Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

venkkayam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள் செய்தி 1) பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது. செய்தி 2) அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி 3) பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்துகளால்தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது, மருந்துகளின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. செய்தி 4) செய்தி 5) தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்குடும்பப்பெண் ஒவ்வாமையால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணம். இவருக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படவில்லை, சத்திக்கு வழங்கப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த 5 செய்திகளாலும் உங்களுக்கு ஏதாவது விளங்குகின்றதா? எனக்கு எதுவும் விளங்கவில்லை ஓருவருக்கு ஒவ்வாமை எதனாலும் ஏற்படலாம், வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளில் அண்டிபயோட்டிக் எனப்படும் மருந்துந்துக்குத்தான் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம், அப்படி ஒவ்வாமை ஏற்படும்போது அதற்குரிய வைத்தியத்தை உடனடியாக செய்வதன்மூலம் உயிரை பாதுகாத்துக்கொள்ளமுடியும். இவளவு நாட்களும் கதை இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது அண்டிபயோட்டிக்கு மட்டுமல்ல சத்திக்கு வழங்கும் மருந்து வரை ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. Antibiotics ற்கு அலேர்ஜி வருவதை முன்கூட்டியே அறியமுடியுமா? ஆம், பெனிசிலின் Penicillin போன்ற அண்டிபயோட்டிக்கை நோயாளி ஒருவருக்கு வழங்குவதற்கு முன்பாக அது நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என அறிவதற்காக ஒரு சோதனை செய்யப்படும் அதை Sensitive test என்று கூறுவார்கள். அண்டிபயோட்டிக்ஸ் மருந்துகள் பெருமளவில் கண்ணாடிப்போத்தல்களிலேயே வருகின்றன, இதை வயல் Vial என்று அழைப்பார்கள். இப்படி வயல்களில் அடைத்துவரும் மருந்து நோயாளிக்கு வழங்கப்படுவதற்கு முன் எப்படி தயாரிக்கப்படும் முறை கீழே காட்டப்பட்டிருக்கின்றது. நோயாளிக்கு இந்த அண்டிபயோட்டிக் மருந்தை வழங்கமுன்பாக கரைக்கப்பட்ட அண்டிபயோட்டிக்கில் சிறிய அளவை மட்டும் எடுத்து அதை 10 மடங்கிற்கு ஐதாக்கி, ஐதாக்கப்பட்ட மருந்தை நோயாளியின் தோலில் ஏற்றுவார்கள். ஏற்றப்பட்டதும் வீங்கிப்போயிருக்கும் பகுதி பேனாவால் வட்டமிடப்பட்டு நேரம், திகதியிடப்படும், அடுத்த 20 நிமிடத்திற்குள் சாதாரணமாக இருக்கும் தோல் அடையாளமிடப்பட்ட கோட்டைத்தாண்டி சிவப்பு நிறமாகிச்சென்றால் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட அண்டிபயோட்டிக்கிற்கு அலேர்ஜி என்பது உறுதிசெய்யப்படும். இந்தப்பரிசோதனை வழமையாக penicillin எனப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு மட்டும்தான் செய்யப்படுகிறது ஆனால் முதல்தடவை வழங்கப்படும்போது அனைத்து அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இந்தப்பரிசோதனை செய்யப்படவேண்டும். அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கு மட்டும்தான் இந்தப்பரிசோதனைசெய்யப்படுகின்றது ஆனால் தற்போது எந்தமருந்துக்கு அலேர்ஜி வரும் என்பதை யாராலும் எதிர்வுகூறமுடியாத நிலையில் எதை வழங்குவதற்கு முன்பாகவும் இதை செய்யவேண்டுமா என்ற குழப்பத்தில்தான் அனைவரும் இருக்கின்றார்கள். காரணம் சத்திக்கு வழங்கப்படும் Antiemetic மருந்துகளுக்கே தற்போது ஒவ்வாமை வர ஆரம்பித்துள்ளது. ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்ற முன்னைய பதிவின் லிங்க் இங்கே Click https://www.manithanfacts.com/2024/01/drug antibiotic allergy .html
  2. தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன . அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன். 11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம். ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள். டைட்டிள் சோங்க் சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார். http://4.bp.blogspot.com/-O2-mBeo5Aa8/UAFqJcjWWgI/AAAAAAAAHqQ/MMN07yupOJI/s320/kilvish.jpg சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன் வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும் நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ "இருள் நீடிக்கிறது". http://2.bp.blogspot.com/-TsIESzQE6HE/UAFsjR7Kn9I/AAAAAAAAHqg/qcRgLh3Hn5M/s320/311507_372570069474306_1403959557_n.jpgசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும். http://1.bp.blogspot.com/-dYa0cfksRiM/UAFtQcLvXbI/AAAAAAAAHrY/n-tdW68y6ws/s1600/48978_100001641115134_9902_n.jpg கீதா விஸ்வாஸ் அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார். இத்தொடர் மொத்தமாக 461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது. எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார். சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள். http://1.bp.blogspot.com/-9TydEhLIjyg/UAFpTNaXG7I/AAAAAAAAHqI/3NnNEpjVaRc/s320/407815_341453482552703_162551560442897_1102676_162347799_n.jpg உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல. எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள். பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன. http://2.bp.blogspot.com/-bp_l7blF6Uc/UAFs0LP87OI/AAAAAAAAHqo/FL1gC1xMz7s/s320/1126840-spcl_0140_e_super.jpg http://3.bp.blogspot.com/-3AP8pEX-5lw/UAFs2U5GYFI/AAAAAAAAHqw/U1PrXioz2cI/s320/1126841-spcl_0153_e_super.jpg http://3.bp.blogspot.com/-Q05sOp1JKWw/UAFs4hkZlVI/AAAAAAAAHq4/bnBLBLR6wo8/s320/1126842-spcl_0156_e_super.jpg http://1.bp.blogspot.com/-4YwQ7JGogUU/UAFs7aHdbnI/AAAAAAAAHrA/PwIFY6X5upc/s320/1126843-spcl_0161_e_super.jpg http://4.bp.blogspot.com/-dnehr7I7I_8/UAFs86YNA9I/AAAAAAAAHrI/b2qtZ2knq4I/s1600/Shaktiman%5B11%5D.jpg http://2.bp.blogspot.com/-BLxCX65AQPE/UAFs9r_yVfI/AAAAAAAAHrQ/QBaBypqaz9o/s1600/rom42.jpg 2012 ல் சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்கள் .2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் .சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிப்பதாக இருந்தார்,2012 ல் இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ராவன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இது நிறைவேறவேல்லை போதாததற்கு கொரோனா காரணமாக முகேஸ்கண்ணா மரணமடைந்துவிட்டார் என்றும் அண்மையில் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
  3. இன்று உலகில் அதிகளவில் ஏற்பட்டுவரும் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பிரதான தொற்றா நோய்களில் பக்கவாதமும் ஒன்றாகும். இன்று 6 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் வருமுன் காக்கப்பட வேண்டிய ஒரு பிரதான நோயாகும். இருந்த போதிலும் பக்கவாதம் பற்றிய போதிய விழிப்புணர்வு பொது மக்களிடம் மிகக் குறைவாகக் காணப்படல் ஒரு வருந்தக் கூடிய விடயமாகும். இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதும்இ உயிரிழப்பைத் தோற்றுவிக்கக் கூடியதுமான ஒரு தொற்றா நோயாகும். நவீன மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக முன்னேற்றமடைந்திருந்தாலும் நாளுக்கு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நேயாயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது கடவுளுடைய அதிசயமான படைப்பிலே உருவான மனிதப் பிறவியில் மிகவும் பிரமிக்கக் கூடிய பல பிரமாண்டமான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளதும் இ மிகவும் சிக்கலானதும் அதிக குருதிஇ நரம்பு விநியோகம் கொண்ட உறுப்பு மனித மூளையாகும். மனிதனில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுகின்ற உயர் கட்டமைப்பு இ தொழிற்பாட்டு மையமும் அதுவேயாகும். மனிதனின் ஒவ்வொரு தொழிற்பாடுகளும் மூளையின் குறித்த ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படும். மூளையானது உயர் ஒட்சிசன் தேவையுள்ள குருதிக் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலால் உருவான அமைப்பாகும். அதே வேளை ஒட்சிசன் விநியோகம் தடைப்படும் போது முதலாவதாக இறக்கின்ற உறுப்பும் அதுவேயாகும். பக்க வாதம் அல்லது பாரிசவாதம் என்றால் என்ன???? மூளையின் குறித்த சில பாகங்கள் சடுதியாக செயலிழப்பதால் உடலின் சில பாகங்களை அசைக்க முடியாத நிலை உண்டாகின்றது. பொதுவாக மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகங்களையும் மூளையின் இடது பகுதி உடலின் வலது பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் குறித்த பகுதி செயலிழப்பதால் அப் பகுதியால் கட்டுப்படுத்தபடுகின்ற உடலின் குறித்த பாகம் செயலிழந்துவிடுகின்றது. மூளைக்கு குருதியை கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படும் திடீர் அடைப்புக்களால் மூளைக்கான சீரான குருதி சுற்றோட்டம் பாதிக்கப்படும். தொடரும் இன் நிலையானது மூளையின் விரைவான செயலிழப்புக்கு வழிகோலும். இதனால் மூளையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட குறித்த பாகத்துக்கான நரம்பிணைப்பு துண்டிக்கப்படுவதால் அப் பாகம் செயலிழக்கின்றது. இந்நிலை பக்கவாதம் எனப்படும். இதன் விளைவாக உடலில் பின்வரும் மாற்றங்கள் நிகழும் • சுய நினைவற்ற நிலை • புலனுணர்வுகள் உடலின் இயக்கம் என்பன பாதிக்கப்படும் • உடலின் ஒருபக்கம் செயலிழக்கும் • உடல் தசைகளுடைய அசைவு பாதிக்கப்படும் • உடல் பலவீனமடையும் • சுவாசிப்பதில் சிக்கல் நிலை தோன்றும் • மூட்டுகள் விறைப்புத்தன்மையாக மாறும் • முகம் மற்றும் வாய் சமச்சீரற்று காணப்படல் அல்லது வாய் சற்று கோணலாக மாறல் • வுழமையான பேச்சில் தெளிவின்மை • உணவை விழுங்குவதில் சிக்கல் • நினைவாற்றல் குறையும் • சடுதியான மயக்கம் கடும் தலைவலி ஏற்படும் இன்று கீழ்வரும் காரணிகள் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது. • வயது- வயது அதிகரிக்கும் போது