Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யாருடைய குற்றம்? வடக்கு மாகா­ண­ச­பையின் செயற்­பா­டுகள் ஒவ்­வொன்­றையும், பிரச்­சி­னைக்­கு­ரிய விவ­கா­ர­மாக மாற்­று­வது தென்­னி­லங்கை அர­சி­யலில் வழக்­க­மான ஒரு விட­ய­மா­கவே மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினர் மாத்­தி­ர­மன்றி, தற்­போ­தைய அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­சர்­களும் கூட வடக்கு மாகா­ண­ச­பையை குட்டி முந்திக் கொள்­வ­திலும், குறை சொல் ­வ­திலும் ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும் இடையில் நெருக்­க­மான உறவும், புரிந்­து­ணர்வும் இருந்­தாலும், கூட்­ட­மைப்பின் ஆளு­கை யின் கீழ் உள்ள வடக்கு மாகா­ண­ச­பைக் கும் அர­சாங்­கத்­துக்கும் இ…

  2. சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான். பொதுவாக அரசியல் தலைவர்களை அவர்களது மரணத்திற்கு பின்னர் புகழ்ந்து பேசுவது ஒரு நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரை அவரது மரணத்திற்குப் பின்னர் இகழ்ந்து பேசுவது தவறுதான். ஆனால், ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் அரசியலை கணிப்பிடும் போது அதில் நிதானமும் தெளிவும் அவசியம். சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தொடர்…

  3. நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய நிலை ஜனநாயக பாதுகாப்பு அரண்கள் கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்த ஜனநாயக சீர்திருத்தத் சக்திகளுக்கும் அவற்றின் ஆதரவு வாக்காளர்களுக்கும் இருக்கக் கூடிய தெரிவுகள் எவை? இந்தக் கேள்விக்கான முதல் பதில் மிகவும் எளிதானது. இப்போது அதன் இருண்ட பக்கத்தை மாத்திரமே காட்டக்கூடியதாக இருக்கின்ற அரசாங்கமொன்று குறித்து நேர்மறையான எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கும் காரியங்களுக்காகவும் செய்யாதிருக்கும் காரியங்களுக்காகவும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடை…

  4. எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாம் ஒன்று நினைக்க அர­சாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றதே என்ற சொற் போரி­லேயே இன்று அர­சாங்­கத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் நகர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அர­சியல் சாசனம் தமிழ் மக்­க­ளு…

  5. அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்­னைய ஆட்­சியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்து வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்த பௌத்­த­வாத கடும்­போக்­கா­ளர்­களின் மத­வாதச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கமும் ஊக்­கு­விக்­கின்­றதோ என்று சந்­தே­கப்­படும் அளவில் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அமைப்பைப் பின்­பற்றி வேறு சும­ண­ரத்ன தேரர் போன்ற சில பௌத்த மத­கு­ரு­மார்­களும் மத­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை அர­சாங்கம் கண்டு கொள்­ளாமல் இருப்­பது முஸ்லிம் மக்­களை அதி­ருப்­தி­ய­டை­ய­வும், ஆத்­தி­ர­ம­டை­யவும் செய்­தி­ருக்­கின்­றது. இதனால் முஸ்லிம் மக்­களும் இந்த அரசாங்­கத்தைச் சந்­தே­கத்­தோடு நோக்…

  6. மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…

  7.  தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக் கூறுகளைத் தன்னுள் மறைத்துள்ளது. போரின் போது போர்ச் செய்திகளே கவனம் பெறுவதால், சர்வாதிகாரச் செயற்பாடுகள் கவனம் பெறுவதில்லை. அமைதி என்பது யாருக்கானது என்ற கேள்வி எழும் போது, சர்வாதிகாரம் பற்றிய கேள்வியும் கூட எழும். சமாதானம் போரினும் கொடியதாகலாம் என வரலாறு எமக்குப் பன்முறை உணர்த்தி…

