அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன். * கடந்த டிசம்பர் 5ம் திகதி புதிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைசரவை அனுமதியின்றி (cancelation of permits for the transportation of rocks, sand, and soil) கல் மண் மணல் ஏற்றிசெல்ல அனுமதிக்கும் ஆபத்தான முடிவை எடுத்தது. டிசம்பர் 5ம் திகதியே உடனடியாக இந்த சூழல் விரோதச் சட்டம் அமூலுக்கு வந்த கையோடு யாழ்பாணக்குடாநாட்டையும் இலங்கையையும் இணைக்கும் சுண்டிக்குளம் மணல்திட்டை அபகரிக்கும் முயற்சி தீவிரமானது. மக்கள் எதிர்த்த இடங்களில் எல்லாம் பொலிசாரைக் கொண்டு மக்கள் அடித்து ஒடுக்கப்பபட்டார்கள். உண்மையிலேயே பெரும்பாலும் மணல் மேடுகளான தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிவின் வ…
-
- 0 replies
- 425 views
-
-
Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன். இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது. மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்…
-
- 0 replies
- 809 views
-
-
மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி...... அண்மைக்காலமாக நம்மட உறவுகள் சிலர் நடந்ததை மறந்து மீண்டும் ஒரு மாயைக்குள் விழத்தொடங்கியுள்ளனர்.....அதுதான் உந்த ஏமாத்து அப்புகாத்துகளின் மண்குதிரை சவாரியில். தமிழர்களின் இழப்புக்களாலும் தியாகங்களாலும் கிடைக்கும் ஒரு சமாதான இடைவெளியில் தங்களது குதிரையை கொணந்து ஓடவிடுவதில் கஜே கோஸ்டிக்கு நிகர் யாரும் கிடையாது. இப்படியே கொண்டுவரும் மன்குதிரையை சோடிச்சு அதில் அப்பாவிதமிழர்களை உசுபேத்தி ஏத்திவிடுவதில் மகா சூரர்கள்...அதுக்கு சிலர் விளங்கிக்கொள்ளாமல் பிற்பாட்டு பாடுவதே மிகவும் கவலைக்குரிய விடயம். மண்குதிரை உடைந்து உசுபேறி ஆடிய மக்கள் இன்னலில் மாட்டும் போது இந்த கஜே கோஸ்டி நிண்ட இடம் தெரியாமல் ஓடிவிடும்... ஆமிக்காரனுக்கு 40000 சவப்பெ…
-
- 28 replies
- 1.8k views
-
-
நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன் டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள். அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் …
-
- 5 replies
- 1.3k views
-
-
மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும். ஆனால், அதனால் வெளிநாடுகளின் நெருக்குதல் இத்தோடு முடிவடைந்ததாக அர்த்தமாகாது. ஏனெனில் அந்தப் பிரேரணை இலங்கைக்கு சில பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 594 views
-
-
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் …
-
- 0 replies
- 227 views
-
-
மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 36 Views “இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்திசை வழியே மாறா உறுதியுடன் பயணித்து முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்படும் வரை எமது உறவுகளின் எண்ணம்-கனவு-இலட்சியம் என யாவுமாக இருந்தது என்னவிலை கொடுத்தேனும் விடுதலையை பெறுவது என்பதாகவே இர…
-
- 0 replies
- 557 views
-
-
மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை. PostDateIcon புதன்கிழமை, 20 மார்ச் 2013 05:52 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன், ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின்,திமுக, ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக, ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி, வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ, மறந்தேனும் நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக…
-
- 0 replies
- 691 views
-
-
மண்ணெண்ணெய் விலை உயர்வு ‘நெருப்புடன் விளையாட்டு ‘ தேவக குணவர்த்தன அகிலன் கதிர்காமர் அரசாங்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தில் உழைக்கும் மக்கள் மீது பெருந் துன்பதை தரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிற்றர் 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக – அல்லது தற்போதுள்ள விலையை கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்துவது – மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். படகுகளுக்கு மண்ணெண்ணெய்யை நம்பியிருக்கும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அத்துடன் மண்ணெண்ணெய்யை தங்கள் விளைநிலங்களுக்குப் நீர்ப் பாசனம் செய்யும் சிறு விவசாயிகளும், சமையலுக்கு மண்ணெண்ணெய்யை…
-
- 0 replies
- 382 views
-
-
மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் : மோகனராஜன் இன்றைய உலகில் மக்களை பிளவுபடுத்தி ஏமாற்றி சுரண்டி, துன்படுத்தி இலாபம் சேர்க்கும் இரண்டு அரசியல் கருத்தேற்புகளாக மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் காணப்படுகின்றன. இவை ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு ஒன்றின் மேல் மற்றொன்று பயணிக்கின்றன. இவை மக்களை அடையவும், மக்களுடைய புரட்சிகரமான எண்ணத்தை மழுங்கடிக்கவும் உலகமயமாதல் நவ-தாராண்மைவாதம், பின்நவீனத்துவம் எனும் மாயைகளின் ஊடாக மக்களை தம்வசப்படுத்தல், அடிமைத்தனமான எண்ணங்களையும் சுயநலத்தினையும் கொண்ட பண்பாட்டு சீரழிவான சமூகத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். மதம் எங்கு சமூகத்திற்கு எதிராக செயற்பட தொடங்குகின்றதோ அங்கு மத அடிப்படைவாதம…
-
- 2 replies
- 1.9k views
-
-
மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை தேவை - இன, மதங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி மக்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வைப்பதும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் தெய்வசிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியிலி…
-
- 0 replies
- 267 views
-
-
மதவாதிகளால் சீரழிகின்ற- இலங்கைத் திருநாடு!! ‘‘இந்த நாட்டின் பெரும்பான்மையினமான பெளத்த சிங்கள மக்களையும், பெளத்த தேரர்களையும் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக மகிந்த கூறியிருப்பது சிறுபிள்ளைத் தனமானது. மதத் தலங்கள் கட்டுப்பாடுகளின்றி நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் ஒன்றை அரசு தயாரித்து வருவதைத் திரிபுபடுத்திக் கூறி, மக்களை அரசுக்கு எதிராகக் கிளர்ந்ெதழச் செய்வதே மகிந்தவின் நயவஞ்சகத் திட்டமாகும். பெளத்த மதத்தின் ஆதிக்கம் அரசினுள் நி…
-
- 1 reply
- 628 views
-
-
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் மொஹமட் பாதுஷா / 2020 ஜனவரி 03 , மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும். ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழ…
-
- 0 replies
- 513 views
-
-
மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள் Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த விதத்திலும் ஓர் ஆச்சரியமாக இருக்க முடியாது. செயலணிகளை நியமனம் செய்யும் வழமை கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியை பொறுத்தவரையில் இயல்பான ஒரு காரியமாக மாறி வருகின்றது. கடந்த இரு வருட காலத்திற்குள் அவ்விதம் 10 செயலணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்…
-
- 0 replies
- 418 views
-
-
மதங்களின் பெயரால் பிணந்தின்னிகள்... கனகலிங்கம் கோபிகிருஷ்ணா முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின் முடிவில், ஈகைத் திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ள சில தாக்குதல்கள், ஒரு விதமான அச்சத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற பணயக்கைதிகள் விவகாரம் அதில் முதலாவதுƒ ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அடுத்ததுƒ சவூதி அரேபியாவிலும் இந்தோனேஷியாவிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மூன்றாவது. டாக்காவில், இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் உணவருந்தும் இடத்துக்…
-
- 0 replies
- 527 views
-
-
மதசார்பற்ற நாடு அவசியமா? இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது. இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான க…
-
- 2 replies
- 731 views
-
-
மதச் சகிப்பின்மையும் ‘இலங்கையர்’ என்ற அடையாளமும் இன்று இலங்கை எதிர்நோக்கும் சவால்களில் பிரதானமானது, இலங்கையின் பல்லின அடையாளத்தைத் தக்கவைப்பதாகும். ஒருபுறம், இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் எல்லோரையும் உள்ளீர்க்க அரசாங்கம் முயல்கின்ற அதேவேளை, இலங்கையில் மத சகிப்பின்மை வளர்ந்துள்ளது. இன்றைய இலங்கை அரசாங்கத்தின், நீக்கமற நிறைந்த அங்கமாக, பௌத்த சிங்கள தேசியவாதம் நிலைபெற்றுள்ளது. இது, அரசு கோருகின்ற ‘இலங்கையர்’ என்ற அடையாளம், யாது என்ற வினாவை எழுப்புகிறது. இலங்கையர் என்ற அடையாளம், தனிமனிதர்களது இனத்துவ, மத அடையாளங்களை அங்கிகரித்து, அதனூடாகத் தோற்றம் பெறுகின்ற அடையாளமா அல்லது பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரம் கோருகின்ற ஒற்றைப்பர…
-
- 0 replies
- 418 views
-
-
மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:34 Comments - 0 -இலட்சுமணன் உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன…
-
- 0 replies
- 472 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணம…
-
- 1 reply
- 725 views
-
-
மதமும் கடவுளும் - மண்டேலா தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை, தியாகத்திருஉருவம், மாமனிதர் நெல்சன் மண்டேலா ஆங்கிலஇதழொன்றுக்கு மனம் திறந்துஅளித்த பேட்டி இங்கே தமிழில்: கேள்வி: பல்லாண்டுக் கால அடக்குமுறை. சிறைவாசத்தைத்தொடர்ந்து இறுதியில் அரசியல் சுதந்திரம் அடைந்தபோது, நீங்கள்இதயத்தில் பழிவாங்கும் உணர்ச்சி மிக்க ஒரு தலைவராகஇருப்பீர்கள் என மக்கள் கருதியிருக்கக் கூடும். எனினும், நீங்கள்சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் பாதை எத்தனைசக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம்அடைந்தீர்களா? மண்டேலா: மக்களை நீங்கள் எந்த முறையில் அணுகுகிறீர்களே,அதற்கேற்பத்தான் அவர்களது பதில் அணுகுமுறையும் இருக்கும்.நீங்கள் வன்முறை அடிப்படையில் அணுகினீர்கள் என்றா…
-
- 1 reply
- 869 views
-
-
மதமும் மனிதர்களும் _____________________ உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது . இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் …
-
- 3 replies
- 958 views
-
-
-
- 0 replies
- 525 views
-
-
மதம் பிடித்த பிராந்தியங்கள் புதினப்பணிமனைMay 14, 2019 by in ஆய்வு கட்டுரைகள் மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், மத கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும் புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர். தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின…
-
- 7 replies
- 4.3k views
-
-
மதவாதமும் அரசாங்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தையும், தாயகப் பிரதேசத்திற்கான உரிமைக் குரலையும் இல்லாமற் செய்வதற்காகவும், அந்த அரசியல் கோரிக்கையை முறியடிப்பதற்காகவுமே வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றன. இலங்கை அரசியலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் இந்த வருடத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்தல், மற்றவர்களுடைய உரிமைகளை மதித்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, நீதியான செயற்பாடுகளை ஊக்…
-
- 0 replies
- 462 views
-