ஆண் பெண் இருபாலாருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் • இலிங்கம்- ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் • மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதை பன் மடங்கு அதிகரிக்கும் • நீரழிவு நோய் ,உயர் குருதி அமுக்கம், மன அழுத்தம் போன்ற நிலைமைகளும் பக்கவாதத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் • போதிய அளவு உடற்பயிற்சியின்மையால் குருதி சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு காலபோக்கில் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும் • முறையற்ற உணவு பழக்கங்கள் அதாவது நிரம்பிய கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகள் குருதி கலன்களில் கொலத்திரோல் படிவுகளை ஏற்படுத்துவதால் இது பக்கவாதத்திற்கு வழிகோலும் • பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நிறமுர்த்தங்களாலும் இவை ஏற்படுத்தப்படும் • அதிகளவில் கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் கொகையின் (ஊழஉயiநெ) பாவித்தல் அதிக உடற் பருமன் போன்ற பல காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது. பக்கவாதத்தில் பொதுவாக இரண்டு வகை உள்ளது • இஸ்கேமிக் (Ischemic stroke) • கீமோறேஜிக் (Hemorrhagic stroke) இஸ்கேமிக் (Ischemic stroke) மூளைக்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொழுப்பு பைபிரின் நார்கள் கல்சியம் ஆகியன படிவதாலும் இரத்தக்கட்டிகள் உறைவதாலும் கருதிக்குழாயின் பருமன் குறைவடைந்து மூளைக்கான குளுக்கோசு ஒட்சிசன் விநியோகம் தடைப்படுகிறது இதனால் மூளையின் கலங்;கள் காலப்போக்கில் இழக்கப்படுகின்றது. கீமோறேஜிக் (Hemorrhagic stroke) மூளையில் காணப்படுகின்ற சில குருதிக்குழாய்களின் சுவர் மென்மையடைந்து உயர் குருதி அமுக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் இரத்தக் கசிவினால் இந்நிலை உருவாகின்றது. சுpல வேளைகளில் குருதி மயிர்த்துளைக் குழாய் வெடிப்பினால் இது ஏற்படுகின்றது. இதற்கு தலையோட்டிலுள்ள அமுக்கமும் காரணமாகும். சில தடுப்பு முறைகள் • தினந்தோறும் ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளை றே;கொள்ளுதல். • ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாளுதல் • புகைத்தல் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் • நீரழிவு நோய் இதய நோய்களிலிருந்து விடுபடுதல் பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சையில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளித்து வழமையான நிலைக்கு கொண்டு வருவதில் இயன் மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பக்கவாதத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும். அதன் பின்னர் வைத்தியசாலையில் அந் நோயாளி உயிர் ஆபத்தை தாண்டிய பின்னர் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்டு இயன் மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். இயன் மருத்துவர்களினால் தொடர்ச்சியான சரியான ஆலோசனைகளும் உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பல்வேறு வகையான கையாளுதல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய வேளையில் பொருத்தமான புனர்வாழ்வளித்து வழமை நிலைக்கு திரும்பும் இயன் மருத்துவ நுணுக்கங்கள் கையாளப்படும். இதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு குணமடைய இயன் மருத்துவர்கள் துணை புரிவார்கள். பக்கவாதம் என்பது வரும் முன் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான உடற் பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும் பக்கவாதம் வராமல் தடுக்க சிறந்த எளிய வழிகளாகும். ஆகையால் இதன் தோற்றத்துக்கு காரணமாகும் காரணிகளிலிருந்து முற்காப்பு எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு திறமையான இயன் மருத்துவரின் உதவியை நாடி தொடர்ச்சியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைய முடியும். எனவே பக்கவாதம் எனும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எம் அயலவர்களையும் பாதுகாத்து ஒரு ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பக்கவாதத்தை வராமல் விரட்டியடிப்போமாக.. க.ஹரன்ராஜ் இயன் மருத்துவர் (physiotherapist ) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை https://www.manithanfacts.com/
  4. அலர்ஜி என்றால் என்ன? என்று முதலில் பார்த்துவிடுவோம். எமது உடலினுள் செல்லும் ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தொடுகையுறும் பொருளுக்கு எமது உடலால் காட்டப்படும் செயற்பாடுதான் இந்த ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதாவது அலெர்ஜி எதற்காகவேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் ஆனால் அது வரும்வரை அந்த நபருக்கு எனக்கு இது ஒவ்வாதபொருள் என்பது தெரியவராது. ஒருவருக்கு பூனையின் முடி, நாயின் முடி, மகரந்தமணிகள், தூசுக்கள், ஹெயார் டை என எதனாலும் இந்த ஒவ்வாமை வரலாம், சிலருக்கு நண்டுக்கறி அல்லது இறால் சாப்பிட்டால் கை,கால் தடித்து உதடுகள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும் இதேபோல்தான் எதற்குவேண்டுமானாலும் ஒவ்வாமைவரலாம். இந்த ஒவ்வாமை வைத்தியசாலையில் எமக்கு ஏற்றப்படும் மருந்துகளாலும் வரலாம். வழக்கமாக நோய்க்கு ஏற்றப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு சிலருக்கு ஒவ்வாமை வரலாம் இவளவு ஏன் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பனடோலுக்குகூட சிலருக்கு அலர்ஜி ரியாக்ஸன் வரலாம்/ வந்திருக்கின்றது ஏன் எறும்புகடித்தால்கூட இது வரலாம். முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக் உண்மையில் குளுக்கோஸ்தான் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறதா? அண்டிபயோட்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. நோய்க்கிருமிகளின் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப இந்த அண்டிப்யோட்டிக் மருந்துகள் வகைப்படுத்தப்படும். ஒருகிருமிக்கூட்டத்தை அழிப்பதற்கு அதைத்தாக்கக்கூடிய அண்டிபயோட்டிக்கை கொடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் அதைவிட்டு வேறு ஒன்றை நோயாளிக்குக்கொடுப்பதும் அதை நிலத்தில் ஊற்றுவதும் ஒன்றுதான். ஒவ்வாமையை கண்டறிவது எப்படி? கடி/ சொறி ஏற்படுதல், கைகால்கள் தடிப்படைதல், உடலின் பகுதிகளில் சிவப்பு நிற தழும்புகாள் தோன்றும், மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும், இதயத்துடிப்பு குறைவடையும், வயிற்றுவலி, சத்தி ஏற்படும், அதிக வியர்வை, பய உணர்வு ஏற்படும், உதடு மற்றும் நாக்கு வீக்கமடையும், வயிற்றோட்டம் ஏற்படலாம். மருந்து ஏற்றப்பட்டதும் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கையாளும்போது மேலே கூறியவற்றுள் ஏதாவது ஒன்றோ அல்லது ஏனைய அறிகுறிகளோ தென்பட்டால் உங்களுக்கு அந்த மருந்துக்கோ அல்லது பொருள்ளுக்கோ ஒவ்வாமை இருக்கின்றது என்று அர்த்தம். தோல் தடிப்படைதல்- Urticaria கண்மடல்கள் வீக்கமடைதல்- Angioedema மூச்செடுப்பதில் சிரமம் உணவுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படும் கடிசொறியால் அவளவு பாதிப்பில்லை ஆனால் கண்மடல்கள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகவைத்தியசாலைக்கு செல்வது அவசியம், உணவு ஒவ்வாமைக்கும், மருந்துகளால் ஏற்ப்படும் ஒவ்வாமையாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் மருத்துவசிகிச்சையை பெறாவிடில் நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம். ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றது? ஓவ்வாமைக்கு எவ்வாறு மருத்துவம் செய்யவேண்டுமென்றவரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு சென்றதும் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு நோயாளிக்கு உடனடியாக ஒக்சிசன் வழங்கப்படும். தீவிர ஒவ்வாமையில் குறட்டைச்சத்தம் போன்ற ஒலியை மயக்க நிலையில் இருக்கும் நோயாளி ஏற்படுத்திக்கொண்டிருப்பார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வழியாக குழாயை பொருத்தி செயற்கைச்சுவாசத்தை ஏற்படுத்துவார்கள் ( Intubation). இதற்கான தேவையில்லாத சந்தர்ப்பத்தில் அதாவது நோயாளியின் தீவிரம் குறைவாக இருந்தால் ஒக்ஸிசஸ் மாஸ் பொருத்தப்படும் அதோடு Asthalin ஆவி பிடிக்கச்செய்வார்கள். Adrenalin எனப்படும் மருந்து கையில் நேரடியாக ஏற்றப்படும் (IM Intra muscular ), கையில்Cannula ஏற்றப்பட்டு Hydrocortisone எனப்படும் மருந்து வழங்கப்படும். Chlorphenamine எனப்படும் பிரிட்டோன் கனுலா ஊடாக வழங்கப்படும். இவற்றை தனியே ஒரு வைத்தியரால் செய்யமுடியாது குறைந்தது 3 தாதியர்களாவது தேவை, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் மிகக்குற்கிய காலத்தில் செய்துமுடிக்கப்படவேண்டும். நோயாளியின் இரத்த அழுத்தம் உடனடியாக குறைவடையலாம். இதற்காக சேலையின் கனூலாஊடாக விரைவாக வழங்குவார்கள், விரைவாக வழங்கலை போலஸ் என்று அழைப்பார்கள். இதன் பின்னர் ECG எடுக்கப்படும், சிலருக்கு ஒவ்வாமையால் நெஞ்சுவலி கூட ஏற்படலாம். வெளி நாடுகளில் Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில் ஊசியைப்போட்டுக்கொள்ளமுடியும். ஒவ்வாமை ஏற்பட்டு அம்புலன்ஸ் வருவதற்குள் ஏற்படும் மரணத்தை இது கூடியவரையில் தடுக்க உதவுகின்றது. வெளி நாடுகளில் ஒவ்வாமை இருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதைப்பயன்படுத்துகின்றார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏற்றப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மேலே கூறிய அனைத்தையும் உடனே செய்வார்கள், செய்யவேண்டும். அப்படியானால் வைத்தியசாலையில் ஏற்றப்படும் மருந்தால் ஏற்படும் அலர்ஜியை முன்பே கண்டறியவழிகள் இருக்கின்றதா? அப்படியானால் ஏன் மரணங்கள் சம்பவிக்கின்றன? அடுத்தபதிவில் பார்ப்போம்... எனது இணையத்தள முகவரி https://www.manithanfacts.com/2023/12/allergy anaphylaxis management.html
  5. எனக்குத்தெரியாத வரலாறையும் கூறியிருக்கின்றீர்கள், கருத்துக்கு நன்றிகள். முரட்டுக்காளை கார்த் என்றும் ஒரு சீரிஸ் வந்ததாக நினைவு,கருத்துக்கு நன்றிகள்.. கருத்துக்கு நன்றிகள்