  8. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத முறையில் ஜனாதிபதி சிறிசேன செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு படாதபாடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியுமென்ற நினைப்பில் அவர் கானல்நீரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அகங்காரம், நிர்வாகத் திறமையின்மை, ஆட்சி முறையின் முக்கியமான பிரச்சினைகளை அற்பமாகக் கருதுகின்ற சிறுபிள…

  9. நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள் - காரை துர்க்கா “நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அ…

  10. போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீ வைத்து அழிக்கப்பட்டது. 35 வருடங்களுக்குப் பின்னர் அப்போது நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனா…

  11.  கூட்டமைப்பின் திரிசங்கு நிலை - புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாகச் சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறி வந்த விடயங்கள் தொடர்பில், தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருக்கின்றது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் மூலமான அரசிய…

  12. சம்பந்தருக்கு ஜெயலலிதா சொன்ன செய்தி என்ன? - தெய்வீகன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாத வண்ணம் ஜெயலலிதாவின் மரணம், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், விளக்கேற்றி வணக்கம் செலுத்தியது முதல், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்தப்படும் புலம்பெயர்ந்த நாட்டு நிகழ்வுகள் வரை, பல செய்திகள் ஊடகங்…

  13. முத்தரப்புக்கும் நிர்ப்பந்தம் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கை அரசியல் களத்தில் மூன்று சக்திகள் மும்முனையில் மோதல்களில் ஈடுபடுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மோதல்கள் மென்போக்கிலா அல்லது கடும் போக்கிலா அமைந்திருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை. ஆயினும் மூன்று சக்திகளும் தனித்துவம் மிக்க நிலையான அரசியல் இருப்பு, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம், திணிக்கப்பட்ட பொறுப்புணர்வு ஆகிய மூன்று தளங்களில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகி வருகின்றன. இந்தச் சந்திப்பில் ஏதாவது ஒரு சக்திதான் வெற்றிபெறப் போகின்றதா, இரண்டு சக்திகள் இணைந்து வெற்றிபெறப் போகின்றனவா அல்லது மூன்று சக்திகளுமே இணைந்து ஐக்கி…

  14. இலங்­கையின் சாபக்­கேடு இன­வா­தமா? இலங்­கையில் இன­வாதம் என்­பது தொடர்­க­தை­யாகி உள்­ளது. சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­ரா­யினும் சரி அல்­லது சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரா­யினும் சரி நாட்டில் இன­வாதம் என்­பது தாரா­ள­மா­கவே தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. இன­வாத முன்­னெ­டுப்­பு­களால் இலங்கை மாதாவின் தேகத்தில் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் மாற­வில்லை. எனினும் இன­வா­தமும் இன்னும் ஓய­வில்லை. இலங்கை பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாடாகும். இங்கு வாழும் அனை­வரும் இலங்கை மாதாவின் புதல்­வர்­க­ளாவர். எனவே இலங்­கையர் என்ற பொது வரை­ய­றைக்குள் இவர்கள் நோக்­கப்­ப­டுதல் வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களும் வலுப்­ப…

  15. தமிழக அரசியல் நமக்கு தேவையற்றது என ஒதுங்கமுடியாது. ஈழத்தமிழரின் விதியை தீர்மானிப்பதாக அதுவே இருக்கிறது. இருந்திருக்கிறது. அங்குள்ள தலைவர்கள் ஈழத்தமிழ்த்தலைவர்கள் தம்மைவிட வளர்ந்து விடக்கூடாது தமிழர்களுக்கு அவர்கள் தலைமை தாங்கக்கூடாது என்பதன் பயன் தான் புலிகள் அழிப்புக்கும் மற்றும் முள்ளிவாய்க்காலுக்கும் அவர்கள் எல்லோரது மறைமுக ஆதரவு என்பதை உலகத்தமிழினம் (தமிழகம் உட்பட) உணர்ந்தே இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவும் அதற்கு முன்னரும் இறப்புக்கு பின்னருமான நடைமுறைகள் மிகமிக ஆபத்தானவை. ஒரு மாநிலத்தின் முதல்வரை அந்த நாட்டின் பிரதமரோ நாட்டின் அமைச்சர்களோ அதிமுக்கிய மத்திய அதிகாரிகளோ கூட பார்வையிடச்சென்று பார்வையிடாது திரும்பி போயிருக்கிறார்கள் என்றால் அங்கே…

