அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தமும் வருத்தமும் மொஹமட் பாதுஷா முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையி…
-
- 0 replies
- 532 views
-
-
படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …
-
- 1 reply
- 483 views
-
-
வெறுப்பை நியமமாக்குதல் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்த…
-
- 0 replies
- 340 views
-
-
மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…
-
- 0 replies
- 293 views
-
-
மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் கனவு நனவாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற ஆயுதப்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிய வெற்றியின் காரணமாக ‘யுத்த கதாநாயகர்கள்’ (War heroes) என்றழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவருவதை யாரும் அறிவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் 3 கடற்படைத் தளபதிகளுக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது தவறு என்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…
-
- 0 replies
- 319 views
-
-
ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் மு…
-
- 1 reply
- 451 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்…
-
- 0 replies
- 577 views
-
-
ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…
-
- 1 reply
- 469 views
-
-
வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த வாரம் தமிழ் அரசியல்வாதிகளைச் சீண்டும் வகையில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றியிருக்கிறார். அவர் கூறுவது நடுநிலையானது அல்ல; என்ற போதிலும் முற்றிலும் பிழையானதும் அல்ல. கடந்த சனிக்கிழமை ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அவரது உரையின்படி, வடபகுதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பாவித்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். அவர் மேலும் கூறியிருப்பதாவது, “வடக்கில் பெரும்பான்மையாக வாழும் சாதார…
-
- 0 replies
- 269 views
-
-
தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசி…
-
- 0 replies
- 384 views
-
-
அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவாக அமையவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்தமுள்ள கருத்தைத் தெரிவித்திருந்தார். - “யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். யாருடைய கைகளில் பலமான விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாகத் திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்” என்றார். அதாவது இன்றைய பலமானது பேனாவைச் சென்றடைந்துள்ளது என்பதைய…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழர்கள் மீது உளவியல் யுத்தம்: தப்புவது எப்படி?
-
- 1 reply
- 563 views
-
-
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில், சட்டம் ஒழுங்கிற்கு அப்பால் இராணுவ ரீதியிலான நடத்தைகள் பாரதூரமானவையாக இருக்கின்றன என்ற ஓர் உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆவா குழு பற்றிய விவாதங்களுக்கிடையில் இக் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். போருக்குப் பின்பாக அரச இயந்திரம் தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மீது பல்வேறுபட்ட நெருக் கடிகளை ஏற்படுத்தியே வந்துள்ளது என்பது அமைச்சரவைப் பேச்சாளரின் தெரிவிப்புக்களிலிருந்து ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 439 views
-
-
GSP+ சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சுப் போடும் ஐரோப்பிய யூனியன் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாததோர் நிலை காணப்படுகின்றது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதன் பிரகாரம் ‘முஸ்லிம் திருமணச் சட்டத்தில் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை உட்பட சில பிரிவுகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த சர்வதேச உடன்பாடுகளில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. எனவே, இந்த சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது’ எ…
-
- 0 replies
- 416 views
-
-
பறிபோகும் நம்பிக்கை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லா…
-
- 0 replies
- 423 views
-
-
அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதோ இல்லையோ தெற்கில் அதனை வைத்து தாராளமாகவே அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதையடுத்து, சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆவா குழு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் தான், இப்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஆகப் பிந்திய விவகாரமாக மாறியிருக்கிறது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் ஆரம்பிக்கும் புதிய கட்சி தொடர்…
-
- 0 replies
- 761 views
-
-
நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:- யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் …
-
- 0 replies
- 464 views
-
-
ஜெயிக்கப் போவது யார்? எதிர்வரும் 4 வருட காலத்திற்கு அமெரிக்காவின் தலைவிதியை மட்டுமல்லாது உலகின் தலைவிதியையே தீர்மானிக்கப் போகும் முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வாக்களிக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். அமெரிக்காவின் 58 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. அமெரிக்காவினதும் உலகினதும் தலைவிதி வாக்காளர்களின் தோளில் முள் முனையில் நிற்பது போன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்து நிதர்சனமானது என்பது கண்கூடு. நேரத்துக்கு நேரம் தனது கருத்துகளை மாற்றி சலசலப்பை ஏற்ப…
-
- 0 replies
- 578 views
-
-
எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …
-
- 0 replies
- 332 views
-
-
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: அவசியம்தான்; ஆனால்...! பைஸ் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் சந்தேகங்களும் சர்ச்சைகளும் தோற்றம் பெற்றிருக்கின்றன. இதுவே இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிரதான பேசுபொருளாக மாறியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இச் சட்டத்திருத்தம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது. ''முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான…
-
- 0 replies
- 366 views
-
-
மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா? எம்.சி.நஜிமுதீன் – அரசியலமைப்பினூடாக பெளத்த மதத்திற்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளபோதும் அதனை அடிப்படையாகக்கொண்டு ஏனைய சமயத்தவரை நெருக்கடிக்குள்ளாக்கும் ஏற்பாடுகள் அதில் இல்லை. பெளத்தர்களைப்போல் ஏனைய சமூகத்தினர் தமது சமயக் கலாசாரங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை அரசியலமைப்பினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கு சிலர் தவறான புரிதல்களைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய சமயத்தினரை வஞ்சிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். மேலும் கடந்த ஆட்சியில் சிறுபான்…
-
- 0 replies
- 418 views
-
-
ஆவா குழுவும் இராணுவமும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக…
-
- 0 replies
- 305 views
-
-
கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை வடக்கு மாகாணத்துடன் இணையாவிடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்சரிக்கையை பகிரங்கமாக விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அதாவது வடக்கும் கிழக்கும் இணையாது பிரிந்து செயற்படுமாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய்விடும். கிழக்கு மாகாணமானது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிமை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. எனவே இரு மாகாணங்களும் இணைக்கப்படவேண்டியது அவசியமானது. அவசரமான தேவையுங்கூட. இந்த நிலைப்பாட்டிலேயே த.தே.கூட்டமைப்பு உள்ளது என்ற ய…
-
- 0 replies
- 438 views
-
-
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் கனவு மொஹமட் பாதுஷா சொந்த மண்ணில் வாழக் கிடைப்பது என்பது ஒரு வரமும் கொடுப்பினையுமாகும். ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது’ என்பார்கள். அதுபோலவே,இலங்கையில் பிறந்த யாராவது அமெரிக்காவிலோ, லண்டனிலோ அல்லது கனடாவிலோ மிகவும் சந்தோசமாக, பணம் படைத்தவராக, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவரது மனதில் தனது தாய்மண் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டேயிருக்கும். வாழ்வின் நிர்ப்பந்தங்களாலும் காலத்தின் கட்டாயத்தின் பெயரிலும் உள்நாட்டுக்குள்ளும், நாடுகடந்தும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம், தமது சொந்த இடத்துக்குத் திரும்புதல் பற்றிய கனவொன்று இருக்கவே செய்யும். யாழ்ப்பாணத்தில் இருந்து இ…
-
- 0 replies
- 329 views
-
-
குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி, மாணவர்கள் கொலைக்குப் பதிலடியாகச் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸாரைத் தாமே வெட்டிக் காயப்படுத்தியதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் உரிமை கோரப்பட்டிருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், தமிழ்ப் பொலிஸாரே மாணவர்கள…
-
- 0 replies
- 330 views
-