Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்? கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வை மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் தவல்களின்படி மேற்படி நிகழ்விற்காக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் நான்கு கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு எதிர் நிலையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்…

    • 0 replies
    • 360 views
  2. கெட்ட சகுனம் - மொஹமட் பாதுஷா கட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும் - வெளியே செல்லும் தந்தை முன்னே ஏக்கத்தோடு நிற்கும் ஒரு குழந்தைபோல - முன்னே வந்து நிற்கின்றது. ஆனாலும், சின்னச் சின்ன சம்பவங்கள்தான் வரலாறுகளாகின்றது. உலகப் போர்களின் வெற்றி என்பது ஆயுதங்களுக்குத்தான் வெற்றியே தவிர, அங்கு ‘மனிதம்’ சொற்ப அளவேனும் வெற்றி பெறவில்லை. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். …

  3.  மீண்டும் பரபரக்கும் திருகோணமலை - கே.சஞ்சயன் கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. …

    • 1 reply
    • 438 views
  4. அரசியலமைப்புச் சீர்திருத்தக் குளறுபடி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-11

  5. முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­ வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­பு­களால் ஆத­ரிக்­கப்­பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான பகு­தி­களை முற்­றா­கவே செய­லி­ழக்கச் செய்­தி­ருக்­கி­றது. போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்ற மிகப்­பெ­ரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்­பா­டாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், இது­போன்ற ஓரி­ரண்டு போராட்­டங்கள் தமிழ்ப் பகு­தி­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்ற போதிலு…

  6. மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:- கடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மிக அரிதான ஒரு சம்பவம் இது எனலாம். கடைகளை மூடக்கோரி யாரும் எங்கேயும் பெரும் சாலைகளில் ரயர்களைக் கொழுத்தவில்லை, யாரும் எங்கேயும் திறக்கப்பட்ட கடைகளை நோக்கி கற்களை வீசவில்லை. யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்த…

  7. வடபுலத்தின் சிலைகளும் வரலாறுகளும் வரலாறும் இலக்­கி­யமும் வெவ்­வேறு நோக்கம் கொண்­டவை. உள்­ளதை உணர்ச்சிக் கலப்­பின்றி கூற­மு­யல்­வது வர­லாறு. உணர்ச்­சியும் கற்­ப­னையும் கலந்து அமை­வது இலக்­கியம். எனது பண்­டா­ர­வன்­னியன் நாடகம் இலக்­கி­ய­மே­யன்றி, வர­லாறு அல்ல. இதை விமர்­ச­கர்கள் மனதில் கொள்ள வேண்டும். முல்­லை­மணி வே.சுப்­பி­ர­ம­ணியம் 2015 ஆம் ஆண்டு ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லக முத்­தெழில் சஞ்­சி­கைக்­கான ஆசிச்­செய்தி. இலங்­கையின் தமிழ்ப் பிர­தே­சங்­களில் மகாத்­மா ­காந்தி, விவே­கா­னந்தர், சேக்­கிழார், கம்பர், திரு­வள்­ளுவர் மற்றும் ஆல­யங்­களில் சமயக் குர­வர்­களின் சிலைகள் ஆகி­யன நிறு­வப்­பட்­டுள்­ளன. இவற்­றிற்­கெல்லாம் முறை­யான ஆதா­ரங்­க­ளுடன் வர…

  8. கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகும் மே தினம் மக்கள் செல்­வாக்கு யாருக்கு உள்­ளது என்­பதை நிரூ­பிக்­கப்­போகும் போராக நாளை மறு­தினம் கொண்­டா­டப்­படும் மேதினக் கொண்­டாட்டம் இருக்­கப்­போ­கி­றது. கட்­சிகள் ஒவ்­வொன்றும் தமது மக்கள் செல்­வாக்கை நிரூ­பித்துக் காட்ட வேண்­டிய ஒரு கால­கட்­டத்தின் கொண்­டாட்­ட­மாக இம்­முறை மேதினக் கொண்­டாட்­டங்கள் அமை­யப் ­போ­ கி­ன்றன என்­ப­தற்கு அடை­யா­ள­மா­கவே இம்­மே­தினக் கொண்­டாட்­டங்கள் களை கட்டி நிற்­கின்­றன. மேல் மாகா­ணத்தில் தேசியக் கட்­சி­களும் மலை­ய­கத்தில் அப்­பி­ரதே­சத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் வட­கி­ழக்கில் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பும் அதற்கு எதிர்நிலையில் நிற்கும் கட்­சி­களும் அமைப்­புக்­…

  9. போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளி­யிட வேண் டும். அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும். பொது ­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் இருந்து படை­யினர் வெளி­யேறி இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து விடுக்­கப்­பட்­டி­ருந்த கடை­ய­டைப்பு அழைப்­புக்குப் பலரும் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து வடக்­கிலும் கிழக்­கிலும் பொது மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கடை­ய­டைப்பு கார­ண­மாக சிவில் வாழ்க்­கையு…

  10. கான மயிலாட வான்கோழி தானுமாட - ஜூட் பிரகாஷ் "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே கல்லாதான் …

    • 1 reply
    • 772 views
  11. நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா? பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார். நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். சில விவாதங்களின்போது, எதிர்…

  12. தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும். இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத…

  13. பிரான்ஸ்: பழையன கழிதல் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறும். அரசியலும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அரசியலில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக நிகழ்வதில்லை. அவ்வாறான மாற்றங்கள் நீண்டகால நிகழ்வுகளின் படிநிலையின் விளைவால் நிகழ்வன. இருந்தபோதும் அரிதான அரசியல் மாற்றங்கள் அதிசயம் போல் நோக்கப்படுகின்றன. அம்மாற்றங்களின் முக்கியத்துவம் அக்காலச் சூழலின் அடிப்படையில் நோக்கப்படல் வேண்டும். அப்போதே நிகழ்ந்தது பழையன கழிதலா அல்லது புதியது புகுதலா எனப் புரியும். பழையன கழிதலால் புதியது புகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல புதியன புகுதலுக்கும் பழையன கழிய வேண்டிய தேவையும் இல்லை. …

  14. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…

  15. சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…

  16. கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது? - அதிரதன் வறுமையைப் பற்றியும், வருமானப்பிரச்சினை பற்றியுமே எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனை, எத்தனை பேரிடம் இருக்கிறது என்றால் கேள்விக் குறியாகிறது. மட்டக்களப்பு, வறுமையில் முதலிடம் வகிப்பதாகவும் வருமானக்குறைவு, வீட்டுப்பிரச்சினைகள் கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகின்றது. ஒன்றை இழந்தால்தான் மற்றென்றைப் பெறமுடியும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் கூடப் பலருக்கு மறந்துபோய் விட்டது. ஏன் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று யோசிக்கத் தோன்றலாம். ஒரு முறை கொழும்பு சென்ற வேளை, முச்சக்க…

  17. ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும் - கே.சஞ்சயன் ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார். சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்…

  18. யாரை ஏமாற்றும் முயற்சி? வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றி­ருந்­தது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அரச அதி­கா­ரிகள் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் நடத்­தப்­பட்ட முக்­கி­ய­மான கூட்டம் இது. இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் கிரி­சாந்த டி சில்வா பொது­மக்­களின் காணி­களை சுவீ­க­ரித்து வைத்­தி­ருப்­ப­தற்கு இரா­ணு­வத்­துக்கு அதி­காரம் இல்லை என்றும், தாம் அவ்­வாறு காணி­களைச் சுவீ­க­ரிக்­க­வு­மில்லை என்…

  19. தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி? ஐந்து பரம்­ப­ரை­யி­னரை வாழ­வைத்த அக்­கி­ராமம் தற்­போது 32 உயிர்­களைக் காவு­கொ­டுத்து நெடுந்­து­யரில் அழு­து­கொண்­டி­ருக்­கி­றது. தாமரை மலர்ந்த அப்­பொய்­கையில் அழுக்­கு­களை அள்­ளிக்­கொட்டி அழு­கு­ரல்­களை ஒலிக்கச் செய்த வஞ்­ச­னை­க­ளுக்கு அதி­கா­ரத்­திலுள்­ள­வர்கள் மாத்­திர­மன்றி சமூ­கமும் பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டுள்­ளது. கணப்­பொ­ழுதில் பல ஆன்­மாக்­களை அந்­த­ரத்தில் உல­வச்­செய்த அக்­குப்பை மேட்டை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு அப்­பி­ர­தே­ச­வா­சிகள் அனு­ப­வித்த துய­ரங்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை. ஆன­போதும் அப்­போ­ராட்­டங்­க­ளினால் எவ்­ வி­தப்­ப­யனும் கிட்­ட­வில்லை. அத­னால் தான் புதிய வரு­டத்தி…

  20. தொடரும் பட்டதாரிகள் போராட்டம் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் போராட்டம், காணி மீட்பு போராட்டம், காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் போராட்டம், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம், தனியார் மருத்­துவக் கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ரான போராட்டம், இந்­திய மீன­வர்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம், ஆசி­ரியர் பற்­றாக்­குறை போராட்டம் மருத்­துவர், தாதியர் போராட்டம், வைத்­தி­ய­சா­லை­களை தர­மு­யர்த்­துங்கள் என்ற போராட்டம், பாலியல் வன்­மங்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம் என ஏரா­ள­மான போராட்­டங்­களால் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்ற நாடாக இன்று இலங்கைத் தீவு தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. ஊழல், பொரு­ளா­தார நெருக்­க­டிகள் ஆட்­கொல்லி நோய்கள், இயற்கை அன ர்த்­தங்கள், வாகன வ…

  21. வீணடிக்கப்படும் எதிர்பார்ப்புக்கள் யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வாழ்வில் விமோ­ச­னத்தை ஏற்­ப­டுத்தப் போவ­தா­கவும் புதிய அர­சாங்கம் போக்கு காட்­டி­யி­ருந்­தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, புதிய அர­சாங்­கமும் ஒரே குட்­டையில் ஊறிய மட்டை என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்கள் கண்­டு­கொண்­டார்கள் யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற முன்­னைய அர­சாங்கம் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் பார்க்க, யுத்த வெற்­றியைக் கொண்­டா­டு…

  22.  ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போ…

  23. ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’ தற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது மோசமான நிலையை எட்டியுள்ளது. அரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடுகள், தற்போது பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாட்டையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். ஸ்ரீ ல.சு.கவின் மைத்திரி குழுவின் உறுப்பினரான மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்…

  24. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வா…

  25. தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது. உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை…

    • 1 reply
    • 477 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.