அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
காஷ்மீரிகளின் கறுப்புத்தினம் -மாலிக் அப்துல் ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும். இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற சொர்க்கமான காஷ்மீரின் ஒரு பகுதியினை வலுக்கட்டாயமாக இந்திய இராணுவம் கைப்பற்றியதுடன் அதனை நரகமாக மாற்றியுள்ளது. காஷ்மீரியர்கள்;, அவர்களது தாய் நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், பிராந்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர் மனித உரிமை மீறல்கள், இரத்த நீரோடைகளை உருவாக்குதல், உடைமைகளை அழித்தல், ஜனநாயக…
-
- 0 replies
- 264 views
-
-
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாத சேவையொன்றை அவரால் செய்ய முடிந்திருக்கின்றது. மேலும், அவரின் பெயர் தொடர்ச்சியாக பிபிசி நிறுவனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிபிசி சேவையின் ஊழியர் ஒழுங்குவிதியிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் விடுபட்டிருக்கும் …
-
- 0 replies
- 441 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள்; அரசாங்கம் என்பதையும் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருப்பதை வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு எடுத்துக் காட்டியது. வாக்களித்த மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும்போது அதற்குப் பொறுப்பான முறையில் பதில் வழங்க வேண்டியது கடமை. ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பில் கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில் நாங்கள் செய்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியில் அமைந்திருந்தது. ரணில் கிளித்தெறிந்த தீர்வு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 355 views
-
-
அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், தமிழ்த் தேசியவாத தரப்பினர் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் அரசியல் பரப்பில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்துவரும் சுமந்திரன் வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்திருந்த கருத்துக்களே மீளவும் சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடப்பட்டுவருகிறது. 30 வருடம் போராடி என்னத்தை கண்டிங்க என்று சுமந்திரன் கேட்கிறார். அமிர்தலிங்கத்தைப் பற்றி நீலன் திருச்செல்வத்தை பற்றி கூறினீர்கள் – அவர்கள் இப்போது …
-
- 0 replies
- 422 views
-
-
ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அ…
-
- 0 replies
- 374 views
-
-
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமை…
-
- 0 replies
- 313 views
-
-
கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது. படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும…
-
- 0 replies
- 233 views
-
-
கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும் 10/24/2016 இனியொரு... யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத…
-
- 1 reply
- 496 views
-
-
திட்டமிட்ட செயற்பாடுகளை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்கவேண்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலையினை கண்டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதனைவிட வடக்கு உட்பட நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நண்பர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி பெரும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் நேற்று முன்தினம் யாழ்ப்பாண செயலகத்தை முடக்கி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது. கொட்டும் மழைக்கு மத்தியில…
-
- 0 replies
- 245 views
-
-
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்க…
-
- 0 replies
- 214 views
-
-
சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா – அம்ரித் பெர்னான்டோ:- சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா அம்ரித் பெர்னான்டோ இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை அபாயத்துக்குள்ளாக்கும் அறிஞர்களின் அறிக்கை? இலங்கையில் தமிழர்களின் கடைசி அடையாளமாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஒழுக்க விழுமியத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா? தண்ணீர் மக்களது அடிப்படையான உரிமை Water is the basic human rights இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்ட யுத்தம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு வந்தாலும் இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு…
-
- 0 replies
- 650 views
-
-
வழிய வழிய வாக்குறுதிகள் முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்த முடியாது போய்விடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக, அரசியல் கட்சிகளின் ‘எதிர்க்கடை வியாபாரம்’ சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னர் முஸ்லிம் காங்கிரஸும், …
-
- 0 replies
- 270 views
-
-
சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? ப.தெய்வீகன் அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இந்தச் சாக்குரலின் சத்தங்களுக்கும் நீதியை நோக்கிய கேவல்களுக்கும் என்ன நடந்துவிடப்போகிறது என்று பார்த்தால், புங்குடுதீவுச் சம்பவமாகவும் வவுனிய…
-
- 0 replies
- 305 views
-
-
கொழும்பு அரசியலின் சலசலப்பும் யாழ். இளைஞர்களின் மரணமும் - ஜீவா சதாசிவம் “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு இருக்கின்றது'' என்று தனது உளமார்ந்த கருத்தை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் ஒரு 'இராஜாவாக' இருந்த பஷில் ராஜபக் ஷ. இதற்கான காரணத்தையும் அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ''மேற்படி ஜனாதிபதிகளுக்கு மாத்திரம் தான் சிறுபான்மையினர் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளை வழங்கி அவர்களை ஆட்சிக்…
-
- 0 replies
- 404 views
-
-
ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ, 'அவனுங்க சுத்த சோம்பேறிங்க. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க. இந்த நாட்டை வளப்படுத்துன நாங்கதான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு' என்று உரிமை கொண்டாடும். இரு தரப்பிலும் இனக்கலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைஞர்கள் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்துவிடக் கூடாது என்று ரொம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இன்னும் தொடர்கிறதா?
-
- 0 replies
- 256 views
-
-
ஐ.நா மெய்யாகவே மனித குலத்தை பாதுகாக்கும் அமைப்பா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒக்டோபர் 24. இன்று ஐ.நா தினமாகும். 1945 ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. உலகில் உள்ள நாடுகளின் அமைதி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தேசங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலக அரசாக ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி ஐ.நாவில் 193 நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இன்னுமொரு உலகப் போர் நடைபெறாத வகையில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டோல் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்தார். வ…
-
- 0 replies
- 421 views
-
-
மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்டூழியங்கள் யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை மாயம் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் உரிமைக்காக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்த குரல் இலங்கையின் குரல். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜெரூஸலம் நகரில் அல் குத்ஸ் வளாகத்துக்குள் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஹரம் அல் ஷரப் பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் 2016 அக்டோபர் 13இல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது இலங்கையின் குரல் மௌனித்துப் போய்விட்டது. மிகவும் கௌரவமான முறையில் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த இலங்கைய…
-
- 0 replies
- 430 views
-
-
வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைகொண்டிருப்பது மீண்டும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதனால் வடபகுதி மக்கள் தங்கள் அன்றாட கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாதவர்களாகவும் சுதந்திரமாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், அநாவசியமான புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டு வருவதும் பொதுவிடயங்களில் கூட தங்கள் தலையீடுகளை மேற்கொள்வதும் வழமையான ஒன்றாகவுள்ளது. இவை அனைத்துக்கும்…
-
- 0 replies
- 370 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து முதலில் அச்சமூகத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்காது அமைப்பு, கட்சி, தொழில் உள்ளிட்ட விடயங்களுக்குள் தமது நடவடிக்கைகளை சுருக்கிக் கொண்டு செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு தம்மால் முடிந்த காரியத்தை செய்வதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அரசியல் கட்சிக…
-
- 1 reply
- 537 views
-
-
சிவசேனா எதனைச் சாதிக்கப் போகிறது? அண்மையில் வவுனியாவில் சிவசேனா என்ற அமைப்பு தொடங்கப்பட்ட விவகாரம், தமிழ் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. எழுக தமிழுக்குப் பின்னர் தமிழர் அரசியல் அரங்கில் சிவசேனா தான் கூடுதல் பரபரப்பைத் தோற்றுவித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்ப்பற்றாளரும், தமிழறிஞருமான மறவன்புலவு சச்சிதானந்தம் இதன் அமைப்பாளராக இருக்கிறார். அவரது ஏற்பாட்டில் வவுனியாவில் நடந்த சிவசேனா ஆரம்ப நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் பங்கேற்ற…
-
- 0 replies
- 486 views
-
-
மீண்டும் எழுந்துள்ள படைக்குறைப்பு கோரிக்கை இலங்கையில் மேற்கொண்ட பத்து நாட்கள் பயணத்தின் முடிவில் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா. போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கில் அதிகளவு படையினர் நிலை கொண்டிருப்பதையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் அவர் தனது பயணத்தின் போது நேரடியாக கண்டிருக்கிறார். பல்வேறு சந்திப்புகளின் மூலம் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். இத…
-
- 0 replies
- 500 views
-
-
முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா? அண்மைக் காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரமுகர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது வழக்கமாகிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்திற்குப் பிற்பாடு தேசிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகளுடன் கடைப்பிடிக்கும் நெகிழ்வுத் தன்மையான போக்கே இதற்குக் காரணமாகும். இதன் தொடரில் தான் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த 10 நாட்களாக இலங்கையில் தங்கியிருந்த அவர் பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் நேற்று முன்தினம் க…
-
- 0 replies
- 491 views
-
-
காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன? இலங்கைத்தீவில் அரசியல் காரணங்களின் அடிப்படையில் காணாமல் போவோர் என்பது இன்று நேற்று அல்ல குறைந்தது, கடந்த 45 வருடங்களாக, அதாவது தெற்கில் சேகுவரா க்கள் என அன்று கூறப்பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்று தெற்கின் சிங்கள இளைஞர், யுவதிகளுடன் ஆரம்பமாகிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவது ஆரம்பமாகியது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோர் அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்கள் தமிழர்களது தாயக பூமியின் நாலாபக்கமும் …
-
- 0 replies
- 363 views
-
-
தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் கிள்ளுக்கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பான்மை இன மக்களின் தயவில் வாழ வேண்டிய நிலையில், இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, படிப்படியாக, இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையே இப்போதும் காணக் கூடியதாக இருக்கின்றது. பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பல மதங்களை அவர் கள் பின்பற்றி வருகின்றார்கள். இந்த நாட்…
-
- 0 replies
- 351 views
-