  6. இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் 65 வயதிற்கும் குறைவானவர்கள்.இந்த நோய் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா யூரோப் நாடுகளையே படுத்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.அமெரிக்கா மட்டுமே வருடாவருடம் இந்த நோய்க்காக 6400 கோடி அமேரிக்கன் டாலர்களை செலவழிக்கின்றது. மூட்டழற்சி நோய் இன்று நேற்று தோன்றிய நோய் அல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதனை தொல்லைபடுத்திவந்துள்ளது.எகிப்திய மம்மிக்கள் சிலவற்றில் கூட இவ் வீங்கியமூட்டுக்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள்.அதோடு உலகப்பிரபலமான ஆய்வுப்பயணியாக கிரிஸ்டோபர் கொலம்பஸும் இன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான். வீங்கிய மூட்டு என்றபதம் கிரேக்க வார்த்தையில் இருந்துதான் தோற்றம்பெற்றுள்ளது. மூட்டு என்றால் என்ன? மூட்டின் உடற்கூற்றியலைப்பார்த்தோமேயானால் இது இரு எலும்புகள் சந்திக்குமிடமாகும்.மூட்டு ஒரு நாருறையினால் மூடப்பட்டிருக்கும்,இவ் உறை அம்மூட்டினை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.இத் தொகுதியை எலும்பிடைச்சவ்வு மூடியிருக்கும். இச்சவ்வு எண்ணைத்தன்மையான ஒரு பதார்த்தத்தை சுரக்கும்,இந்த பதார்த்தம் உராய்வில் இருந்து அதாவது மூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று தேயாமல் பாதுகாக்க உதவுகின்றது.அதோடு என்பு முடியும் முனையை குருத்தெலும்பு என்று அழைப்பார்கள் இது சற்று பஞ்சுத்தன்மையுடையதாக காணப்படும்.இது நீங்கள் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ வாகனங்களில் உள்ள Shock absorber போன்று தொழிற்பட்டு மூட்டைப்பாதுகாக்கும். இவ் மூட்டழற்சியை ஒத்த வேறு ஒரு நோய் காணப்படுகின்றது.இதை முடக்குவாதம் (Rheumatoid arthritis) என்று அழைப்பார்கள்.இது மூட்டழற்சியைப்போல் அல்லாது சரமாரியாக உடலின் அத்தனை மூட்டுக்களையும் ஒரே நேரத்தில் தாக்கும் வல்லமைவாய்ந்தது.ஒரு மூட்டில் இருந்து வேறு ஒரு மூட்டிற்கு இன் நோய் பரவும்.ஆனால் மூட்டழற்சி (osteoarthritis) நோய் ஒரு மூட்டில் இருந்து வேறு ஒன்றிற்கு பரவுவதில்லை. எலும்பின் அடிப்படைக்கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது எலும்பின் பகுதிகளான மூட்டுக்குருத்தெலும்பு(articular cartilage)மற்றும் அடிக்குருத்தெலும்பு (subchondral bone) என்பன சிதைவடைதலே இன் நோயின் முக்கிய குணங்களாகும். சாதாரணமாக எமது உடலின் பாரத்தைத்தாங்கும் மூட்டுக்களான இடுப்பு என்பு மூட்டு மற்றும் முழங்கால் என்பவையோடு முதுகெலும்பு, கைகள் ,கைவிரல்கள் என்பனவும் இன் நோயால் பாதிப்படையும்.இந்நோயால் ஆண், பெண் இருபாலரும் பாதிப்படைந்தாலும் ஆண்களை விட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகின்றார்கள்.அதிலும் முக்கியமாக மாதவிடாய் நிறுத்தமடையும் காலப்பகுதியை கடக்கும் பெண்கள் இந்நோயால் பாதிப்படைதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. X- Ray மூலம் மூட்டுக்களை அவதானிக்குபோது இவற்றை இலகுவாக கண்டறியலாம். நோய்க்காரணிகள் நோயாளி உடற்பருமனுடன் கூடிய மூட்டழற்சி நோயாளியாக இருத்தல் மூட்டில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருத்தல் விவசாயியாக இருத்தல் பரம்பரை பரம்பரையாக் இன் நோய் குடும்பத்தில் இருத்தல் முதுமையடைதல் மூட்டு பிரழ்தலுக்கு சரியான சிகிச்சை எடுக்காமை இன் நோயை 3 வகையாகப்பிரிக்கலாம் 1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்.(Nodal Generalised OA ) 2) என்பு மூட்டுகளுக்கிடையில் கல்சியம் குறைவு ஏற்படுவதனால் இது ஏற்படும்.(Crystal Associated OA) 3)இளவயதினரிடம் ஏற்படும் மூட்டழற்சி நோய்.(OA of Premature Onset ) 1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய் இன் நோயின்போது கைவிரல்,கால்களின் மூட்டுக்கள் சடுதியாக வீக்கமடைந்து வலி ஏற்படும் இது 2,3 வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.இது பார்ப்பதற்கு முடிச்சுக்கள் போன்றிருப்பதால் Nodal Generalised என்று அழைக்கப்படுகின்றது. இதில் 2 வகையான முடிச்சுக்கள் இருக்கின்றன Heberden’s nodes Bouchard’s nodes முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோயின் ஏனைய வகைகள் CMC of thumb பெருவிரலும் மணிக்கட்டும் இணையும் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகின்றது.இன் நோய்நிலையின்போது பெருவிரலைப்பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும்.பெருவிரலைப்பயன்படுத்தும்போது அதிகவலி ஏற்படும். Hallux கால்பெருவிரலில் வீக்கம் ஏற்படுவதோடு பெருவிரலை அசைக்கமுடியாத நிலை ஏற்படும். Valgus/rigidus நின்ற நிலையில் கால்களைச்சேர்த்துவைத்திருக்கும்போது முழங்கால்மூட்டுக்கள் அருகருகாமையில் ஒன்றாகவும் பாதமூட்டுக்கள் தூரமாகவும் இருக்கும். Knees & hips இடுப்பு எலும்பில் ஏற்படும்பாதிப்பால் இன் நிலை ஏற்படுகின்றது.தொடர்ச்சியான இடுப்புவலியாக இல்லாமல் இடையிடையே இடுப்புவலி வந்து செல்லும்.ஆண்களில் விதையில் வலி ஏற்படும்.முக்கியமாக காலைவேளைகளில் மூட்டுக்களை அசைப்பது இருத்தல் எழும்புதல் கடினமாக இருக்கும். Apophyseal joints முதுகெலும்பின் என்புகள் இணையும் பகுதியைத்தான் என்று கூறுவார்கள்.இதில் கல்சியம் படிவடைந்து இவ் இடைவெளி நிரப்பப்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் ankylosing spondylitis என்ற நோய் நிலை ஏற்படும்.இதன்போது முதுகில் கூன் ஏற்படும். மூட்டழற்சி நோய் நோயியல் நோய் அறிகுறிகள்:- ஆரம்பத்தில் தொடர்ச்சியானவலியாக இருக்காமல் இடையிடையே ஏற்படும் வலியாக இருந்து நாளடைவில் தீவிர நிலைக்கு வலி மாற்றமடையும். முக்கியமாக மூட்டில் அழுத்தம் அதிகரிக்கும்போது அதாவது எழுந்து நிற்கும்போது வலி அதிகமாக இருக்கும். ஓய்வெடுக்கும்போது வலி குறைவாக இருந்தாலும் இடையிடையே ஏற்படும் வலியினால் நித்திரைகுழப்பமடையும். சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கால் கைகள் இறுக்கமடையும் அதோடு கை கால்களை அசைக்கும்போது எலும்புகள் தேய்வடையும் சத்தத்தை நோயாளியினால் உணரமுடியும். மூட்டு நீர்க்கட்டு (joint effusion) கை கால் மெலிவடைதல்,மூட்டுக்களை அசைக்கும்போது சத்தம் ஏற்படுதல் நோயை கண்டறியும் சோதனைகள் இரத்தப்பரிசோதனைகள் மூலம் இந்நோயை உறுதிப்படுத்தமுடியாது. X Ray, MRI மூலமே இன் நோயை உறுதிப்படுத்தலாம். சிகிச்சைமுறைகள் உடற்பயிற்சியும் வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுமே இன் நோய்க்கான முக்கிய சிகிச்சை முறைகளாகும்.இயன் மருத்துவர்/உடற்பயிற்சி மருத்துவரின் உதவியே இன் நோய்ச்சிகிச்சையில் பெரிதும் உதவுகின்றது.இவரின் உதவியுடன் isometric exercise, aerobic exercise, isotonic exercise உடற்பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும்.உடற்பயிற்சியின் மூலமாக மூட்டுவலி,மூட்டுவீக்கம்,களைப்பு,உடற்சோர்வு,மனச்சோர்வு போன்றவற்றைக்குறைக்கமுடியும்.வெப்ப,குளிர் சிகிச்சைகள் ஸ்ரெச்சிங்க் உடற்பயிற்சிகளால் மூட்டழற்சிக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும். எடைகுறைப்பு இன் நோய்க்கான முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.உடற்பாரத்தின் அழுத்தம் மூட்டுக்களில் தாக்கப்படுவதனாலேயே மூட்டுக்களில் மிகுந்தவலி ஏற்படுகின்றது,எனவே உணவுக்கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பாரத்தைக்குறைப்பதன்மூலமும் இவற்றைக்கட்டுப்படுத்தலாம்.கால்சியம் அதிகம் உள்ள உணவுவகைகள்,காய்கறிகள் யோகட்,பால்,சீஸ்,கடலுணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள்,ஜங்க் பூட்ஸ்,கொத்து,பிறைட் ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மூட்டழற்சியால்பாதிக்கப்பட்டவர்கள் ரீதியான ஆதரவு மிகவும் அவசியம்.உளவியல் ரீதியாக இவர்கள் மிகவும் பாதிப்படைந்துவிடுவார்கள்.அன்றாட அடிப்படைவேலைகளைக்கூட இவர்களால் தனியே செய்யமுடியாதுபோகும்.ஒரு கைபேசியையோ,டிவி ரிமோட்டைகூட தூக்கும்போது கைவலி ஏற்படலாம்.நடக்கமுடியாமல் தள்ளுவண்டியை பயன்படுத்துபவராக மாற நேரிடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குடும்பத்தவரின் ஒத்துளைப்பு நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அக நோக்கு சிகிச்சையின் மூலம்(endoscopy)மூட்டழற்சியின் பாதிப்புக்களில் இருந்துவிடுபடமுடியும்.இதன் மூலம் மருத்துவர் மூட்டிற்குள்ளே கருவிகளை செலுத்தி தீங்குவிளைவிக்கும் பாதிப்படைந்த இழையத்தை அகற்றுவார். ஜாயின்ட் ரீபிளேஸ்மன்ற் surgery (joint replacement surgery)-இதன்மூலம் பாதிக்கப்பட்ட மூட்டு முழுவதுமாக அகற்றப்பட்டு செயற்கைமூட்டு பொருத்தப்படும் இதன்மூலம் அடுத்த 10-15 வருடங்களுக்கு எந்த வலியும் இல்லாமல் வாழமுடியும். ஹாயோலூரோனிக் அசிட்டை நேரடியாக மூட்டுக்குள் செலுத்துவதன் மூலமாக வீக்கம் மற்றும் வலியை குறைந்தது 6 மாதத்திற்காவது தள்ளிவைக்கமுடியும்.மூட்டழற்சி நோயை பூரணமாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன்மூலமும் சரியான உடற்பயிற்சி மற்றும் உடல் எடைகுறைத்தல் வழக்காமான வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதம் மூலமும் வலியையும் பாதிப்புக்களையும் வெகுவாக குறைக்கமுடியும். வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள் Analgesics, Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs), Corticosteroids https://www.manithanfacts.com/2023/12/osteoarthritis .html
  7. நாம் கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவில் அண்டவெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,கலக்சிகள், நெபியூலாக்கள் நிறைந்திருக்கின்றன.இவையனைத்தும் பெருவெடிப்பின் மூலம் தோன்றியவையே என்பதுதான் இவற்றிற்கிடையிலான தொடர்பாகும்.இவற்றுள் ஒன்றுதான் கருந்துளை பெயரிற்கேற்றாற்போல் கருமையான ஒரு பிரதேசமாக அல்லது புள்ளியாக இது காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பொருள் நம் கண்ணிற்கு புலப்படவேண்டுமாக இருந்தால் அந்தப்பொருளில் ஒளி பட்டுத்தெறித்து அவ் ஒளி எம்கண்களின் விழித்திரையில் விழவேண்டும்.ஆனால் கருந்துளையினுள் செல்லும் ஒளி மீண்டும் வெளியே வரமுடியாது அந்த அளவிற்கு மிக மிக வலிமையான ஈர்ப்புவிசையை கருந்துளை தன்வசம் கொண்டுள்ளது.இதுதான் கருந்துளை கறுப்பாக இருப்பதற்கான காரணம்.(கட்டுரையின் முடிவில் சரியான காரணம் புரியும்) கருந்துளை எப்படி உருவாகின்றது? ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் அண்ணளவாக 10 பில்லியன் வருடங்களாகும்.இந்த 10 பில்லியன் வருடக்காலப்பகுதியிலும் அந்த நட்சத்திரம் எரிந்துகொண்டேயிருக்கும். நட்சத்திரத்தினுள் நடைபெறும் அணுக்கருத்தாக்கங்கள் காரணமாக நட்சத்திரம் எரிந்துகொண்டேயிருக்கும்.இவ்வாறு எரிந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஐதரசன் மற்றும் ஹீலியத்தினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வாயுக்கோளங்களாகும். இவ்வாறு தாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது உருவாகும் அமுக்கம் நட்சத்திரத்தினுள் இருக்கும் வாயுவைவெளியே தள்ளும் ஆனால் நட்சத்திரத்தினில் இருக்கும் மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசை வாயுவை மையத்தை நோக்கி ஈர்க்கும் நட்சத்திரம் மரணிக்கும்வரை இவ்விரு விசைகளுக்கிடையிலான மோதல் நடந்துகொண்டேயிருக்கும். நட்சத்திரம் மரணிக்கும் தறுவாயில் அதாவது ஐதரசன் அணுக்களில் பெரும்பாலானவை ஹீலியம் அணுக்களாக மாறும்தறுவாயில் ஈர்ப்புவிசை வெற்றிபெற நட்சத்திரம் மையத்தை நோக்கி சுருங்க ஆரம்பித்துவிடும். இவ்வாறு நட்சத்திரம் சுருங்க ஆரம்பித்ததும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை பல மடங்குகளாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.இவ்வாறு சுருங்க ஆரம்பிக்கும் நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே சுருங்கும்,நட்சத்திரத்தினுள் எஞ்சியிருக்கும் வாயுக்களில் உள்ள இலத்திரன்களின் தள்ளுவிசை நட்சத்திரத்தின் மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசையை சமப்படும் அளவுவரையே நட்சத்திரம் சுருங்கும். மிகப்பெரிய நட்சத்திரங்கள் அண்ணளவாக சூரியனைவிட 20 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அதன் எரிபொருள் தீர்ந்ததும் நிலைகுலைய ஆரம்பித்துவிடும்.பெருமளவான எருபொருள் தீர்ந்தாலும் பிரமாண்டமான இந்த நட்சத்திரங்களின் மேற்பரப்பில் சிறிய அளவில் எரிபொருள் சற்றுமீதமாக இருக்கும் இவ் எரிபொருளில் அணுத்தாக்கம் நடைபெற ஆரம்பிக்க தொடர்ச்சியான சங்கிலித்தாக்கங்கள் நடைபெற்று மிகப்பெரிய வெடிப்பு நடைபெறுகின்றது.இவ்வெடிப்பி நடைபெற்ற பின்னரும் நட்சத்திரத்தின் மத்தியில் எஞ்சிய திணிவு சூரியனின் திணிவின் 3 மடங்கைவிட அதிகமாக இருக்கும்போது அவ் எஞ்சிய திணிவு கருந்துளையாக உருவெடுக்கின்றது. இதேபோல் மிகப்பெரிய திணிவுகொண்ட நட்சத்திரங்கள் சுருங்கி வெள்ளைக்குள்ளன் (white dwarf) ஆகவும் மாற்றமடைகின்றது.ஆனால் கருந்துளையாக நட்சத்திரம் உருமாறும்போது கருந்துளையின் மையம் ஒருமைத்தன்மையை நோக்கி நகரும்,மையம் ஒரு பரிமாண புள்ளியாக மாற்றமடையும் இதனால் அந்தமையத்தின் திணிவு,அடர்த்தி முடிவிலியை நோக்கி நகரும்,ஸ்பேஸ் ரைம் வளையும் இவற்றின் காரணமாக ஒளியைகூட தன்வசம் உறுஞ்சிக்கொள்ளும் அபரமிதமான ஈர்ப்புக்குழியாக கருந்துளை உருவெடுக்கின்றது. கருந்துStellar, Supermassive, , Miniature black holes. தம்மைத்தாமே சுற்றும் கருந்துளைகளில் மின்னேற்றம் பெரிய அளவில் இருந்தாலும் தொடர்ச்சியாக பொருட்களை உள்ளிழுக்கும்போது அப்பொருட்களில் ஏற்றத்தைப்பகிர்வதன்மூலம் மீண்டும் ஏற்றமற்ற நிலைக்கு கருந்துளை திரும்புவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். ளைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை ஆனால் அவைகொண்டுள்ளதிணிவு,மின்னேற்றம்,சுழற்சி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு 3 வகையாகப்பிரிக்கப்படுகின்றது. நியூட்டனில் இருந்து ஐன்ஸ்டீன்வரை கருந்துளை.... ஒரு குட்டி ரைம் ரவல் 1868 சேர் ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பை கண்டறிகின்றார்.இதன் பின்னர் ஈர்ப்புவிசை தொடர்பாக Philosophiæ Naturalis Principia Mathematica என்ற 3 பாகங்களைக்கொண்ட புத்தகமாக வெளியிடுகின்றார் நியூட்டன்.இவர் உருவாக்கிய சமன்பாடுகள் நட்சத்திரங்கள்,கோள்களின் திணிவுகள்,தூரங்களை உய்த்தறிய விஞ்ஞானிகளிக்கு உதவியது. 1783 ஜோன்மைக்கல் என்ற விஞ்ஞானி கறுப்பு நட்சத்திரம் என்ற ஒரு கருத்தை முன்வைக்கின்றார்.சூரியனைப்போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் சிலமைல்ள் ஆரையுரைய நட்சத்திரமாக சுருங்கும்போது அதில் இருந்து ஒளிகூட தப்பிக்கமுடியாது எனக்கூறியதுடன் கறுப்பு நட்சத்திரம் என இதற்குபெயரிட்டார்.அதோடு ஈர்ப்புவிசையை கண்டுபிடிப்பதற்கு கணிதரீதியான கல்குலேசன்ஸ்களையும் செய்துகாட்டினார். 1796 பைரீசைமன் என்ற பிரஞ் கணிதவியளாளர் விண்வெளியில் மிகப்பெரியபிரமாண்டமான நட்சத்திரங்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற கருத்தைக்கூறினார். 1905 ஐன்ஸ்டீன் The Annus mirabilis என்ற விஞ்ஞான சஞ்சிகை ஒன்றிற்கு 4 கட்டுரைகளை எழுதுகின்றார் இதில் ஸ்பேஸ், நேரம்,திணிவு, சக்தி தொடர்பாக விபரித்திருந்தார். ஐன்ஸ்டீனின் இந்தக்கட்டுரை பௌதிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றது. 1915 ஐன்ஸ்டீன் general relativity theory ஐயும் special relativity theory ஐயும் வெளியிடுகின்றார்.அதுவரை நியூட்டனின் விதிகளுக்கூடாக ஈர்ப்புவிசையை விளங்கிக்கொண்ட உலகத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றார் ஐன்ஸ்டீன். 1931 சுப்ரமணியன் சந்திரசேகர் இந்தியாவைச்சேர்ந்த இவர் ஒரு நட்சத்திரம் வெள்ளைக்குள்ளனாவதற்கான அதிகபட்ச திணிவு மற்றும் ஒரு நட்சத்திரம் கருந்துளையாவதற்கு தேவையான குறைந்தபட்ச திணிவை நிர்ணயிக்கும் அலகைக்கண்டறிந்தார்.இது chandrasekhar limit என அழைக்கப்படுகின்றது. 1963 றோய் கிர் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் general relativity theory தொடர்பான field equation சமன்பாடுகளுக்கு கேத்திர கணிதரீதியான வடிவம் கொடுத்தார். 1963 பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த விண்பொருளான quasar ஐக்கண்டுபிடித்தார்.quasar இன் மத்தியில் மிகப்பிரமாண்டமான கருந்துளை இருக்கும் எனவும் கூறினார். 1967 ஜோன் வீலர் உடைந்த கறுப்பு நட்சத்திரங்கள் என்ற பெயரை மாற்றி கருந்துளை என்ற பெயரை அறிமுகப்படுத்துகின்றார். 1971 X-ray, radio அலைகளையும் தொலைகாட்டியினூடான அவதானத்தினூடாகவும் Cygnus X-1. என்ற கருந்துளை முதன் முதலில் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டது. 1974 கருந்துளை உண்மையில் கருந்துளை அல்ல கருந்துளை மின் காந்த அலைகளைக் கதிர்க்கக்கூடியது என்ற கருத்தை stephen hawking வெளியிட்டார். general relativity theory spacetime என்ற ஒரு கருத்தை அறிமுகப்படுத்தினார் ஐன்ஸ்டீன்.spacetime வளைவதனாலேயே ஈர்ப்புவிசை உருவாகின்றது என ஈர்ப்புவிசைக்கு புதிய பரிமாணத்தைக்கொடுத்தார் ஐன்ஸ்டீன்.நமக்கு தெரிந்த முப்பரிமாணத்தையும்,ஒரு பரிமாணத்தையுடைய நேரத்தையும் இணைத்து 4ஆம் பரிமாணமாக spacetime ஐ குறிப்பிட்டிருந்தார் ஐன்ஸ்டீன். spacetime ஆனது பொருள்,ஈர்ப்புவிசை,சக்தி,அசைவு போன்றவற்றினால் வளையக்கூடியது என்று கூறினார் ஐன்ஸ்டீன்.spacetime அனைத்துப்பொருட்களையும் சுற்றியிருக்கின்றது. நேர் கோடு என்று எதுவுமில்லை ஈர்ப்புவிசையுள்ள ஒரு பொருளருகில் செல்லும்போது அன் நேர்கோடுவளையலாம். நாம் கேத்திரகணிதத்தில் இரு சமாந்தரக்கோடுகள் ஒன்றை ஒன்று சந்திக்காது என்று படித்திருப்போம் ஆனால் spacetime வளைவதனால் இவை சந்திக்கலாம் என்றுகூறுகிறார் ஐன்ஸ்டீன்.இப்படித்தான் நாமும்,எம் உலகம்,நட்சத்திரம் எல்லாமுமே spacetime இனால் பாதிக்கப்படுகின்றோம். நியூட்டனின் பார்வையில் ஒளிக்கு திணிவில்லை ஒளி நேர்கோட்டில் செல்லும் ஆனல் ஐன்ஸ்டீன் கூறினார் மிகப்பெரும்திணிவுகளில் spacetime வளைவதனால் ஏற்படும் ஈர்ப்புவிசையினால் ஒளிவளையும் என்றார். இதை 1919 இல் பரிசோதனைமூலம் சரி எனக்கண்டறிந்தார் விஞ்ஞானி Eddington.சூரியகிரகணத்தின்போது சூரியனை தொலை நோக்கிமூலம் அவதானித்த இவர் சூரியனின் பின்னால் இருக்கும் நட்சத்திரங்களும் தொலை நோக்கியில் தெரிவதை அவதானித்தார்.இதன் மூலம் சூரியனின் பின்னால் உள்ள நட்சத்திரத்தில் இருந்துவரும் ஒளிக்கற்றை சூரியனின் திணிவுகாரணமாக வளைந்து பூமியை அடைகின்றது என்பது அவருக்குப்புரிந்தது.இது Gravitational Lensing என அழைக்கப்படுகின்றது.இதன்பின்னர்தான் விஞ்ஞான உலகம் ஐன்ஸ்டீனின் தியரிகளை உற்று நோக்க ஆரம்பித்தது. https://www.manithanfacts.com/2021/10/black-hole.html
  8. முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழிக்கமுடியாத மண்டையோட்டு சின்னம், மாயாவியின் குதிரை அவரது மண்டையோட்டு குகை.அவரது மண்டையோட்டு மோதிரம் இன்னொரு உலகத்தையே காட்டியது.ஊரில் நடக்கும் திருவிழாக்களில் கோவில் கோவிலாக சென்று அங்கு திருவிழாவிற்காக போடப்பட்டிருக்கும் சிறிய கடைகளில் "மண்டையோட்டு மோதிரம் இருக்காண்ணா?" ..தனுஸ் ஒரு படத்தில் பைக்வாங்குவதாக சென்று மனோபாலாவை கடுப்பேற்றியது மாதிரி வருடா வருடம் கடைபோடுபவர்களைக்கடுப்பாக்கியிருக்கின்றேன் நான். http://4.bp.blogspot.com/-wX3ow7iileQ/UDSyv5hbmDI/AAAAAAAAKxo/MKsYHVTrKqs/s400/1.JPG காட்டுக்குள் நுழையும் எவனுக்குமே மாயாவி என்ற பெயரைக்கேட்டால் கதிகலங்குமென்று நினைத்தால் மாயவி ஒரு தடவை தனது காதலி டயானாவிற்காக நகரத்திற்கு வந்திருந்தார் அங்கு நடைபெற்ற கொள்ளைகள் கடத்தல்கள் எல்லாம் ஸ்தம்பித்துப்போயின.அனைவரது தாடையிலும் அழிக்கமுடியாத மண்டையோட்டுக்குறி பொறிக்கப்பட்டது.ஒருதடவை மாயாவி ஒரு மன்னனுக்கு முன்னால் ஒரு தடியனுடன் மோதவேண்டியிருந்தது.அவன் ஒரு முட்டையை கையில் எடுத்து உடைத்துக்காட்டிக்கொண்டே கூறினான்:இந்த முட்டையை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" மாயாவி உடனே ஒரு தேங்காயை கையில் எடுத்து நொருக்கிக்கொண்டே கூறினார்"இந்த தேங்காயை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" அசத்தலாக இருந்தது. மாயாவியின் சாகசங்களுக்கு லொஜிக்கைகொடுப்பதற்காக ஒருவிடயம் சேர்த்திருந்தார்கள்.மாயாவி தான் மாயாவி ஆகுவதற்கு முன்னர் பல விளையாட்டுக்களில் பங்குபற்றி மிகவும் முன்னிலையில் இருந்து பின்னர் காணாமல் போனார் என்பதுதான் அது. http://2.bp.blogspot.com/-g90ePXv__hQ/UDSy3PeirNI/AAAAAAAAKxw/afyMZEFm-Gs/s400/2.JPG "ஒவ்வொரு அடியும் இடி என விழுந்தது"இந்த வார்த்தைகள் நரம்புக்கு முறுக்கேற்றிய வார்த்தைகள். அவன் மாயாவியை சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்தான் அதற்குள்" டுமீல்" "டுமீல்" "டுமீல்" எதிரே இருக்கும் எதிரியின் துப்பாக்கியைமட்டும் குறிவைப்பது மாயாவியின் தனி ஸ்டைல்.