Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது. நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது. கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது. பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள். கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.
  2. வடமராட்சி நகர்வின் ஏக காலத்தில் காங்கேசன்துறை, பலாலியில் தொடங்கி தெல்லிப்பழை பகுதி நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கியது. ஆனால், வடமராட்சி பிரச்சனை பெரிதாகும் முன்னரே காங்கேசன்துறை இலகுவாக இராணுவத்தின் வசமாகிவிட்டது. பொதுமக்கள் இராணுவத்துக்கு தண்ணி காட்டிவிட்டு உள் பாதைகளால் இரகசிமாக தமது வீடுகள் பார்க்க சென்று வந்தார்கள். இராணுவத்திடம் பிடிபட்டவர்கள், தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் உண்டு. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு சென்றார்கள். இந்திய இராணுவம் வெளியேறி போர் தொடங்கியதும் மீண்டும் 1990 பாரிய இடம்பெயர்வு. ஆனால் அது நிரந்தரமானது. முன்பு அவ்வப்போது காங்கேசன்துறை பலாலி இராணுவ முகாம்களின் போக்குவரத்தை வழிமறித்து கண்ணிவெடி தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் சமாளித்தார்கள். ஆனால், 1987 ஹாபர் வியூ அடியுடன் காங்கேசன்துறை அவல பூமி ஆகிவிட்டது. கடற்படை, விமானப்படை, தரைப்படை சேர்ந்து ( காங்கேசன்துறை முகாம், பலாலி முகாம் இராணுவம்) அந்த பகுதியை துவம்சம் செய்தது.
  3. ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.
  4. நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும். வாழ்த்துக்கள்!
  5. நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள். வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி. வணக்கம்.
  6. இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம்.
  7. யாழ் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உள்ளார்கள். பெண்கள் இல்லை. முகம் அறியப்பட்ட ஒன்று, இரண்டு பெண்களை நிர்வாகத்தில் இணைத்தால் யாழ் இணையத்தின் வளர்ச்சிக்கு நல்லது. மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை.
  8. இலங்கையில் மருத்துவ வசதிகள் நாம் நினைக்கும் வகையில் மட்டமாக இல்லாமல் திருப்திப்படும் அளவில் உள்ளதாக அறிந்தேன். அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகராக நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவாம். முதியவர்கள் விடயத்தில் நாம் எவரையும் நம்ப முடியாது. பிள்ளைகள் சிரத்தை எடுப்பதுபோல் நிச்சயம் வெளியார் கவனம் எடுக்கமாட்டார்கள். குருதி, சிறுநீர் மாதிரிகளை ஆய்வுசாலைக்கு அக்கறையாக எடுத்து அனுப்புவது தொடக்கம் தவணை முறையில் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவது, கவனமாக வெளியில் அழைத்து சென்று கவனமாக வீட்டுக்கு கூட்டிவருவது வரை பிள்ளைகளின் அல்லது கரிசனை உள்ள நெருங்கிய உறவுகளின் உதவி பெரியோருக்கு தேவை. யாரையும் நம்பினால் ஒன்றுக்கும் உத்தரவாதம் இல்லை.
  9. அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.
  10. இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி. வாழ்த்து பகுதியில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாமா? மூட நம்பிக்கைகள் பற்றி இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதாக கருத்துக்களில் மாற்றம் பகுதியில் சில தடவைகள் அவதானித்தேன். எனவே சந்தேகம் தோன்றியது. மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது என்று யாழ் கருத்துக்களத்துக்கு எதிராக ஒரு கேஸை போடலாம் என்று சொல்ல வாறீங்களோ? ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறுக சிறுக கேகரித்து பொக்கிசமாக போற்றும் பச்சை நாளை ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காணாமலும் போகலாம். எனவே ஸ்கிரீன் சொட் எடுத்து வையுங்கள்.
  11. ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும். ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது.
  12. வெளிப்படை தன்மைக்கும் காவாலித்தனத்துக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன பெருமாள்.
  13. சில வருடங்கள் முன் ஐ.பி.சி சேவை விஸ்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தொடக்க வைபவம் நடைபெற்றபோது வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். அப்போது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது ஐ.பி.சி சிறப்பாக நல்ல பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்று. இன்று அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களே ஐ.பி.சி தமிழின் தற்போதைய நிலை கண்டு முகம் சுழிக்கின்றார்கள். ஐ.பி.சியின் சில்லறைத்தனமான ஊடகவியல் செயற்பாடுகள், மற்றும் தரம்கெட்ட வகையில் ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தவறான வழியில் எமது எதிர்கால சந்ததியை கொண்டு செல்லும். மக்களை மடையர்கள் என நினைத்துக்கொண்டு ஊடகங்கள் தனிப்பட்ட லாபங்களை, தமது குறுகிய நோக்கங்களை அடைய நினைப்பது கேவலமானது. வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் தெரியும் தத்தம் நாடுகளில் சட்டம், ஒழுங்கு நடைமுறைகளின் நிமித்தம் எது சரி, எது பிழை. எப்படி ஒன்றை செய்யலாம், எப்படி ஒன்றை செய்யக்கூடாது, தவறான செயற்பாடுகளின் பின்விளைவுகள் என பல்வேறு விடயங்கள். ஆனால், இவர்கள் இலங்கை என வரும்போது வழமையான ஒழுங்கமைப்பு, நடைமுறைகளில் இருந்து இருந்து விலகி தான் தோன்றித்தனமாகவும், எதேச்சையாகவும் காரியங்களை முன்னெடுக்கின்றார்கள். அடுத்தவனை துரோகி, ஏமாற்றுக்காரன் என்று கூறுபவர்கள் முதலில் தாங்கள் யார், தங்கள் யோக்கியதை என்ன என்பதை உணர்ந்துகொள்வது நல்லது. ஒரு சில ஊடகங்கள் செய்கின்ற தவறான செயற்பாடுகள் அனைவரையுமே பாதிக்கும். கடைசியில் எங்களுக்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லி முறைப்பாடு செய்யவேண்டியதுதான்.
  14. மேலுள்ள கறுப்பு பட்டியல் யாழ் கருத்துக்களத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ளதா? கறுப்பு பட்டியலில் ஐ.பி.சி தமிழ் செய்தி தளத்தையும் உள்ளடக்கம் செய்வதை பரிசீலனை செய்யுமாறு கனம் யாழ் நிர்வாகத்தினரிடம் பரிந்துரை செய்கின்றேன். ஐ.பி.சி தமிழ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகளுக்கு பின்னூட்டம் இடுவதை நான் நிறுத்தி கொள்கின்றேன். நன்றி!
  15. கனம் யாழ் நிருவாகத்தினருக்கு, யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன. சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.
  16. வணக்கம் நிழலி, உங்கள் தகவலுக்கு நன்றி. கருத்துக்களத்தில் ஒருவர் எத்தனை கருத்துக்களை தினமும் பதியலாம் என்று ஒரு கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களின் வேலைபழுவை குறைக்கும். அத்துடன், கருத்து எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஆற, அமர நிதானத்துடன் கருத்துக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். புதிய தலைப்புக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் இவ்வளவு என. கருத்துக்கள், செய்திகளின் எண்ணிக்கைகளை விட அவற்றின் தரம் முக்கியம். ஆளுக்கு ஒரு நாளைக்கு இத்தனை விருப்பு புள்ளிகள் என உள்ளது போல், இத்தனை கருத்துக்கள் என நிர்ணயம் கொடுக்கும்போது கருத்துக்களத்தின் தரம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
  17. வணக்கம், மேற்கண்ட தலைப்பில் நேற்று எமது நேரம் (கனடா) இரவு என்னால் ஒரு கருத்து பதியப்பட்டது. தற்போது அதை காணவில்லை. ஏதும் தொழில்நுட்ப காரணங்களா அல்லது நிர்வாகத்தினால் அந்த கருத்து நீக்கப்பட்டு உள்ளதா? கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் ஏதும் தகவல் இல்லை. எனக்கு தனிப்படவும் இதுபற்றி ஏதும் தகவல் தரப்படவில்லை. எனது பதிவில் கருத்துக்களத்தின் எதுவித விதிமுறை மீறல்களும் இருக்கவில்லை (கருத்துக்களத்தின் விதிமுறை மீறல் இருப்பின் அதை சுட்டிக்காட்டினால் நல்லது). கருத்து காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன். யதார்த்தமான நிலைமைகளை உள்வாங்கிய யதார்த்தமான கருத்து அது. எவரது கருத்தும் மேற்கோள் காட்டப்படவில்லை. எவரையும் தனிப்பட குறிப்பிடவில்லை. செய்தியின் பிரகாரம் பொதுவான கருத்தே என்னால் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக தேவை என்றால் விரிவான ஒரு உரையாடலுக்கு தயார். நன்றி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.