புதிய பதிவுகள்2

உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ

3 months 1 week ago
6 மணி நேரங்களுக்கு முன்னர் செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார். செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார். மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 1 week ago
கபிதன். இணைத்த கெட்ட காணொளி முதலில் இருந்தது ...நிர்வாகம் அகற்றி விட்டது என நினைக்கிறேன் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பகுதியில் இது சம்பந்தமாக நிழலி. ஒரு பதிவு போட்டிருந்தார். போய் பாருங்கள்

இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

3 months 1 week ago
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்தியாவில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், நோரா பதேஹி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/296731

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள் - பிபிசி கள ஆய்வு

3 months 1 week ago
கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 21 மார்ச் 2024 சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள். சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர். இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது. இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிப்புச் செய்யப்பட்டது. பரந்தூரில் அமையவிருக்கும் இந்த புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். "எத்தனை லட்சம் தந்தாலும் வேண்டாம்" திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகனாபுரம் மக்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. தினமும் இரவு நேரங்களில் இந்தத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்துவது, கிராம பஞ்சாயத்துகளில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது, கிராமசபை கூட்டங்களைப் புறக்கணிப்பது என பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இருந்தபோதும், இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்வது இவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் 600-ஆவது நாள் போராட்டத்தை, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒப்பாரிப் போராட்டமாக நடத்தினர். போராட்டம் நடந்த சனிக்கிழமையன்று, பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அன்று மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டம் நடக்கும் தினங்களில், இந்தப் பகுதி முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில்கூடி போராட்டம் நடத்துவது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், இப்பகுதி மக்கள் இந்த விவகாரத்தை அப்படியே விடுவதாக இல்லை. ஏகனாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே வெறும் 53 சென்ட் நிலம்தான் இருக்கிறது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் நெல் தனக்கு வருடம் முழுவதும் போதுமானதாக இருக்கிறது என்கிறார் அவர். அந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டுவிட்டு, எத்தனை லட்சம் தந்தாலும் அது தனக்கு தேவையில்லை என்கிறார் அவர். "இது டெல்டா மாவட்டங்களைப் போல ஆற்றை நம்பியிருக்கும் பாசனப்பகுதி அல்ல. ஏரியில் தண்ணீரை நிரப்பி, அதன்மூலம் விவசாயம் செய்துவருகிறது. அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இதை எடுத்துக்கொண்டு அவர்களால் எத்தனை கோடி தர முடியும்?" என்கிறார் அவர். படக்குறிப்பு, கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் விமான நிலையத்தைப் பொறுத்தவரை, 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2030க்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு பத்து கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் திட்டமிடப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் போராடும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினர். அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிலங்களுக்கு இழப்பீடாக நிலத்தின் மதிப்பைப் போல 3.5 மடங்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள், கவலைகள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் நான்காம் தேதி பரந்தூர் விமான நிலையம் ஏன் அவசியம் என ஒரு அறிக்கை தமிழக அரசிடமிருந்து வெளியானது. அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்தத் திட்டத்திற்கான Techno - Economic ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது டிட்கோ நிறுவனம். இதையடுத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அரசு மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதற்குப் பிறகு, பரந்தூரில் விமான நிலையம் வந்தால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு நிபுணர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இப்போதுவரை வெளியாகவில்லை. ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதற்குக் காரணம், 908 ஏக்கர் பரப்பளவும் 2,400 பேர் மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், இந்தத் திட்டத்திற்காக முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. அச்சத்தில் கிராம மக்கள் அரசு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. "நாங்கள் பிறந்த பூமி இது. மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 13 ஆயிரம் ரூபாய் என வழிகாட்டு மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், பக்கத்திலேயே ஒரு சதுர அடி நிலம் 4 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறது. ஆக இழப்பீடு என்பதை எந்த அடிப்படையில் தருவார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் இளங்கோ. ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் இருக்கின்றன. 800 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. 1,700 வாக்காளர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது இவர்களுக்கு அச்சமளிக்கிறது. படக்குறிப்பு, பண்டேரி தேர்தல் புறக்கணிப்பு ஏகனாபுரத்தைச் சேர்ந்த பண்டேரிக்கு இங்கே மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனக்கு தூக்கமே வருவதில்லை என்கிறார். "நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவருகிறோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. வீட்டை வேறு கடன் வாங்கிக் கட்டிவிட்டோம். நிலத்தையும் வீட்டையும் எடுத்துக்கொண்டால் அம்போவென போய்விடுவோம். இதையே நினைத்துக்கொண்டிருப்பதால் இரவெல்லாம் தூக்கமில்லை. இதுவரை அரசாங்க அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்களைப் பார்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில்கூட நிலமிருந்ததால் பசியில்லாமல் இருநதோம். எங்களை இங்கிருந்து அடித்து விரட்டினாலும் செத்துப் போவோமே தவிர, ஊரைவிட்டுப் போகமாட்டோம்" என்கிறார் அவர். இவ்வளவு நாட்களாகப் போராடியும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் இவர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், அது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு, இதுவரை இந்தப் பக்கமே வரவில்லை என்பது இவர்களை வெகுவாக ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இப்பகுதி மக்கள் வந்திருக்கின்றனர். "மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை இங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி பேதமற்று சேர்ந்து போராடுகிறோம். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எப்போதாவது குரல் கொடுப்பார். போராடத்திற்கு வரமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு இந்தப் பகுதிக்கு வந்ததே கிடையாது. ஓட்டுக் கேட்கும்போது, நான் எம்.பியானால் இந்தத் திட்டம் வராது என்று வாக்களித்தார். அப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்தான். ஒரு அறிக்கைகூட விடவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூட வரவில்லை. இந்த முறை நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப்போகிறோம். விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை என்ன மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன். இந்தப் புதிய விமான நிலையத் திட்டத்தில் 13 கிராமங்களின் நிலம் கையகப்படுத்தப்படும் என்றாலும் ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய மூன்று கிராமங்களில்தான் எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது. படக்குறிப்பு, சுப்பிரமணியன் நெல்வாய் கிராமத்தைப் பொறுத்தவரை, சுமார் 900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருக்கிறது. இதில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலமாகவும் 300 ஏக்கர் நிலம் அரசின் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. இங்கிருக்கும் விவசாயிகளும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். "எம்.எல்.ஏ., எம்.பி. என யாரும் இதுவரை இங்கே வந்து கேட்கவில்லை. அரசும் சரி, அரசியல்வாதிகளும் வந்து எதுவும் கேட்கவில்லை. அவர்களாக சர்வே எண்ணை குறிப்பிட்டு, அந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், ஆட்சேபணை தெரிவியுங்கள் என்கிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம். நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் நெல்வாயைச் சேர்ந்த விவசாயியான குணசேகரன். படக்குறிப்பு, குணசேகரன் சிறு அளவில் நிலங்கள் தேவைப்படும் சிறுவள்ளூர், அக்கமாபுரம், பொடவூர் ஆகிய இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு அளித்த விண்ணப்பத்தை டிட்கோ நிறுவனம் திரும்பப்பெற்றிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் டிட்கோ விண்ணப்பிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது. ஆகவே, மிகவும் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சில கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கலாம். இங்கு வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதால், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், மக்களிடம் தங்கள் கொண்டு சேர்க்க இது உதவும் என நம்புகிறார்கள் இப்பகுதி மக்கள். https://www.bbc.com/tamil/articles/cxrzdvevq4wo

ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி

3 months 1 week ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். https://thinakkural.lk/article/296776

ஆழ்கடல் சுரங்கம்: கனிமங்களை கைப்பற்றி வல்லரசு நாடுகளை முந்த முயலும் இந்தியா

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்கடல் சுரங்கம் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் , பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இந்தியா, மேலும் இரண்டுக்கு விண்ணப்பித்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடலின் மேற்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் கீழே உள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம், மாங்கனீசு போன்ற கனிம வளங்களின் மிகப்பெரிய இருப்பை அடைய போட்டியிட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த சர்வதேச கடற்பரப்பு ஆணையம் (ISA) இதுவரை 31 ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது, அவற்றில் தற்போது 30 ஆய்வுகள் செயலில் உள்ளன. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த வாரம் ஜமைக்காவில் கூடி சுரங்க உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இந்தியாவின் புதிய விண்ணப்பங்களை ஐஎஸ்ஏ அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் உரிம எண்ணிக்கை ரஷ்யாவுக்கு இணையாகவும், சீனாவைவிட ஒன்று குறைவாகவும் இருக்கும். இந்தியாவின் விண்ணப்பங்களில் ஒன்று, மத்திய இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதியில் உள்ள செம்பு, துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்ட நீர்வெப்ப துவாரங்களுக்கு அருகில் உள்ள பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆராய முயற்சி செய்வதாகும். பிபிசி பார்த்த ஆவணங்களின்படி, ஐஎஸ்ஏவின் சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆணையம் இதுகுறித்த கருத்துகள் மற்றும் கேள்விகளின் பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள அஃபனசி-நிகிடின் கடல் பகுதியில் கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளை ஆராய்வதற்காக அளிக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாடு ஒன்று இந்தியா விண்ணப்பித்த அதே கடற்பரப்பை உரிமை கோரியுள்ளது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கு இந்தியாவிடம் பதில் கேட்டுள்ளது. விண்ணப்பங்களுக்குக் கிடைக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. "இந்தியப் பெருங்கடல் மிகப்பெரிய அளவில் வளங்களின் இருப்புகளை உறுதியாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் விரிவு இந்திய அரசை அறிவியல் பூர்வமாக கடலின் ஆழத்தை ஆராய்வதற்கு ஊக்கமளித்துள்ளது" என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் புவிசார் அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலி நுண்ணறிவு வழங்கும் நிறுவனமான ஹொரைசோன் அட்வைசரியின் இணை நிறுவனர் நாதன் பிகார்சிக் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது. இந்தியா, சீனா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்தியப் பெருங்கடல் முகடு பகுதியில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்ய உரிமம் பெற்றுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் 5,270 மீட்டர் ஆழத்தில் அதன் சுரங்க சோதனைகளை நடத்தியது. அதில் சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது. இந்தியாவின் ஆழ்கடல் சுரங்கத் திட்டங்கள் தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு புவி அறிவியல் அமைச்சகம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. "உச்சகட்டமாக இந்தியா தன்னை அதிகார மையமாக காட்டிக்கொள்ள நினைத்தாலும், தனது எல்லைகளைத் தாண்டி அது மேலோங்கி நிற்காமலும், அதேநேரம் ஆழ்கடல் என்று வரும்போது சீனாவைவிட பின்தங்கவில்லை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தவும் முயலக்கூடும்," என்கிறார் ஜெர்மனியின் போட்ஸ்டாமில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் கடல் நிர்வாகத்தில் பணிபுரியும் பிரதீப் சிங். ஐ.எஸ்.ஏ உருவாகக் காரணமாக இருந்த ஐ.நா. கடல் சட்டத்தின் உடன்படிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்காததால், சர்வதேச கடல் பகுதியில் நிலவும் சுரங்கப் போட்டியில் அந்நாடு பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அதன் உள்நாட்டு கடற்பரப்பில் இருந்து கனிமங்களைப் பெறுவதையும், அதன் கூட்டாளிகளால் சர்வதேச கடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவற்றைச் செயலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது ஆழ்கடல் ஆய்வுக்கான ஆதரவாளர்கள் இதுகுறித்துக் கூறுகையில், நிலத்தில் சுரங்கம் தோண்டுவது ஏறக்குறைய போதுமான அளவை எட்டியுள்ளது. இதன் விளைவாக குறைந்த தரமுள்ள உற்பத்தியே நடைபெறுகிறது. மேலும் பல கனிம வளப் பகுதிகள், மோதல் அல்லது சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பூமியின் கடைசி எல்லையான ஆழமான கடற்பரப்பு பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத மற்றும் மனிதர்களால் தீண்டப்படாத இடமாகவே உள்ளது. மேலும் தேவை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், அங்கு சுரங்கங்களைத் தோண்டுவது மீண்டும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர். இங்கிலாந்து , ஜெர்மனி, பிரேசில், கனடா உட்பட சுமார் இரண்டு டஜன் நாடுகள் ஆழ்கடல் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோருகின்றன. தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய 2050ஆம் ஆண்டுக்குள் முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணியை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது. மேலும் 2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற நீண்டகால இலக்குடன், அதன் ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத் தக்கவற்றில் இருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இந்தியா இந்த இலக்குகளை அடைய, ஆழ்கடலின் அடிப்பகுதி உட்பட அனைத்து சாத்தியமான மூலங்களில் இருந்தும் கிடைக்கும் முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, ஒரு சில நாடுகள் மட்டுமே நிலத்தில் இருந்து எடுக்கப்படும் முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வரிசையில் ஆஸ்திரேலியா முக்கியமான லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது. அதேநேரம் தாமிரம் வழங்குவதில் சிலி நாடு முதலிடத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது. சீனா முக்கியமாக ஸ்மார்ட்போன்கள், கணினிகளில் பயன்படுத்தப்படும் கிராஃபைட் மற்றும் பூமியின் அரிய தனிமங்களை (rare earths) உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த கனிமங்கள் விநியோகச் சங்கிலியில் நுழைவதற்கு முன்பு அவற்றைச் செயலாக்கம்(Processing) செய்வதில் நிலவும் சீனாவின் ஆதிக்கம் குறித்து புவிசார் அரசியல் கவலைகள் உள்ளன. சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் தகவல்படி, சீனா தங்களது தொழில்நுட்பம் மூலம் தற்போது 100% இயற்கையான கிராஃபைட் மற்றும் டிஸ்ப்ரோசியம், 70% கோபால்ட் மற்றும் கிட்டத்தட்ட 60% அனைத்து லித்தியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, அதுமட்டுமின்றி பெய்ஜிங் அதன் சில செயலாக்க தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது. ஆகஸ்ட் 2023இல் முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய எரிசக்திக்கான உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம், "அரசியல் ஆதாயத்திற்காக சந்தை அதிகாரத்தை ஆயுதமாக்கத் தயாராக இருக்கும் ஒரு மேலாதிக்க விநியோகஸ்தருக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்," என்று தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டில் சீனாவை எதிர்க்கவும், "பொறுப்பான மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீட்டை" ஊக்குவிப்பதற்காகவும், அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கனிம பாதுகாப்புக் கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளன. இதில் இந்தியாவும் தற்போது உறுப்பினராக உள்ளது. அதேபோல், ஆழ்கடல் சுரங்க தொழில்நுட்பத்தை உருவாக்க ரஷ்யாவுடனும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது. "அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஆற்றல் பறிமாற்றம் ஆகியவை முக்கியமான தாதுக்களைப் பிரித்தெடுக்க, செயலாக்க மற்றும் பயன்படுத்துவதற்கான தேவையை வேகப்படுத்துகின்றது" என்று பிகார்சிக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crg4kdvw89ro

