ஊர்ப்புதினம்

நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்!

1 week 6 days ago
images-12.jpg நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய ஒருவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு பொருத்தமானவரும் அவரே.

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு அவருக்கு மேலும் காலஅவகாசம் காணப்படுவதாக அவரது தந்தை மஹிந்த ராஜபக்ஷ ஒருசந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். எனவே பலவருடகால அரசியல் அனுபவம் கொண்ட ஒருவரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தாம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னிலையாக போவதாக அவர் இதுவரை கூறவில்லை. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிற்ஙகினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்.எனவே கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாமல் ராஜபக்ஷ ஒருபோதும் எடுக்கமாட்டார்.

பொதுஜனபெரமுனவுக்குள் விரிசல் ஏற்படாத வகையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1376807

உலக வங்கியின் விசேட அறிவிப்பு!

1 week 6 days ago
நிதித்துறையை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்கள் கடனுதவி இலங்கைக்கு உலக வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கையில்  57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி  அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே  காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்  வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1376820

மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற் சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம்

1 week 6 days ago
 

கிஷாலி  பின்ரோ  ஜயவர்த் தன  –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார்.
ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின்  முன்னுதாரணங்கள்
மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள்  மத்தியில்  உறுதியளித்த அவர், அரசாங்கத்தின்  நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்) உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார்.

அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில்நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅ திபருக்கு ‘பிரிட்டனின்  விதிமுறைகளில் சட்டமூலத்தை  முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம் .குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக  உறுதியளிக்கிறார். ,[‘ஜனாதிபதி செயலகம்,2023 ஜூன் 15, ).
நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது.
இருந்தபோதிலும், ஒலி பரப்பு சட்டமூலம் , பொது ஆலோசனையிலிருந்து  வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவானஉறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான  அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக  அருவருப்பான இணையவழி  பாதுகாப்பு சட்டமூலத்தை  எடுத்துக் கொண்டால் , அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும்.

சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம்  அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சி யான  வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின்  முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும்அவற்றுக்கு   எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது.

சட்டமூலத்தின்  சில அம்சங்கள் கடந்த வார பத்தியில் விவாதிக்கப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் குறிப்பாக அழுகிய வெங்காயம் போன்றவை. அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்ற மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி  தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி  பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன்சட்டமூலம்  இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்குஉட் படுத்தப்பட்டு  நிறைவேற்றப்பட்டது .அரசரின்  ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால்ஏனைய  எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது.

உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன்சட்டமூலம்  வந்தது.
திகைப்புமற்றும்அச்சத்திலிருந்து   ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல்
அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள்  சபை  மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது.

இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக  பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின்  தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும்.

உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி  பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த  பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது.

தீங்கிழைக்கும் வகையிலான  வரைவு விதிகள்
தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ சி சி பி ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும்  இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன.
ச ரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும்.  தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி  பாதுகாப்பு ஆணைக்குழுவின்  மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது.

ஐ சி சி  பி  ஆர்  சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின்   கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்/ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்?

அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல
அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும்  ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது.

இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21-வது பிரிவு தடை செய்கிறது.

பின் வரும்உதாரணங்கள்  தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த ச ரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட  நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று,  கேள்விக்குரிய ச ரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும்.

அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும்நிராகரிப்பு  செய்யப்பட வேண்டிய) இணையவழி  பாதுகாப்பு ஆணைக்குழு  இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின்  திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு  இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது.

அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால்  இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு  ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

உண்மையிலேயே பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர்வெல்லியன் [எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான  ]முன்னுதாரணமாகும்

சண்டே டைம்ஸ்

https://thinakkural.lk/article/275330

வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியாக 1,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது - ரஜித் கீர்த்தி தென்னகோன்

2 weeks ago
05 APR, 2024 | 08:51 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி  வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாகச் செலுத்தியுள்ளதாகவும், 2024 பெப்ரவரி வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டியில் எவ்வித நிலுவைகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் வெள்ளிக்கிழமை (05)  வௌியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 760.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 7.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மேற்கூறியவாறு செலுத்தப்பட்டுள்து.

மேலும், ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கு 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் EFF 23-26 திட்டத்திற்கு 9.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், நோர்டிக் அபிவிருத்தி நிதியத்திற்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திற்கு 29.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 489.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி அரசாங்கம் 1,338.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவு பதிவைக் கருத்தில் கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன கடன் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்த காலகட்டத்தில், இருதரப்பு கடன்கள் மற்றும் வட்டியாக 571.0 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடன்கள் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான இணக்கப்பாடுகளை எட்ட உரிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடனும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரிஸ் சமவாய நாடுகளுடன் கடன் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதோடு, 2024 பெப்ரவரி இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 450.7 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 

கடந்த காலத்தில் இடை நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்காக, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, குவைட், பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா, சீனா அபிவிருத்தி வங்கி, சீன - ஹங்கேரி, இந்திய மற்றும் அமெரிக்க எக்சிம் வங்கி உட்பட கிட்டத்தட்ட 25 நிதி நிறுவனங்களுடன், இலங்கை இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்களை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி தனது டொலர் கையிருப்பை வெளிநாட்டு நாணயங்களில் அதிகரித்துக் கொண்டு உள்நாட்டின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியவைக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களை செலுத்தி முடித்த பின்பே இந்தக் கடன்கள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான கொடுக்கல் வாங்கல் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், ஜப்பானிய யென்கள், கனேடிய டொலர்கள் ஆகிய நாணய அலகுகளில் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த பலதரப்பு, இருதரப்பு மற்றும் உள்நாட்டுக் டொலர் கடன்களை செலுத்திய பின்னர், நாட்டின் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக (4950 மில்லியன் டொலர்கள்) ஆக அதிகரித்துள்ளது.

அதிக வட்டி விகிதத்தில் அரசாங்கம் பெற்றுள்ள 4,439.2 மில்லியன் டொலர் வணிகக் கடன்கள் மற்றும் வட்டியை மறுசீரமைக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதுடன், மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முடியும் வரை பணம் செலுத்தப்படாது.

2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தின் கீழ், அதாவது வருடத்திற்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. அப்போது வங்கிகளில் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தில் இருந்து 15% அதிக வட்டி விகிதத்தைக் குறைக்க பணம் வழங்கியது திறைசேரி.

2015ஆம் ஆண்டு வர்த்தக வங்கிகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இந்த வட்டி விகிதம் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 இலட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 12 இலட்சம் சிரேஷ் பிரஜைகள் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதம் கிடைத்தது.

2022 ஆம் ஆண்டளவில், இந்த கூடுதல் வட்டியை செலுத்துவதற்காக திறைசேரி ஒரு காலாண்டிற்கு 20 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதன்படி, திறைசேரி வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபாவை இதற்காக செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த செயல்முறை 2022 ஒக்டோபர் 01 முதல் நிறுத்தப்பட்டது.

50% இற்கும் அதிகமான சிரேஷ் பிரஜைகள் தங்கள் வட்டித் தொகையை மாதந்தோறும் பெறுகின்றனர். தற்போதைய நிதி நிலைமையின் படி இதற்காக வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபா கூடுதல் தொகையை அரசசாங்கத்தால் தாங்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது. 2022 ஒக்டோபர்  வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும்.

வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைக் பெற்றுக்கொள்ள, தற்போதைய VAT இன் மதிப்பு 1%  இனால் அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில், சில சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டால், அதற்கான பணத்தைத் திரட்டும் வழியையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

மத்திய வங்கியின் கொள்கையானது வட்டி விகிதங்களைக் குறைத்து, இலாபம் ஈட்டுவதற்கு போட்டி முறையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகும்.

கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து 30% வங்கி வட்டி விகிதத்தை நெருங்கி, மக்கள் கடன் பெறுவதற்கு கூட மூலதனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், நாடு வங்குரோத்தாகிப்போனதைப் பார்த்தோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்த நேரத்தில் முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/180546

தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

2 weeks ago
இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டி அவர்கள், கடந்த 200 நாட்களாக இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னையில் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றது.

என்ன பிரச்னை?

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லை பகுதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் இருக்கின்றன.

இந்த இரண்டு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலம் காணப்படுவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பண்ணையாளர்கள் இந்தப் பகுதிகளிலேயே தமது கால்நடைகளை (மாடுகள் மற்றும் ஆடுகள்) வளர்த்து வருகின்றனர். வேளாண்மையின் போது, பாரம்பரியமாக ஆடு, மாடுகளை மேச்சல்நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் இந்தப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
‘ஆடு மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன’

இந்த நிலையில், மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சல்நிலப் பகுதியை அண்மித்து, பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் குடியேறி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் அத்துமீறி குடியேறியுள்ள மக்கள், அந்தப் பகுதிகளில் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு புதிதாகக் குடியேறியவர்களின் விளைநிலங்களுக்குள், அப்பகுதியில் ஏற்கெனவே கால்நடை மேய்த்து வந்தவர்களின் மாடுகள், ஆடுகள் நுழைந்தால், அவற்றைப் பல்வேறு விதமாக சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் சொல்கின்றனர்.

கால்நடைகளைக் கூரிய ஆயுதங்களால் வெட்டுதல், மின்சார வேலிகளை அமைத்து அவற்றைச் சிக்க வைத்தல், வெடி வைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தி தமது கால்நடைகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் கொன்று வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்

பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS

படக்குறிப்பு,

போராட்டக்காரர்கள் பிபிசி தமிழிடம் வழங்கிய இறந்த மாட்டின் புகைப்படம்

அத்துடன், மேச்சல் தரையில் புல்களுக்கு கிருமிநாசினிகள் தெளிப்பதால், அதனூடாக தமது கால்நடைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 9 மாத காலப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துள்ளதாகத் தெரிவித்து, பண்ணையாளர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், உணவு கிடைக்காததால் பல மாடுகள் மற்றும் ஆடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், மேச்சல்நிலப் புல்தரையை அத்துமீறிய குடியேற்றவாசிகள் தீக்கிரையாக்கி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

200 நாட்களாக தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்

200 நாட்களைக் கடந்த போராட்டம்

இந்நிலையில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றை எதிர்த்தும், கால்நடை பாதுகாப்பு, பூர்வீக நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சுழற்சி முறை போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தப் போராட்டத்தின் 200வது நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்று வரை செவிசாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பண்ணையாளர்கள் மாத்திரமன்றி, சமய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் கண்ணம்மா பிபிசி தமிழிடம் தங்கள் பாட்டன், பூட்டி காலத்திலிருந்து 200 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

தர்மலிங்கம் கண்ணம்மா

“கடந்த 200 நாட்கள் போராட்டத்தில் நாங்களும் பிள்ளைகளை இந்த வெயிலில் கூட்டி வந்து போராடி வருகின்றோம். ராணுவம், போலீஸ் எல்லாம் வந்து தீர்த்து தருகின்றோம் எனச் சொல்கின்றார்கள். ஆனால் இன்னும் முடிவு வரவில்லை.

ஆடு மாடுகளை கம்பியில் கொல்கிறார்கள். மாடுகளை கட்டுவதற்கு மேச்சல் தரையை எங்களுக்குத் தர வேண்டும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம்," என தர்மலிங்கம் கண்ணம்மா கூறினார்.

தனது மாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இதுவரை தனக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை என பண்ணையாளர் தெய்வேந்திரன் தெரிவிக்கின்றார்.

“எங்களுடைய நிறைய மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய மாடுகளை வெட்டி விட்டார்கள். என்னுடைய 10 மாடுகள் வரை வெட்டுப்பட்டுள்ளன. கடந்த 7-8 மாதங்களாக தொழில் இல்லாமல் இருக்கின்றோம்.

அரசாங்கம் எந்தவிதமான நிவாரணமும் தரவில்லை. பண்ணையாளர்கள் அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். போலீசில் முறைப்பாடு செய்துள்ளோம்," என தெய்வேந்திரன் கூறுகிறார்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

சினித்தம்பி நிமலன்

‘அரசியல்வாதிகள் பார்க்க வரவில்லை’

இப்பிரச்னை குறித்து ஆராய்வதற்கு அரசியல்வாதிகள் வந்த போதிலும், அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என கால்நடை வளர்ப்பு, கமநல அமைப்பு மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

போராட்டத்தின் சாதகமான ஒரு சில நிலைமைகள் வந்த போதிலும், அது நிலைக்குமா நிலைக்காதா என்பது தெரியாமல்தான் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

“எங்களுடைய மாடுகளுக்கு நடக்கின்ற அச்சுறுத்தல்கள், எங்களுடைய மாடுகள் சாவது எல்லாவறையும் பார்த்து எங்களுக்கு வாழ்வதா சாவதா என்றே தெரியவில்லை. ஜனாதிபதி வந்தபோது, சட்டவிரோதமாக வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றலாம் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

மூன்று மாதம் பயிர் செய்த பின்னர் அவர்கள் வெளியேறுவார்கள். அதற்குப் பின்னர் மாடுகளைக் கட்டலாம் என போலீசார் சொன்னார்கள். அந்த நிலைமையும் இல்லை. இன்று ஆதரவற்ற நிலைமையில் இந்த பண்ணையாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்,” என்றார்.

மேலும், “பால் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம். யாரும் உதவவில்லை. அந்த நிலைமையைப் பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது எந்தவொரு அரசியல்வாதிகளோ வரவில்லை. பார்க்க வந்தால் அவர்களை உள்ளே விடவும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும்," சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

நாகேஸ்வரன் மிரேக்கா

‘இது அரசு நடத்தும் நிழல் யுத்தம்’

தமிழ் மக்கள் பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டு போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு நடத்தி வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் நாகேஸ்வரன் மிரேக்கா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கு பகுதிகளைப் பொருத்த வரையில் தமிழ் மக்கள் பல அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள், என்று அவர் தெரிவித்தார்.

“அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரச்னை என்பது இன்று-நேற்று நடக்கும் பிரச்னை அல்ல. இது பல ஆண்டுகளாக இந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னை,” என்றார்.

“கடந்த 9 மாதங்களாக சுமர் 1,750 மாடுகள் இறந்திருக்கின்றன. வாய்க்கு வெடி வைத்தும், மின்சார வேலிகளில் தாக்கப்பட்டும், ஆயுதங்களால் வெட்டியும் இந்த மாடுகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்துள்ளனர்,” என்றார் அவர்.

“வாழ்வாதார்ததை இழக்கக்கூடிய இடத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல நீதிமன்ற உத்தரவுகள் இந்த மக்களுக்கு சார்பாக வந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகளைக் கூடப் பொருட்படுத்தப்படுவதில்லை.

இந்தப் பிரச்னைக்கு 200 நாட்கள் போராடியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த மக்கள் காலப்போக்கில் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டுப் போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றது,” என்கிறார் நாகேஸ்வரன் மிரேக்கா.

மேலும், சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே இப்பிரச்னைக்கு தீர்வை ஏற்படும் முடியும் தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

மயிலத்தமடு மேய்ச்சல்நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காணமுடிந்தது

மயிலத்தமடு மேய்ச்சல் நிலம் இப்போது எப்படி இருக்கிறது?

மயிலத்தமடு பிரச்னை வலுப்பெற்றுள்ள நிலையில், அந்தப் பகுதிக்குள் செல்ல அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர் இலங்கையின் போலீசார் மற்றும் ராணுவத்தினர்.

மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதி, மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 60கி.மீ. தொலைவில், வனப் பகுதிக்குள் அமைந்துள்ளது.

இந்த மேய்ச்சல் நிலத்துக்குள் செல்லும் பிரதான வீதியில் பாதுகாப்பு அரணொன்றை அமைத்துள்ள போலீசார் மற்றும் ராணுவத்தினர், உள்ளே செல்பவர்களுக்கு டோக்கன்களை வழங்கி, பெயர்களைப் பதிவு செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

எனினும், இந்தப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருவதை அங்கு சென்ற பிபிசி குழுவினரால் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், மட்டக்களப்பு - கிரான் வழியாக மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் உதவியுடன் பிபிசி தமிழ் சென்றது. நாம் சென்ற பகுதி வனப் பகுதி என்பதுடன், செல்லும் வழியில் ராணுவ முகாம்கள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன.

மோட்டார் சைக்கிள்களில் மாத்திரமே உள்ள செல்ல முடியும் என்ற நிலையில், சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியைச் சென்றடைந்தோம். பிரதான வழியாகச் செல்ல விவசாயிகளுக்கு மாத்திரம் பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்குகின்ற நிலையில், நாம் மற்றைய வழியாக உள்ளே பிரவேசித்து அங்குள்ள சூழ்நிலையை ஆராய்ந்தோம்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

மேய்ச்சல்நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது

வெளியேறுவதைத் தடுத்த பாதுகாப்புத் துறை

மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காண முடிந்தது. மேய்ச்சல் நிலத்தை அடுத்து புதிய விவசாய நிலங்கள், சிறுசிறு வீடுகள் மற்றும் டிராக்டர் இயந்திரம் ஆகியவற்றைக் காண முடிந்தது.

இவ்வாறு காணப்படும் விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் இயந்திரம் ஆகியன சட்டவிரோத குடியேற்றவாசிகளுடையது என நம்முடன் வந்திருந்த மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்

பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்

பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS

அத்துடன், மேய்ச்சல் நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது.

அத்துடன், மேய்ச்சல் தரையின் ஒரு பகுதி தீக்கிரையாகியிருந்த நிலையில், அது சட்டவிரோத குடியேற்றவாசிகளால் தீ வைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்

இவற்றைக் கண்ட பிபிசி குழு, மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியிலிருந்து பிரதான வீதியாக வெளியேறிய சந்தர்ப்பத்தில், பாதுகாப்புப் பிரிவினர் அங்கிருந்து வெளியேற நமக்கு இடையூறு விளைவித்தனர்.

செய்தியாளர்கள் எப்படி உள்ளே நுழையலாம் என்று நம்மோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேர விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேற பாதுகாப்புப் பிரிவினர் நமக்கு அனுமதி வழங்கினர்.

அரசாங்கம் என்ன சொல்கிறது?

இந்தப் பிரச்னை தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்தார்.

அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மேய்ச்சல் நிலப் பிரச்னை இரண்டு தரப்பான விவசாயிகளுக்கு இடையில் காணப்படுகின்றது என்றார்.

“கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இடையில் இந்தப் பிரச்னை காணப்படுகின்றது. இந்த இரண்டு தரப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள்.

இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார்.

இலங்கை, மட்டக்களப்பு, தமிழர்கள், சிங்களர்கள், விவசாயம், கால்நடை, மாடுகள்
படக்குறிப்பு,

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மேலும் பேசிய அவர், விவசாயம் செபவர்கள் மேய்ச்சல் நிலத்தில் புற்களைப் பயிரிடும் போது, கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் என்றார். “அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் செய்கின்றோம்,” என்றார்.

போராட்டம் செய்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “போராடுபவர்கள் பல கருத்துகளைச் சொல்வார்கள். அந்த இடத்தை ராணுவம் கட்டுப்படுத்தவில்லை. இது இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் யுத்தமும் இல்லை.

இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை. இனஅழிப்புக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார்.

மேலும், “இது அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படும் பிரச்னையாகவே இதைப் பார்க்கிறோம்," என்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.

இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/clm73edmz78o

பாடத்திட்டத்தை நவீன மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்

2 weeks ago
teacher-1-300x200.jpg

பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயமாக்குவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.

57 ஆரம்ப பாடசாலைகளிலும் 113 இடைநிலைப் பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10-க்கான பாடத்திட்டமே நவீனமயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டம் நவீனமயமாக்கப்படவுள்ளது.

பாரம்பரிய கற்பித்தல் முறையில் இருந்து விலகி மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே பாடத்திட்ட நவீனமயமாக்கலின் நோக்கம் ஆகும். புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பரீட்சைக்காக கற்றல் எனும் மனப்பான்மையை மாணவர்களிடமிருந்து நீக்கி, புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298262

பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்

2 weeks ago

 

852436220.jpg

பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
 

(ஆதவன்)

யாழ்ப்பாண மாநகரசபையின் ஆழுகைக்கு உட்பட்ட நாவாந்துறை பொதுச்சந்தை போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி துர்நாற்றத்தோடு காணப்படுகின்றது என்று பிரதேச மக்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டியுள்னர். இந்தச் சந்தையில் மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற வற்றுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளன. அதிகளவான மக்கள் இந்தச் சந்தையில் ஒன்றுகூடுகின்றனர்.ஆயினும் சந்தை போதிய பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்படாமை மற்றும் கழிவகற்றப்படாமையால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது. கழிவுகளில் புழுக்கள் உருவாகி விற்பனைநிலையங்களுக்குள்ளும் புகுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகரசபைக்குப் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடிகாலமைப்பு, நீர் மற்றும் மலசலகூட வசதிகளையும், உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (newuthayan.com)

ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு

2 weeks ago

ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

(இனியபாரதி)

இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05) நடந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.  

அவர் மேலும் கூறுகையில்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜே.வி.பி அறியாதது அல்ல.
இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க "13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

இதன் மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.
இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது  ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வைப்பகத்தை இலக்கு வைத்தே என்பது புலனாகின்றது.

இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை. 

அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு மீனவர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.  மாறாக எடுத்ததற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜே.வி.பி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

இந்திய பருப்பை உண்ண மாடம்டோம், இந்தியாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம், தீவுப் பிரதேசங்கள் இந்தரியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜே.வி.பியினர். ஆனால் அரச தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதி காத்து வருகின்றனர். 

அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)

ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு (newuthayan.com)

வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்

2 weeks ago
image
 

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். 

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240405-WA0060.jpg

வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம் | Virakesari.lk

இலங்கையில் இடம்பெறும் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான செய்திகள்

2 weeks ago
10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்!
05 APR, 2024 | 05:20 PM
image
 

கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் ( விடுதி) அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறுமியின் தந்தையாவார்.

சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலை  அதிகாரிகளினால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 39 வயதுடைய சந்தேக நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! | Virakesari.lk

தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கிறது - இந்திய ஊடகத்திற்கு இலங்கை பௌத்த மதகுரு கருத்து

2 weeks ago

Published By: RAJEEBAN

05 APR, 2024 | 05:55 PM
image
 

திபெத்தின் ஆன்மீக தலைவர்தலாய்லாமா  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவிற்கு புத்தரின் புனிதநினைவுச்சின்னத்தை வழங்கிய  இலங்கை பௌத்தபிக்குகள் குழுவில் இடம்பெற்றிருந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது உங்களிற்கு தெரியும் நீங்கள் நினைவுச்சின்னத்தை வழங்கியமை குறித்து சீனா சீற்றமடைந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் சில வருடங்களிற்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பௌத்தமத தலைவர்கள் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரச்சினை சீனாவிடமிருந்து வருகின்றது ஏன் என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Untitled-5.jpg

பௌத்ததலைவர் என்ற அடிப்படையில் நாங்கள் தலாய்லாமாவை மதிக்கின்றோம் அவர் வர்த்தகர் இல்லை என தெரிவித்துள்ள கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் நாங்கள் அவரை மதித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்தோம் சீனா அதனை விரும்பவில்லை சீனா எங்கள் அரசாங்கத்திற்கு இது குறித்து அழுத்தம் கொடுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இது எங்களிற்கு பிடிக்கவில்லை அவர் ஒரு பௌத்த தலைவர் அவருக்கு சுதந்திரம் உள்ளது அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான சுதந்திரம் எங்களிற்குள்ளது எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் நாங்கள் பெரும்கிழ்ச்சி அடைவோம் இலங்கையர்கள் இமயமலைக்கு சென்றனர் அதில் என்ன பிரச்சினை அவர் பௌத்ததலைவர் அவர் பௌத்தத்தை போதிக்கின்றார் எனவும் இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை உறவுகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு இந்தியாவே எங்கள் தாய்நாடு எனது கலாச்சார மத தொடர்புகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தன எங்கள் மொழியும் இந்தியாவிலிருந்தே ஆரம்பமாகின்றது சமஸ்கிருதம்-;பாலி நாங்கள் இந்தியாவுடன் எங்கள் நட்புறவை வளர்க்கவேண்டும் எங்கள் மூத்த சகோதரர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கிறது - இந்திய ஊடகத்திற்கு இலங்கை பௌத்த மதகுரு கருத்து | Virakesari.lk

கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும் - கண்மருந்தினால் பார்வைபாதிக்கப்பட்ட நோயாளி

2 weeks ago
05 APR, 2024 | 04:12 PM
image
 

அரசாங்க மருத்துவமனையில் கண்புரை அறுவைசிசிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக கண்பார்வையை இழந்த நோயாளியொருவர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல  மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து 100 மில்லியன் நஷ்டஈட்டை கோரியுள்ளார்.

கந்தபொலவை சேர்ந்த மகரி ராஜரட்ணம் என்ற நபர் சட்டநிறுவனம் ஊடாக நஷ்டஈட்டை கோரியுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தேசிய மருந்துகட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நஸ்டஈட்டை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராஜரட்ணம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இன்விக்டஸ் என்ற சட்டநிறுவனத்தின் ஊடாகவே அவர் தனது நஷ்டஈட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2023ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி தனது கட்சிக்காரர் நுவரேலியா மருத்துவமனையில் கண்சத்திரசிகிச்சை செய்துகொண்டார் ஆறாம் திகதி அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் மருத்துவமனையில் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தினை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட கண் மருந்தினை பயன்படுத்தியதை தொடர்ந்து தனது கட்சிக்காரர் தலைவலி உட்பட பல பாதிப்புகளை எதிர்கொண்டனர் என சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் இடம்பெற்றன எனது கட்சிக்காரர் பத்தாம் திகதி மீண்டும் தேசிய கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அங்கு இடம்பெற்ற மருத்துவபரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட கண்மருந்து காரணமாக அவர் தனது கண்பார்வையை இழந்துகொண்டிருப்பது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த கண்மருந்துகள் தரமற்றவை அந்த மருந்தினை பயன்படுத்தியவர்கள் எண்டோபனைட்டிஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் எனவும் அந்த சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும் - கண்மருந்தினால் பார்வைபாதிக்கப்பட்ட நோயாளி | Virakesari.lk

மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!

2 weeks ago
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அதிரடிப் பணிப்புரை! மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, மகாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் நேற்று வாக்குமூலமொன்றையும் வழங்கியிருந்தார்.

வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெறுகின்ற நினைவு நாளுக்கு எதிராக சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான சட்டவிரோத நிகழ்வுகள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தவுள்ளதாக நீதிமன்றில் அரசாங்கம் சார்மாக முன்னிலையான சட்டத்தரணியும் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்படி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376662

கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

2 weeks ago

Published By: DIGITAL DESK 3

05 APR, 2024 | 05:05 PM
image
 

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது.

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. 

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

IMG-20240405-WA0091.jpg

IMG-20240405-WA0096.jpg

IMG-20240405-WA0112.jpg

கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார் | Virakesari.lk

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் - யாழில் அநுரகுமார

2 weeks ago

Published By: DIGITAL DESK 3    05 APR, 2024 | 11:30 AM

image

நாட்டில்  இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

'இலங்கையின் முன்னேற்றம் இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் இணைந்து செல்லும்போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

ஆகையினால் அனைவரது முன்னேற்றத்துக்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள்.

எனவே, அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180491

பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு - அமைச்சர் டக்ளஸ்

2 weeks ago

Published By: VISHNU   05 APR, 2024 | 02:07 AM

image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான்  ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக்  கடந்து வந்தவன்.

தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு.

துரதிஸ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை.  

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது, மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.

நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன். ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன்.

ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது, அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180470

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

2 weeks ago
IMG-20240404-WA0099-1-750x375.jpg தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி  வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

https://athavannews.com/2024/1376603

திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் பாரிய புத்தர்சிலை

2 weeks ago

Published By: VISHNU    05 APR, 2024 | 01:37 AM

image
 

திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.58_c2

திருகோணமலை மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அனுமதியும் பெறப்படாமல் சட்ட விரோதமான முறையில் குறித்த கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.59_dd

இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார் எனினும் கட்டுமானங்கள் வழமையைப் போல் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பாரிய புத்தர் சிலை வைக்கப்படவுள்ளதாகவும், ஒருகாலத்தில் அப்பகுதியில் விகாரை அமைக்கப்படலாம் எனவும் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காணிக்குரிய ஆவணங்களை வழங்கக்கோரி கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள்.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.58_0a

மடத்தடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அரச நிர்வாக மட்டங்களிலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அது அகற்றப்படும் என கூறப்பட்டதாகவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது. குறித்த இடத்திலேயே பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.00_6b

இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் எனவும், இதுவும் ஒரு வகையாக இன ஆக்கிரமிப்பு என புத்திஜீவிகள் கவலை வெளியிடுகின்றனர். அத்துடன் நாட்டின் சட்டம் மற்றும் அரச நிறுவனங்கள் பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.00_ee

இன நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தமிழர் பகுதிகளில் பௌத்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு இனங்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் இவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.01_56

மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயமானது கி.பி 1650 ஆம் ஆண்டளவில் பெரியராசகோன் முதலியார் என்பவரால் திருகோணமலை – மடத்தடி பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. குறித்த பகுதியில் 1958 ஆம் ஆண்டு கலப்பகுதியில் குறித்த பகுதியை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். தற்போது 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிய வருகின்றது.

https://www.virakesari.lk/article/180466

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

2 weeks ago

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) இன்று (04) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இரத்தினபுரியின் தெமுவாவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல் கோபுரத்தை இரண்டு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3,650 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் இரண்டாம் கட்டமாக 14 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 4,500 இலட்சம் ரூபா செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் 27 வணிக வளாகங்களை உள்ளடக்கியதுடன், அதில் 17 வணிக வளாகங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் 10 வணிக வளாகங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கூட்டுத்தாபனத்தின் நிதி இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது வர்த்தகர்களையும் விற்பனையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் ஒரு சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக மையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்கள் மற்றும் ஆபரண விற்பனைக்கான ஆசியாவின் முன்னணி விற்பனை மையங்களான பெங்கொக் மற்றும் ஹாங்கொங்கில் உள்ளதைப் போன்ற சுயாதீன தர சோதனை சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏற்றுமதி சேவைகளும் இங்குள்ளது.

நினைவுப்படிகத்தைத் திரைநீக்கம் செய்து, சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு களவிஜயத்திலும் ஈடுபட்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று திறந்துவைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

இந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிலையத்தின் பணிகள் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் சாமர சம்பத் ஆகியோரை நாம் நினைவுகூர வேண்டும்.

இந்த நிலையம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல, இது நாட்டிலேயே ஒரு பாரிய இரத்தினம் மற்றும் ஆபரண மையமாக மாறும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் முன்னேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார சரிவு காரணமாக, கடந்த 2021-2022 காலகட்டத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலும் பல சிரமங்களை எதிர்கொண்டது. 2023 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த பங்களிப்பும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

மேலும் வரி அதிகரிப்பால் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அண்மையில் என்னுடன் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, இந்த ஏப்ரல் இறுதிக்குள் வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை சமரப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், எதிர்காலத்தில், இந்தத் துறையில் இருந்து குறைந்தபட்சம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தினச் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும்

இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஜூலை 2022 இல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 7.4 என்ற மறைப் பெறுமானத்தை காட்டியது. ஆனால் 2024 இல் 4.5 என்ற நேர் பெறுமானத்தை காண்பிக்கிறது.இரண்டு வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்தக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது.

2022 ஜூலை மாதமளவில் 54.6% ஆக காணப்பட்ட பணவீக்கம் இன்று 9% ஆக குறைத்திருப்பதால் ரூபாய் வலுவடைகிறது. அன்று 23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அன்று 361 ரூபாயாக காணப்பட்ட டொலரின் பெறுமதி இன்று 300.4 ஆக குறைந்திருக்கிறது. அதனை 280 ரூபாய் வரையில் மட்டுப்படுத்திகொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. உள்நாட்டுக் கடன் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும். இந்தப் பணியைத் தொடர்வதற்கான இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

அரசாங்கக் கடன் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக காணப்படுகிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 95% ஆக குறைக்க வேண்டும். தற்போது, மொத்த தேசிய உற்பத்திக்கு மேலதிகமாக 35% வருமானத்தை ஈட்ட வேண்டும். 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 13% ஆக குறைக்க வேண்டும். மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 9.4% ஆக காணப்படும் வெளிநாட்டுக் கடன்களை2025 ஆம் ஆண்டிலிருந்து 2.3% உபரியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.

இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால், எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகள், “நீங்கள் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள், எனவே கடனைத் திருப்பித் தாருங்கள்” என்று அறிவிக்கும். ஆனால் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது.

இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.

நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம். நாம் இன்று தொங்குபாலத்தின் நடுவில் நிற்கிறோம். வீழ்வதா? மீள்வதா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,

2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அத்தியாவசியமாக காணப்பட்ட இந்த கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரைவாகப் பெருகும்.

இரத்தினக்கல் வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து இம்மாவட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வியாபார நிலையத்தின் ஊடாக வருடத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதனை விடவும் அதிகமான வருமானம் ஈட்டு முடியுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இரத்தினக் கல் கூட இல்லாத ஹொங்கொங் இராச்சியம், இரத்தின கற்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. அதேபோல் தாய்லாந்து வருடாந்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால் இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அதனால் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுதந்திர வர்தக முறைமைகளை பலப்படுத்துவது காலோசிதமானதாக அமையும். ஜனாதிபதியும் அந்த பொருளாதார முறைமைகளை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி,

இரத்தினபுரிக்கு மிகவும் அவசியமானதாக காணப்பட்ட இரத்தினக்கல் வியாபார நிலையம் திறக்கப்பட்டமை பொருளாதாரத்திற்கு பலனளிக்கும். கடந்த காலத்தில் இரத்தினக்கல் வர்க்கர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். பொருளாதார நெருக்கடியால் வங்கி விட்டி விகிதம் 30% ஆக அதிகரித்தமையால் நெருக்கடி வலுவடைந்தது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் சுமூகமான காலம் உதயமானது. இன்று இரத்தினபுரிக்கு சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் கிடைத்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்துள்ளது.

அஸ்வசும திட்டத்தின் மூலம் 20 லட்சம் வறிய குடும்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் காணி உரிமையை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். சரிவிலிருந்து நாட்டை மீட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை சரியாகச் செய்துள்ளார். அனுபவமிக்க தலைவர் நாட்டுக்கு தேவை என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

இன்று திறந்து வைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இரத்தினபுரிக்கு மாத்திரமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வழி செய்யும். இதன் மூலம் இரத்தினபுரியின் இரத்தினக்கல் வர்த்தக சமூகத்தை ஒழுங்குபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வருமானம் ஈட்டும் வீதத்தை அதிகரிக்க முடியும். இந்த நிலையத்தில் இரத்தின வியாபாரத்திற்கான சகல வசதிகளும் உள்ளன.

இன்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது பொருளாதாரக் மீட்சி பற்றிய விடயங்களை காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டடை மீட்க முன்வராத அரசியல் தலைவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பது வேடிக்கையானது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன,

இலங்கை வரலாற்றுக் காலத்திலிருந்தே இரத்தினக் கற்களுக்கு பெயர் பெற்றிருந்தது. அதற்கான பெறுமதி சேர்ப்பதற்கான சரியான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை.முதல் தடவையாக எமது இரத்தினக் கற்களை உலகிற்கு கொண்டுச் செல்வதற்கான மத்திய நிலையம் திறக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் இரத்தினங்களை சரியான விலைக்கு விற்று பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

இந்த சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2012 இலிருந்து திட்டமிடப்பட்டன. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இன்று முதல் முழுக் கட்டிடமாக சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தை மக்களுக்கு கையளிக்க முடிந்துள்ளமை வர்த்தக சமூகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஊவா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, ஜானக வக்கம்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல, காமினி வலேபொட, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் சில்வா, இரத்தினக்கல் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=186023

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!

2 weeks 1 day ago

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!

(புதியவன்)

நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38  மணிக்கு பதிவாகியுள்ளது. 

அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது. 

எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா,  ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம், புதுக்கமம், ஓமந்தை, மருதன்குளம், இரணைமடு, அம்பகாமம் பகுதிகளுக்கு மேலாகவும், 13 ம் திகதி அக்கராயன், முறிகண்டி, கெருடாமடு,குமுழமுனை, தண்ணீருற்று, பகுதிகளுக்கு மேலாகவும் 14ம் திகதி மண்டைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, மணற்காடு, மருதங்கேணி,உடுத்துறை பகுதிகளுக்கு மேலாகவும் 15ம் திகதி பருத்தித்துறை, நெடுந்தீவுக்கு மேலாகவும் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே இக்காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். அதேவேளை இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்பதனால் போதுமான ஏற்பாடுகளுடன் செயற்படுவது சிறந்தது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (ஏ)

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (newuthayan.com)

Checked
Fri, 04/19/2024 - 17:40
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr