரு வேண்டாத விடயமாகப் பெரும்பாலானோர்களால் பார்க்கப்படுகின்ற நிலையே காணப்படுகிறது. பிரச்சினைகளை அனுபவித்தவனுக்கே அதன் துன்பம் தெரியும் என்பதுதான் யதார்த்தம். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் எதையும் இனப்பிரச்சினையுடனேயும், கடந்த காலப் போரின் வடுக்களுடனும் தொடர்புபடுத்திப் பேசுகின்ற நிலை இருக்கிறது. இத்தகைய மனநிலையிலிருந்து மீண்டுவிடவேண்டும் என்று எல்லோரிடமும் சிந்தனை தோன்றினாலும், எங்கு தொட்டாலும் அது சுற்றிக் கொண்டுவந்து, குறித்த இடத்தில் நிற்பதையே காணமுடிகிறது. எதுவ…
-
- 0 replies
- 846 views
-
-
கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-5
-
- 0 replies
- 465 views
-
-
-
- 0 replies
- 459 views
-
-
ஜெனரல்களைத் துரத்தும் போர்க்குற்றங்கள் கடந்த வாரம், உலகளவில் இலங்கையைப் பிரபலப்படுத்துவதற்குக் காரண மாக இருந்தவர் முன்னாள் இராணுவத் தள பதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய. இவருக்கு எதிராக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்குகள், சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றிருந்தன. ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி. போர் முடிந்த பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்து இராணுவத் தளபதி பதவி பிடுங்கப்பட்ட போது, 2009 ஜூலையில் இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 2013 ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அவர் இராணுவத் தளபதியாக இருந்தவர். பின…
-
- 1 reply
- 495 views
-
-
எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கபடாத அரசியல் செய்தியும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-11
-
- 0 replies
- 279 views
-
-
ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் ஒளிப்படம்-அமரதாஸ் கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மை வாரங்களில் சம்பந்தர் மகிந்தவைச் சந்தித்திருப்பது இது இரண்டாவது தடவை. அவ்வாறு சந்திக்…
-
- 0 replies
- 556 views
-
-
ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்திய…
-
- 0 replies
- 842 views
-
-
பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இன்று ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் பலவித சாதனைகளை ஐ.நா. அமைப்பும் அதன் முகவர் நிலையங்களும் நிகழ்த்தியுள்ளன என்பதை பொது வெளியில் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பது யதார்த்தமானது. இரண்டு உலக யுத்தங்களை எதிர்கொண்டு மானிட இனம் அனுபவித்த இன்னல்களால் மீண்டும் ஒரு உலகயுத்தம் ஏற்படக் கூடாதென்ற அடிப்படையில் ஐ.நா. சபை தாபிக்கப்பட்டது. பிரதான நோக்கமாக சமாதானமும் பாதுகாப்புமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் மூன்றாம் உலகமகா யுத்தம் உருவாகவில்ல…
-
- 1 reply
- 788 views
-