வணக்கம்,
மேற்கண்ட தலைப்பில் நேற்று எமது நேரம் (கனடா) இரவு என்னால் ஒரு கருத்து பதியப்பட்டது. தற்போது அதை காணவில்லை.
ஏதும் தொழில்நுட்ப காரணங்களா அல்லது நிர்வாகத்தினால் அந்த கருத்து நீக்கப்பட்டு உள்ளதா? கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் ஏதும் தகவல் இல்லை. எனக்கு தனிப்படவும் இதுபற்றி ஏதும் தகவல் தரப்படவில்லை.
எனது பதிவில் கருத்துக்களத்தின் எதுவித விதிமுறை மீறல்களும் இருக்கவில்லை (கருத்துக்களத்தின் விதிமுறை மீறல் இருப்பின் அதை சுட்டிக்காட்டினால் நல்லது). கருத்து காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன்.
யதார்த்தமான நிலைமைகளை உள்வாங்கிய யதார்த்தமான கருத்து அது. எவரது கருத்தும் மேற்கோள் காட்டப்படவில்லை. எவரையும் தனிப்பட குறிப்பிடவில்லை. செய்தியின் பிரகாரம் பொதுவான கருத்தே என்னால் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக தேவை என்றால் விரிவான ஒரு உரையாடலுக்கு தயார்.
நன்றி!