அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன் வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். '2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை' என்று. அந்த அரங்கு ஒரு சமநிலையற்ற அரங்கு என்று வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார் அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்களுமே பங்கேற்றிருந்தபடியால் …
-
- 2 replies
- 724 views
-
-
மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன், கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பாரென்ற ஓரளவு உறுதியான நம்பிக்கை, இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு அனுபவமும் திறமையையும் கொண்ட ஒருவர், தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தான், தனது வெற்றியை ஓரளவு உறுதிப்படுத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இம்முறை தேர்தல், ஆச்சரியங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்திய தேர்தலாக இருக்கையில், அவ்விடயத்த…
-
- 0 replies
- 405 views
-
-
உண்மையான தீர்வை நோக்கி தமிழ் மக்களை அழைத்துச் செல்லுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எழுதிய கடிதம் நான் ஏற்கனவே கூறியது போல் கடிதத் தொடரின் நான்காவது கடிதம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். வழமைபோலவே இது புறக்கணிக்கக்கூடியதல்ல. தற்போதைய மோசமான நிலைமையை பற்றி நீங்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. கனடா நாட்டின் ரொறொன்டோ ஒன்டாரியோவில் விசாரிக்கப்பட்டு, ஒட்டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதிமன்றத்தில் இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணை ஒன்றின் தீர்ப்பு 25.8-.2016 இல் வழங்கப்பட்டது. முன்னைய எனது கடிதத்திலும் இந்த வழக்க…
-
- 1 reply
- 635 views
-
-
தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்? வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு - கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூ…
-
- 0 replies
- 471 views
-
-
‘எழுக தமிழ் அரசியல் கட்சிகள்’ காலத்தின் தேவை தெய்வீகன் ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகள் தமிழ் மக்களின் மத்தியில் மேற்கொள்ளப்படுவதிலும் பார்க்க அவ்வாறான - அல்லது அதற்கு சம செறிவுள்ள கலந்துரையாடல்கள் - தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவை என்று கடந்த தடவை எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் மேற்குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் ஆழமாக உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு வெவ்வேறான நிகழ்வுகளையும் சற்று ஆழமாகப் பேசினால் பல வினாக்களுக்கு…
-
- 0 replies
- 571 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பிலான தடுமாற்றங்கள் இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளின் பிரதான நோக்கங்களில் முதன்மையானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்றே கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரையில் அந்த ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்பதே உண்மையாகும். தடுமாற்றமான கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்ட வண்ணமேயிருக்கின்றன. அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக பிரதமரினால் நியமிக்…
-
- 0 replies
- 351 views
-
-
பாகிஸ்தானிலும் சீனாவிற்கு அமெரிக்கா ஆப்புவைக்க முடியுமா? உலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரிபொருள் வழங்கல் முக்கியமாகும். சீனாவின் மாற்று வழிகள் மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகியவற்றில்…
-
- 0 replies
- 615 views
-
-
அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்? தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண சுகமடைந்து கடமைக்குத் திரும்பவேண்டுமென்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. முதல்வரை பார்க்க வேண்டும், அவரது உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருக்கும் அவா அதைவிட அதிகம். ஆனால், உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி முழு தமிழக மக்களுமே திகைப்பில் இருக்கின்றனர். தமது இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதும், நேர்த்திக்கடன் வைப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், காணிக்கை செலுத்துவதுமாக இருக்கின்றனர். அப்…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968…
-
- 0 replies
- 512 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய வடக்கு முதலமைச்சருக்கு மஹிந்த வழங்கிய நற்சான்று இவ்வார அரசியல் களமானது சகல பக்கங்களிலும் ஆச்சரியத்தை தருவது மாத்திரமல்ல சூடு பிடித்திருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நகர்வுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது என்பது எமக்குத் திகைப்பையூட்டியுள்ளது. கடந்த கால அரசியலில் காணப்படாத மாற்று நிலைப்போக்குக்கள், வித்தியாசம் வித்தியாசமான அரசியல் நகர்வுகள், சம்பவங்கள், பேராட்டங்கள் திகிலைத்தருவதுடன் பல திருப்பங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது இவ்வாரத்தில் கவனம் பெறும் விடயங்களாக மாறியுள்ளன. இலங்கை அரசியலில் இப்படியொரு அதிசயமும் இடம்பெற முடியுமா? என்று எண்ணவும் சிந்திக்கவும் வைக்கிறது. அரசியல் சுற்றுலா என்ற…
-
- 0 replies
- 474 views
-
-
ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு தமிழர்கள் மத்தியிலுள்ள மூத்த அரசறிவியலாளர் என்று சொல்லத்தக்கவரும், அரசியல் ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய, “அரசியல் யாப்பு- டொனமூர் யாப்பு தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை“ என்ற நூலின் அறிமுக விழா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த விழாவில் நூல் அறிமுகத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட, அதன் உள்ளடக்கம் சார்ந்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைவிட, அரசியல் முரண்பாடுகள் பற்றிப் பேசுவதற்கே பேச்சாளர்கள் பலரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர், துருவநி…