ஆர்வக்கோளாறில் ஒன்று இரண்டு புத்தகங்களை சுட்டகதையும் நடந்தது. http://4.bp.blogspot.com/-IIqKW2aGASo/UDSy-PXMUiI/AAAAAAAAKx4/BcPYiEbfnXY/s320/3.JPG http://4.bp.blogspot.com/-dD8jOzjgZQQ/UDS0SxrKloI/AAAAAAAAKzY/Z3nhPkEieLs/s320/Phantom%5B3%5D.jpg பாடலையில் மாயாவிபுத்தகங்கள் காமிக்ஸ்கள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.மாணவ முதல்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் அவ்வளவுதான்.மாணவமுதல்வர் அறை என்று ஒன்று இருக்கின்றது. போனால் உயிரோடு திரும்புவோமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கும் அந்த அறை.அந்த அறைக்குள் அழைத்துச்சென்று அடி பின்னிவிடுவார்கள்.ஆசிரியர்களிடம் அகப்பட்டால் புத்தகம் வகுப்பறைக்குவெளியே பறப்பதுடன் அனைத்து மாணவர்களுக்கு முன்னால் அடிவாங்கவேண்டி வரும் முட்டிபோட்டு நிற்கவேண்டிவரும்.சோ ஏதோ கள்ளக்கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கும்பல் மாதிரி மிகவும் ரகசியமாக நண்பர்களிடையே மாயாவிப்புத்தகங்கள் கடத்தப்படும்.ஒருதடவை வகுப்பறைக்கு ஆசிரியர் வந்துவிட சகபாடிகள் எழுந்து நின்றுவிட்டார்கள் பாவம் ஒரே ஒரு அப்பாவிஜீவன் மட்டும் தனதுனோட்புக்குக்குள் இருக்கும் மாயாவியின் புத்தகத்தினுள் மூழ்கியிருந்தான்.சுற்றியிருந்த அனைத்துமே அந்த ஜீவனுகு இருட்டாகவே தெரிந்திருந்தது மாயாவியின் புத்தகத்தைத்தவிர.திடீர் என்று சட சட வென அடி தொடர்ந்துவிழுந்தது அப்பொழுதுதான் சுயனினைவு வந்தவானாக நிமிர்ந்துபார்க்கின்றான்.ஆசிரியர் அடித்துவிட்டு சென்றுவிட்டார்.பின்னர் அவன் அவனாகவே எழுந்து ஏன் அடித்தீர்கள்? என கேட்கும்போது வகுப்பே சிரித்துவிட்டது.அத்துடன் ஆசிரியர்அவனிடமிருந்த மாயாவிப்புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு இலகுவாக 4 துண்டாக கிழித்துஅவனிடம் கொடுத்துவிட்டார்.சரி வெளிப்படையாகவே கூறுகின்றேன் அது நான்தான். http://1.bp.blogspot.com/-POiKzLXbjnQ/UDS0dWsULEI/AAAAAAAAKzg/kdtQpKyDJpw/s320/Fantomencover.jpg ஆரம்பகாலங்களில் மாயாவி தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது ஆனால் விசாரித்ததில் இப்பொழுதெல்லாம் வருவதில்லையாம். முத்துகாமிக்ஸ்,முத்துமினிகாமிக்ஸ்,இந்திரஜால் காமிக்ஸ் என்று பல காமிக்ஸ்களில் மாயாவிவெளிவந்தாலும் மாயாவியை எனக்கு அறிமுகம் செய்தது என்னவோ ராணிகாமிக்ஸ்தான். ராணிகாமிக்ஸ் 1984 இல் ஆரம்பமானது.ஜேம்ஸ் பொண்ட்,மாயாவியால் பிரபலமான ராணிகாமிக்ஸ் தனது 500 ஆவது இதழுடன் சகலத்தையும் நிறுத்திக்கொண்டது.கம்பனியை மூடிவிட்டார்கள்.வெளி நாடுகளில் காமிக்ஸ்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போல் நம்மவரிடம் வரவேற்புக்கிடைப்பதில்லை என்பது வருத்தம்தான்.இணையத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் ஒன்று நூலக வாசிப்பு இல்லாமல்போய்க்கொண்டிருப்பது.இதே பாதிப்புத்தான் ராணிகாமிக்ஸையும் வீழ்த்திவிட்டது. http://3.bp.blogspot.com/-ehRaGRwG-Ao/UDSzEiWz9MI/AAAAAAAAKyA/0HWiSJhQScU/s320/5.JPG உண்மையில் மாயாவி தமிழில் வெளிவந்த ஹீரோவே அல்ல.மாயவியின் உண்மையான பெயர் Phantom.இந்த கற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர் லீ போல்க். பான்ரொம் டி.விக்கள்,பத்திரிகைகள்,கேம்கள் என பல இடங்களைத்தொட்டு சக்கைபோடு போட்டது. பான்ரொம்(மாயாவி) ஆபிரிக்காவின் பங்காலா என்னும் நாட்டில் காட்டில் இருப்பவராகவும் அங்கு நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராகப்போரிட்டு பழங்குடி இனத்தவரைபாதுகாப்பவராகவும் உருவாக்கப்பட்டார். கதைகளில் நாம் காணும் பான்ரொம்(மாயாவி) தனது மாயாவி பரம்பரையின் 21 ஆவது நபர்.அதாவது 21 ஆவது மாயாவி. பான்ரொம் என்ற கதாப்பாத்திரம் 1536 இல் உருவானது.பிரிட்டிஸ் கப்பலோட்டியான கிரிஸ்ரோபர் வோல்கர் என்பவர் கடற்கொள்ளையர்களால் கொல்லப்படுகின்றார்.இதனால் இவரது மகன் வோல்கர் இறந்த தன் தந்தையின் மண்டையோட்டின் மீது தீமைகளுக்கெதிராக நான் போராடுவேன் என்று சத்தியம் செய்கின்றார்.இவரால் தொடங்கப்பட்டதுதான் பான்ரொம் தலைமுறை. இது பரம்பரை பரம்பரையாக தந்தையிடம் இருந்து மகனுக்கு கடத்தப்படுகின்றது.ஒரு பான்ரொம் இறந்ததும் அவரது மகன் அடுத்த பான்ரொம் ஆகிவிடுவார்.இது சாதாரண மக்களுக்கு தெரியாது ஆகையால் பான்ரொமை/மாயாவியை மக்கள் மரணமில்லாதவராக கருதினார்கள். http://3.bp.blogspot.com/-iqE5EHW4sWI/UDStiM_DvDI/AAAAAAAAKvw/yaetl9M9GGc/s640/05.jpg ஏனைய பல ஹீரோக்களைப்போல் மாயாவிக்கு எந்த சூப்பர் பவர்களும் இல்லை.அவரது பலம்,புத்திசாலித்தனம்,மரணமில்லாதவர் என்ற மற்றயவர்கள் இவர் மீது வைத்திருக்கும் பயம் இவற்றைக்கொண்டுதான் மாயாவி எதிரிகளை வீழ்த்துவார்.21 ஆவது மாயாவியின் பெயர் கிற் வோல்கர்.மாயாவியிடம் 2 முத்திரை அடையாளங்கள் உள்ளன.இவை அவரின் மோதிரங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.இதில் ஒன்று குறொஸ் அடையாளம்.இதற்கு தனி மரியாதை இந்த குறி உள்ளவர்களுக்கு எங்கும் உதவி கிடைக்கும் அத்துடன் இந்தஅடையாளமிடப்பட்ட இடத்தில் யாராவது அடாவடி செய்தால் தொலைந்தார்கள். அடுத்த குறி மண்டையோட்டுக்குறி. இது தீயவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பரிசு.பழங்குடி இனத்தவர்களும் சரி ஏனையோரும் சரி தாடையில் பதிக்கப்பட்டிருக்கும் இந்தக்குறியின் மூலமாக தீயவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். http://3.bp.blogspot.com/-4PrNZnMlGUk/UDSzXZIzqmI/AAAAAAAAKyI/p61Pcmt1Fhc/s320/1+(1).jpg மாயாவிக்கு உதவியாக 2 மிருகங்கள் இருக்கும்.இதை மாயாவி பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்.ஒன்று குதிரை அதன் பெயர் ஹீரோ.மற்றையது ஒரு ஓநாய்(என்னது ஓநாயா? அது நாயாச்சே? அது தமிழ் தொடர்களில் நாயாக மாறிவிட்டது பான்ரொமில் அது ஓநாயாகத்தான் இருந்தது).மாயாவி டயானா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அமெரிக்காவில் மாயாவி கற்கும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.இருவருக்கும் 2 குழந்தைகள் கூட இருக்கின்றார்கள்.கிட்,ஹோலோஸ் அவர்களது பெயர்கள்.மாயாவியின் மண்டையோட்டு குகை அதற்குள் தங்க கருவூலம்(இதை திருடவும் சதி நடந்தது மாயாவியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்தாலே செமத்தையாக கவனிக்கப்படுவார்கள் அவர்கள் மாயாவியின் குகைக்குள் சென்று திருடமுயன்றால் பெரிதாக ஒன்றும் நடைபெறவில்லை 1க்கு 3 ஆக சின்னங்களை வாங்கிக்கொண்டார்கள்), http://1.bp.blogspot.com/-jRnnVntoHYM/UDS0E43GAiI/AAAAAAAAKzQ/3yz__xRUnPE/s400/ThePhantom.jpg பழைய புத்தகங்களைக்கொண்ட நூலகங்கள்,மர வீடு,மாயாவியின் முன்னோரின் சமாதிகள்,பல ஆண்டுகளாக உருகிக்கொண்டிருக்கும் மெழுகுதிரி,குரன் மாயாவி நிச்சயம் உங்களை இன்னொரு உலகத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்.இறக்கும் ஒவ்வொரு மாயாவியும் மண்டையோட்டு குகைக்குள்ளேயே அடக்கம் செய்யப்படுவார்.மர வீட்டில் ரேடியோ இருக்கின்றது,இதன் மூலம் இலாகா அதிகாரிகள் மாயாவியுடன் தொடர்புகொள்வார்கள்.ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இருந்தால் இதன் மூலம் தொடர்புகொள்வார்கள். மாயாவி நகருக்குள் செல்லவேண்டிய நிலை வந்தால் இவர் தனியே வேறொரு உடையை அணிந்துகொள்வார்.அண்டர்டேக்கரின் கோட் தொப்பியுடனான உடை அது. இப்படி ஒரு முறை மாயாவி நகரத்திற்குள் வந்ததால் பலர் தாடையில் மண்டையோட்டுக்குறியுடன் திரிந்தார்கள். 1936 பெப்ரவரி 17 இல் பான்ரொம் தினசரிப்பத்திரிகையில் வெளிவரஆரம்பித்தது.1939 மே 28 இல் வர்ணச்சித்திரங்களுடன் வெளிவந்தது.சராசரியாக இன்றுடன் 76 வருடங்கள்.ஆனால் இன்றும் பான்ரொம் தொடர்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.இது எவ்வளவு பிரபலம் தெரியுமா? ஒரு நாளில் மட்டும் உலகில் பான்ரொம் காமிக்ஸ்ஸை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்.இதை ஆரம்பித்த லீ போல்க் தான் 1991 இல் இறக்கும்வரை பான்ரொம்தொடரை வெளியிட்டுக்கொண்டிருந்தார். http://1.bp.blogspot.com/-XZFSWgcPIXQ/UDSzfAS8u6I/AAAAAAAAKyQ/dkHUngC5D84/s320/Photo-005.jpg http://3.bp.blogspot.com/-VXhcUvB7BGo/UDSzgY7WAgI/AAAAAAAAKyY/Xwhlg3c-BQY/s320/Photo-008.jpg மாயாவிதான் முதல்முதலில் உடலுடன் இறுக்கமான உடையைஅணிந்த முதல் ஹீரோ.இவருக்குப்பின் வந்த ஏனைய ஹீரோக்களுக்கு மாயாவி அணிந்ததைபோன்ற உடையே சட்டமாகிப்போனது.அத்துடன் ஏனையோர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடியை அணிந்த முதல் ஹீரோவும் மாயாவிதான்.பான்ரொமை உருவாக்கும் யோசனை பான்ரொம் கிரியேட்டரான போல்க்கிற்கு எப்படி வந்தது? போல்க் Mandrake the Magician என்ற பத்திரிகை கொமிக்ஸ்ஸை கிங்க்ஸ் ஃபெயூச்சேர்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.அது வாசகர்களிடம் அதிக வரவேற்பைப்பெற்றது.அது முடிவடைந்த பின்னர் பத்திரிகை வேறு ஒரு கதையை கதாப்பாத்திரத்தை உருவாக்குமாறு கேட்டது.உடனே போல்க் கிங்க் ஆதரும் அவரது இரவுகளும் என்ற தலைப்பில் ஸ்கிரிப்ட்களை எழுதி சில சாம்பிள்களை வரைந்தும்ககொடுத்தார்.ஆனால் பத்திரிகை அதை நிராகரித்துவிடவே உருவான பாத்திரம்தான் பான்ரொம். 2 மாதங்கள் பான்ரொம் கதையை யோசித்தார்.2 வாரங்கள் சாம்பிள்களை வரைந்து கொடுத்தார். பான்ரொம் முதன்முதலில் The Singh Brotherhood என்ற தலைப்பில் வெளிவந்தது.போல்க் கதாப்பத்திரங்களை தானே வரைந்தார். http://3.bp.blogspot.com/-88TZpmG_Wy0/UDPL5Ke9lCI/AAAAAAAAKfo/J0u1_zCIg5w/s400/14_144805_0_ThePhantomFrewPublications918A.jpg இதை வாசிப்பதற்கு இங்கே கிளிக். 1039 இல் பான்ரொம் கலர்ஃபுல்லாக வெளிவந்தது. http://1.bp.blogspot.com/-MvzhfVCuQdQ/UDPNYulyXqI/AAAAAAAAKfw/oQEUnZMoUZk/s400/First_Phantom_Sunday_strip.jpg 2 ஆம் உலக்ப்போரில் போல்க் வெளி நாட்டு ரேடியோ மொழிபெயர்ப்புப்பிரிவில் சீஃப்ஃபாக பணியாற்றியபோது அவர்கள் பயன்படுத்திய இரகசியக்குறியீடு என்ன தெரியுமா? ...."பான்ரொம்".2 ஆம் உலகப்போரில் பங்குபற்ற போல்க் செல்லும்பொழுது தனது காமிக்ஸ்வேலையை தனது உதவியாளரான வில்ஸனிடம் விட்டு சென்றார்.