நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். . ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2010 16:44 “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். முன்னோட்டங்கள்… ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்புடையீர் (Letter is in English version is below) வணக்கம். தமிழகத்தில் எதிர் வரும் சூன் 23-27 நாட்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருப்பதை அறிவீர்கள். ஈழத்தில் ஒலிக்கும் அவலக் குரலை அமுக்கவே இந்த கொண்டாட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதையும் தாங்கள் அறிவீர்கள். இச்சூழலில் உலகெங்கிலும் உள்ள சிறந்த பிறநாட்டு தமிழறிஞர்களை இம்மாநாட்டிற்கு வரவழைக்கும் பெரு முயற்சி நடத்தப் பட்டு வருகிறது. அதன் விளைவாக வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் இம்மாநாட்டிற்கு வர ஒப்புதல் தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மிக மூத்தத் தமிழறிஞரான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் அடிப்படையில் ஒரு நேர்மையான தமிழறிஞர…
-
- 0 replies
- 741 views
-
-
CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா?? * இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செ…
-
- 11 replies
- 1.8k views
-
-
டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை ஏர்டெல் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தினர் பேசியதாவது, ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. ஃபிக்கி, இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது. உலகமே…
-
- 0 replies
- 811 views
-
-
http://uyirambukal.blogspot.com/2010/06/blog-post_3171.html இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................ புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்ப…
-
- 0 replies
- 707 views
-
-
Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests?- Vote Yes Vote Yes Vote Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home ==== Please comment here Big B should have attended IIFA Awards: Salman http://indiatoday.intoday.in/site/Story/99996/Top%20Stories/Big+B+should+have+attended+IIFA+Awards:+Salman.html ==== Muthamizh Chennai
-
- 2 replies
- 786 views
-
-
இலங்கை திரைப்பட விழாவில் விஜய் பட (சச்சின்) நாயகி ஜெனிலியா கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார். ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த வி…
-
- 0 replies
- 780 views
-
-
-
பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! சத்தியன் அண்மையில் வன்னிப்பகுதிக்கு பயணம் செய்த ஒருவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து நேரில் சேகரித்த தகவல்கள்: வன்னி நிலைமைகள் இன்னும் சீராகவில்லை என்று பலருக்கும் தெரியும். ஆனால், தெரியாத செய்திகள் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன. இந்தச் செய்திகளுக்குப் பின்னே மக்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதே இங்கே கவனிக்க வேண்டியது. வன்னி இப்போது பார்வையாளர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது வன்னி பொழுது போக்காளர்களுக்கான ஒரு மையமாக மாறிவருகிறது. வன்னிக்குச் செல்லும் பொழுதுபோக்காளர்கள் பல வகையினர். இதில் அமைச்சர்கள், தமிழ…
-
- 0 replies
- 746 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வன்னி மக்கள் படும் அவலங்களை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கொழுப்பு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாகத் த…
-
- 0 replies
- 518 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில வேளைகளில் இந்த விசாரணை முடிவுகள் நீதியின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில ஊடகமான பொஸ்டன் க்ளோப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. விசாரணைகளை நடத்தும் பொறுப்பை கண் மூடித்தனமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 511 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் – வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். சிறீலங்கா அரசின் இந்த இராஜதந்திரப்போர் என்பது எதற்காக? யாரை எதிர்த்து? உலகில் உள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மேற்குலகம், சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழுவை அமைக்க முற்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றை எதிர்த்தே சிறீலங்…
-
- 0 replies
- 504 views
-
-
துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்) http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார…
-
- 1 reply
- 1k views
-
-
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் எ…
-
- 12 replies
- 1.4k views
-
-
இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே! இந்திய நாளிதழ் குற்றச்சாட்டு http://tamilaustralian.com/ போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே? இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்…
-
- 0 replies
- 742 views
-
-
காலத்தின் கட்டாயமாக வலிக்கு மருந்து புலம்பெயர் தமிழீழத்திடமே!! http://www.nerudal.com/nerudal.15928.html http://www.nerudal.com/nerudal.15928.html உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு த…
-
- 1 reply
- 607 views
-
-
வன்னிப்பகுதியில் மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009 இன் ஆரம்பத்தில் எல்லாளன் திரைப்பட முன்னோட்டம் வெளியாகி இருந்தது.மிக நேர்த்தியான காட்சியமைப்புகளோடு இருந்த அந்த முன்னோட்டம் அநேகர் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பின் இறுகிய முற்றுகையும் முள்ளிவாய்க்கால் முடிவும் அத்திரைப்படம் தொடர்பிலான அக்கறையை இல்லாது செய்திருந்தன.ஆனால் இதையெல்லாவற்றையும் தண்டி இவ்வருட ஆரம்பத்தில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு இணையங்களூடாக இடுகையிடப்பட்டதோடு "நடவடிக்கை எல்லாளன்" என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கரும்புலிகள்,வான்புலிகள் நடத்திய வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை பற்றியதே எல்லாளன் திரைப்படம் என்பதைவிடவும் மேலதிக விடயங்கள்,பேட்டி…
-
- 2 replies
- 6.4k views
-
-
இலங்கையில் தற்போது கைத்தொலைப்பேசி வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ‐ உண்மையா? வதந்தியா? 08 May 10 01:37 am (BST) கைத் தொலைப்பேசிக்கு அறிமுகமில்லாத புதிய தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புக்கள் வருவதாகவும் இந்த அழைப்பினை ஏற்று கதைத்தவுடன் கதைக்கும் நபர் ஒரு வகையான வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குறித்த இடத்திலேயே மரணிப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன. குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய மாவாட்டங்களில் வேகமாக பரவிய இந்த வைரஸ் அச்சம் தற்போது இலங்கையில் தலைநகர் கொழும்பிலும் பரவியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பலர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பல பள்ளிவாயல்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் மக்கள் தெளிவ…
-
- 4 replies
- 893 views
-
-
1976 இன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து ஆணைப்படுத்தப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம், ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது 2. 2001, 2004 ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல்களின் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில ; தமிழ்த் தலைமைத்துவத்தால் முன்மொழியப்பட்டு பின்னர் தமிழ் மக்களால் ஏற்று உறுதி செய்யப்பட்ட கொள்கை…
-
- 0 replies
- 746 views
-
-
3.3 நாடு கடந்த்த அரசாஙக்க் ம் - நாடு கடந்த்த அரசாட்ச்சி நாடு கடந்த அரசாட்சி என்ற எண்ணக்கரு ஆய்வாளர்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. பல்வேறுபட்ட வடிவங்களில் நாடு கடந்த அரசாட்சி தொழிற்பட முடியும். ஐரோப்பிய ஒன்றியம் (நுரு) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. Nயுகுவுயு எனப்படும் வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு இன்னொரு எடுத்துக்காட்டு. எனினும் நாம் முன்மொழிகிற நாடு கடந்த அரசாட்சி முறைமை தனித்துவமானதும் கோட்பாட்டுரீதியாக வேறுபட்டதுமாகும். ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை முன்மொழிவது இதுவே முதற்தடவை. இதுவரை காணப்படும் நாடு கடந்த அரசாட்சி முறைமைகள் தேசிய அரசுகள் (யேவழைn – ளுவயவநள) ஒன்றிணைந்து அல்லது இணக்கப்பாடு கொண்டு உருவானவை. இங்கு குறிப்பிடப்பட…
-
- 0 replies
- 588 views
-
-
3. நாடு கடந்த அரசியல் கோட்பாடு ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் புலம்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும். உலகமயமாக்கல் நடைமுறையின் ஒரு விளைவான நாடு கடந்த தேசியம் என்பது உலகமயமாக்கலின் சந்தைகளினை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டுக்கும் அப்பாற் சென்று அரசியல் மற்றும் சமூக இயக்கங்களினை உலகந் தழுவிய நிலையில் ஒருங்கிணைக்கும் செயன்முறையாக உருவாக்கம்…
-
- 0 replies
- 482 views
-
-
போர் மரபுகளை மீறியதற்காகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காகவும் இன அழிப்பில் ஈடுபட்டதற்காகவும் அப்பாவிப் பொது மக்களின் குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறியதற்காகவும் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் சர்வதேச மட்டத்தில் வலுத்து வருகிறது. நகர்வுகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியா சீனா ரஷ்யா போன்ற நாடுகள் தடங்கல்களை ஏற்படுத்தினாலும் சிறிலங்காவைப் போர் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் உறுதியாக நடைபெற்று வருகின்றன. இலங்கைப் போரில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ள ஆளும் பிரிட்டிஷ் தொழிற் கட்சி அழுத்தங்களை முன்னெடுக்கும் என்று தெரிவ…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம். இலங்கையல் சிங்களவர், தமிழர் பிரச்சனைக்குத்தூபமிட்டு வளர்த்து அமைதியில்லா இலங்கையை உருவாக்கியவர்கள் முற்று முழுதாக இந்தியர்களே. சிங்களவர் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக் விரும்பினாலும், இதை இப்படிச் செய் அப்படிச்செய் என்று சிங்களத்திற்கும், தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடு என்ற ஆயுதத்தையும் அள்ளிக் கொடுத்து உரிமையை கேட்பது போன்று கொடுக்காதே என்ற சிங்களத்திற்கும் சொல்லி இரு இனங்களும் தொடர்ந்து பிர்சனைப்படுவதால் வேறு வல்லரசுகள் இலங்கையில் கால்பதிக்காது வைத்துக் கொள் இதுவே வழி என்ற ரீதியில் இலங்கையை நடத்தி வந்தது இந்தியாதான். மிரட்டல்களும் தட்டல்களும் எங்கே எப்போது போடவேண்டும் என்று அங்கே போட்டு இரு இனங்களையும் அமை…
-
- 2 replies
- 678 views
-
-
http://www.youtube.com/watch?v=QeRGSEb7Y8Y&feature=player_embedded#! எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து
-
- 0 replies
- 842 views
-
-
We are celebrating the life of Taraki Sivaram on the eve of his fifth death anniversary on Thursday, 29 April 2010 in London. Date : 29 April 2010 (Thursday) Time : 6:30 -9:30 pm Location : Conway Hall, 25 Red Lion Square, Holborn, London WC1R 4RL Admission: RSVP Conference Program: Keynote Speech: * Professor. Mark Whitaker, University of South Carolina and author "Learning Politics from Sivaram." Other Speakers: * Lee Karu QC, Human Rights Lawyer * Anandhi Suriyapragasam, formerly of BBC Tamil Service * Vino Kanapathipillai, Editor…
-
- 0 replies
- 688 views
-