  16. ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம் - கே.சஞ்சயன் இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது. இந்தளவுக்கும், ஜெயலலிதா ஒன்றும் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளரோ, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தீவிரமான ஆதரவை அளித்து வந்தவரோ இல்லை. 1980 களின் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற போது, தமிழ்நாடு தான், அதன் பின்தளமாக விளங்கியது. போராட்டத்துக்கான வளங்களும் அங்கிருந்தே கிடைத்தன. பயிற்சிகளும் அங்கேயே அளிக்கப்பட்டன. அகதிகளாக இடம்பெயர்ந்த ம…

  17.  பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன, இல்லையா? ஆனால், 1980களில், அதே நிலைமையில் காணப்பட்ட ஒரு பெண், ஆட்சியைப் பிடித்தார் என்றால், அவரது திறமைகளையும் துணிச்சலையும் பாராட்டத் தோன்றுகின்றது தானே? ஜெயலலிதா ஜெயராம் என்ற, …

  18.  களச்சவால்கள் - மொஹமட் பாதுஷா ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் …

  19.  ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…

  20. முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம் இலங்­கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறை­வேற்­றப்­பட்­டது. நாட்டில் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­கா­கவே இச்­சட்டம் கொண்டுவரப்­பட்­டது. யாரையும் கேள்­வி­யின்றி கைது செய்­யவும், தடுத்து வைக்­கவும் இச்­சட்­டத்தில் ஏற்­பா­டு­க­ளுண்டு. இதனால், இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி பல இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். இன்றும் இச்­சட்­டத்தின் மூல­மாக கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அத்­தோடு அவ­சரகால சட்­டமும் நாட்டில் கொண்டு வரப்­பட்­டது. இந்த சட்­டமும், பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டமும் தனி­ந­பர்­களை கைது செய்­ய…

  21. படை குவிப்புக்கு புதிய நியாயம் 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பாக கடந்­த­வாரம் நடந்த குழு­நிலை விவா­தத்தின் போது, பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. உள்­நாட்டு, வெளி­நாட்டு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் இல்­லாத சூழ­லிலும், முப்­ப­டை­க­ளையும் பலப்­ப­டுத்தும் திட்­டத்தில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பது இதன் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­ றது. அடுத்த ஆண்டு பாது­காப்­புக்கு, 284 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய போர் விமா­னங்­களின் கொள்­வ­னவு, ஆழ்­கடல் கண்­கா­ணிப்புக் கப்­பல்கள் கொள்­வ­னவு, இரா­ணு­வத்தை மறு­சீ­ர­மைக்கும் திட…

  22. நவம்பர் மாதம் இலங்கையில் மூவருக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை நாம் கவனித்திருக்க மாட்டோம். கெப்பட்டிபொல, சங்கர், விஜேவீர ஆகியோரின் நினைவு நாட்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது தற்செயல் தான். இவர்கள் மூவருக்கும் உள்ள பொதுமை விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் என்பது தான். கெப்பட்டிபொல சிங்கள தேசியத்துக்காவும், சங்கர் தமிழ் தேசியத்துக்காகவும், விஜேவீர “சர்வதேசியத்துக்காகவும் கொல்லப்பட்டவர்களாக மேலோட்டமாக கூறலாம். நவம்பர் மாதம் 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாள் வருடாவருடம் நினைவு கூறப்படுகிறது. சென்ற 2015ஆம் ஆண்டு இந்த தினத்தில் ஜனாதிபதி…

  23. இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ? நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர். எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.