என்னை வரவேற்றதற்கு மீண்டும் நன்றிகள். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன். பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினேன். நான் yarl.com வாசிப்பதற்க்கு காரணம், yarl.com ஊடக பல ஆக்கங்கள், தகவல்கள் மற்றும் செய்திகளை கிடைக்க பெறுகிறது. பலர் சிறந்த ஆக்கங்கள் எழுதுகின்றனர், மேலும் பல்வேறு மாறுபடட கருத்துக்களையும் எழுதுகிறார்கள். பலவற்றை நான் விரும்பாமல் போகலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக yarl.com சிறந்த ஒரு ஊடகம் என்றே சொல்லுவேன். முன்பாக, நான் சேராமல் இருந்ததற்குக் காரணம், நான் விவாதிப்பதில் அடிமையாகிவிடுவேனோ என்ற பயம். ஆனால் இப்போது சேருவதற்கு கரணம் பலர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு எழுதுகிறார்கள் / பங்களிக்கிறார்கள். எனவே, நான் குறைந்தபட்சம் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்றகாக. மேலும், எனக்கு சில துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளதாக்க நம்புகிறேன் ஆகவே நானும் பங்களிக்க முடியும்.