அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழுபறியின் பின்னர் கூட்டு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் இன்னும் இது குறித்த அதிர்வலைகள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்வாகங்கள் கொண்டுவர முனைவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக மேலெழுந்து வருகின்றன. இத்தகைய தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றி…
-
- 0 replies
- 494 views
-
-
மெல்ல சாகிறதா பொறிமுறை ? ரொபட் அன்டனி தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் உருவெடுத்துள்ள அரசியல் அதிகாரப் போராட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. நியாயமான கேள்வியாகவே இது அமைந்துள்ளது. தென்னிலங்கையில் அரசியல்வாதிகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு சுயலாப அரசியல் கருவியாக பயன்படுத்துவதை காண முடிகிறது. நாட்டில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், அரசியல் காய்நகர்த்தல்களை பார்க்கும் போது எங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற…
-
- 0 replies
- 310 views
-
-
புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, கிழக்குக்கு வெளியேயுள்ள மாகாணங்கள் அல்லது மாவட்டங்களில் மலையகம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் சாதகமான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மாவட்டங்களில் இனவாத தீ கொழுந்து விட்டெரியும் சூழ்நிலையொன்றை உருவாக்க இனவாதிகளும் மதவாதிகளும் மஹிந்த தரப்பினரும் தேசிய மிதவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கின்ற பேரின புத்திஜீவிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான யதார்த்தம். புதிய அரசியல் அமைப்பிற்கு பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்று நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பான்மை …
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கைக்கான எச்சரிக்கை கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், இரகசிய தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொடூரமான சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் போக்கைச் சாதகமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், இனங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளைப் பெயரளவில் ம…
-
- 0 replies
- 316 views
-
-
வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம் ‘பாய்வது’ சரியான நடைமுறையா? நாட்டில் இப்போது பயங்கரவாதம் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியிருக்கின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் உறுதியாக அறிவித்திருக்கின்றது. இத்தகைய நிலையில்தான் வடமாகாணத்தின் பல இடங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்; கைது செய்யப்பட்டு வருகின்றார்கள். பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயற்பாடுகளும் இல்லாவிட்டால்…
-
- 1 reply
- 516 views
-
-
எரிதணல் மொஹமட் பாதுஷா இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அ…
-
- 0 replies
- 514 views
-
-
முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம் என்றால், ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னைய இலங்கையில், நாட்டைக் கைப்பற்றி, காலனித்துவ ஆட்சி புரிந்த வெளிநாட்டவர்களுக்கெதிரான போராட்டத்தால் அமைதிக் குலைவு காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னர், இங்குள்ள இன, மதப் பிரிவினருக்கிடையில் முறுகல்கள் நிலவி வந்தன. அதில், தமிழ் மக்கள…
-
- 0 replies
- 551 views
-
-
சைப்ரஸ்: அமைதியைத் தேடி -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை. எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை. சின்னஞ்சிறிய நாடான சைப்ரஸ் உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பழைய முரண்பாடுகளில் பிரதானமானதைத் தன்னகத்தே கொண்டது. அந் நெருக்கடியை…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்! 11/23/2016 இனியொரு... தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப…
-
- 0 replies
- 443 views
-
-
இப்போது என்ன தேவை? செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும் முரண்பட்ட தன்மைகளும் போக்குகளும்கூட காணப்படுகின்றன. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவின் விளிம்பில் இருப்பதான தோற்றம் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இலங்கைத் தழிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கியிருப்பதனால், கூட்டமைப்பினுள்ளே முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவு…
-
- 0 replies
- 748 views
-
-
முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு சில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர்களிடம் கூறினார். அவ்வியக்கத்தில் சேர்வதற்காக இலங்கையிலிருந்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகக் கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கூறினார். முப்பத்து ஆறு ஒன்பது மாதங்களுக்குள…
-
- 0 replies
- 393 views
-
-
அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில மனத்தடைகள் உண்டு. அதாவது, மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையைப் புதிய அரசாங்கமும் அதிகரித்திருக்கின்…
-
- 0 replies
- 229 views
-
-
மாவீரர் வார அரசியல் தெய்வீகன் தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அ…
-
- 0 replies
- 378 views
-
-
நிதானத்துடனும் அதேநேரம் அவதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும் நாட்டின் அரசியல் சூழலில் தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அதனூடாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் என்பன தொடர்பிலேயே பாரிய வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக அரசியலமைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்படும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர். இந்த அரசியல் தீர்வு என்று வரும்போது அது மிகவும் ஒரு உணர்வுபூர்வமான விடயமாகவே காணப…
-
- 0 replies
- 312 views
-
-
ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற விவாதங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த வெற்றியின் தாக்கம் இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் வலுவடைந்திருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் வெள்ளையினத் தேசியவாதத்தை முன்வைத்தே வெற்றியைப் பெற்றிருந்தார். கறுப்பர்கள்,முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் பெரும்பான்மையினரான வெள்ளைய…
-
- 7 replies
- 620 views
-
-
‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …
-
- 0 replies
- 491 views
-
-
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவை நாட்டில் நாள்தோறும் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத நடவடிக்கைகளை பார்க்கின்ற போது தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும் . கடந்த அரசாங்கத்தில் பௌத்த இனவாத அமைப்புக்களின் தேரர்கள் தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக பல அதர்ம செயற்பாடுகளை மேற்கொண்டார்கள். அமைச்சர் ஒருவரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி உட்புகுந்து இன்னுமொரு தேரரை தேடினார்கள். இந்த இனவாத்தின் உச்சக்கட்டமாக தர்கா நகர், பேருவளை ஆகிய இ…
-
- 2 replies
- 592 views
-
-
சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும் வெளிநாட்டு முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நிலையான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சீனா தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட இதனை ஒரு நிபந்தனையாக விதிக்கின்ற அளவுக்கு சீனா சென்றிருப்பதாகத் தெரிகிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர், கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு, கடன்களுக்கான வட்டி வீதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட செய்தியாளர் சந்…
-
- 1 reply
- 393 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-5 வடக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர் // சி.வி. விக்னேஸ்வரன்
-
- 0 replies
- 330 views
-
-
மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு பிக்கு இனங்களுக்கிடையிலான பகையை தூண்டும் வார்த்தைகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி ஒரு அரச ஊழியரைக் கீழ்மைப்படுத்தும் போது சட்டம் ஒழுக்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அதைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலவில்லை. அவர்கள் அந்த பிக்குவுக்குக் கீழ்ப்பட்டவர்களாக…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு? - யதீந்திரா தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது, ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். சிறிலங்காவின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை…
-
- 0 replies
- 523 views
-
-
சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்பூசணிக்காயை ஒரு தட்டுச் சோற்றில் மறைக்க முற்படுவது போல் இன்றைய நல்லாட்சி அரசாங்கமானது முன்னைய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையும் குற்றத் தொகுப்புகளையும் குலநாச செயல்களை யும் மறைக்க முயல்வது எவ்வளவு காலத்துக்கு உள்நாட்டு அரங்கி லும் சர்வதேச அளவிலும் செல்லுபடியாகப் போகிறது என்பதும் ஒரு விபரீதமான எதிர்ப்பார்ப்புத்தான். சித்திரவதைகள் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், இரகசிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், பாலியல் வன்மங்கள் என்ற மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கேவல வித்தைகளில் ஈடுபடும் எந்தவொரு ந…
-
- 1 reply
- 401 views
-
-
விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடுபிடிக்கும் அரசியல் கள நகர்வுகள் ரொபட் அன்டனி ""எலிவென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்களத்தில் கூறுவார்கள். அதாவது விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தற்போது எமது நாட்டிலும் இவ்வாறு நல்ல நல்ல அரசியல் விளையாட்டுக்களை காண முடிகின்றது. காரணம் நாட்டின் அரசியல் நகர்வுகள் பரபரப்பாகின்றன. அரசியல் காய் நகர்த்தல்கள் சூடு பிடிக்கின்றன. அடுத்து அரசியலில் என்ன நடக்கப்போகின்றது? முன்னாள் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இணைந்துகொண்டுள்ள சிற…
-
- 0 replies
- 324 views
-
-
தலைவிரித்தாடும் இனவாதம் ! செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலை நாட்டுவதில் அரசாங்கம் பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ள ஒரு நிலையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் வீரியமுள்ளதாக இருக்க முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இரண்டும் இருவேறு விடயங்களாக …
-
- 0 replies
- 360 views
-
-
கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக…
-
- 0 replies
- 416 views
-