புதிய பதிவுகள்2

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது

3 months 2 weeks ago
கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது adminJune 9, 2024 கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் , மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்குடன் காத்திருந்த போது , கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த பொருட்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட நபரை காவல்து நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவர் குடும்பத்துடன் அரியாலை பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்து , குறித்த வீட்டிற்கு காவல்துறைக் குழு சென்ற போது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/204032/

தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன்

3 months 2 weeks ago
தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவின் அறிக்கையின் இறுதிப்பகுதி. அப்பொழுது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக மேற்படி சுயாதீனக்குழு உழைத்தது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்தித்தது. எனினும் சந்திப்பின் விபரங்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டதுக்குமப்பால் அக்குழு தொடர்ந்து செயல்படவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டபடி ஒரு மக்கள் அமைப்புக்கான தேவை தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த விவாதத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி சுயாதீன குழுவிலும் அங்கம் வகித்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வவுனியாவில் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தினார்கள். 32பொதுமக்கள் அமைப்புகள் கலந்துகொண்ட சந்திப்பின் முடிவில் வவுனியா தீர்மானம் என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சித் தலைவர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் கட்சி சாரா முக்கியஸ்தர்களையும் சந்தித்தது. அதேசமயம் அச்சத்திப்புகளுக்குச் சமாந்தரமாக மக்கள் அமைப்புகள், மாவட்ட மட்ட ஒன்றியங்கள் போன்றவற்றையும் அக்குழு சந்தித்தது. கூட்டுறவாளர் ஒன்றியங்கள்; கடல் தொழிலாளர் ஒன்றியங்கள்; வணிகர் கழகங்கள்; பார ஊர்திகள் சங்கங்கள் போன்றவற்றை அக்குழு சந்தித்தது. இச்சந்திப்புக்களின் போது மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு அமோகமாக ஆதரவு தெரிவித்தார்கள். எந்த ஒரு சந்திப்பிலும் யாரும் அது தேவைதானா என்று கேட்கவில்லை. கடந்த 15 ஆண்டு கால அரசியல் செயற்பாடுகளின் மீது அவர்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்து விட்டார்கள். அவர்கள் மாற்றத்தைக் கேட்கிறார்கள் என்று சந்திப்பில் கலந்து கொண்ட குடிமக்கள் சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகளுடான சந்திப்பின் விவரங்களை அக்குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு வெளியிட்ட அறிக்கையோடு ஒரு விடயத்தில் அதிகம் ஒத்திருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில கட்சிகளைத்தவிர பெரும்பாலான ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதே அந்த ஒற்றுமை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியவில்லை.ஏனெனில் கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதாவது மக்கள் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யக்கூடிய சக்தி மையங்களாக இருக்கவில்லை. ஆயின், மக்கள் அமைப்புக்கள் தங்களைப் பலமான சக்தி மையங்களாக வளர்த்தெடுத்துக் கொண்டால்தான் தமிழ் அரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கிச் செலுத்தலாம் என்பதே கடந்த 15 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட பாடமாகும். இந்தப் பட்டறிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் மீண்டும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் கடந்த ஐந்தாம் திகதி, தியாகி சிவக்குமாரனின் நினைவு நாளன்று, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் கூடின. இக்கூட்டத்தில் மேற்படி குடிமக்கள் சமூகங்களின் ஒன்றிணைவானது தன்னை “தமிழ்மக்கள் பொதுச்சபை” -Tamil people’s Assembly- என்று பெயரிட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் பொதுச் சபையானது தனது செயற்பாட்டுத் தேவைகளுக்காக கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி கட்டமைப்புகள் தேவையான புதிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் பொதுச்சபையைப் பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவை; தமிழ் மரபுரிமைப் பேரவை; பி2 பி மக்கள் இயக்கம் போன்றவற்றின் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மக்கள் அமைப்பு உதயமாகியிருக்கிறது. தமிழ்மக்கள் பொதுச்சபையானது ஒரு நிரந்தர பெயர் அல்லவென்றும் எதிர்காலத்தில் அதன் பெயர் அதன் கட்டமைப்புக்குள் உட்பட அனைத்தும் பொருத்தமான விதங்களில் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடிமக்கள் சமூகங்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கைதான். அதற்குச் சமாந்தரமாக பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த பின் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு கலப்புப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது. இக்கலப்புப் பொதுக் கட்டமைப்பு அதற்கு வேண்டிய உப கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றின்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் என்றும் தெரிகிறது. பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஓர் உபகுழு; வேட்பாளருக்குடைய தேர்தல் அறிக்கை தயாரிக்க ஓர் உபகுழு; நிதி நடவடிக்கைகளுக்கு ஓர் உபகுழு என்று பல்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு பொது வேட்பாளர் முன்னுறுத்தப்படுவார் என்றும் தெரிகிறது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து கூட்டாக உழைத்தால் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தும் விடயம் ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும். அது மட்டுமல்ல தமிழ் அரசியலில் அது ஒரு புதிய பண்பாட்டை வளர்க்கும். தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு பண்பாடு அது. அவ்வாறு பொறுப்புக் கூறும் பண்புடைய ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினால் அதன் விளைவாக கண்ணியமான, நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் அதிகமாக மேலெழுவார்கள். தனி நபர்களுக்காக, கட்சிக்காக வாக்குத் கேட்கும் மிதவாத அரசியல் பண்பாட்டை மாற்றி, தேசத்துக்காக வாக்கைத் திரட்டும் ஒரு புதிய பண்பாடு வளர்த்து எடுக்கப்படும். ஒருபுறம் தமிழ்மக்கள் தங்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளை சந்தேகிக்கின்றார்கள்; திட்டுகிறார்கள். இன்னொருபுறம் தமிழ்மக்கள் பல துண்டுகளாக உடைந்துபோய்க் காணப்படுகிறார்கள். அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறும் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒவ்வொரு நெல் மணியாகத் திரட்ட ஒரு புதிய அரசியல் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஜனாதிபதித் தேர்தலை ஒரு களமாகப் பயன்படுத்துவது. தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தையொட்டி உருவாக்கப்பட்டாலும் அதன் இறுதி இலக்கு நீண்ட காலத் தரிசனத்தைக் கொண்டது என்பது வவுனியா தீர்மானத்தின் இறுதிப் பந்தியில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உச்சபட்ச தீர்வு ஒன்றைப் பெறும் விதத்தில் தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கு இவ்வாறான மக்கள் அமைப்புக்கள் அவசியம். தமிழரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கித் திரட்டுவதற்கு இது போன்ற மக்கள் அமைப்புக்கள் அவசியம். கடந்த நூற்றாண்டில் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பு தமிழ் அரசியலில், மக்கள் அமைப்புக்கள்,மகா சபைகள்,வாலிப காங்கிரஸ்கள் போன்றன தோன்றின. கடந்த நூற்றாண்டில் முதலாவது தசாப்தத்தில் யாழ்ப்பாண சங்கம், மட்டக்களப்புச் சங்கம் போன்றன தோன்றின. அதன்பின் 1921இல் தமிழர் மகாசபை தொடங்கியது. 1924இல் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் தொடங்கியது. அதன்பின் கட்சிகள் அரங்கினுள் பிரவேசித்தன. கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் முதலில் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் 1968ல் தொடங்கியது. பின்னர் தமிழ் மாணவர் பேரவை 1970இலும், தமிழ் இளைஞர் பேரவை 1973இலும், 1976அளவில் “மனிதன்” இயக்கமும் தோன்றின. ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் முதல் இரண்டு கட்ட ஈழப் போர்களின் போதும் அன்னையர் முன்னணிகள், பிரஜைகள் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகள் தோன்றின. 1980களின் ஆரம்பத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கம் தோன்றியது. 1981இல் யாழ் பல்கலைக் கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் தோன்றியது. 1985இல் யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழு தோன்றியது. அதன் தொடர்ச்சியம் வளர்ச்சியாக, 1990களின் தொடக்கத்தில் அரங்கச் செயற்பாட்டுக்குழு தோன்றியது. அரங்கச் செயற்பாட்டுக்கு குழுவே பொங்கு தமிழ் பேரெழுச்சியை நொதிக்கச் செய்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின் யாழ்ப்பாணத்தில் முதலில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு இயங்கியது. அதன் தொடர்ச்சியாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் என்ற ஓர் அமைப்பு இயங்கியது. இறுதிக்கட்டப் போரில் அதாவது நாலாம் கட்ட ஈழப் போரில், சில கிறிஸ்தவ மனிதநேய அமைப்புகளைத் தவிர, குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் இயக்கங்கள் எவையும் இயங்க முடியாத அளவுக்கு சிவில் வெளி ஒடுக்கப்பட்டிருந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தமிழ்மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பி2 பி மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் தோன்றின. அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அரசியல் இயக்கங்கள்; இளையோர் இயக்கங்கள்; மத மறுமலர்ச்சி இயக்கங்கள்; பிரஜைகள் குழுக்கள்; அன்னையர் முன்னணிகள்; கலாசாரக் குழுக்கள்…. என்று தமிழ்மக்கள் ஏதோ ஒரு மக்கள் இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கி வந்திருக்கிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்மக்கள் மத்தியில் மகத்தான மக்கள் அமைப்பு உருவாக்கிகளும் நிறுவன உருவாக்கிகளும் தோன்றியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழ் மக்களிடம் மிகச் செழிப்பான ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த செழிப்பான பாரம்பரிய அடித்தளத்தில் இருந்து இப்பொழுது ஒரு புதிய மக்கள் இயக்கம் தோன்றியிருக்கிறது. https://www.nillanthan.com/6787/

அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி

3 months 2 weeks ago
வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும். -தோழர் பாலன்- இரண்டுக்கு ஒன்று என்று, நிறைவு பெற்றது. தேசியகீதம், தமிழீழ அணி என தமிழில் எழுதப்பட்டவை தேசியக் கொடி இவை நமது நோ்மறையான குறியீடுகள். இலங்கை இந்திய அரசுகளுக்குத்தான் இன்னும் வயிற்றெரிச்சல். -Nagamany Sathasivam- இந்த உலகிற்கு தமிழீழ அணி என்று சொல்ல வைத்து உள்ளோம். இதுவே ஒரு வெற்றிதான் அண்ணா விரைவில் தமிழீழ அணி அங்கிகாரத்துடன் அதன் வெற்றியை உறுதி செய்யும் ... -இராஜேஷ் இராஜேந்திரன்- தோல்வியில்லை. வெற்றி பெறவில்லை. இறுதி சுற்றில் எத்தனயோ பெரிய குழுவெல்லாம் அசால்டா தட்டி வந்ததே மிகப்பெரிய வெற்றி. -Vijayakumar Tharmalingam-

"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"

3 months 2 weeks ago
பாதுகாப்பான நாடுகளில் சொகுசாக இருந்து தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை. நாம் அங்கே போய் எமது குடும்பத்தை அதற்கு பலி கொடுக்க மாட்டோம் சார். 😂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
பதினெட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி விக்கெட்டுகளை சடசடவென்று இழந்து, 12 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களுடன் சுருண்டது. உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து 2014 இல் சிறிலங்காவுக்கு எதிராக இதே 39 ஓட்டங்களுடன் சுருண்ட சாதனையோடு உகண்டா சேர்ந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் அஹீல் ஹொசெயின் 5 விக்கெட்டுகளை 11 ஓட்டங்கள் மட்டும் கொடுத்துக் கைப்பற்றியிருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 134 ஓட்டங்களால் வெற்றியீட்டிது அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 months 2 weeks ago
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) - 1ம் இடம் வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 69 புள்ளிகள் 2)கிருபன் - 69 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 60 புள்ளிகள் 5)பிரபா - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 56 புள்ளிகள் 7)நுணாவிலான் - 49 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 43 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 39 புள்ளிகள் 11)சுவி - 37 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 34 கேள்விகளுக்கு (79 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 months 2 weeks ago
37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, கிருபன் , நிழலி 1)நிழலி - 67 புள்ளிகள் 2)கிருபன் - 67 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 58 புள்ளிகள் 5)பிரபா - 58 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 54 புள்ளிகள் 7)நுணாவிலான் - 47 புள்ளிகள் 8)வாத்தியார் - 43 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 41 புள்ளிகள் 10)கந்தையா57 - 37 புள்ளிகள் 11)சுவி - 35 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 33 கேள்விகளுக்கு (77 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 months 2 weeks ago
36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , நிழலி ,பிரபா 1)நிழலி - 62 புள்ளிகள் 2)கிருபன் - 62 புள்ளிகள் 3)கோஷான் சே - 58 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 56 புள்ளிகள் 5)பிரபா - 55 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 52 புள்ளிகள் 7)வாத்தியார் - 43 புள்ளிகள் 8)நுணாவிலான் - 43 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 33 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 36, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 32 கேள்விகளுக்கு (72 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

கருத்து படங்கள்

3 months 2 weeks ago
ரோயல்பார்க் கொலை குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது. முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
ச‌ர‌சோத‌ர‌ன் அண்ணா உங்க‌ளை வேற இங்கை ஒருத‌ர் தொப்பி பிர‌ட்டியோ என்று கேட்டுபுட்டார் தென் ஆபிரிக்கா வென்ற‌தால் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் தென் ஆபிரிக்கா தோத்து இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பிங்க‌ள் சார் விளையாட்டில் ட‌வுள் கேம் இருக்க‌ கூடாது🤣😁😂..........................................

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு!

3 months 2 weeks ago
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் டெல்லி பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386792

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்

3 months 2 weeks ago
அந்தச் சிறுமி உணவு உண்ண கிட்ட வரும் போது, மிருகத்தனமாக தாக்கும் காணொளியை பார்த்தேன். இவனுக்கு உடனடியாக கைதிகளே தண்டனை கொடுத்தது தரமான சம்பவம்.

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்

3 months 2 weeks ago
4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல் 08 JUN, 2024 | 01:34 PM 4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185589

இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற ஜனாதிபதி ரணில் ஞாயிறு டெல்லி செல்கிறார்

3 months 2 weeks ago
இந்தியா பயணமானார் ஜனாதிபதி! 09 JUN, 2024 | 09:45 AM மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா பயணமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இந்தியன் ஏர்லைன்ஸின் AI-282 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்துள்ளார். இலங்கை இராஜதந்திரிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமானம் முற்பகல் 11.40 மணிக்கு இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185630

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்

3 months 2 weeks ago
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம் இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர். ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம் நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது. அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சால்ட், பட்லர் நம்பிக்கை சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார். வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர்கள் ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது. விக்கெட் சரிவு இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார். லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES யாரும் அரைசதம் அடிக்கவில்லை டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர். இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது. பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பாடங்களைக் கற்றுக்கொண்டோம்" வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார். இங்கிலாந்துக்குச் சிக்கல் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும். https://www.bbc.com/tamil/articles/ce441vxgddwo
Checked
Sat, 09/28/2024 - 20:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed