Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. கப்டன் மில்லருக்கு முதலில் நடந்த சக்கையூர்தித் தாக்குதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல் நடத்தப்பட்ட திகதி எனக்குத் தெரியாது. ஆனால் நடத்தியவர் & நடந்த இடம் நானறிவேன். இத்தாக்குதலானது யாழ்ப்பாண நகரத்தில் இருந்த ஒரு பெரிய அஞ்சலகம் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டது. தாக்குதலுக்காக சென்ற புலிமகனிடம் செங்கல் ஒன்றும் கொடுத்தனுப்பப்பட்டது. அதாவது இலக்கு நெருங்கியது கியரினுள் செங்கலை பொறித்துவிட்டு இறங்கி ஓடிவந்துவிட வேண்டும். பின்னர் ஊர்தி தன்பாட்டில் சென்று மோதி வெடிக்கும். இதுதான் திட்டம். திட்டமானது திட்டமிட்ட நாளில் திட்டமிட்டபடியே நடந்தேறியது. அதை நடத்தியவர் 'திலீப்' என்னும் பெயருடைய புலிமகன். இது இவருடைய இயற்பெயரா இல்லை இயக்கப் பெயரா என்பதை நானறியேன்! அவர் சக்கை நிரப்பப்பட்ட பாரவூர்தி ஒன்றை ஓட்டிச் சென்று அஞ்சலகம் நெருங்கியதும் பாரவூர்தியின் கியரினுள் செங்கல்லை வைத்து விட்டு இறங்கி ஓடிவிட்டர். அதனால் ஆள் இல்லாவிட்டாலும் பாரவூர்தி அஞ்சலகத்தில் முட்டி வெடித்தது; அஞ்சலகம் தகர்ந்தது. இந்த தாக்குதலின்போது செங்கல்லை வைத்து விட்டு இறங்கி ஓடிய புலிமகனின் காலில் பாரிய காயம் ஏற்பட்டதால் பின்னாளில் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இதனால் சில காலம் கழித்து அவரும் இயக்கத்தில் இருந்து விலத்தி விட்டர். பிறகு யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள ஊர் ஒன்றில் பொதுமகனாக வசித்து வந்தவர் என்றும் அங்குள்ள சில வீடுகளுக்கு(யென்) கூட்டும் வேலைக்கு சென்றுவந்தவர் என்றும் அறிந்தேன். இவர் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மூன்று தடவை சிங்களப் புலனாய்வுத்துறையால் உசாவலுக்காக(விசாரணை) அழைத்துச் செல்லப்பட்டார் என்பது துயரமான தகவல். இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கேணியா ஒப்பரேசன் நடந்தது.அதிலிருந்து கொஞ்சம் உடல்நலக் குறைவாக இருந்துவந்த இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் (பெப்ரவரிக்கு கிட்டவாக) இவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இத்தாக்குதல் பற்றிய சிறிய குறிப்பொன்று தவிபு இன் 'உயிராயுதம் பாகம்- 1' என்ற புத்தகத்தின் தொடக்கத்திலும் உள்ளது(மில்லர் மாமா பற்றி வரும் இடத்தில்). ---------------------------------------------- இத்தகவல்கள் யாவும் என்னைவிட்டு வெகுதொலைவில் உள்ள எனது பாட்டி தெரியப்படுத்தியவை. ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.