ஊர்ப்புதினம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி

1 week 4 days ago
தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி
1369304201.jpg

புதியவன்

அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கான பொறுப்பை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்றுள்ளது. 

அத்துடன், இந்த மாதத்துக்குள் இதுதொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று வவுனியா - கோவில் புளியங்குளத்தில் தனியார் விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீரமானங்கள் வருமாறு:

அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வது. 

என்றும் இதற்காக தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேசி அவர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து இந்த விடயத்தை தொடர்ந்து முன்னகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சிக்கு மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்றும் இதில், பெண்களின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (க)
 

https://newuthayan.com/article/தமிழ்த்_தேசிய_கட்சிகளை_ஓரணியாக்கும்_பொறுப்பை_ஏற்றது_ஜ._த._தே._கூட்டணி

 

பூநகரியில் 10 கிலோ வெடி மருந்துடன் ஒருவர் கைது

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 7

08 APR, 2024 | 09:34 AM
image
 

கிளிநொச்சி - பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை, மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.

குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து குறித்த நபரை கைதுசெய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180661

வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது

1 week 4 days ago

Published By: VISHNU   08 APR, 2024 | 01:39 AM

image

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாகத் தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

இந்நிலையில் வவுனியா  ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180657

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

1 week 4 days ago

Published By: VISHNU   07 APR, 2024 | 10:33 PM

image

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில்  உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

30அடி ஆழத்திலிருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.

https://www.virakesari.lk/article/180651

படைப்பாக்கமும் பயங்கரவாதமா

1 week 4 days ago

அதிகாரத்தின் குரூரப்பார்வை இப்போது தமிழ்ப்பாடசாலைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. எங்கெல்லாம் உரிமைக்கும், உணர்வுக்குமான குரல்கள் எழத்தொடங்குகின்றனவோ அங்கெல்லாம் நுழைந்து, அந்தக் குரல்களை நசுக்குவதையே ஆட்சியாளர்கள் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இல்லா விட்டால் அந்தக்குரல்களின் பரவுகை பேரெழுச்சியை உண்டாக்கி, தம் இருப்புக்கே உலை வைத்துவிடு மென்பதே ஆட்சியில் உள்ளவர்களின் அச்சமாக இருக் கின்றது. சர்வதேசச் சதியுடன், பெரும் மனிதப்பேர வலத்தை நிகழ்த்தி, குருதிச்சகதிக்கு நடுவே தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிங்கள பௌத்த பேரினவாதம் அடங்கிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அடிபட்ட புலியாக, தமிழர்கள் திரண்டெழுந்து, பழிக்குப் பழி வாங்கக்கூடும் என்ற சந்தேகத்தோடுதான் இன்றுவரை தமிழ் மக்களை இலங்கை அரசும், படைத்தரப்பும் நோக்குகின்றன.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போல, சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் கண் களுக்கு தமிழர்களின் சாதாரண நகர்வுகள்கூட, புலிகளை மீளுருவாக்கும் முயற்சியாகவே புலப்படுகின்றன. அத்தோடு போர் பற்றிய நினைவுகளை அழித்து, கேளிக்கை யான பாதைக்குள் இளைய சமுதாயத்தை மடைமாற்று வதனூடாக, தமிழர்களின் உரிமைப்போரை மலடாக்கி விடலாம் என்றும் எண்ணுகின்றனர். அதனாலேயே இறுதிப்போர் முடிந்த கையோடு, புலிகள் தொடர்பான அத்தனை நினைவிடங்களையும் படையினர் அத்திபாரத் தோடு பிடுங்கியெறிந்தனர். மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை, மாவீரர்நாள் என்பவற்றை தங்கள் மன அவசங் களைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கருவியாக தமிழர்கள் நினைவேந்த முற்பட்டபோது அவற்றுக்கு ஆயுதமுனை யில் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி நினைவேந்தி யவர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்குப் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். தமிழர்களின் உரிமைக்குரல் ஒலிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் படைப்புலனாய்வாளர்களின் கழுகுப் பார் வைக்குள் 24மணித்தியாலங்களும் கொண்டுவரப்பட்டன. அதேசமயத்தில், தமிழர் தாயகத்தில் எப்போதுமில் லாதவகையில் போதைப் பொருள் பாவனை வியாபிக்கத் தொடங்கியது. விநோதமான பெயர்களில் வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர் வரை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற தமிழ் இளையோர், தறிகெட்டு ஓடும் மந்தைக் கூட்டமாக மாற்றப்படத் தொடங்கினர்.

ஆனால் என்னதான் பேரினவாதிகளும், படைத் தரப்பும் பகீரதப் பிரயத்தனம் செய்து உரிமைக்கான தகிப்பை இல்லாமல் செய்ய முயன்றாலும், தமிழர்களின் மரபணுவில் அது இரண்டறக் கலந்துவிட்டதால், ஏதோ வொரு வகையில் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. இம்முறை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் டாங்கி, வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்பு, துயிலுமில்லம், கார்த்தி கைப்பூ என்று எங்கள் நிலத்தின் நினைவுகளை மாணவர்கள் ஆக்கவடிவில் வெளிக்கொணர்ந்திருந்தனர். போருக்குள் பிறந்த ஒரு சந்ததி, தான் கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றுணர்ந்து கற்றவற்றை ஓர்ஆக்கவடிவில் வெளிப்படுத்தியதில் தவறொன்றுமில்லையே. ஆனால் பாடசாலைகளில் உயிர்கொல்லும் போதைப் பொருள் கள் விற்பதைக் கண்டும்காணாமல் ஊக்குவித்த அரசாங் கத்துக்கு இந்தப் படைப்புகள் கண்ணைக் குத்தியிருக் கின்றன. பாடசாலை முதல் வீடுவரை விசாரணைகள் நீள்கின்றன. 'குய்யோ முறையோ' என்று சிங்கள -பௌத்த பேரினவாத அமைப்புகள், மாணவர்களின் இந்தப் படைப்பாக்கங்களை பயங்கரவாத முத்திரை குத்தி கடிதங்களை எழுதித் தள்ளுகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, ஒன்றுமேயில்லாத இதுபோன்ற மாணவர் படைப்புகளை பிரச்சினையாக்க நினைப்பது அபத்தமே. ஆனால் அதைப் பேரினவாதிகளோ, இலங்கை அரசோ, அரச படைகளோ புரிந்து கொள்ளவே போவதில்லை. அப்படிப் புரிந்துகொள்ளாத வரையில் இந்த நாடு உருப்படவும் போவதில்லை.

(03.04.2024-உதயன் பத்திரிகை).

https://newuthayan.com/article/படைப்பாக்கமும்_பயங்கரவாதமா

சஜித் என்னும் வேடதாரி

1 week 4 days ago

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறி வருகின்றார். மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் பரப்புரைகளை அவரும் தொடக்கியிருக்கின்றார். இதன் ஒரு கட்டமாக, அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து வீசப்பட்ட ஈஸ்டர் விவகாரத்தில் தானும் தன் பங்குங்குக்கு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

'புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட, ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன்மூலம் கடந்தகால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். எந்த வொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லண்யார்ட், எவ்.பி.ஐ. வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப் புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்குட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிப்பது அல்லது தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதி பருக்குக் கட்டாயமாக்கப்படும். 1948ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்படவேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரைச் சாராத அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளான நீதியைப் பெற்றுக்கொடுத்தலுக்கு அவர் தனது செயலுரு எப்படி இருக்கப்போகின்றது என்பதைச் சொல்லியிருக்கின்றார். ஆட்சியைப் பிடித்து அதை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இவரது இந்தக் கூற்றை நம்பமுடியும். ஏனெனில் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்காக உறுதியளித்த எந்தவொரு விடயத்தையும் செய்ததேயில்லை. ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது நல்லது. அதற்காக அரச தலைவர் தேர்தலுக்கு முன்னரே தனது வரைப்படத்தை சஜித் வெளிப்படுத்தியமையும் சிறப்பானது.

ஆனால், ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இறுதிப்போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றார்கள். அவர்கள் தங்களுக்கான நீதி, சர்வதேச விசார ணையூடாகவே நிலைநிறுத்தப்படும் என்று நம்பு கின்றார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை அதிகளவில் சுருட்டிய சஜித் பிரேமதாஸ அந்த மக்களின் நீதிக்கான கோரிக்கை தொடர்பில் வாயே திறக்கவில்லை.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் என்பது தெற்கின் அரசியலுடன் தொடர்புடையதாக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதியை நிலைநாட்டுவதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் வாய் திறந்தால் தெற்கின் வாக்குப்பலத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சஜித்தும் அமைதிகாக்கின்றார். இப்படியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரும் தமிழ்த் தலைவர்களை, தமிழ்மக்கள் தங்கள் தலைவர் களாகத் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்கப் போகின்றார்களா...?

(06.04.2024-உதயன் பத்திரிகை).

 

https://newuthayan.com/article/சஜித்_என்னும்_வேடதாரி

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை - ஜனாதிபதி தெரிவிப்பு

1 week 4 days ago

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு  நிரந்தர காணி உறுதிப்பத்திரம்  வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள்  என்றே கூற வேண்டும்.

இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும்  ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

பொதுஜன பெரமுனவில்  இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில்  அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள்   சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு  நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது.

நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.

இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/180655

இன்று திருகோணமலை நீதிமன்றில் திரு.சுமந்திரன் தமிழரசுக்கட்சி வழக்கில் ஆட்சேபணை….தொடரும் நாடகம்…

1 week 5 days ago
இன்று திருகோணமலை நீதிமன்றில் திரு.சுமந்திரன் தமிழரசுக்கட்சி வழக்கில் ஆட்சேபணை….தொடரும் நாடகம்…

 

 

விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

1 week 5 days ago

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ் விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/298383

ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!

1 week 5 days ago

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்இறுதி மங்கள சடங்கான மரக்கன்றுகள் நடும் தினம் ஏப்ரல் 18 ஆம் திகதியாகும். இதனை சுதேச மருத்துவ அமைச்சு ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்..

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 4 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது…

” சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்கள சடங்குகளான மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 18 அன்று ஆகும் . சுதேச மருத்துவ அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298385

எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7    07 APR, 2024 | 06:31 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி – உங்களின் தாய் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்த கட்சியின் இருந்து ஆரம்பமானது. ஆகவே கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி - உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே... அது உங்களுக்கு சவாலாக அமையாதா?

பதில் - சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?

பதில் - அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.

கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போகின்றீர்களா?

பதில் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

கேள்வி – புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?

பதில் - அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

https://www.virakesari.lk/article/180641

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்!

1 week 5 days ago
24-66124c3872f18-600x375.jpeg அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது.

இதில், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதாவது, அரச ஊழியர்கள் தற்போது பெறும் சம்பளத்துக்கு அதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376934

நாட்டில் எரிபொருள் பாவனை 50% குறைந்துவிட்டது - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

1 week 5 days ago

Published By: NANTHINI

07 APR, 2024 | 12:59 PM
image

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமளவு குறைந்துவிட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் பாவனை குறைய நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலையே காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். 

எவ்வாறாயினும், தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் அவர்  சுட்டிக்காட்டுகிறார்.

https://www.virakesari.lk/article/180628

வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் - வட மாகாண ஆளுநர்

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7    07 APR, 2024 | 02:18 PM

image
 

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) விசேட நிகழ்வும் கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது 2030ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இதன்போது நன்றி தெரிவித்த ஆளுநர், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாகவும் கூறினார். 

அத்தோடு, பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக்கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்காகவும் ஆளுநர் நன்றி தெரிவித்ததோடு, மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. அந்த வகையில், இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையை நினைவுபடுத்திய ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விசேடமாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறினார்.

IMG-20240406-WA0193.jpg

IMG-20240406-WA0198.jpg

IMG-20240406-WA0187.jpg

 

 

IMG-20240406-WA0197.jpg

IMG-20240406-WA0196.jpg

IMG-20240406-WA0189.jpg

https://www.virakesari.lk/article/180611

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்!

1 week 5 days ago
%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0% இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்!

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு அனைத்து இராணுவ வீரர்களின் நலன்புரியும் சூழ்நிலையில் மிகவும் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கியப் இராணுவ மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ நலனுக்காக சேவை அதிகாரசபை இருப்பதாகவும், அது இதுவரை ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இராணுவ நலனுக்காக அமெரிக்காவைப் போன்று தனியான திணைக்களம் தேவை எனவும், அதற்காக புதிய கட்டளைகள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசத்திற்காக உழைத்த ஒரே எதிர்க்கட்சி ஜக்கிய மக்கள் சக்தி என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிலர் மேடைகளில் விசித்திரக் கதைகளைச் சொல்லி மக்களை தங்கள் கனவு உலகில் ஏமாற்றுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1376877

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்ல தடை

1 week 5 days ago
1712384448-1712382380-slfp_L-650x375.jpg ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்ல தடை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ள நிலையில் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணமல்போன ஆவணங்கள் தொடர்பாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்தே இவ்வாறு பல ஆவணங்கள் காணமால் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்மந்த மித்ரபால குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக ஊழியர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376835

தமிழர் நிலங்கள் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன - அருட்தந்தை மா.சத்திவேல்

1 week 6 days ago
இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன -  அருட்தந்தை மா.சத்திவேல்
06 APR, 2024 | 10:24 PM
image
 

இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. 

அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம்.

தமிழ் கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இனவாத குண்டர்களை அரச பயங்கரவாதம் பார்த்துக்கொண்டிருப்பதோடு பாதுகாப்பும் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 

1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளிலும் அரச பயங்கரவாதம் இதையே செய்தது.

இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன. யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் பறிபோன நிலையில் தற்போது சுயமாக தொழில் செய்யும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை சீரழித்து நிலத்தை ஆக்கிரமிக்க குண்டர்களை ஏவிவிட்டுள்ள பேரினவாதம் மகாவலி அதிகார சபையின் கீழ் வெறும் நிலங்களை சூறையாடவும் திட்டமிட்டு இருப்பது இஸ்ரேல் வழிமுறையிலான இன அழிப்பாகும்.

பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயத்தன்மையை ஏற்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பினையும் அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த பின் நிற்பது மனித உரிமை மீறலோடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும். அது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சினையை கதைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் போதுமான காலத்தை அளிக்காது தீர்வு காண வழிகளையும் திறக்காதிருப்பது பண்ணையாளர்களை அழிக்கும் செயலுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் சாதியாகும். 

ஆயிரம் பொங்கல் வைத்து தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவினை எடுத்தவர் பண்ணையாளர்களுக்கு எதிராக நிற்பது பேரினவாதத்தின் கைக்கூலியாக செயல்படுவதன் அடையாளம் எனலாம்.

இத்தகைய பின்புலத்தில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் என்பது அவர்கள் சார்ந்த விடயமாக இருந்தாலும் அது தமிழர்களின் பாரம்பரியம் தமிழர் அடையாளம் மற்றும் அரசியல் சார்ந்த விடயமாகும். இதற்கு கிழக்கின் தமிழ் பண்ணையாளர்களால் மட்டும் முகங்கொடுக்க முடியாது. அது வடகிழக்கு சார்ந்த மக்கள் அரசியல் போராட்டமாக உருமாறல் வேண்டும்.

ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவைத் தவிர பொதுவாக தாம் கைவிடப்பட்டுள்ளோம் என்ற மன நிலையிலேயே 200 நாட்களை கடந்தும் பண்ணையாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனை பயன்படுத்தி தமிழர்களின் தாயக அரசியலை ஏற்காத தெற்கின் போராட்டக் குழு ஒன்றும் தமது அரசியலுக்காக இவர்களை பயன்படுத்த முனைகிறது.

எமது போராட்டங்கள் குடும்ப விழாக்களைப் போன்றும், ஊர் திருவிழாக்களை போன்றும், மாவட்ட, மாகாண மட்ட விழாக்கள் போன்றும் காலத்துக்கு காலம் நடத்துவது தோல்விக்கே வழிவகுக்கும். இதனையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தாயக அரசியலுக்கு எதிரான சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடமளிக்காமல், புதிய வடிவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரம், கௌரவம் என்பன தாயகம் காக்கும் அரசியல் செயற்பாடு என்பதை நாம் அறிவோம். அதற்காகவே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க போராட்ட மையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும். இது குளிர் அறையில் இருந்து கதைக்கும் விடயமல்ல. போராட்டம் மையம் என்பது சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ குழுவின் தன்மையைக் கொண்டது. பொதுவானதும் உறுதிமிக்கதுமான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் போராட்ட வடிவங்களை உருவாக்கி அதனை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் போராடுவது அரசிடமிருந்து இலவசங்களையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்வதற்கு அல்ல என்பது நாம் அறிந்ததே. இது வலுவிழக்கக் கூடாது.

https://www.virakesari.lk/article/180567

சமூக ஒழுக்கத்தை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

1 week 6 days ago
vidura.jpg

சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை, புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று(5) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298305

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்க தீர்மானம்!

1 week 6 days ago
phone.jpg
கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 10,000இற்கு விற்பனை செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் 7,000இற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/298359

யாழில் வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன; மீனவர்களுக்கு பாராட்டு

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3

06 APR, 2024 | 12:26 PM
image
 

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.

கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன.

குறித்த டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

IMG-20240405-WA0120.jpg

IMG-20240405-WA0122.jpg

https://www.virakesari.lk/article/180577

Checked
Fri, 04/19/2024 - 23:41
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr