அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள் இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது. காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளரோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓரிரவுக்குள், மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பது பீஹாரில் நடக்கும் புதிய ‘மாஜாஜாலம்’ அல்ல! என்றால…
-
- 0 replies
- 484 views
-
-
கொக்கெய்ன் மயக்கங்கள் கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது. ‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, 218 கிலோகிராம் கொக்கெய்ன், அரச நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை, கணக்கெடுக்காமல் விடக் கூடிய ஒரு விடயமல்ல. இது தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. ஆனாலும், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அத…
-
- 1 reply
- 598 views
-
-
இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-5
-
- 0 replies
- 367 views
-
-
நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை. இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப்…
-
- 0 replies
- 524 views
-
-
சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு கடந்துவிட்ட மூன்று தசாப்தங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-11
-
- 0 replies
- 300 views
-
-
தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் நாளுக்குள் நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்க வேண்டும். அப்போது தான், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட மிக முக்கி யமான விவகாரங்களுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கூட இந்தக் கருத்தையே அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இந்தக் கூட்டு அரசாங்கம் இனி மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு…
-
- 0 replies
- 272 views
-
-
இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை இனவாதமும், மதச் செருக்கும் இந்த நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு இரட்டித்த சாபக்கேடாய் இருந்து வந்துள்ளன. நாட்டின் கடந்த நூற்றாண்டு கால வரலாற்றை நோக்குவோமாயின், இந்த நிலைமையானது ஆரம்ப கட்டத்திலேயே தோற்றம் பெற்று, வெவ்வேறு வடிவங்களில் இற்றைவரை நிலவி வருகிறது, 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம டைந்ததை அடுத்து, குறிப்பாக கொரியா நாட்டில் நடைபெற்ற போர் மற்றும் சீனாவுடன் செய்து கொண்ட இறப்பர்- – அரசி ஒப்பந்தம் போன்ற நிலைமைகள் வாயிலாக, பொருளாதார வளர்ச்சி அறிகுறிகள் தென்பட்டன. எனினும், பின்பு சிங்கள மேலாதிக்கச் சிந்…
-
- 0 replies
- 364 views
-
-
அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா 7 ஆயிரத்து 37 வீடுகள் வெடிப்புகளுடன் சேதம். 3 ஆயிரத்து 112 கிணறுகள் வற்றியுள்ளன. 400 க்கும் அதிகமான நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலம் தாழிறக்கம், மண் சரிவுகள் ஏற்பட்டு அபாயம். ஒரு நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அந்த நாடு அடுத்தகட்ட நீண்டகால பயணத்தை முன்னெடுத்து செல்ல ஊன்றுகோலாக அமையவேண்டும். ஒரு பரம்பரை மட்டும் அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
துதிபாடும் அரசியல் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆள்வதற்கு முற்படுதல் கூடாது. அவ்வாறு அடக்கியாள முற்படுமிடத்து பிரச்சினைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிவிடும். உலக வரலாறுகள் இதனை நிரூபித்திருக்கின்றன. என்னதான் வரலாறுகள் காணப்பட்டாலும், படிப்பினைகள் இருந்தாலும் அடக்கியாளும் வரலாறு என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன. இலங்கைச் சிறுபான்மையினரும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. இங்குள்ள சிறுபான்மையினர் நாளுக்கு நாள் புதுப்புது வகையிலமைந்த பிரச்சினைகளுக்கும் ம…
-
- 0 replies
- 632 views
-
-
யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்! இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ச…
-
- 0 replies
- 338 views
-
-
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதியை தருமா? ரொபட் அன்டனி சீயாராலியோன் என்ற நாட்டில் இவ்வாறானதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு ஏழு வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டது. 200 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டு 24 பேரே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோன்று கம்போடியாவிலும் இதுபோன்றதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பல வருடங்களாக செயற்பட்டு 200 மில்லியன் டொலர் செலவழித்து ஐந்துபேரை மட்டுமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடித்தனர் - கலாநிதி ஜெகான் பெரேரா ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்…
-
- 0 replies
- 556 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா? செல்வரட்னம் சிறிதரன் பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மேற்கத்தேய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் கால் பதிக்கத்தக்க நிலைமைகளை உருவாக்க வல்ல இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய நிலைமையில், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பு செய்து ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன் வர வேண்டும் இலங்கையில் தமிழர்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்…
-
- 0 replies
- 407 views
-
-
‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …
-
- 0 replies
- 597 views
-
-
ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல் தேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன. கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர…
-
- 0 replies
- 472 views
-
-
பல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-26#page-22
-
- 1 reply
- 629 views
-
-
காணி விடுவிப்பு; பொருத்து வீடு; காடழிப்பு முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 613 ஏக்கர் காணிகளையும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியிருக்கின்றார். இந்தக் காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கான இணக்கம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி(கள்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் கடந்த மே மாதத்தில் காணப்பட்டிருந்தது. அதில், ஒரு சில பகுதிகளைக் கூட இதுவரை விடுவிக்காத நிலையில், மக்களின் போராட்டம் இன்று 143 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 471 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா? அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களில் 18 பேர், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல இருப்பதாகக் கூட்டு எதிரணி எனப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் அண்மையில் கூறியிருந்தனர். அவ்வாறு, அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள், தம்மோடு இணையவிருப்பதாகவும் கூட்டு எதிரணியினர் கூறி வருகின்றனர். அதேவேளை, இரண்டு வாரங்களில் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கப் போவதாக, முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 322 views
-
-
ஆடிகள் (34) கடந்தும் ஆட்டம் ஆடும் இனப்பிணக்கும் சந்தேக சகதிக்குள் சிக்குண்ட கூட்டமைப்பும் இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம். 34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால், நன்கு திட்டமிட்டு மூட்டப்பட்டது. அந்தத்தீ எங்கும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்பாவித் தமிழ் மக்கள், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர்; உயிருடன் நெருப்பில் போடப்பட்டனர்; பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் அதன் பின்னர், மே 2009 வரை இடம்பெற்…
-
- 0 replies
- 291 views
-
-
ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில் வெற்றிகளும் இல்லாமலில்லை இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறலாம். கட்சிகள் காலத்துக்கு ஏற்றவாறு கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். சிங்கள அரசுகள் தமிழினத்துக்கான தீர்வை வழங்குவதற்குப் பின்னடிக்கலாம். ஆனாலும் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவை மாறிமாறி நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழினத்துக்கெதிராக இடம்பெற்ற படுகொலைகள், அராஜகங்கள், இன வன்முறைகள் பெரும்பாலும் ஜூலை மாதங்களிலேயே நடந்தேறியிருக்கின்றன. ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலகட்டத்தில் உல…
-
- 0 replies
- 395 views
-
-
மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை விக்கி நாடாதது ஏன்? திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது. கேள்வி 1:- பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை? பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 520 views
-
-
உரக்கப் பேசும் ‘உலகநாயகன்’; அரசியல் கனவு நனவாகுமா? ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் திடீர் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. “அ.தி.மு.க ஆட்சியில் ஊழல்” என்று அவர் வீசிய ‘பிரம்மாஸ்திரம்’ அ.தி.மு.க அமைச்சர்களைக் ‘கலகலக்க’ வைத்து விட்டது. அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கமல்ஹாசன் மீது, வார்த்தைப் போர் நடத்தினார்கள். சட்ட அமைச்சர், “கமல்ஹாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆவேசப் பேட்டியளித்தார். இன்னோர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கமல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் பிள்ளைக்கு நல்ல தந்தையாகவும் முதலில் இரு…
-
- 0 replies
- 518 views
-
-
ஆபத்தான பாதையில் கால் பதிக்கும் அரசு தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐ. நாவுடன் இப்போது பகிரங்கமாக முரண்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, அடிப்படை நாகரிகம் தெரியாதவர், திறமையற்றவர், இராஜதந்திர நெறிமுறைகளை அறியாதவர் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பகிரங்கமாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கும் இடையிலான சந்திப்பின்போது கூட, காரசாரமான வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்குப் பின்னர்தான், அவரை “ஓர் இராஜதந்…
-
- 0 replies
- 393 views
-
-
சுயம் இழந்த ‘முஸ்லிம்’ அரசியல் உலக அரசியலில் பெரும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், இலங்கையின் அரசியலில் நெடுங்காலமாகச் செல்வாக்குடன் இருந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத கையறுநிலையிலேயே முஸ்லிம் சார்பு அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தனித்துவ அரசியலைச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகளில் ‘நக்குண்டு நாவிழந்து’ போயிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் நேரடியாகச் சங்கமமாகி இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்தின் குரலாக அன்றி, அந்தந்தக் கட்சிகளின் அழுக்குகளைக் கழுவிக் கொடுக்கும் வேலையைத்தான்…
-
- 1 reply
- 772 views
-
-
வடமாகாண முஸ்லிம்களும் தமிழ்மக்களின் கடமையும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-23#page-8
-
- 1 reply
- 423 views
-
-
குலையுமா கூட்டு அரசாங்கம்? கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக் கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், இப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக் குத் தலைவலியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். வரும் செப்டெம்பர் மாதம், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 18 பேர் வரை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனிக் குழுவாகச் செயற்படப் போவதாகக் கூறி வருகின்றனர். உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தியே, இந்தக் குழுவினர், அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருக…
-
- 0 replies
- 481 views
-