இன்றைய பான்ரொமின் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் மற்றும் வரைபவர்கள் Tony DePaul , Paul Ryan (Monday-Saturday) ,Terry Beatty (Sunday) DC கொமிக்ஸ் 1988-1990 வரை பான்ரொமை வெளியிட்டது. http://1.bp.blogspot.com/-S2U-zNhitvM/UDPO7AHBlZI/AAAAAAAAKf4/z84jzP9sM0c/s320/DC_Phantom.jpg பான்ரொம் ராணிகாமிக்ஸில் மாயாவி என்றபெயரில்வெளிவந்துகொண்டிருந்தபோது முத்துகாமிக்ஸ்,கொமிக்வேர்ல்ட்,இந்திரஜால் காமிக்ஸ்களில் வேதாளர் என்ற பெயரில் பான்ரொம் வெளிவந்தது. http://2.bp.blogspot.com/-YgSl6wWsb4k/UDSUjB9xkYI/AAAAAAAAKo0/1C1l0HZ7WE0/s1600/RaniComics1stPahntomMay19903_thumb%5B1%5D.jpg ராணி காமிக்ஸின் முதலாவது மாயாவி புத்தகம் 1943 இல் பான்ரொம் 15 பாகங்களைக்கொண்ட தொடராகவெளிவந்தது. http://1.bp.blogspot.com/--aimtOPQyN4/UDSX4_LxjcI/AAAAAAAAKsI/ROX1xHzdoW4/s1600/Phantomserial.jpg இதில் பான்ரொமாக நடித்தவர் TomTyler http://4.bp.blogspot.com/-tNFMhdPHuP0/UDSYhZv35vI/AAAAAAAAKsQ/yyLmekd2MoI/s320/TomTyler.jpg இத்தொலைக்காட்சித்தொடர்தொடர்பானவிடயங்கள் இங்கேகிளிக் The Phantom என்ற திரைப்படம்கூட வெளிவந்திருக்கின்றது.1996 இல் வெளிவந்தது.இயக்கியவர் Simon Wincer http://1.bp.blogspot.com/-jSXCZAR7uTo/UDSfS3gTWyI/AAAAAAAAKuA/hGjEwQAZSas/s320/Phantompost.jpg இத்துடன் நின்றுவிடாது Phantom 2040 என்ற வீடியோகேம்கூட வெளிவந்தது. நீதன் மாயாவியா உனக்கு அழிவே இல்லையாமே? அதையும் ஒருகைபார்த்துவுடுவோம்.... மாயாவி-மன்னிக்கவும் என்னை உங்களால் அழிக்கமுடியாது... டுமீல்...டுமீல்.....டுமீல்.... http://3.bp.blogspot.com/-4M-lQvasfZE/UDSzy7qQKhI/AAAAAAAAKyg/-TNB4txp8_s/s320/Photo-0084.jpg http://2.bp.blogspot.com/-bkSLPVPLdSM/UDSz0OlpsZI/AAAAAAAAKyk/m_s8-qCnG3g/s320/Photo-0091..jpg http://2.bp.blogspot.com/-sSYXbkWQPfs/UDSz1YTiS4I/AAAAAAAAKyw/gpRk2P2PemI/s320/Photo-0113.jpg http://3.bp.blogspot.com/-5vvvDdGen00/UDSz2UlmY9I/AAAAAAAAKy0/EGsJ-qrTkHE/s320/Photo-0155.jpg http://4.bp.blogspot.com/-U-PAETK00zU/UDSz3njwdNI/AAAAAAAAKzA/bhHDwgESXVQ/s320/Photo-0262.jpg http://4.bp.blogspot.com/-7-qZ5P7OsOY/UDSz5VnLw0I/AAAAAAAAKzI/fIwkgBo9GeY/s320/THE_PHANTOM_17.jpg பின்வரும் தளங்களில் மாயாவியைப்பற்றிய புத்த்கங்கள்,விடயங்களை தெரிந்துகொள்ளலாம்... (மாயாவி/வேதாளர் கதைகளை முதல்முதலில் வெளியிட்ட தகவல்,அட்டைப்படங்களுக்கு க.கொ.க.கூட்டமைப்புக்கு நன்றி) https://www.manithanfacts.com/2021/09/mayavi comics rani comics phantom.html mokkaicomics kakokaku இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு) வைரத்தின் நிழல் -முகமூடி வேதாளர் -தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் ஜூம்போ டயானா மாயாவியின் திருமணம் பூவிலங்கு: முத்திரைமோதிரம் பான்ரொம்
  9. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் கனூலா என்ற ஒன்றை உங்கள் நாளத்தில் ஏற்றிவிடுவார்கள். அனுமதிக்கப்படும் அனைவருக்கும் இது ஏற்றப்படுவதில்லை ஆனாலும் அனுமதிக்கப்படும் நபருக்கு அண்டிபயோட்டிக் போன்ற மருந்துகளோ வேறுமருந்துகளோ வழங்கும் தேவையிருந்தால் கனுலா அவசியம் போடப்படும். கனுலாபற்றிய விளக்கத்தை முந்தையபதிவில் பதிவிட்டிருந்தேன் வாசிப்பதற்கு இங்கே கிளிக்கவும். Cannula வை 2 தொடக்கம் 3 நாட்களுக்கு கையில் தொடர்ச்சியாக வைத்திருக்கமுடியும், இதற்குமேலும் கனுலாவை தொடர்ந்துபயன்படுத்தும்போது கனுலா போடப்பட்ட இடத்தில் எரிச்சல், மருந்துகளை ஏற்றும்போது கடுமையான வலி போன்றவை ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் அவசியம் கனுலாவை அகற்றவேண்டும். கனுலாவை எப்படி போடுவது என்பதுதொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. கனுலாபோடப்பட்டும் கனுலா பிளாஸ்டரில் கனுலா போடப்பட்ட நாள் பதியப்படும். கனுலாவூடாக மருந்துகளை ஏற்றும்போது வலி ஏற்பட்டாலோ, எரிச்சல் ஏற்பட்டாலோ பிளாஸ்டரில் எழுதப்பட்டிருக்கும் திகதியை அவதானித்து கனுலாவை அகற்றி புதிய கனுலாவைப்போடமுடியும். நாம் பயன்படுத்தவேண்டிய பிளாஸ்டர் ஆனால் அரசவைத்தியசாலையில் இருப்பது நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கனுலா 3 நாட்களில் out ஆகலாம், அப்படி ஆகும்போது மருந்தை எவளவுதூரம் முயன்றாலும் ஏற்றமுடியாது கையில் (கையில் கனுலா ஏற்றப்பட்டிருந்தால்) வலி ஏற்படும், அதோடு அந்த இடத்தில் வீக்கமும் ஏற்படும். உடனடியாக மருந்தோ, சேலைனோ எது ஏற்றப்படுவதாக இருந்தாலும் அதை நிறுத்தவேண்டும்.இல்லையாயின் அந்தப்பகுதிக்குரிய இரத்த ஓட்டம் தடைப்படவாய்ப்புக்கள் இருப்பதுடன், நாளடைவில் இழைய இறப்பு ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது. மருந்துகள் ஏற்றப்பயன்படுட்தப்படும் ஊசியின் பகுதிகள்தான் மேலே காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சின் வகைகள் கீழே காட்டப்பட்டுள்ளது. சிரிஞ்சின் அளவுகள் சிசி CC என்றுதான் அழைக்கப்படுகின்றது. 20 சிசிcc=20mil சிரிஞ், பொதுவாக பயன்பாட்டில் 20சிசி,10சிசி,5சிசி,1 சிசி சிரிஞ்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் சைஸ்களுக்கு ஏற்றவாறு சிரிஞ்சில் இருக்கும் ஊசியின் சைஸும் வேறுபடும். இதில் 1 சிசி சிரிஞ்சை இன்சுலின் சிரிஞ் என்று அழைப்பார்கள், காரணம் இது இன்சுலின் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. "ஹொஸ்பிட்டல்ல குளுக்கோஸ் ஏத்தினவை" நம் சனம் பொதுவாகப்பயன்படுத்தும் வசனம் இதுதான், ஆனால் இதிலும் தவறு இருக்கின்றது. நோயாளிக்கு ஏற்றுவதற்காக என்னென்ன திரவங்கள் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுகின்றது? ஒவ்வொன்றும் வேறுவேறுவகை திரவங்கள்தான் அதோடு அவற்றின் லேபிளும் வேறுவேறு நிறங்களில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். பொதுவாக ஏற்றப்படும் திரவம் Normal saline இதை NS என்று சுருக்கமாக அழைப்பார்கள். ஒட்டுமொத்தமாக இந்த திரவங்கள் அனைத்தையும் வகைப்படுத்தமுடியும். முதலாவது வகை- Crystalloids VS colloids இப்படி வகைப்படுத்தலாம் இரண்டாவது வகை- எமது இரத்தத்தின் பாகுமைத்தன்மை, அடர்த்தி என்பவற்றிற்ற்கு ஏற்ப கீழே காட்டப்பட்டிருப்பதுபோல் திரவங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. "Antibiotic ஆல் ஏற்பட்ட அலேர்ஜியால் பேராதனையில் பெண் ஒருவர் மரணம்" இவற்றை எப்படித்தவிர்க்கலாம்? உங்களுக்கு ஏதாவது ஒரு உணவுக்கோ, மருந்துக்கோ ஒவ்வாமை இருப்பின் என்ன செய்யவேண்டும்? அடுத்த பதிவில் சந்திப்போம் https://www.manithanfacts.com/2023/12/hospital cannula .html
  10. நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி தொடர்பாக அண்மையில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது அதில் ஒருவர் இப்படி கூறுகின்றார். நஞ்சுக்கொடியை நம் முன்னோர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆலமரம் அல்லது அரசமரத்தின் கிளைகளில் கட்டிவிடுவார்கள் இதற்கான காரணம் மண்ணில் புதைத்ததால் அதன் நஞ்சு மண்ணில் பரவி எந்த செடி கொடிகளும் அங்கே முளைக்காது ஆனால் ஆலமரத்தில் கட்டிவிடடால் ஆலமரம் அதில் இருக்கும் விஷத்தை உறிஞ்சிவிடும். சரி வாருங்கள் இவர் கூறுவது உண்மைதானா? உண்மையில் நஞ்சுக்கொடி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். தாயின் வயிற்றினுள் இருக்கும் கர்ப்பப்பையை குழந்தையுடன் சேர்த்து இணைக்கும் பகுதிகளை நச்சுக்கொடி என்று சாதாரண மக்கள் அழைக்கின்றார்கள் உண்மையில் நச்சுக்கொடியின் தொழில்தான் என்ன என்று பார்த்துவிடுவோம் மேலே உள்ள படத்தைப்பாருங்கள் குழந்தை, பிளசண்டா, தொப்புள் கொடி அனைத்தையும் கொண்ட மிக மிக அடிப்படையான கட்டமைப்பு காட்டப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றுக்குள் உருவாகும்போது குழந்தையுடன் சேர்ந்து உருவாகும் தற்காலிக கட்டமைப்புத்தான் பிளசண்டா மற்றும் அம்பிலிக்கல் கோர்ட் என அழைக்கப்படும் தொப்புள்கொடி பிளசண்டா- இந்த அமைப்பு குழந்தையையும் தாயையும் இணைக்கும் பாலமாக தொழிற்படுகின்றது ஆனால் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்தப்பகுதியினூடாக குழந்தையின் குருதியும் தாயின் குருதியும் கலப்பதில்லை. இந்தப்பகுதி ஹோர்மோன்களைச்சுரக்கின்றது ஒரு பெண் கர்ப்பமடைந்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்வதற்காக HCG எனப்படும் ஹோர்மோன் சலத்தில் இருக்கின்றதா என பரிசோதனை செய்துபார்ப்பார்கள் Pregnancy strip test சலத்தினுள்ளே ஒரு குச்சிபோன்றிருக்கும் ஸ்ரிப்பை வைட்து சோதனை செய்யலாம் ஆனால் இப்போது அட்வான்சாக டிஜிடலில் கூட பரிசோதனைசெய்யமுடியும், இவ்வாறு பரிசோதனைசெய்யும்போது இந்த HCG சலத்தில் இருந்தால் மட்டுமே ரிசல்ட் போசிட்டிவ் என்று வரும் அதாவது அந்தப்பெண் தாயாகிவிட்டார். குழந்தைக்குத்தேவையான குளுக்கோஸ் மற்றும் நியூற்றிசன்கள் சத்துக்கள் அனைத்தையும் தாயிடமிருந்து பிளசண்டா எனப்படும் இந்தப்பகுதியே குழந்தைக்கு வழங்குகின்றது, அதோடு குழந்தையிடமிருந்து கழிவுகளை, ஒக்சிசன் அற்ற குருதியை தாய்க்கு கடத்துவதும் இந்த அமைப்புத்தான். சாதாரணமாக உடலின் அங்கங்களுக்கு தேவையான அடிப்படை இரத்தப்பரிமாற்றத்திற்காக ஒரு நாடி மற்றும் ஒரு நாளங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் ஆனால் ஆச்சரியப்படும்படியாக தொப்புள்கொடியில் மாத்திரம் இரண்டு நாடிகளும் ஒரு நாளமும் காணப்படுகின்றது. வயிற்றினுள்ளே பனிக்குடத்தினுள்ளே இருக்கும் குழந்தை எப்படி சுவாசிக்கின்றது? பனிக்குடத்தினுள்ளே இருக்கும் பாயம் அல்லது நீருக்குள்ளே இருந்து எப்படி குழந்தை சுவாசிக்கும்? மூழ்கி இறந்துவிடுமே? வழமையாக நாடி ஒரு அங்கத்திற்கு ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியைக்கொண்டுசெல்லும் ஆனால் இங்கே 2 நாடிகளும் குழந்தையிடமிருந்து ஒட்சிசன் இல்லாத காபனீர் ஒட்சைட் இருக்கும் கழிவு இரத்தத்தையே தாய்க்கு வழங்குகின்றது. சுருக்கமாக கூறினால் குழந்தை வயிற்றினுள்ளே இருக்கும்போது குழந்தை சுவாசிப்பதே இதனூடாகத்தான் அதாவது குழந்தையின் நுரையீரலே இதுதான் ( பிளசண்டா). பிளசண்டா என்ற இந்த அமைப்பை கர்ப்பப்பையில் எந்த இடத்திலும் உருவாகலாம் ஆனாலும் பொதுவாக கர்ப்பப்பையின் வாசலில் இது உருவாவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. கருப்பைவாசலை