-
- 0 replies
- 652 views
-
-
இனவாதியா விக்னேஸ்வரன்? இரண்டு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து, அதற்குத் தலைமை தாங்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இனவாதியாகச் சித்திரிக்கும் போக்கு, தென்னிலங்கையில் அதிகரித்திருக்கிறது. இனவாதம் பேசுவதாகவும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவதாகவும், மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர்கொடுக்க முனைவதாகவும், அவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இனவாதம் பேசும் வடக்கு மாகாண முதலமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. அவரைக் கைது செய்யக் கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளும் செய்யப்…
-
- 1 reply
- 351 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-15
-
- 0 replies
- 428 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-14
-
- 0 replies
- 450 views
-
-
அஷ்ரபும் வடக்கு - கிழக்கு இணைப்பும் ‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார். ‘‘வடக்கு, கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலம்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப், சம்மதத்தைத் தெரிவித்து இருந்தார்” என்ற சுமந்திரனின் கூற்றே, இந்தச் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டருக்கு எதிராக, வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,…
-
- 1 reply
- 419 views
-
-
யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தொடர்ந்தும் இயங்கும் பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கல்விமா…
-
- 0 replies
- 480 views
-
-
குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும்! காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாக உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்து சமுத்திர அரசியல்தான் இலங்கையின் அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கும் பாத்திரமும் வகிக்கக்கூடிய சர்வதேச அரசியலாகும். தற்போது இந்துசமுத்திர அரசியல் சூறாவளி அரபிக் கடலில் பாக…
-
- 0 replies
- 465 views
-
-
அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான த…
-
- 0 replies
- 490 views
-
-
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் தலைமைகள் எவரும் சிங்களத்துக்கான “தமிழ்த் தலைமையாக” நின்றுபிடிக்கவில்லை. அல்லது அப்படி கையில் கிடைக்கக்கூடியவர்களும் போதிய மக்கள் செல்வாக்குள்ளவர்களாக இருக்கவில்லை. அந்த இடத்தில் விக்னேஸ்வரனை முன்னிறுத்தும் பணி முழுமையாக சாத்தியப்படாமல் தொடர்ந்த நிலையில் இன்று “எழுக தமிழோடு” அவர்களுக்கு கை கூடியிருக்கிறது, முழுமை பெற்றிருக்கிறது. எழுக தமிழின் சுலோகங்களிலிருந்தும், விக்னேஸ்வரனின் வெளிப்பாடுகளிலிருந்தும் சி…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? - யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி, எது மகிந்த தரப்பு – என்று பிரித்தறிய முடியாதளவிற்கு 'எழுக தமிழை' எதிர்ப்பதில் அனைவருமே ஓரணியில் திரண்டிருக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானராச தேரர் தொடங்கி தங்களை இடதுசாரியினராக காண்பித்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன வரையில் வடக்கில் மீண்டும் இனவாதம் தோன்றிவிட்டதாகவும், புலிகள் விட்டுச்சென்ற இடத்தை விக்கினேஸ்வரன் பிடிக்க முயற்சிக்கின்றார் என்றவாறும் ஆவேசமாக பேசி வருக…
-
- 0 replies
- 490 views
-
-
எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது! - எழுத்தாளர் குணா கவியழகன் நேர்காணல் எழுத்தாளர் குணா கவியழகன் நேர்காணல் 'எழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. இந்தப் புள்ளி தான் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி. இதனைக் கூட்டமைப்பு சரியான முறையில் தமிழ் மக்களின் நலன் கருதிப் பிரயோகிக்க வேண்டும். இது தரக்கூடிய விளைவில் இருந்துதான் 'எழுக தமிழ்' செயலை விளக்க வேண்டும் என எழுத்தாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார். 'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பிலும் தற்கால அரசியல் போக்குகள் குறித்தும் பொங்குதமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இணக்க அரசியல் என்பது இருதரப்பிற்கும் உள்ள …
-
- 0 replies
- 466 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-17
-
- 0 replies
- 524 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-16
-
- 0 replies
- 559 views
-
-
எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. வடக்கில் தமிழ் மக்கள் தமது நீண்ட நாளைய தேவைகள், கோரிக்கைகளுக்காக எழுக தமிழ் மூலம் எழுச்சி பெற்றிருந்தார்கள். ஆனால் எழுக தமிழ் என்ற மகுடத்தைக் கண்டு இனவாத விஷத்தைக் கக்குவதற்காக நாட்டின் தென்பகுதி இனவாத, மதவாத சக்திகளும் அரசியல்வாதிகளும் எழுச்சி கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் உண்மையான அரசியல் நிலைமை என்ன, அங்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, நிதானமாகச் சிந்திப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதும…
-
- 0 replies
- 339 views
-
-
‘எழுக தமிழ்’ தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வாக வேண்டும் தமிழ் மக்களின் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தியும் அவை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு உணர்வு பூர்வமாக எழுக தமிழ் பேரணியை நடத்தியிருந்தார்கள். வடக்கு, கிழக்கை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரண சுயாட்சியையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டி ஆட்சி முறையிலான தீர்வே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்ற கருத்தையும் உரக்கவே கூறியிருந்தார்கள். …
-
- 0 replies
- 913 views
-