Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடிக்கதையை நம்புகிறதா சர்வதேசம்?

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு தொடுத்த போரினால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த இடங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது என்று தொடர்ந்து அரசு கூறிவருகிறது.

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது மக்கள் வசித்த பகுதிகளிலும், அவர்கள் தொழில் செய்துவந்த இடங்களிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும், அவைகளை அகற்றிய பிறகே மீள் குடியமர்த்தம் சாத்தியமாகும் என்றும், அதற்கு உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சை படிக்கும் எவரும், அவர் கூறுகின்றமை அனைத்தும் உண்மைதானோ என்று நம்பிவிடக்கூடும். போரினால் இடம் பெயர்ந்த 3 லட்சம் தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்து, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5 லீற்றர் குடிதண்ணீர் மட்டுமே கொடுத்து, போதுமான கழிப்பறை வசதி கூட செய்து தராமல், அதற்கும் அவர்களை வரிசையில் நிற்க வைத்து கடந்த 5 மாதங்களாக வதைத்துவரும் ஒரு ஜனாதிபதியின் பேச்சு இது என்பதைப் புரிந்துகொண்டால் இவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதில் எந்தச் சந்தேகமும் எழாது. இந்தக் கண்ணி வெடிக் கதையை போர் முடிந்துவிட்டதாக இராணுவம் அறிவித்த நாள் முதல் அதிபர் ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திற்குக் கூறி வருகிறார்.

இவருடைய கண்ணிவெடிக் கதையை மறுப்பவர்கள் எழுப்பும் கேள்விகள் இவைதான்:

* போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்த, தொழில் செய்த பூமியெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்று அதிபர் ராஜபக்ஷ கூறுவது உண்மையானால், அந்தப் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றுதானே அந்த மக்கள் புலிகளுடன் சென்று கடைசியாக தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் வரை சென்றீர்கள்? அப்பொழுதெல்லாம் அந்தக் கண்ணி வெடிகள் ஏன் வெடிக்கவில்லை?

* இறுதிக் கட்டமாக போர் நடந்த போது பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை நடக்க வைத்துத்தானே இந்த முகாம்களுக்கு கூட்டி வந்தீர்கள். அப்போதும் கண்ணி வெடிகள் வெடிக்கவில்லையா?

*பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து முகாம்களுக்கு அழைத்துவரும் வரை கண்ணி வெடி வெடித்து உயிரிழந்தார்கள் என்று எந்தச் செய்தியையும் இலங்கை அரசு கூறவில்லையே! அப்பொழுதெல்லாம் வெடிக்காத கண்ணி வெடிகள் இதற்கு மேல் வெடிக்குமா?

சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இதுவரை அரசு பதில் சொல்லவில்லை. கண்ணி வெடிகளை அகற்றத் தாங்கள் உதவிடத் தயார் என்று மேற்கத்திய நாடுகள் முன்வந்ததையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசு சொல்லும் இந்தக் கண்ணி வெடிக் கதையை ஏற்றுக்கொண்டு ஆமாம் போடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே! உலகின் மற்ற நாடுகள் எவையும் இந்தக் கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான துணைக் குழுவிற்கு வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக், முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு கண்ணி வெடிகள் இருப்பதே காரணம் என்று ஸ்ரீலங்க அரசு கூறியதை "முட்டாள்தனம்"' என்று வர்ணித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த, வாழும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் முகாமில் உள்ள மக்களுக்கு உறவினர்களாக உள்ளவர்கள் வசித்து வருகின்றனர். போர் நடந்த பகுதியில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், தமிழர்கள் வாழும் மற்ற நகரங்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் அவர்களை அனுப்பி வைக்கலாமே? என்று ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படிப்பட்ட கேள்விக்களுக்கு இதுவரை ஸ்ரீலங்கா அரசு பதிலளிக்கவில்லை என்பதலிருந்தே அது பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகிறது என்ற உண்மை புலனாகிறது.

எனவே தமிழர்களை மீள்குடியமரச் செய்வதோ அல்லது அவர்களை கௌரவமாக நடத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வோ ராஜபக்ஷ அரசின் நோக்கமல்ல. முகாமில் அடைபட்டுள்ள மக்கள் வாழ்ந்த அவர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களைக் குடியேற்றி, அதன் மூலம் ஈழத் தமிழர்களின் தாயகம் என்ற ஒன்று இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசின், நோக்கமாகும் என்ற விமர்சனங்கள் இப்போது எழத் தொடங்கியிருக்கின்றன. இதனை ஆதரிக்கிறது இந்தியா. ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வரும் பாரம்பரிய பூமியில் அவர்களை ஒரு தனித்த மொழியினமாக வாழ அனுமதிப்பது தனி ஈழ நாட்டின் அமைவை நோக்கியே கொண்டு செல்லும், அப்பகுதியின் தமிழின தனித்துவத்தை மாற்றிவிட்டால் அவர்களின் ஈழ விடுதலைக் கனவை சிதைத்துவிடலாம் என்பது இவர்களின் திட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்கள் குடியேறுவதில் எந்தத் தவறும் இல்லை என்று போர் முடிந்த உடனேயே ஜனாதிபதியின் ஆலோசகரும் அவருடைய சகோதருமான பசில் ராஜபக்ஷ கூறினார். இப்பொழுதும் அதை வலியுறுத்தி வருகிறார். தமிழர்கள் வாழ்ந்து வந்த மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை செய்யும் முனைப்பில் அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்று தமிழ் எம்.பிக்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த மணலாற்றுப் பகுதியில் தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த போரை அரசு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் இயங்கிவந்த கிளிநொச்சியிலும், முல்லைத் தீவுப் பகுதியிலும்இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தி, படைகளை நிரந்தரமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது, இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புடன், எப்படி யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி பல்லாயிரக்கனக்கான இராணுவத் தினரை நிரந்தரமாக நிலை நிறுத்தியுள்ளதோ அதேபோன்று தமிழர்களின் பூர்வீக பூமி முழுமையிலும் இராணுவத்தை நிலைநிறுத்தி தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அரசு முயன்று வருகிறது. அதற்காகத்தான் இராணுவ பலத்தை பெருக்க வேண்டும் என்கின்றனர்.

இதற்கான கட்டமைப்புப் பணிகளை சர்வதேச சமூகம் கண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அங்கெல்லாம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன எனவும், அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ஷ அரசு கூறிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளும், ஐ.நாவும் விழித்தெழுந்து அம்மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் சென்று குடியேற ஸ்ரீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் தரவேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால், ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் பரிந்துரைத்ததுபோல, அரசிற்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியக் கடனின் அடுத்த தவணையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நன்றி: "வெப்துனியா/உதயன் http://www.uthayan.com/Welcome/afull.php?id=133&L=T&1256354136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.