பிளசண்டா மூடியிருந்தால் அதை placenta previa என்று கூறுவார்கள். இதிலும் மூடப்பட்டிருக்கும் அளவிற்கு ஏற்ப வேறுவேறுபெயர்கள் காணப்படுகின்றது. இவ்வாறான பிளசண்டாவுடன் ஒரு பெண் கர்ப்பமடைந்திருந்தால் அதிகக்குருதிப்பெருக்கால் தாய் மற்றும் குழந்தை இருவரும் மரணிப்பதற்கான ஆபத்து சற்று அதிகமாக இருக்கும் ஆனாலும் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சையின்மூலம் இருவரையும் காப்பாற்றமுடியும். இந்த பிளசண்டா என்ற பகுதி குழந்தைபிறப்பதற்குமுன்பே கர்ப்பப்பையில் இருந்து கழருமானால் குழந்தையால் சுவாசிக்கமுடியாது குழந்தை இறந்துவிடும். இதன்போது அதிக இரத்தப்போக்கும் ஏற்படும். இதை placental abruption என்று கூறுவார்கள். சாதாரணமாக இவ்வாறு பிளசண்டா கர்ப்பபையைவிட்டு கழருமானால் கழரும்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கையும் அல்ரா சவுண்ட் ஸ்கானையும் வைத்து இதை உடனடியாக கண்டறியமுடியும் ஆனாலும் மேலே இரண்டாவதாக காட்டப்பட்டிருப்பதைப்போன்று வெறியே இரத்தம் கசியாமல் உள்ளேயே இரத்தம் தேங்கும்வகையில் பிளசண்டா கழருமானால் கண்டுபிடிப்பது கடினம் ஆனால் இப்படியான நேரத்தில் குழந்தையின் அசைவு குறைந்துகொண்டுசெல்வதை தாயாலுணரமுடியும் உடனே வைத்தியசாலைக்குச்சென்று ஸ்கான் செய்வதன்மூலம் ஆபத்தைக்கண்டறியமுடியும். இரட்டையர்களாக இருந்தால் பிளசண்டா எப்படி இருக்கும்? இதிலும் பலவகைகள் இருக்கின்றன. ஒரு பிளசண்டாவை இருவரும் பகிர்ந்துகொள்ளும்வகை, தனித்தனி பிளசண்டாவை தமக்காக குழந்தைகள் வைத்திருப்பார்கள். கீழே உள்ளபடம் மேலதிக விபரங்களுக்கு. தொப்புள் கொடியிலும் சில அசாதாரண நிலைகள் காணப்படுகின்றன. தொப்புள்கொடி கர்ப்பப்பையினூடாகவெளியேவரலாம், தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கலாம், தொப்புள்கொடியில் முடிச்சுக்கள் இருக்கலாம், இவற்றினாலும் ஆபத்துக்கள் ஏற்படலாம். இவற்றினால் தொப்புள்கொடி நசிவடைவதால் குழந்தைக்குதேவையான ஒக்சிசனை குழந்தையால் பெற்றுக்கொள்ளமுடியாது இதனால் குழந்தை இறந்துவிடும். இதை அறிந்துகொள்ள குழந்தையின் இதயத்துடிப்பு பதிவுசெய்யப்படுகின்றது. இதை வாசிக்கும் நீங்கள் ஒரு கர்ப்பவதியாக இருந்தால் இதைவாசித்துவிட்டு பயப்படவேண்டாம், மேலே கூறியவை மிக அரிதாக சிலருக்கு நடக்கவாய்ப்புகள் இருக்கின்றன, சரியான நேரத்தில் வைத்தியஉதவியை நாடுவதன்மூலம் உங்களையும் குழந்தையையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும். சரி நான் தொடங்கியவிடயத்திற்கு வருகின்றேன், எதற்காக நச்சுக்கொடி என்று பெயர்வைத்தார்கள் என்று எனக்குத்தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கொமண்டுங்கள் ஆனால் நச்சுக்கொடியென இவர்கள் எதைக்கூறியிருந்தாலும் அது நஞ்சல்ல அது நஞ்சாக இருக்குமானால் அது உருவாகும்போதே தாய்,சேய் இருவரும் இறந்துவிடுவார்கள். https://www.manithanfacts.com/2023/12/placenta umbilical cord karpam.html
  11. அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை. வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது. சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது. இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை. ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது. ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம் முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும். வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் ( தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் ) ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்.... அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான் ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை. அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது. வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில் Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம். TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள். இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம். https://www.manithanfacts.com/2023/12/tin no tax srilanka.html
  12. venkkayam started following suvy
  13. ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந்தார் அந்த வீடியோ வைரலாகியது இதன்பின்னர்தான் உலகிற்கு இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியவந்துள்ளது இந்த நகரத்தின் பெயர் விஸ்டர் இந்த நகரம் அலாஸ்காவில் அமைந்திருக்கின்றது அலாஸ்கா இரத்தம் உறையும் அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசம் இந்த நகரத்தில் ஒட்டுமொத்தமாகவே 220 சிட்டிசன்கள்தான் வசிக்கின்றார்கள் அவர்கள் சாப்பிங்க்,தியேட்டர்,ஸ்கூல் ஆபிஸ் என எங்குசெல்வது என்றாலும் லிப்டில் இருக்கும் நம்பர்களை அழுத்தினால்போதுமானது.14 மாடிகளைக்கொண்டிருக்கும் பெஜிச் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தினுள்தான் நகரத்தில் வசிப்பருக்கு பெரும்பாலும் தேவையான அனைத்துமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போலீஸ் ஸ்டேசன் 2 சூப்பர் மார்க்கெட்கள்,இண்டோர் பிளேகிரவுண்ட்,ஆபிஸ்,லவுண்ரி,போஸ்ட் ஆபிஸ் அதோடு கிளினிக் இதைவிட பேஸ்மெண்டில் ஒரு சர்ச்சும் இருக்கின்றது.இதனால் இங்குவசிக்கும் சிட்டிசன்கள் மாதக்கணக்காக வெளியே செல்லாமல் இதனுள்ளேயே இருப்பார்கள்.அதிகமான குளிர்காரணமாக இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வீதியும் பனியால் மூடப்பட்டுவிடும் எனவே இவர்கள் இந்தக்கட்டிடத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை தொடருகின்றார்கள்.கோடைகாலங்களில் மீன் பிடித்தல்தான் இவர்களது தொழிலாக இருக்கின்றது அதிகமானவர்கள் கோடைகாலத்தில் மீன் பிடித்தலையே தொழிலாக செய்கின்றார்கள்.இந்த நகரத்திற்கு அரசு எந்த ஒரு பப்பிளிக் ட்ரான்ஸ்போற்ட்டையும் உருவாக்கவில்லை இதனால் காரிலோ அல்லது கப்பலிலோதான் இந்த நகரத்திற்கு பயணிக்கமுடியும் கோடைகாலத்திலும் மிக அதிக நேரம் மழைபெய்துகொண்டே இருக்கும். நவம்பரில் இருந்து பெப்ரவரி வரை தொடர்ச்சியாக 4 மாதங்கள் சூரியனையே இந்த நகரத்தில் இருப்பவர்கள் பார்க்கமுடியாது.இந்த நகரத்துக்கு நுழைவதற்கு பயன்படுத்தும் ஒரே ஒரு வீதியும் பல குகைவழிப்பாதைகளைக்கொண்டது இரவில் இந்த குகைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிடும் இதனால் குளிர்காலத்தில் இந்த நகரத்தில் குற்றங்கள் மிகமிகக்குறைவாகவே காணப்படும் காரணம் ஏதாவது தவறுசெய்துவிட்டு தப்பிச்செல்லவே முடியாது வெளியே சென்றால் குளிரிலேயே உறைந்து மரணிக்கவேண்டியதுதான். ஏதாவது இடத்திற்குசென்று நீங்கள் தொலைந்துவிடவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.இங்கே வாழும் மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் மிக நட்பாகவே பழகுகின்றார்கள் மாணவர்கள் டவுட் என்றால் உடனே ஓடிச்சென்று ஆசிரியரின் கதவைத்தட்டுகின்றார்க்ள்.சில மாதங்களில் மட்டும் அனைத்து கடைகளும் இங்கே மூடப்பட்டிருக்கும் அவ்வாறான நேரங்களில் தனிமை அவர்களை வாட்டும் உடனே ஒவ்வொருவரும் வேறு வேறு தளத்துக்கு சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நாளை மகிழ்ச்சியாக செலவிடுகின்றார்கள். மிகவும் குளிரான நாளில் பனிப்பொழிவு சுமார் 20 அடிகள்வரை உயரும் அதோடு 60 மைல் வேகத்தில் குளிர்காற்றும் இங்கே வீசிக்கொண்டிருக்கும் இதன் காரணமாக பனிக்கரடிகள்கூட வெளியே வருவதில்லை அதோடு பனிக்கரடிகள் இங்கே அதிகம் என்ற காரணத்தினாலும் பிளே கிரவுண் பில்டிங்கின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது இங்கே விவசாயம் மற்றும் காய்கறிகள் உற்பத்திசெய்வதற்காக மிகப்பெரிய தனி அறை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள்,கோடைகாலம் தொடங்கப்போகின்றது என்றவுடன் காய்கறிகளை நட ஆரம்பித்துவிடுவார்கள் சூரிய ஒளிக்காக ஸ்பெஸலாக உருவாக்கப்பட்ட மின் விளக்குகளைப்பயன்படுத்துகின்றார்கள் இவற்றின் மூலமே இங்கு விவசாய உற்பத்தி நடைபெறுகின்றது வாழ்வதற்கு இவளவு கடினமான இடத்தில் எதற்காக மக்கள் வசிக்கின்றார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் இவர்கள் தாமாக விரும்பி இங்கே குடியேறவில்லை.1943 இல்தான் இந்த நகரம் உருவாக்கப்பட்டது அமெரிக்க ராணுவத்தின் காம்ப் ஒன்றை நிறுவுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்று தேவைப்பட்டபோதுதான் இந்த இடம் அதற்காக தெரிவுசெய்யப்பட்டது.எதிரிகளின் கண்களில் அகப்படாத மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பிரதேசம்தான் உண்மையில் தேவையாக இருந்தது ஆனால் இந்த இடம் இயற்கையாகவே அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்திருந்தது அதோடு மைனஸ் டிகிரி வெப்ப நிலையில் குளிர் இருக்கும்போது இங்கே இருக்கும் கடல் நீர் உறைவதில்லை எனவே இராணுவத்தளபாடங்களை கப்பல் மூலம் நகர்த்துவதற்கு இந்த இடம் மிகப்பொருத்தமாக இருந்தது. அதோடு இந்த நகரத்துக்கான வீதி 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மலையைக்குடைந்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.இராணுவ காம்பை அடுத்து ஒரே உருவில் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகள் அமைக்கப்பட்டன ,இப்போது அங்கு காணப்படும் பக்னர் பில்டிங்க் பொறியியலாளர்களுக்காக கட்டப்பட்டது.தற்போது மக்கள் வசித்துவரும் 14 மாடிகளைக்கொண்ட ஹோஜ் பில்டிங்தான் அப்போது இராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது பின்னர் இந்த பில்டிங்க் பெஜ்ஜி டவர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.அமெரிக்க பாராளுமன்றத்தைச்சேர்ந்த ஒருவர் விமானவிபத்தில் இங்கே காணாமல்போனார் இதன்பின்னரே இந்தக்கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.இந்தக்கட்டிடத்தை அண்டன் ஆண்டர்சன் என்ற பொறியியலாளர் வடிவமைத்திருக்கின்றார். 1964 மார்ச் 27 இல் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது 1200 அணுகுண்டுகள் வெடித்தால் என்ன சக்தி வெளிப்படுமோ அந்த அளவுக்கு இந்த நில நடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய சுனாமி அலையில் அந்த நகரமே துடைத்தெறியப்பட்டது தற்போது இருக்கும் 14 மாடிகளைக்கொண்ட கட்டிடம்கூட பாரிய சேதமடைந்தது.இதனால் இராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டது ஆனால் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மக்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். 1969 இல் இது தனி நகரம் என்ற அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.இந்த சம்பவம் நடந்தபோது நகரத்தில் தங்கியிருந்த பொறியியலாளர்கள் மற்றும் வேலைசெய்தோரின் பிள்ளைகள்தான் இப்போது இந்த நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.பக்னர் பில்டிங்க் இப்போதும் உடைந்த நிலையில்தான் காணப்படுகின்றது.இதை மீண்டும் கட்டுவதற்கு இடிக்கவேண்டி ஏற்படும் இதனால் ஏற்படும் தூசுக்களால் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் அதோடு அதற்கான பொருட்களைக்கொண்டுவருவதும் மிகக்கடினமான வேலை எனவே அந்த பில்டிங்கை மக்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.பாதிப்படைந்த பெஜ்ஜி டவர்ஸை மட்டும் மக்கள் சரிசெய்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றார்கள். இங்கே வசிக்கும் சிலர் வேலைசெய்வதற்காக இந்த நகருக்கு 105 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சோரா எனப்படும் நகரிற்கு செல்கின்றார்கள் ஆனால் அந்த நகரத்திற்கு செல்வதற்கும் குகைவழிப்ப்பாதைக்கு வருடத்திற்கு 500 டாலர்கள் பணம் செலுத்தவேண்டும்.கோடைகாலத்தில் இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழிகின்றது உலகின் பல்வேறுபாகங்களில் இருந்து இங்கே மக்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்,கடல்,ஏரிகள்,காடுகள்,பனிக்கரடிகள்,கடல்சிங்கம் என சுற்றுலாப்பயணிகளைகவரும் பலவிடயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன அதோடு ஆழ்கடல் மீன்பிடியும் இங்கே மிகப்பிரபலம் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வசித்துவந்தமக்கள் வேறு நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் இதனால் 200 அப்பார்ட்மெண்ட்கள் இப்போது காலியாக உள்ளன.அதோடு பலர் இந்த அப்பார்ட்மெண்ட்களை வாங்கிக்கொண்டுமிருக்கின்றார்கள். மிக பிஸியாக சுற்றிக்கொண்டும் இந்த உலகில் இருந்து கொஞ்சம் தனிமைவேண்டுமாக இருந்தால் நிச்சயம் இந்த இடம்தான் யாருக்கும் முதலாவது தெரிவாக இருக்கமுடியும் https://www.manithanfacts.com/2023/12/whittier alaska.html
  14. அண்மையில் இலங்கை மக்களை குறிப்பாக இலங்கையின் வடபகுதி மக்களை பீதியில் ஆழ்த்திய விடயம்தான் யாழ் போதனா வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்ட்தால் ஒரு சிறுமியின் கை அகற்றப்படடமை, உண்மையில் தவறான மருந்துதான் வழங்கப்பட்ட்தா? கனுலா எனப்படும் மருந்தை உடலுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியை பத்துவருடங்களுக்குமேல் அனுபவம் கொண்ட தாதி தவறாக ஏற்றினாரா? ஓரிரு நாட்களுக்குள் கை அழுகுமா? போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன் எத்தனை தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறுமி சென்றிருந்தார்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன, ஆனால் இங்கே நான் இந்த சம்பவம் தொடர்பான தர்ம நியாயங்களை விவாவதிக்கப்போவதில்லை, மாறாக எதாவது ஒரு நோய்க்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களைப்பற்றியே நான் இங்கே கூறப்போகின்றேன். வைத்தியசாலைக்கு முதல்தடவை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் நிச்சயம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார் ஏனென்றால் அவரது அன்றாட கடமைகள் வேலைகள் அனைத்துமே தலைகீழாக்கப்பட்டிருக்கும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்ன கூறுவார்கள் எங்கே அனுப்புவார்கள்? என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு சில நிமிடங்களுக்கு முன்பே கூறப்படும். இதை நான் ஒரு தொடராக எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன் மருத்துவ உலகில் உங்களுக்கு தெரியவேண்டிய அத்தனை விடயங்களையும் சாமானியனுக்கு விளங்கும் வகையில் விளக்குவதற்கு முயற்சிசெய்க்கின்றேன். வாருங்கள் மருத்துவ உலகிற்குள் நுழைவோம்........... கனுலா/வென்லோப் cannula/ venflon நீங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட்தும் உங்கள் உடலில் ஏற்றப்படும் ஊசி போன்ற ஒரு பொருள்தான் இது இதை உங்கள் உடலினுள்ளே மருந்துக்களையோ இரத்தத்தையோ ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். இது பல்வேறு நிறங்களிலும் அளவுகளிலும் காணப்படுகின்றது. சாதாரணமக்களிடம் கேட்டால் "கனுலாவை நரம்பில் ஏற்றுவார்கள்" என்றுதான் கூறுவார்கள் அனால் நரம்பு என்பது மூளையில் இருந்து உடலுக்கும் உடலின் பகுதிகளில் இருந்து மூளைக்கும் செய்திகளை கடத்தும் தொழிலை செய்யும் எனவே அதில் கானுலாவை போடமுடியாது. மனித உடலில் நாடி நாளம் என இரு இரத்தக்குழாய்கள் இருக்கின்றன , இதில் நாடி இதயத்தில் இருந்து குருதியை உடலின் பகுதிகளுக்கு கடத்தும் இதில் விரலால் அழுத்தி இதயத்துடிப்பு எண்ணிக்கையை கணக்கிடமுடியும் அடுத்தது நாளம் இது உடலின் பிற பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக்கடத்தும் இந்த நாளத்தில்தான் கனுலா ஏற்றப்படும் உடலில் எங்கெங்கு இவற்றை ஏற்றமுடியும் பொதுவாக இதை கையில்தான் ஏற்றுவார்கள் ஆனாலும் சிலருக்கு சில நோய் நிலை காரணமாகவோ முதுமை காரணமாகவோ இலகுவில் கானுலாவை ஏற்றமுடியாது எனவே கால்களிலும் இல்லையெனில் கழுத்திலும் கனுலா போடப்படுகின்றது கீழே உள்ள படத்தில் கனுலா போடப்படும் பொதுவான பகுதிகள் காட்டப்பட்டிருக்கின்றது தாதி ஒருவரே பொதுவாக கானூலாவை போடுவார் முதலில் கனுலா போடவேண்டிய கையில் கயிறு போன்று ஒரு சேலைன் வயரை கட்டுவார்கள் ( tourniquet ) இப்படி கட்டும்போதுதான் நாளங்கள் புடைத்து தோலின் வெளியே தெரியும் இலகுவாக காணூலாவை போடமுடியும், அப்படியும் சிலரது தொழில் நாளத்தை பார்க்க முடியாது இப்படியான சந்தர்ப்பங்களில் விரலாலோ கையாலோ கனுலா போடவேண்டிய பகுதியின் மேல் தட்டுவார்கள் இப்படி தட்டும்போது நாளம் புடைத்து வெளியே தெரியும் ஒருவேளை என்ன செய்தும் உங்களுக்கு கானுலாவை போட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம் உள்ளே இருக்கும் நாளத்தை கண்டுபிடிப்பதற்காக இன்பிரா லைட் ஸ்கானர் வைத்த்து கண்டுபிடிக்கமுடியும் அதுவும் இல்லையென்றால் Ultra சவுண்ட் ஸ்கானரை வைத்த்துத்தான் கண்டுபிடிப்பார்கள். கனுலாவை போடும்போது கானுலாவை தோலுடன் சேர்த்து ஓட்டும் பிளாஸ்டரில் ஒரு திகதியை எழுதிவிடுவார்கள். எந்த நாளில் கனுலா போடப்படடதோ அந்த திகதியை எழுதுவார்கள் அல்லது எந்த திகதியில் கானுலாவை கழற்ற வேண்டுமோ அந்த திகதியை எழுத்திவிடுவார்கள் இந்த முறை வைத்தியசாலைக்கு வைத்தியசாலை வேறுபடலாம் எப்படி இருந்தாலும் கனுலா போடப்பட்டு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கானுலாவை கழற்றி விடவேண்டும். கனுலாவின் பகுதிகள் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது கனுலா போடப்படடால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? கனுலா போடப்படட பகுதியை நனைக்கக்கூடாது அதோடு கானுலாவில் இருக்கும் மூடியை ( luer lock plug ) திறக்க முயறசிக்க கூடாது. புதிதாக போடப்படட கனுலாவின் மூடியை கழற்றினால் இரத்தம் அதிக அளவில் வெளியேறும். நித்திரையில் தவறுதலாக கழன்றால் கூட நோயாளிக்கு தெரியவராது நோயாளி இரத்தப்போக்கால் இறந்துவிடுவார். பொதுவாக பயன்பாட்டில் உள்ள கானுலாவின் நிறங்களும் அவற்றின் அளவுகளும் பெரியவர்களுக்கு பொதுவாக பச்சை நிற கனுலாவே போடப்படும் , சிறுவர்களுக்கு நீலம் அல்லது பிங்க் நிறத்தையும் குழந்தைகளுக்கு மஞ்சள் அல்லது நீல நிறம் பயன்படுத்தப்படும். கனுலா சரியாக போடப்பட்டிருக்கின்றது என்பதை எப்படி அறிந்துகொள்வது? கனுலாவின் ஊசி தொழில் ஏறும்போது ஏற்படும் வலியைத்தவிர வேறு எந்த வலியையும் நீங்கள் உணரமாட்ட்ர்கள். கனுலாவினுள் மருந்து செலுத்தும்போது எந்த வலியும் இருக்காது. மருந்து ஏற்றும் தாதி, சிரின்சின் மூலம் மருந்த்தேற்றும் பொது மிக இலகுவாக செல்லும், வலிந்து செலுத்த தேவையில்லை. கனுலா போடப்பட்டதும் வெள்ளை மூடியின் அருகில் இரத்தத்தை பார்க்கமுடியும் கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்வது? ( கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை கனுலா அவுட்டக்கிவிட்ட்து ( cannula out of vein ) என்று கூறுவார்கள் ) கனுலா போடப்படட இடம் வீங்கியிருக்கும். கனுலாவில் இருந்து இரத்தம் வராது மருந்தோ சேலைனா எதுவும் உள்ளே செல்லாது. சிரிஞ்சின் மூலம் மருந்து ஏற்றும்போது மிகுந்த வலியை ஏற்படுத்தும். ஏற்றப்படட இடம் மருந்து தோலின் கீழ் சென்று தேங்குவதால் வீங்கும். கனுலா சரியாக நாளத்தினுள் செல்லவில்லையாயின் கனுலாவினூடு செலுத்தப்படும் மருந்தோ அல்லது இரத்தமோ சுற்றி இருக்கும் திசுக்களுக்கும் மற்றும் தோலிற்கு கீழாக தேங்கும் இதை Extravasation என்று அழைப்பார்கள். அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை Thrombophlebitis என்று அழைப்பார்கள் என்று அழைப்பார்கள். இது ஏற்பட்டால் தோலினுள்ளே, இழையங்களினுள்ளே கிருமித்தொற்று ஏற்பட்டு ( cellulitis ) இழைய இறப்பு ஏற்படும், இதனால் பாதிக்கப்படட பகுதியை வெட்டி அகற்றவேண்டியேற்படும் (amputation) இல்லையெனில் அதீத கிருமித்தொற்று (sepsis) காரணமாக இறப்பு ஏற்படலாம். நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி ஏற்படும் நோய்த்தொற்றை அளப்பதற்கு கீழே காட்டப்பட்டிருக்கும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது பாதிப்புக்கள் ..... வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட்தும் கனுலாவை கழற்றிவிட்டுத்தான் வீடுசெல்லவேண்டும், வார்டு இருக்கும் வேலை நெரிசலில் தாதியர்கள் கழற்றமறந்தாலும் நீங்களாகவே கேட்டு கழற்றிவிடுங்கள். கனுலாவை கழற்றும்ப்போது பஞ்சு ஒன்று தருவார்கள் அதை கனுலா போடப்பட்ட இடத்தில் நன்றாக அழுத்தி குறைந்தது 05 நிமிடங்களாவது வைத்திருக்கவேண்டும் அப்படி செய்தால்தான் இரத்தம் வெளிவருவதை நிறுத்தமுடியும். நீங்கள் ஆஸ்பிரின் போன்ற குருதியுறையா மருந்துகள் பாவிப்பவராக இருந்தால் 10 நிமிடங்களுக்குமேல் நன்றாக அழுத்தி வைத்திருக்கவேண்டும். தொடரும் ...... https://www.manithanfacts.com/2023/12/hospital cannula .html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.