சீனி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

3 months 1 week ago
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு, பெரிய வெங்காயம் 100 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபா. சிவப்பு கௌபி 52 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபா. வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபா. பாஸ்மதி அரிசி 20 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 650 ரூபா. பெரிய வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 350 ரூபா. வெள்ளை சீனி 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபா. சிவப்பு சீனி 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபா. சோயா மீட் 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 595 ரூபா சிவப்பு அரிசி 2 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 168 ரூபா பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாவுக்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் பொதியில் நூடுல்ஸ் பக்கட், இடியப்ப மா, அப்பளம், வினாகிரி, கிரீம் கிரேக்கர் பிஸ்கட், சோயா மீட், 400 கிராம் பால்மா, தேயிலை தூள் பக்கட், டின் மீன், 2 கிலோகிராம் வெள்ளை அரிசி மற்றும் 500 கிராம் பருப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/296682

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 1 week ago
புத்தா என்ன, சுருதி மாறுகிறது? ""அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்..."" எனது பதில் மேலே 👆 தாங்கள் கூறியதற்குரியது. இனச் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஐரோப்பா, கிறீஸ்தவம், சுத்திகரிப்பு என்று கூழாம்பாணியாக எல்லாவற்றையும் கொண்டுவந்கொட்டுகிறீர்கள? 🤨 சைவம் எப்படித் தமிழை அழிக்கிறது? கிறீஸ்தவம் தமிழை எப்படி அழிக்கிறது? தமிழின் வளர்ச்சிக்கு கிறீஸ்தவத்தின் பங்கு அளப்பரியது. அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஒருமுறை கொஞ்சம் ஆய்வு செயுங்கள். தாங்கள் தற்போது எழுதும் தமிழ் வீரமா முனிவர் போன்ற கிறீஸ்தவ பாதிரியார்களது கடுமையான உழைப்பின் பயனாக கிடைத்தது என்பது தெரியாதோ?

நாட்டில் வேகமாக பரவி வரும் தோல் நோய்!

3 months 1 week ago
நாட்டில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறி. அதிக வியர்வை மற்றும் ஈரளிப்பான இடங்களில் இந்த நோய் வேகமாக பரவும். தொழில் செய்யும் இடங்களிலும் வீட்டில் உள்ளவர்களிடையேயும் ஒரே உடையை மாற்றி அணிபவர்களிடையேயும் இத்தொற்று வேகமாக பரவக்கூடும். இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் எவைும் நோய் நிலைமை குறைவடையாத பட்சத்தில், வைத்தியசாலைக்கு சென்று, இதுவரை எடுத்துக்கொண்ட சிகிச்கைகளின் விபரங்களை வழங்கி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296779

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?

3 months 1 week ago
பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK படக்குறிப்பு, டி.எம். கிருஷ்ணா கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது. சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். பட மூலாதாரம்,RANJANI-GAYATRI/FACEBOOK படக்குறிப்பு, ரஞ்சனி-காயத்ரி எதிர்ப்புக்கான காரணம் அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர். இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER படக்குறிப்பு, சித்ரவீணா ரவிகிரண் மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம் இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER படக்குறிப்பு, சித்ரவீணா ரவிகிரணின் பதிவு வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர். பட மூலாதாரம்,TRICHUR BROTHERS/TWITTER படக்குறிப்பு, திருச்சூர் சகோதரர்களின் கடிதம் ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மியூசிக் அகாடமி விளக்கம் இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. "தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை. உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,MADRASMUSICACADEMY/INSTAGRAM படக்குறிப்பு, தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம் யார் இந்த டி.எம். கிருஷ்ணா? டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை. சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். "கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார். மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார். பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது. மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை "டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன். தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட மூலாதாரம்,NITYLISTS/INSTAGRAM படக்குறிப்பு, நித்யானந்த் ஜெயராமன் "தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்" "இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன். 2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது. "கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர். டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த். படக்குறிப்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன் ”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?” பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன். 2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா? "நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.

3 months 1 week ago
அது ஊரான் வீட்டுப் பிள்ளைதானே. எப்படிப்போனால்தான் உங்களுக்கு என்ன? @விசுகு அதே பாடசாலை மாணவர்கள் SL Airforce ன் உலங்கு வானூர்தி ஏறியபோது எரிந்து விழுந்ததை மறந்துவிடாதீர்கள்’. 😏

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

3 months 1 week ago
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். “ஜப்பானிடம் இருந்து இலங்கை கற்க வேண்டிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கல் பாடங்கள்” என்ற தலைப்பில் “Geopolitical Cartographer” சர்வதேச ஆராய்ச்சி அமைப்பினால் ஜனாதிபதி தலைமையில் நேற்று (21) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜப்பானிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டார். “ஜப்பானின் நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாகத்திற்கு கற்க வேண்டிய பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தூதுவர், ஜப்பானின் வரலாற்றில் கடந்து வந்த சவால்களுக்கு ஈடுகொடுத்து, நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்த அனுபவங்களை இதன்போது விவரித்தார். “Geopolitic Cartographer” என்பது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி அமைப்பாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதன் நிறுவனர் ஆவார். உலக அரசியல் ஒழுங்கை மறுவடிவமைக்கும் இந்து சமுத்திரம், பசுபிக் கடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்தியங்களில் புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார மற்றும் கடல்சார் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை ஆய்வு செய்தல், மேம்படுத்துவதே “Geopolitical Cartographer” அமைபின் நோக்கமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச அளவில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவாலான சூழ்நிலையை தூதுவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார். உலகமே ஜப்பானுக்கு எதிராக நின்றபோது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் கூற்று காரணமாக, போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைவதற்கு வழியமைத்ததையும் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தை ஜப்பான் அந்நாட்டின் முன்னேற்றம் மற்றும் மீள் கட்டமைப்புக்காக பயன்படுத்திக் கொண்டதெனவும் கூறினார். அன்று தொடக்கம் இன்று வரையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவு காணப்படுவதோடு, அந்த நட்புறவை இருநாட்டு தலைவர்களும் மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜப்பான் தூதுவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கை, ஜப்பானை முன்மாதிரியாக கொண்டு நாட்டில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானை போன்று போட்டித் தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி கைத்தொழில்களை உருவாக்குவதற்காக தொழில் கொள்கைகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த மிசுகோஷி ஹிடேயாகி, அந்த முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் வேலைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முயற்சிகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட நிறுவனங்களின் ஊடாக ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜப்பானின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/296768

கண்டால் வரச் சொல்லுங்க…

3 months 1 week ago
கண்டா சொல்லுகிறேன்......நீ கார் ஒன்றும் எடுக்க வேண்டாம் ...... அந்தத் தங்கத்தை (வாட்ச்மேன்) மட்டும் தூக்கி வாங்கடா என்று.......! 😂 இப்படிக்கு ஆறடி அம்பயர்.......! நல்ல சுவையான கவிதை ஆல்வாயான்......நீங்கள் நிறைய எழுதுங்கள்.....!

சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர

3 months 1 week ago
இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .

சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர

3 months 1 week ago
அட ..... சிங்கள பௌத்தர்களிடம் அப்படி ஒன்று இருக்கிறதா? வரலாறு அப்படி சொல்லவில்லையே. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே இத்தனை லட்ஷம் தமிழர்கள் கொலையுண்டு, சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். வேறு எந்த பௌத்த நாட்டிலும் இப்படி கொடுமை நடந்தேறவில்லையே. இவர் அப்பப்ப கனவிலே இருந்து எழும்பி வந்து உபதேசிப்பார், அந்த உபதேசம் சீறிப்பாயும்.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 1 week ago
அரச அதிகாரமும், நாட்டின் தலைவர் என்கிற சர்வதேச அங்கீகாரமும் கொண்ட ஒருவர் செய்யக்கூடிய அரசியல் சித்துவிளையாட்டுக்களை அரச அதிகாரமும், சர்வதேச அங்கீகாரமும் அற்ற ஒரு சிறிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் சாதாரண அரசியல்வாதிகளால் செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. ஆகவேதான் சர்வதேச அங்கீகாரமும், நடைமுறை அரசுக்கான முயற்சியும் எம்மைப் பொறுத்தவரை அவசியமாகியது. அந்த முயற்சியைத்தான் இலங்கையும், இந்தியா தலைமையிலான சர்வதேசமும் சேர்ந்து அழித்தன.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed